என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகைக்குளம் வாகைபதியில் தை திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.
அம்பை அருகே வாகைக்குளம் வாகைபதியில் தைத்திருவிழா கொடியேற்றம்
- வாகைக்குளம் வாகைபதியில் தை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 11 நாட்களும் தினமும் மதியம் உச்சிப்படிப்பு மற்றும் உச்சிப்பால் தர்மம் நடைபெறும்.
கல்லிடை:
அம்பாசமுத்திரம் அருகிலுள்ள வாகைக்குளம் வாகைபதியில் தை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து தினமும் கருடன், தண்டிகை, சிங்கம், அன்னம், சூரியன், நாகம், பூ பல்லக்கு, குதிரை, அனுமன், இந்திரன், ரிஷப வாகனத்தில் சப்பர பவனி நடைபெறும். விழாவில் 11 நாட்களும் தினமும் மதியம் உச்சிப்படிப்பு மற்றும் உச்சிப்பால் தர்மமும், இரவில் அன்னதர்மமும் நடைபெறும். சிறப்பு நிகழ்ச்சியாக 8-ம் நாளான 10-ந் தேதியன்று காலை வாகைபதி பால் கிணற்றில் இருந்து பால் குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், இரவில் அன்னதர்மமும் நடைபெறும்.
11-ந் தேதி அதிகாலை அய்யா ஆதிநாராயண வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடுதல் நிகழ்ச்சி நடைபெறும். 12-ந் தேதி காலை வாகைபதி பால் கிணற்றில் இருந்து கிணற்று பால் குடம், சந்தனக்குடம் எடுத்தல், கும்பிடு நமஸ்கார நிகழ்ச்சியும் நடைபெறும். 13-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு அய்யா ஆதிநாராயண வைகுண்டர் இந்திரன் வாகனத்தில் பவனி வருதல் நடைபெறும். தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சியாக மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
ஏற்பாடுகளை வாகைக்கு ளம் வாகைப்பதி அய்யாவழி தொண்டர்களும், அன்பு கொடி மக்களும் செய்து வருகின்றனர்.






