search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirukalyanam"

    • திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்து அருளாசி வழங்கினர்.
    • சித்திரை முதல் நாள் இரவில் திருக்கல்யாண காட்சி வைபவம் நடந்தேறும்.

    கோவிலின் முகப்புத் தோற்றம்

    திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது பாபவிநாசர் -உலகாம்பிகை கோவில். இங்கு ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழாவின் 10-ம் நாளில் சிவபெருமான்-பார்வதி தேவி திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சி கொடுத்த வைபவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

     முன் காலத்தில் தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற பங்குனி உத்திர நன்னாளில், சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்தது. திருமண கோலத்தில் சுவாமி-அம்பாளை தரிசிப்பதற்காக முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் இமயமலை அமைந்துள்ள வடபகுதிக்கு சென்றனர். இதனால் வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது.

    எனவே உலகை சமநிலைப்படுத்த அகத்திய முனிவரை அழைத்த பரமேஸ்வரன், அவரை உடனடியாக தென்திசை நோக்கி செல்லுமாறு கட்டளையிட்டார். இதனால் 'சுவாமி-அம்பாளின் திருமணக்காட்சியை காணும் பாக்கியம் கிடைக்காமல் போய்விடுமே' என்று அகத்தியர் வருந்தினார்.

    அகத்தியரின் வருத்தத்தை உணர்ந்த ஈசன், `இங்கு நடைபெறும் திருமணக் கோலத்தில் பொதிகை மலைச் சாரலில் இருக்கும் பாபநாசத்தில், சித்திரை மாதப்பிறப்பு நாளில், சித்திரை விசு தினத்தன்று நேரில் வந்து காட்சி கொடுப்போம்' என்று உறுதியளித்தார்.

    இதையடுத்து அங்கிருந்து விடைபெற்ற அகத்தியரிடம், தாமிரபரணி தீர்த்தத்தை சிவபெருமான் வழங்கினார். அதை தன் கமண்டலத்தில் பெற்றுக் கொண்டு தென்பகுதிக்கு வந்து சேர்ந்தார் அகத்தியர்.

    சித்திரை 1-ந்தேதி பாபநாசத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும் திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்து அருளாசி வழங்கினர். மேலும் அகத்தியரை பொதிகை மலையை விட்டு நீங்காமல் எப்போதும் இருக்க வேண்டும் என்றும், கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தை பொதிகை மலையின் உச்சியில் இருந்து தாமிரபரணி நதியாக பாய விட வேண்டும் என்றும் ஈசன் கூறினார். அவ்வாறு பாய்ந்தோடும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி மூலம் இப்பகுதி செழுமையுற்று திகழ்கிறது.

    சிவபெருமான் தன்னுடைய திருமணக் காட்சியை அகத்தியருக்கு அளித்த நிகழ்வு, ஆண்டு தோறும் பாபநாசம் கோவிலில் 10 நாள் உற்சவமாக நடைபெறும். சித்திரை மாத முதல் நாள் அன்று இரவில் திருக்கல்யாண காட்சி வைபவம் நடந்தேறும்.

    இந்த ஆண்டுக்கான 10 நாள் உற்சவம், கடந்த 5-ந் தேதி தொடங்கியது. 10-ம் நாள் நிகழ்வான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு தீர்த்தவாரி, இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. நள்ளிரவு 1 மணி அளவில் சுவாமி-அம்பாள் இருவரும் திருமணக்கோலத்தில் அகத்திய முனிவருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும்.

     பாபநாசம் கோவிலில் அகத்திய முனிவருக்கு இறைவன் திருமணக்கோலத்தில் காட்சி அருளியது பற்றி, கல்வெட்டிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • வடமொழியில் சுவாமிநாதனை “ஞானஸ்கந்தன்” என்று போற்றுகின்றனர்.
    • கதிர்வேலனாக முருகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படை வீடாக திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. இங்கு கதிர்வேலனாக முருகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    தஞ்சாவூரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

    தந்தைக்கே குருவான கதை:

    படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மா, ஒருமுறை முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மாவிடம், படைப்புத் தொழில் செய்யும் உமக்கு -ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று முருகப் பெருமான் கேட்கிறார். இந்த கேள்விக்கு பிரம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரை தலையில் குட்டி, சிறையில் அடைத்தார் முருகப்பெருமான்.

    ஈசனே நேரில் வந்து கேட்டுக்கொண்டதால், பிரம்மாவை அவர் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், "பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?" என்று முருகனிடம் கேட்டார். "ஓ நன்றாகத் தெரியுமே" என்றார் முருகன். "அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?" என்றார் ஈசன். "உரிய முறையில் கேட்டால் சொல்வேன்!" என்றார் முருகன்.

    அதன்படி சிவபெருமான் இந்த சுவாமிமலை தலத்தில் சிஷ்யன் நிலையில் அமர்ந்து, முருகப்பெருமானிடம் பிரணவ உபதேசம் கேட்டார். இவ்வாறு இறைவனான சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனதால், அவரை சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன்சாமி என்றும் போற்றுகிறோம். அதனாலேயே இந்த தலமும் சுவாமிமலை என்று பெயர் பெற்றுவிட்டது.

    முருகப்பெருமான் காட்சி:

    இத்தலத்தில் சுவாமிநாதன் நான்கரை அடி உயர நின்ற கோலத்தில் காட்சி கம்பீரமாக காட்சித் தருகிறார். வலது கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடது கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்க... கருணாமூர்த்தியாக காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதை கண்குளிர பார்க்க முடிகிறது.

    மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, ரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி பக்தர்கள் அழகு பார்க்கின்றனர். சுவாமிநாதன் தங்கத் தேரிலும் அவ்வப்போது பவனி வருவது வழக்கம்.

    தலவிருட்சம் நெல்லி:

    நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் "தாத்ரி" என்பர். அதனால் சுவாமிமலையை "தாத்ரிகிரி" என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை "ஞானஸ்கந்தன்" என்று போற்றுகின்றனர்.

    அருணகிரிநாதர் 38 திருப்புகழ்ப் பாடல்களை இந்த சுவாமிநாதனுக்கு பாமாலையாக சூட்டியுள்ளார். சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். "ஒருதரம் சரவணபவா..." என்று தொடங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் மிகவும் பிரபலமானது. அவ்வாறே, சங்கீத மூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, "சுவாமிநாத பரிபாலயாதுமாம்" என்ற நாட்டை ராகக் கிருதியும் மிகவும் பிரபலமானது.

    இயற்கையான மலை அல்ல:

    சுவாமிமலை இயற்கையான மலை அல்ல. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோவில்தான் இது. இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதலாம் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.

    தெற்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே கோவிலுக்குள் நுழைகின்றனர். அவ்வாறு நுழைந்தவுடன் வல்லப கணபதியை தரிசிக்க முடிகிறது.

    மலைக்கோயிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமைந்துள்ளன. சுவாமிநாதனை தரிசிக்க நாம் 60 படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். 60 தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் இந்த 60 படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.

    மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் கண்கொடுத்த கணபதி என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் "கண் கொடுத்த கணபதி" என்று பெயர் பெற்றதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இன்றும், இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை கிடைக்கிறது என்பது பலர் அனுபவ ரீதியாக உணர்ந்த உண்மை.

    திருவிழாக்கள் விவரம்:

    இங்கு முக்கிய திருவிழாவாக திருக்கார்த்திகை திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. பிற விழாக்கள் : சித்திரையில் 10 நாள் பிரம்மோற்சவம், வைகாசி விசாகப் பெருவிழா, ஆவணி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவம், புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பெருவிழா, ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விழா, மார்கழியில் திருவாதிரைத் திருநாள், தை மாதத்தில் தைப்பூசப் பெருவிழா, பங்குனியில் வள்ளி திருக்கல்யாணம் ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    • நாலுகால் மண்டபத்திலிருந்து கல்யாண சீர்வரிசைகளை பக்தர்கள் எடுத்து வந்தனர்.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோவிலில் மூலவராக விஜயவல்லி மற்றும் சுதர்சன வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் திகழ்கிறார்.

    பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு திருக்கல்யாணம் நடத்தி வருகின்றனர். நீண்ட நாட்கள் தடைபெற்ற திருமணங்கள் சக்கரத்தாழ்வார் அருளால் திருமணம் கைகூடுகிறது.

    இங்கு பார்வதி தேவி மற்றும் கங்கா தேவி சமேதராக சிவேந்திரர் காட்சி தருகிறார்.

    இத்தகைய பல்வேறு சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் 18-ம் ஆண்டு பார்வதி தேவி சமேத சிவேந்திர சுவாமிக்கு திருக்கல்யாணத்தை முன்னிட்டு நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் இருந்து கல்யாண சீர்வரிசைகள் பக்தர்கள் எடுத்து வந்தனர்.

    பின்னர் திருக்கல்யாணம் உற்சவம் கோலாகலமாக தொடங்கியது.

    திருமண சம்பிரதாயங்களை தொடர்ந்து பார்வதிதேவி சமேத சிவேந்திரருக்கு மாங்கல்ய தாரணம் வெகுவிமரிசையாக நடந்த து.

    அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • தினமும் சுவாமி- அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.
    • நாளை (5-ந் தேதி) பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த கரந்தையில் பெரியநாயகி அம்பாள் உடனுறை கருணாசாமி கோவில் என்கிற வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களில் ஒன்றாகும். தேவார பாடல் பெற்ற வைப்பு தலமாகவும் விளங்கி வருகிறது.

    வைகாசி விசாக பெருவிழா

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் வைகாசி விசாக பெருவிழா மற்றும் ஏழூர் பல்லக்கு விழா கடந்த மாதம் (மே) 20-ந் தேதி அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி- அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.

    34 ஆண்டுகளுக்கு பிறகு..

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு, சுவாமி- அம்பாள் கண்ணாடி பல்லக்கிலும், வெட்டிவேர் பல்லாக்கிலும் உலா வரும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த விழா கடந்த 1988-ம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் இவ்விழா நடைபெறவில்லை. தற்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இந்த பல்லக்கு விழா நடைபெற்றது.

    பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி- அம்பாள்

    முன்னதாக அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் சோமாஸ்கந்தர்,

    பெரியநாயகி அம்மன், கந்தர் மற்றும் தனி அம்மன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளினர். இதேபோல், வெட்டிவேர் பல்லக்கில் வசிஷ்டர்,

    அருந்ததி அம்மன் சுவாமிகள் எழுந்தருளினர். இதனையடுத்து சுவாமிகளுக்கு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி

    பின்னர், சிவ வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் கண்ணாடி பல்லக்கு மற்றும் வெட்டிவேர் பல்லக்கை தோளில் சுமந்தபடி கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.

    பின்னர், பல்லக்குகள் ஏழூர் சப்தஸ்தான தலங்களான வசிஷ்டேஸ்வரர் கோவில் (கரந்தை),

    தஞ்சபுரீஸ்வரர் கோவில் (வெண்ணாற்றங்கரை), வசிஷ்டேஸ்வரர் கோவில் (திருதென்குடி திட்டை), சொக்கநாதர் கோவில் (கூடலூர் திருக்கூடலம்பதி), ராஜராஜேஸ்வரர் கோவில் (கடகடப்பை), கைலாசநாதர் கோவில் (திருப்புன்னைநல்லூர்), பூமாலை வைத்தியநாதர் கோவில் (கீழவாசல்) ஆகிய ஏழு ஊர்களுக்கும் பல்லக்கு புறப்பாடு நடைபெற்றது. பல்லக்கு கோவிலை வந்தடைந்ததும் நாளை (5-ந் தேதி) பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இதில் பேரூர் கட்டளை தம்பிரான் சிவப்பிரகாச அடிகளார், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் மூர்த்தானந்தர் மற்றும் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்ட விழா குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வருகிற 25-ந்தேதி காலை 8 மணிக்கு வைகாசி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • வருகிற 31-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வெண்ணாற்ற ங்கரை அருகில் நீலமேகப்பெ ருமாள், மணிக்குன்றப் பெருமாள், வீரநரசிம்மர் என மூன்று வடிவங்களில் பெருமாள் தனித்தனி கோவில்களில் அருள்பாலி க்கிறார். பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மூன்று கோவில்களையும் சேர்த்து மங்களாசாசனம் செய்ததால் மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரே திவ்யதேசமாக கருதப்படுகிறது. இவை தஞ்சை மாமணிகோவில் என அழைக்கப்படுகிறது.

    இக்கோவிலில் மூலவரான

    நீலமேகப்பெருமாள் அமர்ந்த திருகோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

    இறைவி செங்கமலவல்லி. இந்த பெருமாளுக்கு தைல காப்பு சாற்றி வழிபாடு நடக்கிறது.

    இக்கோவிலில் உற்சவர்க ளுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி பிரமோற்சவம் 9 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி பிரமோற்சவம் வருகின்ற 25-ம்தேதி (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூன்) 2-ம்தேதி வரை நடக்கிறது.

    மேற்கண்ட தினங்களில் காலை உற்சவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், தீபாராதனையும், மாலை 6 மணிக்கு உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி புறப்பாடு கோவில் உட்பிரகாரத்தில் நடக்கிறது.

    தொடக்க நாளான 25-ம்தேதி காலை 8 மணிக்கு தஞ்சாவூர் வெண்ணா ற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவம் கொடியே ற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வாக 25-ம் தேதி அன்னப்பட்சி வாகனமும், 28-ம்தேதி கருடசேவை, 29-ம்தேதி சேஷ வாகனம், 30-ம்தேதி யானை வாகனம் , 31-ம்தேதி திருக்கல்யாணம், ஜூன்1-ம்தேதி குதிரை வாகனம், 2-ம்தேதி காலையில் திருத்தேர் தொடர்ந்து தீர்த்தவாரி நடக்கிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா , கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    • மீனாட்சி சுந்தரேசுவரர் திருமணத்தில் பங்கேற்க வருகிற 1-ந் தேதி திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகன்-தெய்வானை புறப்பாடாகின்றனர்.
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    மதுரை

    அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் மற்றும் புட்டு திருவிழா ஆகிய 2 விழாக்களுக்கு சுப்ரமணியசுவாமி தெய்வானையுடன் மதுரைக்கு செல்வது வழக்கம்.

    மதுரையில் சித்திரைத்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் 1-ந்தேதி திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரைக்கு செல்கிறார்.

    இந்த திருமணத்தில் மீனாட்சி அம்மனை சொக்க நாதருக்கு தாரைவாத்துக் கொடுப்பதற்காக திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய் பெருமாளும் மதுரைக்கு செல்கிறார். மறுநாள் 2-ந்தேதி திருமண வைபவத்தில் பங்கேற்கும் சுவாமிகள் மே 5-ந்தேதி வரை மதுரையில் தங்கியிருந்து ஆவணி வீதி பகுதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். 5-ந்தேதி முருகப்பெருமான்-தெய்வானை, பவளக்கனி வாய் பெருமாள் ஆகியோர் இருப்பிடம் சேருகிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • கள்ளழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாணம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    மதுரை

    108 வைணவ தேசங்களில் ஒன்றான அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் திருக்கல்யாண திருவிழா விமரிசையாக நடை பெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். விழா நடக்கும் 5 நாட்களும் தினமும் காலை, மாலை சுவாமி -அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு காட்சியளிக்கின்ற னர்.

    சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அன்றைய நாள் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறு கின்றன. காலை 7 மணி முதல் 7.30 மணிக்குள் கள்ளழகர் தோளுக்கினி யான் அலங்காரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுகிறார். பின்னர் 9.50 மணியில் இருந்து 10 20 மணிக்குள் சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி -பூதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகியோரை திருமணம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அன்று இரவு மணக்கோலத்தில் சுவாமி அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக் கிறார்கள். 6-ந் தேதி மஞ்சள் நீர் சாற்று முறையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் மாசி பெருந்திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.
    • மார்ச் 4-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    மதுரை

    மதுரை மேலமாசிவீதியில் உள்ள பிரசித்திபெற்ற இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசி பெருந்திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று காலை 7.42 மணி முதல் 8.42 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் கொடி யேற்றம் நடக்கிறது. இதனை தொடர்ந்து விழா நடக்கும் 10 நாட்களும் காலை, மாலையிலும் சப்பரம், ரிஷபம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    விழாவின் 6-ம் நாளான 2-ந்தேதி சைவ சமய வரலாற்று கழுவேற்ற லீலை நடக்கிறது. அன்று காலை கோவில் வளாகத்தில் ஞான சம்பந்தருக்கு பாலூட்டி உற்சவமும், 3-ந்தேதி காலை பிக்ஷாடணர் புறப்பாடு நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான திருக்கல்யாணம் மார்ச் 4-ந்தேதி (சனிக்கி ழமை) நடக்கிறது. காலை 8.02 மணி முதல் 8.53 மணிக்குள் பிரியாவிடையு டன் நன்மை தருவாருக்கும், மத்தியபுரி அம்மனுக்கும் நடை பெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்பார்கள்.

    அன்று சனிப்பிரதோஷம் என்பதால் மாலை 3 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு யானை, புஷ்ப வாகனத்தில் சுவாமி -அம்பாள் திருக்கல்யாண கோலத்தில் வீதி உலா வரு கிறார்கள். மறுநாள் 5-ந்தேதி காலையில் தேரோட்டம்ந டக்கிறது.

    10-ந்தேதி தீர்த்தவாரி உற்சவம் மற்றும் கொடியிறக்கமும், 11-ந்தேதி உற்சவ சாந்தி, பைரவர் பூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • தனுர் மாத பூஜை கடந்த மாதம் 15-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.
    • புத்திரன் கிருஷ்ண பரமாத்மாவுக்கும் வருசபானு கோபனின் புத்திரி ராதா பிராட்டிக்கும் திருக்கல்யாணம்.

    அய்யம்பேட்டை:

    அய்யம்பேட்டையில் கிருஷ்ணன் கோவில் என்ற அழைக்கப்படும் பிரசன்ன ராஜகோபாலசாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் தனுர் மாத பூஜை கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராதா கல்யாணம் நடைபெற்றது. நந்தகோப மகாராஜாவின் புத்திரன் கிருஷ்ண பரமாத்மாவுக்கும் வருசபானு கோபனின் புத்திரி ராதா பிராட்டிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    ×