search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pallaku"

    • 34 ஆண்டுகளுக்கு பிறகு ஏழூர் பல்லக்கு புறப்பாடு நடைபெற்றது.
    • பல்லக்கு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு தங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கரந்தை கருணாசுவாமி கோவில் எனப்படும் வசீடேஸ்வரர் கோவிலில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஏழூர் பல்லக்கு புறப்பாடு நடைபெற்றது.

    கண்ணாடி பல்லக்கில் சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன் ஆகியோரும், வெட்டிவேர் பல்லக்கில் வசிஷ்டர், அருந்ததி அம்மன் ஆகியோரும் எழுந்தருளினர்.

    பின்னர் சுங்கான் திடல், பள்ளி அக்ரஹாரம், திட்டை, குலமங்கலம், கூடலூர், குருங்கலூர் வழியாக சென்ற பல்லக்கு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு தங்கியது.

    நேற்று காலை மீண்டும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து பல்லக்கு புறப்பட்டு பக்தர்கள் புடைசூழ சின்ன அரிசிக்கார தெரு, கீழவாசல் ,அரண்மனை உள்பட பல்வேறு இடங்களின் வழியாக சென்று கருணாசுவாமி கோவிலுக்கு இரவில் சென்று அடைந்தது.

    இதனைத் தொடர்ந்து பல்லக்கில் உள்ள சுவாமி, அம்மனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தினமும் சுவாமி- அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.
    • நாளை (5-ந் தேதி) பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த கரந்தையில் பெரியநாயகி அம்பாள் உடனுறை கருணாசாமி கோவில் என்கிற வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களில் ஒன்றாகும். தேவார பாடல் பெற்ற வைப்பு தலமாகவும் விளங்கி வருகிறது.

    வைகாசி விசாக பெருவிழா

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் வைகாசி விசாக பெருவிழா மற்றும் ஏழூர் பல்லக்கு விழா கடந்த மாதம் (மே) 20-ந் தேதி அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி- அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.

    34 ஆண்டுகளுக்கு பிறகு..

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு, சுவாமி- அம்பாள் கண்ணாடி பல்லக்கிலும், வெட்டிவேர் பல்லாக்கிலும் உலா வரும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த விழா கடந்த 1988-ம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் இவ்விழா நடைபெறவில்லை. தற்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இந்த பல்லக்கு விழா நடைபெற்றது.

    பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி- அம்பாள்

    முன்னதாக அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் சோமாஸ்கந்தர்,

    பெரியநாயகி அம்மன், கந்தர் மற்றும் தனி அம்மன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளினர். இதேபோல், வெட்டிவேர் பல்லக்கில் வசிஷ்டர்,

    அருந்ததி அம்மன் சுவாமிகள் எழுந்தருளினர். இதனையடுத்து சுவாமிகளுக்கு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி

    பின்னர், சிவ வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் கண்ணாடி பல்லக்கு மற்றும் வெட்டிவேர் பல்லக்கை தோளில் சுமந்தபடி கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.

    பின்னர், பல்லக்குகள் ஏழூர் சப்தஸ்தான தலங்களான வசிஷ்டேஸ்வரர் கோவில் (கரந்தை),

    தஞ்சபுரீஸ்வரர் கோவில் (வெண்ணாற்றங்கரை), வசிஷ்டேஸ்வரர் கோவில் (திருதென்குடி திட்டை), சொக்கநாதர் கோவில் (கூடலூர் திருக்கூடலம்பதி), ராஜராஜேஸ்வரர் கோவில் (கடகடப்பை), கைலாசநாதர் கோவில் (திருப்புன்னைநல்லூர்), பூமாலை வைத்தியநாதர் கோவில் (கீழவாசல்) ஆகிய ஏழு ஊர்களுக்கும் பல்லக்கு புறப்பாடு நடைபெற்றது. பல்லக்கு கோவிலை வந்தடைந்ததும் நாளை (5-ந் தேதி) பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இதில் பேரூர் கட்டளை தம்பிரான் சிவப்பிரகாச அடிகளார், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் மூர்த்தானந்தர் மற்றும் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்ட விழா குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • புனித கொடி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் வைக்கப்பட்டது.
    • முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உலக புகழ் பெற்ற ஹக்கீம் ஷெய்கு தாவூது ஆண்டவர் தர்ஹா அமைந்துள்ளது.

    தர்ஹாவின் 721-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக, மாலை 5 மணிக்கு சேக்தாவூது ஆண்டவர் அடக்க சமாதியி லிருந்து புனித கொடியை பிராத்தனையுடன் தர்ஹா டிரஸ்டிகள் சுமந்து வந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் வைக்கப்பட்டது.

    பின்னர், புனித கொடியை சுமந்த பூ பல்லாக்கின் ஊர்வலம் தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் புறப்பட்டது.

    இதில் பெரிய பல்லாக்குடன் பூக்களால் ஆன சிறிய பல்லாக்குகள், கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட ரதம் மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் யானை, ஒட்டகங்கள், ஆட்டகுதிரைகள் என ஊர்வலமாக வந்தது.

    ஊர்வலம் தர்ஹாவிலி ருந்து புறப்பட்டு ஜாம்புவா னோடை மேலக்காடு வழியாக ஆசாத்நகர் சென்றது.

    அங்கு ஆசாத்நகர் மீன் மார்க்கெட் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு திருத்துறைப்பூண்டி சாலை வழியாக பழைய பஸ் நிலையம் சென்றது. அங்கு ஆட்டோ சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனை முடிந்து அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய பஸ் நிலையம் சென்று மீண்டும் ஆசாத்நகர் வழியாக கோரையாறுபாலம், ஜாம்புவானோடை சென்று தர்ஹாவை வந்தடைந்தது.

    பின்னர், தர்ஹா அருகில் உள்ள அம்மா தர்ஹா, ஆற்றாங்கரை பாவா தர்ஹா சென்று மீண்டும் தர்ஹாவை ஊர்வலம் மூன்று முறை சுற்றியது.

    பின்னர், கொடியேற்றும் நிகழ்ச்சி தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் தொடங்கியது. தொடர்ந்து, அகமது முகைதீன் லெப்பை துஆ ஓதினார். பின்னர், சிறப்பு பிராத்தனை ஓதப்பட்டு இரவு புனித கொடியேற்றப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உட்பட அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது.

    தொடர்ந்து, 8-ந் தேதி இரவு புனித கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் தப்ரூக் (அன்னதானம்) வழங்கப்படும்.

    ×