search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "departure"

    • காலை மாலை இருவேளைகளிலும் படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.
    • நவ.18-ஆம் தேதி சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் முருகனின் நான்காம் படை கோவில் அமைந்துள்ளது.

    கட்டுமலையால் ஆன இந்த தலம் நக்கீரரால் திருமுருகா ற்றுப்படையிலும், அருணகிரி நாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமாகும்.

    மேலும் பிரபவ முதல் அட்சய முடிய அறுபது தமிழ் வருட தேவதைகளும் இந்த கோயிலில் திருப்படிகளாக அமையப்பெற்று முருகனுக்கு சேவை செய்து வருகின்றன.

    இத்தகைய சிறப்புடைய சுவாமிநாத சுவாமிக்கு கந்தசஷ்டி விழா நேற்று திங்கள்கிழமை காலை தொடங்கியது.

    இதில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வாக சண்முகசுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து படி இறங்கி உற்சவ மண்ட பத்துக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு மலர் அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து விழா நாள்களில் காலை மாலை இருவேளைகளிலும் படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான நவ.18-ஆம் தேதி சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேகமும், அன்று மாலை சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள், உபயதாரர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • நாளை சந்திரபிரபை, 27-ந்தேதி பூத வாகனம் நடைபெற உள்ளது.
    • வருகிற 5-ந் தேதி ஏழூர் கண்ணாடி பல்லக்கில் உள்ள இறைவனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் கரந்தை சன்னதி தெருவில் புகழ்பெற்ற கருணாசாமி கோவில் அமைந்துள்ளது.

    வசிஷ்டர் பூஜை செய்து வழிபட்டதால் வசிஷ்டே ஸ்வரர் கோவில் எனவும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.

    இங்குள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர் என்றும், கருணாசாமி என்றும், இறைவி பெரியநாயகி என்றும், திருபுரசுந்தரி என்றும் அழைப்பது உண்டு.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் வைகாசி விசாக பெருவிழா மற்றும் ஏழூர் பல்லக்கு விழா தொடங்கியது.

    இவ்விழா வருகின்ற ஜூன் 5-ம்தேதி வரை நடக்கிறது.

    விழாவில் இன்று சூரிய பிரபை நடைபெற்றது.

    நாளை சந்திரபிரபை, 27-ம்தேதி பூத வாகனம், 28-ம்தேதி ரிஷப வாகனம் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 29-ம்தேதி யானை வாகனம், 30-ம்தேதி கைலாச வாகனம், 31-ம்தேதி குதிரை வாகனம், ஜுன் 1-ம்தேதி திருத்தேர், 2-ம்தேதி காலை வைகாசி தீர்த்தவாரி, மாலை பந்தற்காட்சி, 3-ம்தேதி காலை பிக்ஷாண்டவர், 4-ம்தேதி காலை 5 மணிக்கு சப்தஸ்தான விழா ஏமூர் கண்ணாடி பல்லக்கு புறப்படுதல், 5-ம் தேதி இரவு 7 மணிக்கு ஏழூர் கண்ணாடி பல்லக்கில் உள்ள இறைவனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன், கோவில் பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றார்கள்.

    • விழாவையொட்டி கட்டமது உண்பதும், உழவாரப்பணி விடை செய்வதும் நடைபெற்றது.
    • 63 நாயன்மார்கள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பு கலூரில் அக்னீசுவரசாமி கோவில் உள்ளது. தேவார ஆசிரியர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் இந்த கோவிலில் தான் ஐக்கியமானார்.

    ஆதலால் இந்த கோவிலில் ஆண்டுதோறும் அப்பர் ஐக்கிய திருவிழா நடைபெற்று வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு அப்பர் ஐக்கிய திருவிழா 10 நாட்கள் நடை பெற்றது.

    விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை கட்டமது உண்பதும், உழவாரப்பணி விடை செய்வதும், 63 நாயன்மார்கள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    அதைதொடர்ந்து இரவு நடைபெற்ற திருமுறை கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் திருப்புகலூர் 18-வது குருமகா சன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள் தலைமை தாங்கினார்.

    திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் காரைக்கால் முனைவர் ராஜேஸ்வரன், திருவாரூர் புலவர் விவேகா னந்தன், கவிஞர் நாகை நாகராஜன், புலவர் நாகை வேம்புமாலா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

    இதை த்தொடர்ந்து நேற்று அதிகாலை அப்பர் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சாமிகள், கோவில் நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சித்திரை மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது.
    • அனுமார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சுவாமி புறப்பாடு நடந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவீதியில் மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.

    இந்த நிலையில் சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது.

    மூலை அனுமார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உட்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

    • மதுரைக்கு பவளக்கனிவாய் பெருமாள்-சுப்பிரமணியசுவாமி இன்று புறப்பாடாகிறார்கள்.
    • மீனாட்சி அம்மனை சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்து கொடுப்ப தற்காக பவளக்கனிவாய் பெருமாளும் உடன் செல்கிறார்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை சித்திரை திருவிழாவையொட்டி நாளை (2-ந் தேதி) மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது. பெற்றோர் திருமணத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் இன்று மாலை 5 மணிய ளவில் மதுரைக்கு புறப்பாடாகிறார்கள்.

    அவர்களுடன் மீனாட்சி அம்மனை சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்து கொடுப்ப தற்காக பவளக்கனிவாய் பெருமாளும் உடன் செல்கிறார்.

    மதுரை செல்லும் சுப்பிரமணிய சுவாமி வருகிற 4-ந் தேதி வரை ஆவணி மூல வீதிகளில் தெய்வானையுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    5-ந் தேதி மாலை பூப்பல்லக்கில் எழுந்தருளி சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் திருப்பரங்குன்றம் வந்தடைவார். அவருடன் பூ பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தடைவார்.

    இதற்கான ஏற்பாடுகளை திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • மீனாட்சி சுந்தரேசுவரர் திருமணத்தில் பங்கேற்க வருகிற 1-ந் தேதி திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகன்-தெய்வானை புறப்பாடாகின்றனர்.
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    மதுரை

    அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் மற்றும் புட்டு திருவிழா ஆகிய 2 விழாக்களுக்கு சுப்ரமணியசுவாமி தெய்வானையுடன் மதுரைக்கு செல்வது வழக்கம்.

    மதுரையில் சித்திரைத்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் 1-ந்தேதி திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரைக்கு செல்கிறார்.

    இந்த திருமணத்தில் மீனாட்சி அம்மனை சொக்க நாதருக்கு தாரைவாத்துக் கொடுப்பதற்காக திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய் பெருமாளும் மதுரைக்கு செல்கிறார். மறுநாள் 2-ந்தேதி திருமண வைபவத்தில் பங்கேற்கும் சுவாமிகள் மே 5-ந்தேதி வரை மதுரையில் தங்கியிருந்து ஆவணி வீதி பகுதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். 5-ந்தேதி முருகப்பெருமான்-தெய்வானை, பவளக்கனி வாய் பெருமாள் ஆகியோர் இருப்பிடம் சேருகிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • சிறப்பு மலர் அலங்காரத்தில் நான்கு ராஜ வீதிகளில் சுவாமி புறப்பாடு நடந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அய்யங்க டைத் தெருவில் அமை ந்துள்ள பஜார் ராமர் கோவிலில் இராம நவமியை முன்னிட்டு சீதா தேவி சமேதராக இராமபிரான் பட்டாபிஷேகம் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    ராமாபிராண் அருகில் லெட்சுமணன், பரதன், சத்ருகன் மற்றும் அனுமன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

    இதேபோல் தஞ்சாவூர் மேலவீதி விஜய ராமர் கோவிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் நான்கு ராஜ வீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

    • தொடர்ந்து, 8-ந்தேதி காலை அரசலாற்றில் யானை விரட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் ஊஞ்சல் உற்சவம் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் 4-ம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் வருகிற 4-ந்தேதி பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு 4-ந்தேதி காலை வள்ளி தேவசேனா, சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா வந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு வெள்ளி ரதத்தில் வீதி உலா மற்றும் நாட்டிய குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து, 6-ந்தேதி இரவு விக்னேஸ்வர பூஜையும், 7-ந் தேதி காலை வள்ளி தேவசேனா, சண்முக பெருமாள், வேடமூர்த்தி, வள்ளிநாயகி நாரதர், நம்பிராஜன், நந்தமோகினி உற்சவ மண்டபம் எழுந்தருளுகின்றனர்.

    8-ந்தேதி காலை அரச லாற்றில் யானை விரட்டுதல் நிகழ்ச்சி, அளவந்திபுரம் நடுத்தெருவில் இருந்து சீர் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், சண்முக பெருமாள், வள்ளிநாயகியார் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து, 9, 10 ஆகிய தேதிகளில் ஊஞ்சல் உற்சவம் புறப்பாடு நிகழ்ச்சியும், 11-ந்தேதி இரவு திருக்கல்யாண உற்சவம், வள்ளிதேவசேனா, சண்மு கசாமிபுறப்படுதல், வேடமூர்த்தி, வள்ளிநா யகியார் பல்லக்கில் வீதி உலா காட்சி நடைபெறுகிறது.

    பின்னர், 12-ந்தேதி காலை சண்முக பெருமாளுக்கு 108 சங்காபிஷேகமும், இரவு வெள்ளி ரதத்தில் சாமி வீதி உலாவும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • எடப்பாடி ஆதரவாளர் திடீர் விலகினார்
    • ஓ.பி.எஸ். அணியில் ஐக்கியம்

    திருச்சி:

    அ.தி.மு.க.வில் எழுந்த ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கும், ஓ பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த நிலையில் இரு தரப்பினரும் தங்கள் பலத்தை நிரூபிக்க ஆதரவாளர்களை இழுத்து வருகின்றனர்.

    திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. துணைச் செயலாளராக, மாவட்ட பேரவை செயலாளராக எடப்பாடி அணியில் அங்கம் வகித்து வந்த பத்மநாபன் நேற்று திடீரென கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கத்தை சந்தித்து ஓ.பி.எஸ்.அணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    இவர் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மேற்கு சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் கே.என். நேருவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பொதுக்குழு உறுப்பினர் அந்தஸ்தில் இருக்கும் பத்மநாபன் திடீரென அணி மாறியது எடப்பாடி அணியினருக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

    இவர் ஆரம்பத்தில் கட்சி பிளவு பட்ட போது வைத்திலிங்கம் ஆதரவாளராக இருந்தார். பின்னர் திடீரென எடப்பாடி அணிக்கு தாவினார். இப்போது மீண்டும் பழைய இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளார். முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளை நேற்று பத்மநாபன் சந்தித்து பேசினார். இந்த தாவல் திருச்சி அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் அவரை எடப்பாடி அணிக்கு இழுத்து வருவதற்கான முயற்சிகளும் நடப்பதாக கூறப்படுகிறது.

    • வெண்ணாற்றங்களை ஸ்ரீநரசிம்மபெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.
    • வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீராமானுஜ தர்சனசபா இணைந்து நடத்தும் 88-ம் ஆண்டு 24 கருட சேவை நாளையும் (19-ந் தேதி), 15 நவநீத சேவை நாளை மறுநாளும் (20-ந் தேதி) தஞ்சையின் 4 ராஜவீதிகளில் நடைபெற உள்ளது.

    இதற்கான உற்சவர்கள் இன்று மதியம் 12 மணிக்கு மேல் தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக வெண்ணாற்றங்களை ஸ்ரீநரசிம்மபெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.

    நாளை காலை 6 மணிக்கு வெண்ணாற்றங்கரையில் இருந்து திவ்யதேச பெருமாளுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு காலை 7 மணி முதல் 12 மணி வரை தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள கீழராஜவீதி, தெற்குவீதி, மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி ஆகிய 4 ராஜவீதிகளில் சேவை உற்சவம் நடைபெற உள்ளது.நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு வெண்ணாற்றங்கரையில் இருந்து நவநீத சேவையில் புறப்பட்டு காலை 7.30 மணி முதல் 11 மணி வரை சேவையில் மேற்கூறிய 4 ராஜவீதிகளில் உற்சவம் நடைபெறுகிறது.

    21-ம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 6 மணிக்கு வெண்ணாற்றங்கரையில் சனனதிகளில் விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. இதனை தவிர நாளை மதியம் 3 மணிக்கு ராஜராஜ சமய சங்கத்தில் திருவாய்மொழி தொடக்கமும், 20-ம் தேதி இரவு 8 மணிக்கு சாற்றுமுறை உற்சவமும் நடைபெறுகிறது.ததியாராதனைகள் மேலவீதி கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி அருகில் சக்காநாயக்கன் தெருவில் உள்ள ராஜராஜ சமய சங்கத்தில் நடைபெற உள்ளது.

    இந்த உற்சவங்களில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு பெருமாளை சேவித்து பயன்பெறவும், உற்சவ விவரங்களை மற்றவர்களுக்கு தெரிவிக்கும்படியும் விழா அமைப்பாளர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.இந்த 24 கருட சேவையும், 15 நவநீத சேவையும் கடந்த பல ஆண்டுகளாக தஞ்சையில் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரம்மோற்சவ விழாவில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா, தங்க கருட சேவை, வெள்ளை சாத்தி புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
    • பெருமாள் உபநாச்சியார்கள் நால்வருடன் தேரில் எழுந்தருளி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும். 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.

    ஆழ்வார்களால் மங்களா சாசனம்செய்ய ப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா, தங்க கருட சேவை, வெள்ளை சாத்தி புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சவுரிராஜ பெருமாள், பத்மினி தாயார் திருக்கல்யாண உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. தொடர்ந்து நேற்று பெருமாள் உபநாச்சியார்கள் நால்வருடன் தேரில் எழுந்தருளி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி, வருகிற 17-ம் தேதி வெள்ளி ரத புறப்பாடும், 18-ம் தேதி விடையாற்றியும் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் மாதவன், ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், கணக்கர் உமா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×