தஞ்சை கரந்தை கருணாசாமி கோவிலில் வைகாசி விசாக பெருவிழா- ஏழூர் பல்லக்கு விழா கொடியேற்றம்

நாளை சந்திரபிரபை, 27-ந்தேதி பூத வாகனம் நடைபெற உள்ளது.வருகிற 5-ந் தேதி ஏழூர் கண்ணாடி பல்லக்கில் உள்ள இறைவனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.
பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.
Published on

தஞ்சாவூா்:

தஞ்சாவூர் கரந்தை சன்னதி தெருவில் புகழ்பெற்ற கருணாசாமி கோவில் அமைந்துள்ளது.

வசிஷ்டர் பூஜை செய்து வழிபட்டதால் வசிஷ்டே ஸ்வரர் கோவில் எனவும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.

இங்குள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர் என்றும், கருணாசாமி என்றும், இறைவி பெரியநாயகி என்றும், திருபுரசுந்தரி என்றும் அழைப்பது உண்டு.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் வைகாசி விசாக பெருவிழா மற்றும் ஏழூர் பல்லக்கு விழா தொடங்கியது.

இவ்விழா வருகின்ற ஜூன் 5-ம்தேதி வரை நடக்கிறது.

விழாவில் இன்று சூரிய பிரபை நடைபெற்றது.

நாளை சந்திரபிரபை, 27-ம்தேதி பூத வாகனம், 28-ம்தேதி ரிஷப வாகனம் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 29-ம்தேதி யானை வாகனம், 30-ம்தேதி கைலாச வாகனம், 31-ம்தேதி குதிரை வாகனம், ஜுன் 1-ம்தேதி திருத்தேர், 2-ம்தேதி காலை வைகாசி தீர்த்தவாரி, மாலை பந்தற்காட்சி, 3-ம்தேதி காலை பிக்ஷாண்டவர், 4-ம்தேதி காலை 5 மணிக்கு சப்தஸ்தான விழா ஏமூர் கண்ணாடி பல்லக்கு புறப்படுதல், 5-ம் தேதி இரவு 7 மணிக்கு ஏழூர் கண்ணாடி பல்லக்கில் உள்ள இறைவனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன், கோவில் பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com