search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: முருகன்-தெய்வானை புறப்பாடு
    X

    மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: முருகன்-தெய்வானை புறப்பாடு

    • மீனாட்சி சுந்தரேசுவரர் திருமணத்தில் பங்கேற்க வருகிற 1-ந் தேதி திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகன்-தெய்வானை புறப்பாடாகின்றனர்.
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    மதுரை

    அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் மற்றும் புட்டு திருவிழா ஆகிய 2 விழாக்களுக்கு சுப்ரமணியசுவாமி தெய்வானையுடன் மதுரைக்கு செல்வது வழக்கம்.

    மதுரையில் சித்திரைத்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் 1-ந்தேதி திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரைக்கு செல்கிறார்.

    இந்த திருமணத்தில் மீனாட்சி அம்மனை சொக்க நாதருக்கு தாரைவாத்துக் கொடுப்பதற்காக திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய் பெருமாளும் மதுரைக்கு செல்கிறார். மறுநாள் 2-ந்தேதி திருமண வைபவத்தில் பங்கேற்கும் சுவாமிகள் மே 5-ந்தேதி வரை மதுரையில் தங்கியிருந்து ஆவணி வீதி பகுதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். 5-ந்தேதி முருகப்பெருமான்-தெய்வானை, பவளக்கனி வாய் பெருமாள் ஆகியோர் இருப்பிடம் சேருகிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    Next Story
    ×