தஞ்சை மூலை அனுமார் கோவிலில் சிறப்பு வழிபாடு

சித்திரை மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது.அனுமார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சுவாமி புறப்பாடு நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மூலை அனுமார்.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மூலை அனுமார்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மேலவீதியில் மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது.

பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.

இந்த நிலையில் சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது.

மூலை அனுமார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உட்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com