search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flagship"

    • விழாவானது வருகின்ற 28-ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது.
    • இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் தீபக்காட்சியும் நடைபெற உள்ளது.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகின்ற 28-ந் தேதி வரை 12 நாட்கள் விழா நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு இன்று காலை 10.30 முதல் 12 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி பரிவாரங்களுடன் படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு யாகசாலை பூஜையுடன் சுவாமி திருவீதி உலா திக்பந்தனம் நடைபெற உள்ளது. தொடர்ந்து தினமும் சுவாமி வீதியுலாவும், வருகிற 26 ஆம் தேதி திருக்கார்த்திகை முன்னிட்டு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் தீபக்காட்சியும் நடைபெற உள்ளது.

    • 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    • கொடியேற்று விழா நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி உற்சவம் துவங்கியது. 18-ம் தேதி சனிக்கிழமை சூரசம்கார நிகழ்ச்சி நிகழ்ச்சியும், 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இன்று நடைபெற்ற கொடியேற்று விழா நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஊழியர்களும், பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
    • பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, சுகாதார மையங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமி–ழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரி–யம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதா–கும். ஆண்டுதோறும் நடை–பெறும் இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இருக் கன்குடி மாரியம்மன் கோவி–லில் குவிவார்கள்.

    இங்கு தென் மாவட்டங் களான மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து லட்சக்க–ணக்கான பக்தர்கள் பாத–யாத்திரையாக வந்து அம் மனை தரிசித்து, அக்கி–னிச் சட்டி, மாவிளக்கு, பறவை காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த் திக்கடன்களை செலுத்தி–னார்கள். பக்தர்களின் வச–திக்காக சிறப்புப் பேருந்து–களும் இயக்கப்பட்டன

    இதையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா வருகிற 11-ந்தேதி நடைபெற்ற உள்ளது. இதற்கான நிகழ்ச்சிகள் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி இன்று மாலை இருக்கன்குடி மேல–மடை குடும்புகள் தலைமை–யில் இருக்கன்குடி கீழத்தெரு பொதுமக்கள் கோவில் தலைவாசல் முன்பு வேப் பிலை கொடி கட்டுவார் கள். இதில் இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, கே.மேட் டுப்பட்டி என்.மேட்டுப்பட்டி கிராம பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மருத்துவ வசதிக்கான சுகா–தார மையங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    விழா ஏற்பாடுகளை விருதுநகர் அறநிலையத் துறை கோவில் ஆணையர் (கூடுதல் பொறுப்பு) வளர் மதி, பரம்பரை அறங்கா–வலர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் வேதநாயகி அம்மன் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
    • சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.

    அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆடிப்பூர திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.

    முன்னதாக வேதநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருள, சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றப்பட்டது.

    பின், கோவில் ஆதீன வித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசையுடன் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

    இதில் யாழ்பாணம் வரணீ ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி, ஸ்தலத்தார் கயிலைமணி வேதரத்னம், உப்பு வியாபாரம் சுப்பையா பிள்ளை குடும்பத்தினர் உள்பட கோவில் அலுவலர்கள், பக்தர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.

    • வருகிற 25-ந்தேதி காலை 8 மணிக்கு வைகாசி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • வருகிற 31-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வெண்ணாற்ற ங்கரை அருகில் நீலமேகப்பெ ருமாள், மணிக்குன்றப் பெருமாள், வீரநரசிம்மர் என மூன்று வடிவங்களில் பெருமாள் தனித்தனி கோவில்களில் அருள்பாலி க்கிறார். பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மூன்று கோவில்களையும் சேர்த்து மங்களாசாசனம் செய்ததால் மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரே திவ்யதேசமாக கருதப்படுகிறது. இவை தஞ்சை மாமணிகோவில் என அழைக்கப்படுகிறது.

    இக்கோவிலில் மூலவரான

    நீலமேகப்பெருமாள் அமர்ந்த திருகோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

    இறைவி செங்கமலவல்லி. இந்த பெருமாளுக்கு தைல காப்பு சாற்றி வழிபாடு நடக்கிறது.

    இக்கோவிலில் உற்சவர்க ளுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி பிரமோற்சவம் 9 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி பிரமோற்சவம் வருகின்ற 25-ம்தேதி (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூன்) 2-ம்தேதி வரை நடக்கிறது.

    மேற்கண்ட தினங்களில் காலை உற்சவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், தீபாராதனையும், மாலை 6 மணிக்கு உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி புறப்பாடு கோவில் உட்பிரகாரத்தில் நடக்கிறது.

    தொடக்க நாளான 25-ம்தேதி காலை 8 மணிக்கு தஞ்சாவூர் வெண்ணா ற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவம் கொடியே ற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வாக 25-ம் தேதி அன்னப்பட்சி வாகனமும், 28-ம்தேதி கருடசேவை, 29-ம்தேதி சேஷ வாகனம், 30-ம்தேதி யானை வாகனம் , 31-ம்தேதி திருக்கல்யாணம், ஜூன்1-ம்தேதி குதிரை வாகனம், 2-ம்தேதி காலையில் திருத்தேர் தொடர்ந்து தீர்த்தவாரி நடக்கிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா , கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    ×