search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா
    X

    இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
    • பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, சுகாதார மையங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமி–ழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரி–யம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதா–கும். ஆண்டுதோறும் நடை–பெறும் இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இருக் கன்குடி மாரியம்மன் கோவி–லில் குவிவார்கள்.

    இங்கு தென் மாவட்டங் களான மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து லட்சக்க–ணக்கான பக்தர்கள் பாத–யாத்திரையாக வந்து அம் மனை தரிசித்து, அக்கி–னிச் சட்டி, மாவிளக்கு, பறவை காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த் திக்கடன்களை செலுத்தி–னார்கள். பக்தர்களின் வச–திக்காக சிறப்புப் பேருந்து–களும் இயக்கப்பட்டன

    இதையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா வருகிற 11-ந்தேதி நடைபெற்ற உள்ளது. இதற்கான நிகழ்ச்சிகள் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி இன்று மாலை இருக்கன்குடி மேல–மடை குடும்புகள் தலைமை–யில் இருக்கன்குடி கீழத்தெரு பொதுமக்கள் கோவில் தலைவாசல் முன்பு வேப் பிலை கொடி கட்டுவார் கள். இதில் இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, கே.மேட் டுப்பட்டி என்.மேட்டுப்பட்டி கிராம பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மருத்துவ வசதிக்கான சுகா–தார மையங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    விழா ஏற்பாடுகளை விருதுநகர் அறநிலையத் துறை கோவில் ஆணையர் (கூடுதல் பொறுப்பு) வளர் மதி, பரம்பரை அறங்கா–வலர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×