search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karthikai"

    • விழாவானது வருகின்ற 28-ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது.
    • இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் தீபக்காட்சியும் நடைபெற உள்ளது.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகின்ற 28-ந் தேதி வரை 12 நாட்கள் விழா நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு இன்று காலை 10.30 முதல் 12 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி பரிவாரங்களுடன் படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு யாகசாலை பூஜையுடன் சுவாமி திருவீதி உலா திக்பந்தனம் நடைபெற உள்ளது. தொடர்ந்து தினமும் சுவாமி வீதியுலாவும், வருகிற 26 ஆம் தேதி திருக்கார்த்திகை முன்னிட்டு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் தீபக்காட்சியும் நடைபெற உள்ளது.

    • சபரிமலை மகரவிளக்கு பூஜைக்காக செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் நாளான நாளை முதல் தங்கள் விரதத்தை தொடங்கு கின்றனர்.
    • திண்டுக்கல்லில் உள்ள கடைவீதிகளில் பக்தர்கள் அணியும் மாலை, காவி வேட்டி, துண்டு மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் நாளான நாளை முதல் தங்கள் விரதத்தை தொடங்கு கின்றனர்.

    இதனை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள கடைவீதிகளில் பக்தர்கள் அணியும் மாலை, காவி வேட்டி, துண்டு மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. பக்தர்கள் அவரவர் வசதிக்கேற்ப சந்தனமாலை, ருத்ராட்ஷ மாலை, ஸ்படிகமாலை ஆகியவற்றை அணிந்து கொள்வார்கள். விரத நாட்கள் முடிந்த பிறகு மாலைகளை அகற்றி மீண்டும் மறுவருடம் அதனை அணிந்து கொள்வதும், துணை மாலையாக மற்றொரு மாலையை அணிந்து கொள்வதும் வழக்கம்.

    அதன்படி திண்டுக்கல் கடைவீதிகளில் பல்வேறு வகையான மாலைகள் ரூ.100 முதல் ரூ.400 வரை விற்பனையானது. மாலை களில் பொருத்தப்படும் அய்யப்பன் உருவம் பொறித்த டாலர்களும் ரூ.20 முதல் ரூ.50 வரை விற்கப்பட்டது. இதுதவிர கருப்பு, பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில் வேட்டி, துண்டு, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்களும் அதிக அளவில் விற்பனையானது.

    கார்த்திகை மாதம் நாளை பிறக்க உள்ளதை முன்னிட்டு விரதம் மேற்கொள்ளும் வீடுகளிலும் சுத்தம் செய்து தயார் படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அய்யப்பன் கோவில் மற்றும் மணிமண்டபம் ஆகிய பகுதிகளிலும் பூஜைக்கான ஆயத்த ஏற்பாடுகள் செய்ய ப்பட்டன.

    • வடபழனி முருகன் கோவிலில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.
    • செவ்வாய் ஓரையில் வழிபடுவது சிறப்பு.

    வைத்தீஸ்வரன் கோவிலில், செவ்வாய் பகவானைத் தை மாத செவ்வாய்களிலும், குறிப்பாக தை மாத கடைசி செவ்வாயில், செவ்வாய் ஓரையில் வழிபடுவது சிறப்பாகும். மேலும் செவ்வாய் பகவான் உச்சம் பெறும் தை மாதம், ஆட்சி பெறும் சித்திரை, கார்த்திகை மாதங்களில், செவ்வாயின் நட்சத்திரகளாகிய மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் வரும் செவ்வாய் கிழமைகளில் வழிபடலாம்.

    செவ்வாய் ஓரையில் செவ்வாய்க்கிழமையில், செவ்வாய் ஓரை காலை 6 மணி முதல் 7 மணி வரை இரவு 8 மணி முதல் 9 மணி வரை வழிபட்டு பரிகாரம் செய்வது மிக மிகச்சிறப்பாகும்.

    ஹோம பலன்

    உத்திராடம், உத்திரட்டாதி, உத்திரம்-இந்த நட்சத்திரங் களில் ஸ்ரீமகாலட்சுமியை ஆவாகானம் செய்து ஆயிரம் நந்தியாவட்டை மலர்களால் ஹோமம் செய்து ஐஸ்வர்யம் நிலையாய் இருக்கும் பெளர்ணமியில் பால், தேன் நெய், பழத்தை தோய்த்து ஹோமம் செய்ய அரசனாவான்.

    பஞ்சமி திதியிலும், வெள்ளிக்கிழமையிலும் வாசனை புஷ்பத்தால் ஹோமம் செய்ய ஒரு வருடத்திற்குள் அனைத்து சம்பத்துக்களையும் அடைந்து செல்வந்தனாவான்.

    விஷ்ணு பரிவார சக்திகளில் ஸ்ரீ மஹாலட்சுமி

    பத்மபுராணம் கூறுகிறது விஷ்ணுவின் பரிவார சக்திகள் எட்டு பேர் என்று புதிதாக இருக்கிறதல்லவா? அதில் இருப்பரிவார சக்திகள் சற்று வித்தியாசமாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    தகதகக்கும் தங்க நிறம் உடைய ஸ்ரீ தேவி, வெள்ளை நிறமுடைய பூமிதேவி, வெள்ளை நிறமுடைய சரஸ்வதி தேவி, பச்சை நிற முடைய பரீதி தேவி, சிவப்பு நிறமுடைய கீர்த்தி தேவி, நிறமற்று ஸ்படிகம் போல ஊடுருவும் கண்ணாடித் தன்மையுள்ள சாந்தி தேவி, மஞ்சள் நிறமுடைய துஷ்டி தேவி, பச்சை நிறமுடைய புஷ்டி தேவி, என்பவர்களே அந்த விஷ்ணுசக்திகள்.

    இவர்கள் எண்மரும் நான்கு திருக்கரங்கள் கொண்டு அவற்றில் மேல் இரு திருக்க்கரங்களில் இரு தாமரை மலர்களும், கீழே வலது கரம் அபயகாஸ்தமாகவும் இடது கரம் வரத காஸ்தமாகவும் அபிநயம் புரியும்படி பரிவார சக்திகளாக அமைந்திருப்பார்கள்.

    வடபழனி

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. செவ்வாய் தோஷம் உடையவர்களும், செவ்வாய்க் கிரகத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்கும் இதனை வழிபட மிகச்சிறப்பான பலனைத்தரும்.

    செவ்வாய் தோஷம் நீங்கிட வடக்குவாசி என்று அழைக்கப்படும் ஸ்ரீதுர்க்கை அம்மன் தெற்கு நோக்கி இருக்கும் சங்கரன் கோவிலில் வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாக அமையும். மேலும் செவ்வாய் பகவானின் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் பழனி, சுவாமிமலை, நீங்கலாக மற்ற இடங்களில் உள்ள முருகப்பெருமாளை வழிபடுவது சிறப்பாகும்.

    செவ்வாய், கடகம், மகரம், மீனம் இவற்றில் அமர்ந்து தோஷம் ஏற்படுத்தினால் திருச்செந்தூர் முருகனை வழிபடுவது சிறப்பு. பொதுவாக செவ்வாய் பகவானால் திருமண தோஷம் அடைந்தவர்கள் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானை வழிபடுவதே சிறப்பை தரும்.

    • கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
    • சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருப்பார்கள்.

    மதுரை

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருப்பார்கள். கார்த்திகை மாதம் இன்று பிறந்ததை முன்னிட்டு ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    சாத்தூர் ஓடைப்பட்டி வேட்டுவநாதர் கோவிலில் அய்ப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்ட காட்சி.

    மதுரையில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று காலை அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆனந்த அய்யப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து மாலை அணிந்து கொண்டனர். கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அங்கு சிறப்பு பூசுகள் நடந்தன. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதூர் மற்றும் விளாச்சேரியில் உள்ள அய்யப்பன் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள். மேலும் திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை முருகன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். பழமுதிர்சோலை முருகன் கோவிலில் மாலை அணிந்த பக்தர்கள், முன்னதாக அழகர்கோவில் ராக்காயி அம்மன் கோவிலில் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராடினர்.

    இதே போன்று மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், காந்தி மியூசியம் அருகே உள்ள பூங்கா முருகன் கோவில்,அண்ணாநகர் சர்வேஸ்வரர் கோவில், மேலமாசி வீதி நேரு ஆலால விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் இன்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.

    கார்த்திகை மாதம் முதல் நாளான இன்றே பலர் மாலை அணிய கோவில்களில் திரண்டதால் எங்கு பார்த்தாலும் அய்யப்ப பக்தர்களாக காட்சி அளித்தனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் இன்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். விருதுநகரில் சொக்கநாதர் கோவில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், ராமர் கோவில் ஆகிய கோவில்களில் ஏராளமானோர் மாலை அணிந்து கொண்டனர்.

    சிவகாசியில் உள்ள அய்யப்பன் கோவிலிலும் பலர் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தூரில் சிவன் கோவிலில் உள்ள அய்யப்பன் சன்னிதானம், வெள்ளகரைப் பிள்ளையார் கோவில், ஓடைப்பட்டி வெற்றி விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். குருசாமி தளபதி முருகன் கன்னிச்சாமி களுக்கு மாலை அணிவித்து அய்யப்ப சாமிக்கு விரதம் மற்றும் வழிபாடு செய்யும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.


    மானாமதுரை தர்ம சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

     மானாமதுரை வைகை ஆற்று கரையில் பிரசித்தி பெற்ற தர்ம சாஸ்தா கோவில் உள்ளது. கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் திறக்கப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது. அதைதொடர்ந்து அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்கள், தாங்கள் கொண்டு வந்த துளசிமணி மாலைகளை சுவாமி பாதத்தில் வைத்து பூஜை செய்து மாலையணிந்து சபரிமலை செல்ல 48 நாள் விரதத்தை தொடங்கினார்கள்.

    சபரிமலை மலையில் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மானாமதுரையில் இருந்து சபரிமலை செல்ல ஏராளமான பக்தர்கள் மாலையிட்டனர்.

    ×