என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • சுபமுகூர்த்த தினம்.
    • ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-14 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : தசமி மாலை 4.28 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : உத்திரட்டாதி இரவு 9.08 மணி வரை பிறகு ரேவதி

    யோகம் : அமிர்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருவண்ணாமலை அருணாசல நாயகர் மகா ரதோற்சவம், காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் காலையில் அபிஷேகம்

    இன்று சுபமுகூர்த்த தினம். ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகருக்கும், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உதவி

    ரிஷபம்-சுகம்

    மிதுனம்-ஆக்கம்

    கடகம்-நற்செயல்

    சிம்மம்-ஆர்வம்

    கன்னி-நன்மை

    துலாம்- பாராட்டு

    விருச்சிகம்-சிந்தனை

    தனுசு- சிறப்பு

    மகரம்-அமைதி

    கும்பம்-பாசம்

    மீனம்-தேர்ச்சி

    • புற்றில் இருந்த வால்மீகிக்கு காட்சி கொடுத்ததால், இவர் ‘புற்றீஸ்வரர்’ எனப்பட்டார்.
    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திருத்தளிநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேவாரப் பாடல்பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் ஒன்றாகும். இத்தல இறைவன் திருத்தளிநாதர் என்றும், இறைவி சிவகாமி என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோவிலில் உள்ள பைரவர் நாய் வாகனம் இல்லாமல் வெண்ணிற பட்டாடை அணிந்து காட்சி தருவது கோவிலின் தனிச் சிறப்பாகும்.

    தல வரலாறு

    முன்னொரு காலத்தில் வால்மீகி, கொலை, கொள்ளை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். பின்னர், இவர் மனந்திருந்தி கொன்றை மரங்கள் நிறைந்த ஒரு வனத்தில் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார். நீண்டகாலம் தவம் இயற்றியதால், அவர் அமர்ந்திருந்த இடத்தை சுற்றிலும் கரையான்கள் புற்று கட்டின. அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு காட்சி கொடுத்தார்.

    புற்றில் இருந்த வால்மீகிக்கு காட்சி கொடுத்ததால், இவர் 'புற்றீஸ்வரர்' எனப்பட்டார். அவ்வாறு காட்சி கொடுத்ததின் அடிப்படையில் எழுப்பப்பட்ட தலமே இக்கோவில். புற்றின் முன் சிவன் காட்சி தந்ததால், இத்தலம் 'புத்தூர்' என்று அழைக்கப்பட்டது. பின்னர் 'திரு' என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு, 'திருப்புத்தூர்' என்றாகி, அதுவே மருவி 'திருப்பத்தூர்' என்று அழைக்கப்படுகிறது. பிற்காலத்தில், இவ்விடத்தில் மன்னர்கள் கோவில் கட்டினர்.

    சிவ பக்தனான இரண்யாட்சனுக்கு அந்தகாசுரன், சம்பாசுரன் என இரண்டு மகன்கள் பிறந்தனர். இவர்கள் சிறந்த சிவ பக்தர்களாக இருந்தாலும், தேவர்களுக்கு பெரும் துன்பம் கொடுத்தனர். இதனால் வருந்திய தேவர்கள் சிவபெருமானை நாடினர். சிவபெருமான் பைரவராக விஸ்வரூபம் எடுத்து, அந்தகாசுரன், சம்பகாசுரனை வதம் செய்தார்.

    அசுரர்கள் என்றாலும் அவர்கள் சிவ பக்தர்கள் என்பதால் பைரவருக்கு தோஷம் ஏற்பட்டது. தோஷம் நீங்க இங்கு சிவலிங்க பூஜை செய்தார். அவரே இத்தலத்தில் 'யோகபைரவராக' காட்சி தருகிறார். இவர் வலதுகரத்தில் சிவலிங்கத்தை வைத்து, கால்கட்டை விரலை தரையில் ஊன்றியபடி யோக நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு வெண்ணிற பட்டாடை அணிவித்து அலங்கரிப்பது சிறப்பானதாகும். யோக நிலையில் இருப்பதால் இவருக்கு நாய் வாகனம் கிடையாது.

    கிரக தோஷங்கள் நீங்க நவக்கிரக தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள், இங்குள்ள யோக பைரவரை வணங்கினால் போதும், எல்லாவித தோஷங்களையும் நீக்குவார் என்பது ஐதீகம். தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப் பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள்.

    வால்மீகி தவம் செய்த இடத்தின் வடிவம், கருவறைக்கு பின்புறம் உள்ளது. இந்திரனின் மகன் ஜெயந்தனை பத்மாசுரன் கடத்தி வந்து சிறையில் அடைத்தான். தாயின் மானம் காக்க சிறைப்பட்ட ஜெயந்தனை சூரபத்மனிடம் போரிட்டு மீட்டார் முருகன். இவனுக்கு இக்கோவிலில் தனிச் சன்னிதி இருக்கிறது. சித்திரை மாதத்தில் ஜெயந்தனுக்கு இங்கு விழா எடுக்கப்படுகிறது.

    மகாவிஷ்ணு இத்தலத்தில் திருத்தளிநாதரை வழிபட்டுள்ளார். இவரும் யோகநிலையில், சுவாமிக்கு பின்புறம் தனிச் சன்னதியில் காட்சி தருகிறார். இவர், 'யோகநாராயணர்' என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர் உடன் இருக்கின்றனர். ராகு, கேது தோஷம் நீக்கும் திருநாகேஸ்வரர் சன்னிதியும் இங்குள்ளது. ராகு காலத்தில் இவரை வணங்குகின்றனர். சுப்பிரமணியர் வடக்கு நோக்கியபடி வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். இவரை, அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார். நடராஜர் கவுரிதாண்டவ கோலத்தில் உள்ளார். தட்சிணாமூர்த்தி, சீடர்கள் இல்லாமல் காட்சி அளிக்கிறார். நவக்கிரக மண்டபத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோவில் காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

    அமைவிடம்

    சிவகங்கையில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும், மதுரையில் இருந்து 65 கி.மீ. தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் கோவில் உள்ளது.

    • திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
    • உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திரவார திருமஞ்சன சேவை

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-13 (சனிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : நவமி மாலை 6.03 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம் : பூரட்டாதி இரவு 10.07 மணி வரை

    பிறகு உத்திரட்டாதி

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி மயில் வாகன உலா. பழனி ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. நயினார் கோவில் அன்னை சவுந்தரநாயகி திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திரவார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பயணம்

    ரிஷபம்-நிம்மதி

    மிதுனம்-புகழ்

    கடகம்-வெற்றி

    சிம்மம்-லாபம்

    கன்னி-உழைப்பு

    துலாம்- உதவி

    விருச்சிகம்-நலம்

    தனுசு- கண்ணியம்

    மகரம்-சுகம்

    கும்பம்-இன்பம்

    மீனம்-சுபம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    ஆதரவு பெருகும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

    ரிஷபம்

    சர்ச்சைகளில் இருந்து விடுபடும் நாள். தடைகள் தானாக விலகும். தொலைபேசி வழித்தகவல் உத்தியோக முன்னேற்றதிற்கு உறுதுணை புரியும்.

    மிதுனம்

    தடைகள் உடைபடும் நாள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். பழைய பாக்கிகளை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    கடகம்

    எதிரிகளின் தொல்லை மேலோங்கும் நாள். லாபத்தைவிட விரயம் கூடும். மற்றவர்களுக்கு நன்மை செய்யப்போய் அது தீமையாய் முடியும்.

    சிம்மம்

    விரயங்கள் கூடும் நாள். விருப்பங்கள் நிறைவேற விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும்.

    கன்னி

    மறதியால் விட்டுப்போன பணிகளை மீண்டும் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

    துலாம்

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    விருச்சிகம்

    நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். நண்பர்கள் எதிர்பார்த்த உதவிகள் செய்வர். வருமானம் திருப்தி தரும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    தனுசு

    நூதனப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். பயணங்களால் பலன் உண்டு. உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    மகரம்

    பற்றாக்குறை அகலும் நாள். எதிலும் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது. முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காண இயலும்.

    கும்பம்

    பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொருளாதார வளர்ச்சி உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட களைப்பின்றி உழைப்பீர்கள்.

    மீனம்

    பிள்ளைகளின் வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் இணக்கமாக நடந்து கொள்வர்.

    • வடக்கு ராஜகோபுரத்தின் உயரம் 171 அடி ஆகும்.
    • ராஜகோபுரத்தில் விஜயநகர மன்னர்களின் கட்டிடக் கலை அம்சங்களை அதிகமாக காணலாம்.

    நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில், சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த பிரமாண்ட ஆலயமாகும். இங்கு நான்குபுறமும் பெரிய கோபுரங்கள் மற்றும் உள்கோபுரங்கள் என மொத்தம் 9 கோபுரங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது கோபுரங்களும், ஒன்பது நுழைவாசல்களாக பார்க்கப்படுகின்றன. இதனால் திருவண்ணாமலையை 'நவதுவார பதி' என்றும் சொல்வார்கள்.

    அம்மணி அம்மாள் கோபுரம்

    வடக்கு ராஜகோபுரத்தின் உயரம் 171 அடி ஆகும். கிழக்கு பிரதான ராஜகோபுரத்தைப் போலவே 11 நிலைகளுடன், 13 கலங்களுடன் அமைக்கப்பட்ட கோபுரம் இது. அம்மணி அம்மாளின் பெரு முயற்சியால் நிறைவேறிய காரணத்தால், இந்த கோபுரத்திற்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.

    வல்லாள மகாராஜா கோபுரம்

    1318-ம் ஆண்டு தொடங்கி 1340-ம் ஆண்டு வரை, இந்த கோபுரத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளதாக கல்வெட்டு குறிப்புகள் சொல்கின்றன. திருவண்ணாமலை ஆலயத்தின் பிரதான ராஜகோபுரம் இதுதான். இந்த கோபுரம் கட்டுவதற்கான அடித்தளத்தை அமைத்தவர், கிருஷ்ணதேவராயர். ராஜராஜசோழன், தஞ்சை பெரிய கோவிலின் விமானத்தை, 216 அடியாக நிர்மாணித்தார். அதை விட ஒரு அடியாவது பெரியதாக திருவண்ணாமலை ராஜகோபுரத்தை அமைக்க வேண்டும் என எண்ணினார், கிருஷ்ண தேவராயர்.

    இதற்கான பணியை 1550-களில் தொடங்கினார். 135 அடி நீளம், 98 அடி அகலத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டு, ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் அந்தப் பணி நிறைவடைவதற்கு முன்பாகவே, கிருஷ்ணதேவராயர் இறந்துவிட்டார். இதையடுத்து சில ஆன்மிகப் பெரியவர்கள், தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கரிடம், இந்தப் பணியை முடிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

    அதற்கிணங்க, திருவண்ணாமலை கிழக்கு ராஜகோபுரத்தை, கிருஷ்ணதேவராயரின் விருப்பப்படியே, தஞ்சை பெரிய கோவில் விமானத்தை விட, ஒரு அடி அதிகமாக வைத்து 217 அடியுடன் கட்டி முடித்தார். இந்தக் கோபுரம், தமிழ்நாட்டில் 2-வது பெரிய ராஜகோபுரமாக விளங்குகிறது. 11 நிலைகள் கொண்ட இந்த ராஜகோபுரத்தில் விஜயநகர மன்னர்களின் கட்டிடக் கலை அம்சங்களை அதிகமாக காணலாம்.

    கிளி கோபுரம்

    திருவண்ணாமலை கோவிலில் உள்ள கோபுரங்களிலேயே மிகவும் பழமையானதாக இந்த கோபுரம் கருதப்படுகிறது. இது கிழக்கு ராஜகோபுரத்தின் நேராக மேற்கு பகுதியில் உள்ளது. இதனை 'பேய்க்கோபுரம்' என்று அழைக்கிறார்கள்.

    தெற்கு கட்டை கோபுரம்

    திருமஞ்சன கோபுரம் அருகே 5 நிலைகளுடன் உள்ள சிறிய கோபுரம் 'தெற்கு கட்டை கோபுரம்' என்று அழைக்கப்படுகிறது. 70 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தில் புராண நிகழ்ச்சிகளை விளக்கும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    • முன்பதிவு செய்யும் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு செல்போன் மூலம் தகவல் அனுப்பப்படும்.
    • திருப்பதி கோவிலில் நேற்று 59,548 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதம் 30-ந்தேதி முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம் நடைபெற உள்ளது.

    சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து, தேவஸ்தானம் பெரும்பாலான சிறப்பு சலுகைகளை ரத்து செய்துள்ளது. வைகுண்ட ஏகாதசி முதல் 3 நாட்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள 7 நாட்கள் நேரடி தரிசனம் வழங்கப்படுகிறது.

    நேற்று காலை 10 மணிக்குத் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்குள் 2.16 லட்சம் பக்தர்கள் பதிவு செய்தனர். மாலைக்குள் மொத்தம் 4.60 லட்சம் பேர் பதிவு செய்தனர். டிசம்பர் 1 ஆம் தேதி வரை வாய்ப்பு இருப்பதால் இந்த எண்ணிக்கை மிகப்பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்பதிவு செய்யும் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு செல்போன் மூலம் தகவல் அனுப்பப்படும். அதன் அடிப்படையில் 3 நாட்கள் தரிசனம் செய்யலாம்.

    மேலும் சிறப்பு நுழைவு தரிசனங்கள் மற்றும் ரூ 300 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு டிசம்பர் 5-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படும். அன்றைய https://ttdevasthanams. ap. gov. in என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

    திருப்பதி கோவிலில் நேற்று 59,548 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 25,781 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.54கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 15 மணி காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • பசுவாக சாபம் பெற்ற அம்பிகை, சாபவிமோசனம் வேண்டி பல இடங்களில் அலைந்து திரிந்து ஈசனை வழிபட்டார்.
    • கோவிலில் ஐந்து நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அழகுடன் காட்சி அளிக்கிறது.

    மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி எனும் ஊரில் அமைந்துள்ளது, உத்வாகநாதர் திருக்கோவில். இத்தல இறைவனின் திருநாமம் உத்வாகநாதர், இறைவியின் திருநாமம் கோகிலாம்பாள். சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 25-வது தலமாகும்.

     

    கோவில் தோற்றம்

    தல வரலாறு

    ஒரு சமயம் சிவபெருமானும், பார்வதிதேவியும் கயிலாயத்தில் இருந்தபோது, பார்வதிதேவி சிவபெருமானை வணங்கிவிட்டு, ``தங்களை பூலோக முறைப்படி திருமணம் செய்துகொள்ள என் மனம் விரும்புகிறது. என் விருப்பத்தை தாங்கள் நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று வேண்டினார். இதற்கு பதிலளித்த சிவபெருமான், ``உன் விருப்பம் நிச்சயம் நிறைவேறும். அதற்கு சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும்" என்று கூறினார். நாட்கள் பல கடந்தன. தன் விருப்பம் எப்போது, எங்கு நிறைவேறும் என்று ஈசன் சொல்லாமல் இருந்ததால், தன் எண்ணம் நிறைவேற வெகுகாலம் ஆகும் என்ற எண்ணத்தில் பார்வதிதேவி ஈசனிடம் சற்று அலட்சியமாக நடக்க ஆரம்பித்தார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், பார்வதிதேவியை பூலோகத்தில் பசுவாக பிறக்கும்படி சாபமிட்டார்.

    பசுவாக சாபம் பெற்ற அம்பிகை, சாபவிமோசனம் வேண்டி பல இடங்களில் அலைந்து திரிந்து ஈசனை வழிபட்டார். அவ்வாறு பசுவின் உருவத்தில் உலவி வந்த அம்பிகை, ஒருநாள் ஒரு இடத்தில் இருந்த சிவலிங்க திருமேனியின் மீது பாலை சொரிந்து அபிஷேகம் செய்தார். இதனால் மனம் இரங்கிய சிவபெருமான் பசுவுக்கு முக்தி அளித்தார்.

    அம்பிகைக்கு பசு சாபம் கொடுக்கப்பட்டது, தேரழுந்தூர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து பசுக்களை பராமரித்த இடம், கோமல். பசு உருவில் இருந்த அம்பிகையின் பாதக்குளம்புகள் பட்டு, ஈசனின் உடல் மீது தழும்புகள் உண்டான ஊர் திருக்குளம்பம். சிவபெருமான் பசுவுக்கு முக்தி அளித்தது, திருவாடுதுறை.

    திருந்துருத்தி என்னும் குத்தாலத்தில் பரத மகரிஷி பிரமாண்ட யாகவேள்வி நடத்தினார். அந்த யாகவேள்வியில் சிவபெருமானின் அருளால் அம்பிகை தோன்றினார். இதைக் கண்ட பரத மகரிஷி, ``வேள்வியில் தோன்றிய தெய்வீக பெண் யார்'' என்று அதிசயித்து நின்றார். அப்போது தோன்றிய சிவபெருமான், ''வேள்வியில் வந்தவர் உமாதேவியே. அவரை உமது பெண்ணாக ஏற்று, எமக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்'' எனக் கூறி மறைந்தார்.

    இதையடுத்து, திருமணத்திற்காக திருவேள்விக்குடியில் கங்கணதாரணமும், மங்கள ஸ்நானமும் செய்யப்பட்டது. குறுமுலைப்பாலையில் பாலிகை ஸ்தாபனம் செய்யப்பட்டது. பின்பு உமா தேவியை மணமகளாக அழைத்துக்கொண்டு சிவனை தேடி பரத மகரிஷி வர, இறைவன் மாப்பிள்ளை கோலத்தில் எதிர்கொண்டு காட்சி அளித்த இடமே, எதிர்கொள்பாடி. அதன்பின்னர், திருமணஞ்சேரியில் சிவபெருமான் உமாதேவியை பூலோக முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை காண தேவர்கள், முனிவர்கள், நவக்கிரகங்கள் என அனைவரும் வந்தனர். இவ்வாறு சிவபெருமானும், பார்வதிதேவியும் கைகோர்த்தப்படி திருமணக் கோலத்தில் காட்சி தருவது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும்.

     

    அம்பிகையுடன் கல்யாணசுந்தரர்

    கோவில் அமைப்பு

    கோவிலில் ஐந்து நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அழகுடன் காட்சி அளிக்கிறது. ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி காணப்படுகிறது. கோவிலின் வலதுபுறம் விநாயகர் சன்னிதி உள்ளது. இடதுபுறத்தில் நடராஜர் அருள்பாலிக்கிறார். கருவறையில் இத்தல இறைவன், உத்வாகநாதர் என்ற திருநாமத்துடன் சுயம்புலிங்கமாக அழகுற காட்சி தருகிறார். இவர் 'அருள்வள்ளநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

    கருவறையின் முன்மண்டபத்தில் இறைவி கோகிலாம்பாள் தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி உள்ளார். இவர் மணக் கோலத்தில் மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். கருவறையின் இடதுபுறம் நிருத்த மண்டபத்தில் உற்சவமூர்த்தியான கல்யாணசுந்தரர், அம்பிகையுடன் கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

    கோவிலில் சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, ராகு பகவான், துர்க்கை, விஷ்ணு ஆகியோர் சன்னிதிகளும் உள்ளன. இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. இத்தலத்துக்கு கருஊமத்தை தவிர வன்னி, கொன்றை ஆகிய தலமரங்களும் உள்ளன.

    பிரார்த்தனை

    இக்கோவில் நித்திய கல்யாண தலமாகும். இத்தல இறைவனை நாடி வருபவர்களுக்கு, தங்கள் விருப்பம் போல வாழ்க்கை அமையும், திருமணத் தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள். கோவிலுக்கு திருமண வரம் வேண்டியும், குழந்தைப் பாக்கியம் வேண்டியும் வரும் பக்தர்கள் கோவில் உள்ளே உள்ள தேவஸ்தானத்தைச் சேர்ந்த பூஜைப் பொருட்களை வாங்கி பூஜை செய்கிறார்கள். இத்தலம் ராகு தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.

    அமைவிடம்

    மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் திருமணஞ்சேரி திருத்தலம் அமைந்துள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.
    • திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-12 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : அஷ்டமி இரவு 7.16 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம் : சதயம் இரவு 10.45 மணி வரை பிறகு பூரட்டாதி.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை

    திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசல நாயகர் காலையில் ரிஷப வாகனம், இரவு பெரிய ரிஷப வாகனத்தில் பவனி. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. வேலூர் கோட்டை துர்க்கையம்மன், கதிமங்கலம் ஸ்ரீவனதுர்க்கையம்மன், பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்க்கையம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-செலவு

    மிதுனம்-போட்டி

    கடகம்-வரவு

    சிம்மம்-வெற்றி

    கன்னி-களிப்பு

    துலாம்- கடமை

    விருச்சிகம்-அன்பு

    தனுசு- ஆதரவு

    மகரம்-நன்மை

    கும்பம்-பரிசு

    மீனம்-உதவி

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் இனி ஒத்துவருவர். கடன் சுமை குறையப் புதிய வழிபிறக்கும்.

    ரிஷபம்

    வளர்ச்சி கூடும் நாள். நிச்சயிக்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.

    மிதுனம்

    நினைத்தது நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

    கடகம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு நன்மை செய்தாலும் அது தீமையாகத் தெரியும். எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும்.

    சிம்மம்

    நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நண்பர்களால் கையிருப்பு கரையக்கூடிய வாய்ப்பு உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

    கன்னி

    துன்பங்கள் தூளாகும் நாள். நல்ல செய்திகள் உங்கள் இல்லம் தேடி வரும். திடீர் பயணங்களால் திசை திருப்பம் ஏற்படலாம். வரன்கள் முடிவாகும்.

    துலாம்

    உதவிகள் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும் நாள். பழுதான வீடுகளைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.

    விருச்சிகம்

    புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும்.

    தனுசு

    யோகமான நாள். பழகிய நண்பர்களால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். உறவினர் பகை அகலும். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

    மகரம்

    வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். மாற்று இனத்தவர்களின் உதவியால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும்.

    கும்பம்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். உத்தியோகத்தில் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

    மீனம்

    நல்லவர்களின் சந்திப்பு கிடைத்து நலம் காணும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். திருமண முயற்சி வெற்றி தரும்.

    • கார்த்திகை கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும்.
    • கோவில் யானைகள் ஆண்டாள், லெஷ்மி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வரும் 5-ந்தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலின் கார்த்திகை கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும். அதனை நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி கண்டருளுவார்.

    கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை பந்தல் அமைக்க முகூர்த்தக்கால் நடும் விழா கார்த்திகை கோபுரம் அருகே இன்று காலை 10.45 மணியளவில் மகர லக்னத்தில் நடைபெற்றது. அதுசமயம் சுமார் 20 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை மற்றும் பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    அதன் பின்னர் முகூர்த்தக்காலை கோவில் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானைகள் ஆண்டாள், லெஷ்மி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின.

    இந்நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் மற்றும் கைங்கர்யபரார்கள் கலந்து கொண்டனர். இந்த பந்தல் காலை சுற்றி சுமார் 15 அடி அகலத்திற்கும் 20 அடி உயரத்திற்கும் சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-11 (வியாழக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சப்தமி இரவு 8.03 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம் : அவிட்டம் இரவு 10.57 மணி வரை பிறகு சதயம்

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி

    இன்று சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் காலையில் சேஷ வாகனத்தில் பவனி, இரவு சுவாமி கற்பக விருட்சம் அம்பாள் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. பழனி ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. திருப்பரங்குனறம் ஸ்ரீ ஆண்டவர் அன்ன வாகனத்தில் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம் மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீசித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக் கடலைச் சாற்று வைபவம்.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கும், தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கும் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-நட்பு

    கடகம்-வரவு

    சிம்மம்-இரக்கம்

    கன்னி-சாந்தம்

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-அசதி

    தனுசு- புகழ்

    மகரம்-பெருமை

    கும்பம்-விருத்தி

    மீனம்-கண்ணியம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். புதுமுயற்சிகளில் வெற்றி உண்டு. நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    ரிஷபம்

    சுப விரயங்கள் ஏற்படும் நாள். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோக முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

    மிதுனம்

    நிம்மதி கிடைக்க நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். மறதி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    கடகம்

    கவனிக்காது விட்ட உடல்நலத்தால் கவலை அதிகரிக்கும் நாள். தொழில் உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தொல்லைகள் உண்டு.

    சிம்மம்

    வருமானம் திருப்தி தரும் நாள். நண்பர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். மறதியால் விட்டுப்போன காரியங்களைத் துரிதமாக செய்வீர்கள்.

    கன்னி

    கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும். வரன்கள் வாயில்தேடி வரும்.

    துலாம்

    வரவும் செலவும் சமமாகும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

    விருச்சிகம்

    கனவுகள் நனவாகும் நாள். காரிய வெற்றி ஏற்படும். பொதுவாழ்வில் புகழ் கூடும். இனத்தார் பகை மாறும். ஆரோக்கியம் சீராகும். வாகன யோகம் உண்டு.

    தனுசு

    திட்டமிட்ட காரியத்தைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வர்.

    மகரம்

    வளர்ச்சி கூடும் நாள். உங்கள் நிர்வாக திறமைக்கு பாராட்டு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். கட்டிடம் கட்டும் பணி தொடரும்.

    கும்பம்

    வழக்குகள் சாதகமாக முடியும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    மீனம்

    நாசூக்காகப் பேசி நல்ல பெயர் எடுக்கும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும்.

    ×