என் மலர்
ஆன்மிகம்
- தனுசு ராசிக்கு பாக்கிய அதிபதியான சூரியன் மூன்றாம் இடமான உபஜெய ஸ்தானத்தில் வெற்றி ஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்க போகிறார்.
- பிறக்கும் மாசி மாதத்தில் சூரியன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானம் செல்கிறார்.
தலைமை பதவியை விரும்பும் தனுசு ராசியினரே!
தனுசு ராசிக்கு பாக்கிய அதிபதியான சூரியன் மூன்றாம் இடமான உபஜெய ஸ்தானத்தில் வெற்றி ஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்க போகிறார். இது வெற்றி மேல் வெற்றியை தரக்கூடிய காலமாகும்.தொழில் உத்தியோகத்திற்காக அடிக்கடி இடம் பெயறுவார்கள். வேதனைகளும் சோதனைகளும், சாதனைகளாக மாறும்.உழைப்பின் மேல் ஆர்வம் குறைந்து அதிர்ஷ்டத்தை நோக்கி பயணிக்கும் எண்ணம் மேலோங்கும்.தந்தையின் ஆலோசனைகளால் பயன் உண்டு.
பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும்.அவர்களின் முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்யலாம். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். பூமி, மனை வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். பத்திரப்பதிவில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். தங்கம், வெள்ளி, அதிர்ஷ்ட பணம் கிடைக்கலாம். சொத்து வாங்குவது, விற்பது, திருமணம் போன்ற முக்கிய முடிவுகளை ஒத்திப் போடவும். பொருளாதாரத்தில் நிலவிய ஏற்ற இறக்க மந்த நிலை மாறும்.கூட்டுத் தொழிலில் பலன் உண்டு. குடும்பத்தில் அமைதியும் மகிழ்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறை திறமைசாலிகளும் பிரபலமடைவார்கள்.
கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை போன்ற சுப செலவு உண்டாகும். வீண் செலவுகளை குறைத்தால் மன அமைதி கூடும். மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வமும், அக்கறையும் ஏற்படும். மாமனாரால் சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையும். உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும்.
வெளிநாட்டு, அரசு வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி தரும். பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் ஏதாவது செலவு இருந்து கொண்டே இருக்கும். வழங்குகளில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆயுள் பயம் அகலும். பண விசயத்தில் யாரையும் நம்பாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும். இது கிரகண மாதம் என்பதால் மாசி மாதம் முழுவதும் சனிக்கிழமை முன்னோர்களை வழிபட அனைத்தும் நற்பலன்களும் அதிகாரிக்கும்.
பொருளாதாரம்
ஒப்பந்தம் அடிப்படையான தொழில்,கமிஷன் அடிப்படையான தொழில்கள் இவர்களுக்கு சிறப்பான பலனைத் தரும். யூட்யூப், இன்ஸ்டாகிராம் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் இவர்களுக்கு பல மடங்கு வருமானத்தை கொடுக்கும்.கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனஸில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும்.ஜாமீன் கடன் இ.எம்.ஐ சார்ந்த பிரச்சினைகள் ஜாதகரின் வாழ்வை கேள்விக்குறியாக்கும்.
கடன் வாங்கி சுயதொழில் செய்வதை தவிர்ப்பது நல்லது.சீட்டுப் பணம், ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்துகள் வாங்குவார்கள். பணக்கவலை குறையும் பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும். கைநிறைய பணம் புரள்வதால் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.
முதலீட்டாளர்கள்
அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம். திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் செய்து முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளுக்கும் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நிலவி வந்த எதிர்ப்புகள் விலகும்.மனதில் நிறைவும் நெகிழ்ச்சியும் உண்டாகும். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.தொழிலில் உண்டான நெருக்கடிகள் நீங்கும். சிலர் வியாபாரத்தை விரிவு செய்வார்கள்.
உத்தியோகஸ்தர்கள்
திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். துன்பங்களும் துயரங்களும் முடிவுக்கு வரப்போகிறது. தன யோகம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் நிம்மதி கூடும். உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும். வேலை இல்லாதவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். வேலைக்காக சிலர் குடும்பத்தை பிரிந்து வெளியூர், வெளிநாடு செல்ல நேரும். அரசு வேலை அரசாங்க பதவி போன்றவைகளும் கிடைக்கும். சுய ஜாதக பலனை சரி பார்க்காமல் தேவையில்லாமல் வேலை மாற்றம் செய்யகூடாது. அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் இடைக்கால பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் வந்து சேர உத்தரவு வரும்.
பெண்கள்
அரசு சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு. அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்றவர்களின் விருப்பம் நிறைவேறும். பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் சர்ச்சைகள் விலகும். லாப ஸ்தான பலத்தால் தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதப்படுத்தப்படும். புதிய சொத்துக்களின் பத்திரப் பதிவு நடக்கும். வழக்குகளில் வெற்றி உறுதி. பயணங்கள் மிகுதியாகும். வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திரம் உருவாகும்.
பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும்.கணவன், மனைவி ஒற்றுமையால் மகிழ்ச்சி கூடும்.ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும். தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள். காரியத்தடை, மன சஞ்சலம் குறையும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் பல நடக்கும். பணவரவு, வருமானம் கூடும்.
சூரிய கிரகணம்
மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. தனுசு ராசிக்கு 3ம் இடமான வெற்றி ஸ்தானத்தில் சூரிய கிரகணம் ஏற்பட போகிறது.தகவல் தொடர்பு சாதனங்களான பேஸ்புக் யூ டியூப் இன்ஸ்டாகிராம்,பத்திரிக்கை துறை எழுத்துத் துறையினரின் வாழ்வாதாரம் உயரும். இந்த நாளில் ஜாமீன் போடுவது தேவையற்ற வெளியூர் பயணங்கள்,முக்கிய ஒப்பந்தங்கள், சிற்றின்பம் இவைகளை தவிர்த்தால் நன்மைகள் மிகுதியாகும்.
பாகப்பிரிவினை சார்ந்த விஷயங்களில் உடன் பிறந்தவர்களால் மன உளைச்சல் ஏற்படும் முக்கிய ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும் யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதத்தை பெற்றுத்தருவார். இளைய சகோதரன் சகோதரி போன்றவர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்வதன் மூலம் உங்களுக்கு உயர்வு உண்டாகும்.
சந்திர கிரகணம்
மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். தனுசு ராசிக்கு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கப்போகிறது. செய்த தர்மம் தலை காக்கும். சாதிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் மேலோங்கும். முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். தடை பட்ட அனைத்து சுப பலன்களும் தேடி வரும். தொழிலில் வெற்றியும், மேன்மையும் லாபமும் உண்டாகும்.
தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டும். ஆன்மீக, வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் சென்று வரும் சந்தர்ப்பம் உருவாகும்.உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் திருமணம், குழந்தை பேறு போன்ற கடமைகளை முன் நின்று நடத்துவீர்கள்.உடன் பிறந்தவர்களுடன் பாகப்பிரிவினை பேச்சுவார்த்தை, முயற்சி நடக்கும். ஞாபக சக்தி குறைவு சீராகும். காது, மூக்கு தொடர்பான அறுவை சிகிச்சை நடக்கும்.நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளை அனுசரித்து செல்ல வேண்டும். தந்தையின் ஆரோக்கியத்தில் விழிப்பு தேவை.
பரிகாரம்
மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைபட்ட சுப நிகழ்வுகள் இனிதே நடைபெறும்.
உழைக்கும் ஆர்வம் மிகுந்த மகர ராசியினரே!
பிறக்கும் மாசி மாதத்தில் சூரியன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானம் செல்கிறார். மாசி 11 (23.2.2026) முதல் செவ்வாயும் 2ம்மிடம் சென்று ராகுவுடன் இணைகிறார். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் வாக்கிற்கு மதிப்பு, மரியாதை உண்டாகும்.பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். ஆடம்பர விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.மற்றவர்களால் மதிக்கக்கூடிய நிலையை அடைவீர்கள்.குடும்பத்தில் சுப காரியங்கள் துரிதமாகும்.
உடல் ரீதியான மன ரீதியான சங்கடங்கள் மறைந்து பாக்கிய பலன்கள் சித்திக்கும். முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அருளும் உண்டாகும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். புத்திர பிராப்தம் கிடைக்கும்.தொழில் கூட்டாளிகள் இடையே முறையான ஒப்பந்தம் போட்டு தொழில் நடத்த வேண்டும். பணம் கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகையை கையாள்வதைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் என சுப விரயமும் உண்டாகும். அலைச்சல் மிகுந்த பயணம் அதிகரிக்கும். புத்திர பாக்கியம் தடைபட்டவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக உகந்த காலம்.வயதானவர்கள் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளிடம் சென்று செட்டிலாகலாம்.
உங்களை புண்படுத்திய சகோதர சகோதரிகள் மனம் திருந்துவார்கள்.திருமண வாய்ப்பு தேடி வரும்.தம்பதிகள் ஏதேனும் காரணமாகவோ வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தால் இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தலாம்.பிள்ளைகளுக்கு கல்வி ஆர்வம் கூடும். தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை அதிகமாகும். புது வீடு கட்டலாம். சுப விரய செலவுகள் ஏற்படும். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும்.பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை நடக்கலாம். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. காதலர்கள் விட்டுக் கொடுத்து செல்லவும்.
நீண்ட காலமாக தொல்லை கொடுத்து வந்த குடும்ப பிரச்சனைகள் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும்.அவ்வப்போது சிறு சோர்வு, அசதி அலுப்பு தோன்றி மறையும். அடிக்கடி கை கால்களில் உடம்புகளில் வலி இருந்து கொண்டே இருக்கும்.வைத்தியச் செலவு குறையும். கடன்கள் தீர்ந்து மன அழுத்தங்கள் குறையும்.
பொருளாதாரம்
பணம் என்பது மனிதனுக்கு வரப்பிரசாதம். போதிய வருமானத்தால் உங்களின் கெளரவம், அந்தஸ்து உயரும்.பணப் புழக்கம் சரளமாக இருக்கும். நேர்வழி, குறுக்குவழி என பணம் பல வழிகளில் பணம் பையை நிரப்பும். சேமிப்புகள் முதலீடுகள் அதிகரிக்கும். விண்ணப்பித்த வீடு, தொழில் முன்னேற்ற கடன் கிடைக்கும்.வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும். அதிர்ஷ்டம், புதையலை நம்பி கால விரயம் செய்வீர்கள் .தவறான சொத்து அல்லது பயன்படாத சொத்தை கட்டிக்காத்து ஏமாறுவீர்கள். விவசாயிகள், கால்நடையாளர்கள் பண்ணையாளர்களின் தொழில் வளர்ச்சி பிரமாண்டமாகும்.
உத்தியோகஸ்தர்கள்
மனம் விரும்பும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள்.உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய தெம்பு மற்றும் தைரியத்துடன் வீர நடை போடுவீர்கள்.வேலை மாற்றம் நடக்கும்.இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். சமூக நலச் சங்கங்களில் பதவி கிடைக்கும். உத்தியோகரீதியான பயணங்கள் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பும் ஆதரவும் மகிழ்ச்சியைத் தரும்.பணியில் விரைந்து செயல்படுவதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற முடியும்.
அரசியல்வாதிகள்
மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகும். லாபம் இல்லாத செயல்களில் ஈடுபட மாட்டீர்கள். அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி வகிப்பீர்கள். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவீர்கள்.கவுரவப் பதவிகள் தேடி வரும். வேற்று மொழி பேசுபவர்களால் நன்மைகள் தேடி வரும். வேற்று மத நம்பிக்கை கூடும்.
ராசிக்கு இரண்டில் ராகு எட்டில் கேது இருப்பதால் நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குகளை கொடுக்கக் கூடாது. பொது இடங்களில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். மேன்மையான எண்ணங்களும் சீரிய சிந்தனைகளும் பெருகும். முட்டுக்கட்டைகள் அகலும். வாழ்வின் திருப்புமுனையான சம்பவங்கள் நடக்கும். பெண்களுக்கு நிம்மதியான சூழல் நிலவும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.
குடும்பத்தை விட்டுப் பிரிந்துசென்ற உறவுகள் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வார் கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். சிக்னமாக இருக்க முயற்சி செய்வீர்கள். அடமானத்தில் உள்ள நகைகளை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் கூடி வரும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.கணவன், மனைவி ஒற்றுமை மேம்படும் அற்புதமான நல்ல நேரம்.மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து, பணம் வரும்.
சூரிய கிரகணம்
மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. ராசிக்கு 2ம்மிடமான தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரிய கிரகணம் நடக்க உள்ளது. திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப் போகிறது. பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். ஒரு சிலர் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்து சம்பாதிப்பார்கள். விவசாயிகளுக்கும், கால்நடை வளர்பவர்களுக்கு ஏற்ற காலம். தேவையற்ற அலைச்சல், ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகலாம்.
திறமைக்கும், தகுதிக்கு ஏற்ப வேலையில் முன்னேற்றமும், சம்பள உயர்வும் கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. எல்லாம் சரியாக நடந்தால் கூட சிலருக்கு நேரத்திற்கு உண்ண, உறங்க முடியாமல் வெறுமை உணர்வு இருக்கும்.மன நிறைவு இருக்காது. தனியாக அமைதியாக இருப்பதை மனம் விரும்பும். முன் கோபத்தில் பகைமை உருவாகும்.
சந்திர கிரகணம்
மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் கேது சேர்க்கையுடன் கிரகணம் சம்பவிக்கிறது. வழக்குகள் , அறுவை சிகிச்சை,வெளியூர் வெளி நாட்டுப் பயணம் கொடுக்கல் வாங்கல், வீண் வாக்குவாதங்கள் சண்டை சச்சரவு, தற்பெருமை சுய கௌரவம் எதிர்பார்ப்பது, ஆகியவற்றை தவிர்ப்பதால் இன்னல்கள் குறையும். பெரிய அளவில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும்.
பரிகாரம்
மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்து வழிப்பட்டால் மன நிம்மதி கூடும்.கடன்கள் தீர்ந்து மன அழுத்தங்கள் குறையும். சிவனுக்கு பச்சை கற்பூரம் அபிசேகம் செய்து வழிபடவும்.
தன் நம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். ஜென்ம ராகுவின் தாக்கத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் பெரும் பாதிப்பு ஏற்படாது. விரும்பிய பதவி உயர்வு தேடி வரும். பணிச் சுமை கூடும்.புதிய வேலையாட்கள் அமைவார்கள். நிரந்தர வேலை கிடைக்கும். காணாமல் போன கை மறதியாக வைத்த ஆவணங்கள் கிடைக்கும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களுக்கு பண உதவி செய்தால் திரும்ப வராது. அதுவே கணவன் மனைவி கருத்து வேறுபாடுக்கு காரணமாக அமையும் என்பதால் கொடுக்கல், வாங்கலில் நிதானம் தேவை.சிலருக்கு அரசின் தொகுப்பு வீடு கிடைக்கும். ஏழரைச் சனி யாருக்கும் திருமணத் தடையை தராது. அதனால் பெரும்பான்மையாக திருமணம் நடந்து இருக்கும்.
தற்போது ராசியில் ராகுவும் சம சப்தம ஸ்தானத்திற்கு கேதுவும் நிற்பது கோட்சார ரீதியான சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்துகிறது. சுய ஜாதக .ரீதியாக ராகு/கேது தசை நடப்பவர்கள் உரிய சாந்தி பரிகாரம் செய்த பிறகு திருமணம் நடத்த வேண்டும். ஆனாலும் ராகுவை குரு பார்ப்பதால் விருப்ப விவாகங்கள் அதிகம் நடக்கும்.சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களினால் வருமானம் கிடைக்கும். செய்யும் முயற்சிகள் வெற்றியாக அமையும். வாழ்வின் முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிப்பீர்கள்.
பொருளாதார பற்றாகுறை அகலும். தவிர்க்க முடியாத சுப விரயங்கள் அதிகரிக்கும். தடை, தாமதம், இன்னல்களை நீக்கி அற்புதமான பலன்களை அள்ளித்தரும்.விற்காமல் கிடந்த முன்னோர்கள் சொத்து விற்கும்.புதிய சொத்து வாங்கும் முயற்சி கைகூடும்.உங்களின் முயற்சிக்கு மனைவியும், பிள்ளைகளும் ஆதரவாக இருப்பார்கள். சுப நிகழ்விற்கான அறிகுறி தென்படும்.புகழ், அந்தஸ்து கவுரவம் நம்பிக்கை,நாணயம் உயரும். பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் நிலவிய சர்ச்சைகள் விலகும்.பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு ஒரு தொகையை முதலீடு செய்வீர்கள். குல தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும்.கடன் சுமை குறையும்.
பொருளாதாரம்
அனுபவ ஆற்றல் அதிகமாகும். பேச்சை மூல தடமாக கொண்டவர்கள், பேங்கிங் ஆடிட்டிங் டீச்சிங் புரோகிதம்,ஜோதிடம் மந்திர உபதேசம் ஆகியவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். செலவு குறையும். சேமிப்பு கூடும்.வருமானம் பலவித வழிகளில் வந்து கொண்டே இருக்கும்.வெளிநாட்டு பணம் தாராளமாக புழங்கும். சேமிப்பு அதிகரிக்கும். பங்குச் சந்தை ஆதாயம் மற்றும் அதிர்ஷ்ட பணம், பூர்வீகச் சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை லாபம் சொத்துச் சேர்க்கை,பொன் பொருள் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும். தவிர்க்க முடியாத சுப விரயங்கள் அதிகரிக்கும். புதிய நிலம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற சுப பலன்கள் நடக்கும்.வாகன வசதியை மேம்படுத்துவீர்கள். மறுமணம் நடைபெறும்.
முதலீட்டாளர்கள்
இந்த மாசி மாதம் மங்கலத்தையும் புது மாற்றத்தை யும் வழங்கவுள்ளது. வாழ்க்கையே போராட்டமாக இருந்தவர்களுக்கு சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதியான வாழ்க்கை அமையும். முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து முயற்சிகளும் சிறு முயற்சியில் வெற்றி வாய்ப்பை தேடித்தரும்.மந்தமான தொழில் சூடு பிடிக்கும். இரவு பகல் பார்க்காமல் கடுமையாக உழைப்பீர்கள்.
ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் வருமானம் உயரும். தொழில் கடனை குறைக்க புதிய வழிபிறக்கும். தேவைக்கு பணவசதி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தொழில் லாபங்கள் மறு முதலீடாக மாறும். புதிய தொழில் ஒப்பந்தம், பங்குச் சந்தை முதலீடுகளால் சுப பலன் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள்
உங்களின் முயற்சிகள் உடனே பலிதமாகும்.மனதில் தைரியம் குடிபுகும்.இடமாற்றம் ,தொழில் மாற்றம், வேலை மாற்றம், வெளிநாடு வாய்ப்பு என்று நீங்கள் எதிர்பார்த்து காத்து இருந்த மாற்றம் உங்களை தேடி வரும். அரசு உத்தியோகத்திற்கு பணி நியமன ஆணை கிடைக்கும்.
சக ஊழியர்களால் அதிக நன்மை கிடைக்கும்.வேலை பார்த்த இடத்தில் இருந்து வந்த பிணக்குகள் சீராகும். சிலர் தொழில் மற்றும் உத்தியோக நிமித்தமாக குடும்பத்தை பிரிந்து செல்ல நேரும். இதுவரை அரசுவழி ஆதாயம், உத்தியோகத்தில் இருந்து வந்த தடை தாமதங்கள் சரியாகி விடும். ஏதேனும் காரணத்தால் இதுவரை ஊதியம் வராமல் தடைபட்டு இருந்தால் மொத்தமாக வந்து விடும். மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல் இருந்தவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வந்து விடும்.
அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும். அரசின் ஒப்பந்தம் கிடைக்கும். கட்சி மேலிடத்தின் ஆதரவு அதிகமாகும். தொகுதி மக்களின் தேவையை நிறைவேற்றுவதை லட்சியமாக கொண்டு செயல்பட வேண்டும். செல்வாக்கை பயன்படுத்தி குறுக்கு வழியில் உங்களை எண்ணங்களை, லட்சியங்களை அடையக்கூடாது.பொதுக் கூட்டத்தில் நிறைவேற்ற முடியாத வாக்குகளை கொடுக்கக் கூடாது. உங்கள் மேல் தொடரப்பட்ட வழக்குகளுக்காக அபராதம் கட்ட நேரும்.பினாமி பெயரில் வாங்கக் கூடிய சொத்துக்கள் பிற்காலத்தில் பயன்படாது என்பதால் சிந்தித்து செயல்பட வேண்டும். சிலருக்கு புதிய நகைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.பெற்றோர்கள் பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும்.குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.தம்பதிகளிடம் சுமூக உறவு நிலவும்.
சூரிய கிரகணம்
மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. கும்ப ராசியினருக்கு ராசியில் சூரியகிரகணம் நடக்கிறது. இன்றைய நாளில் செயற்கை முறை கருத்தரிப்பு, தூர தேசப் பிரயாணங்களை ஒத்தி வைக்க வேண்டும். கடுமையான பித்ரு தோஷம் உள்ளவர்கள் பித்ரு தர்ப்பணங்கள் செய்யலாம்.தந்தை, தந்தை வழி முன்னோர்களை வழிபடுவதால் வாழ்க்கை ஒளிமயமாகும்.
சிலர் மன வெறுப்பில் பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவில் சென்று குடியேற திட்டமிடுவார்கள்.பூர்வீகச் சொத்தை அடைவதில் தடை தாமதம் ஏற்படும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் எழும்.வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் பஞ்சாயத்துக்கள் வரலாம். ஆன்லைனில் பொருள் வாங்கும் மோகம் வங்கி சேமிப்பை கரைத்து விடும்.
சந்திர கிரகணம்
மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்க உள்ளது. தொழில் தொடர்பான புதிய முயற்சிகள், திருமணம், திருமண ஒப்பந்தம், விவாகரத்து வழக்குகளை விசாரித்தல், வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள்.
இவைகளை சில நாட்களுக்கு தவிர்க்கவும்.மறைமுக எதிரிகளால் தொல்லைகள் வரலாம்.வாழ்க்கை துணை, நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களை பகைக்க கூடாது.சிற்றின்பம், நண்பர்கள் சுற்றம் சூலத்துடன் விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வது அன்றைய நாட்களுக்கு தகாத செயலாகும். சிலருக்கு தொழிலில் சகோதரருடன் பிரிவினை ஏற்படும். சிலருக்கு இளைய சகோதரரின் குடும்பத்தை பராமரிக்கும் நிலை ஏற்படும். பாகப்பிரிவினை நடக்கலாம். நலிந்தவர்களின் வாழ்வாதாரம் உயரத் தேவையான உதவிகளை செய்வது நல்லது.
பரிகாரம்
மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். தடைகள் விலகி காரியசித்தி உண்டாகும்.
ஞானத்தில் சிறந்த மீன ராசியினரே!புத்திக் கூர்மையுடன் புதிய திட்டம் தீட்டி வெற்றி பெறுவீர்கள். மீன ராசிக்கு 6ம் அதிபதியான சூரியன் 12-ம் மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் மறைகிறார்.கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் மகிழ்ச்சியும், சந்தோஷமும் தொடரும். அனுபவப் பூர்வமாக பேசுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. எத்தனை இடர் வந்தாலும் சமாளிக்க முடியும்.தொட்டது துலங்கும். பட்டது பூக்கும்.அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள்.புத்திர பிராப்தம் குல விருத்தி, உயர் கல்வி யோகம், வெளிநாட்டு உத்தியோகம், அரசு உத்தியோகம்,புண்ணிய காரியம் செய்யும் வாய்ப்பு என சுப பலன்கள் நடக்கும்.பேச்சுத் திறமை கூடும். அரிவாற்றலால் சாதுர்யமாக செயல்படுவீர்கள். குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கியவர்களுக்கு கரு உருவாகும்.பிள்ளைகளால் பெருமையும் நன்மையும் உண்டாகும்.எதிர்காலம் பற்றிய பயம் விலகும்.பிள்ளைகளுக்கு நடைபெற வேண்டிய சுப காரியம் நடக்கும்.
குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.குடும்பம் குதூகலமாக இருக்கும். உற்சாகமாக குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்வீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும்.வீடு வாகன செலவுகள் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாகும்.பூர்வீகச் சொத்தில் நிலவிய இழுபறி நிலை மாறும். பெற்றோர்களின் ஆதரவு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கைபராமரிப்புச் செலவு அதிகமாகும்.
வீடு, இடம், வாகனம் வாங்குவீர்கள். நோய்கள், கடன்கள் தீரும் காலமாகும். எதிரிகள் தொல்லை நீங்கும். எண்ணங்கள் நிறைவேறும் காலம்.ராசியை சனி பகவான் கடப்பதால் ஜென்ம சனியின் பாதிப்பால் சிறு சோர்வு, அசதி அலுப்பு அவ்வப்போது தோன்றி மறையும்.விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்தை அதிக செலவு செய்து சீரமைப்பீர்கள். நோய் நொடி சீராகும். ஜென்மச் சனி யாருக்கும் திருமணத் தடையை தராது. அதனால் பெரும்பான்மையாக திருமணம் நடந்து இருக்கும். குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
பொருளாதாரம்
குடும்பத்தில் நிலவிய சலசலப்பு குறைந்து கலகலப்பு மிகுதியாகும். குடும்பத்தில் விருந்துகள், விழாக்கள், விசேஷங்கள் என மனமகிழும் சம்பவங்கள் நடக்கும். பொருளாதாரத்தில் நிலவிய மந்த நிலை மாறும். வீடு, வாகன யோகம் உண்டாகும். வாடகை வீட்டில் வசதித்தவர்கள் புதிய வீடு வாங்குதல், கட்டுதல், பராமரித்தல் என சுப பலன்கள் கூடும். தேக சுகம் கூடும். பழைய கடன்களை அடைக்கலாம். புதிய கடன் பெற்று தொழிலை விரிவுபடுத்தலாம். விவசாயிகள் வாழ்வில் திருப்புமுனையான சம்பவங்கள் நடைபெறும்.பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். சிலருக்கு விபரீத அதிர்ஷ்ட யோகமான உயில் சொத்து அதிர்ஷ்ட பணம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.
முதலீட்டாளர்கள்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள்.உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் மற்றும் உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த பணிகள் முடியும்.கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். தொழில் சீரான சிறப்பான முன்னேற்றம் உண்டு.பேச்சை மூலதனமாக கொண்ட தொழில், கமிஷன் அடிப்படையான தொழில் புரிபவர்களுக்கும் மிக மிக சாதகமான காலம்.
உத்தியோகஸ்தர்கள்
புதிய அனுபவம் உண்டாகும். உங்களை தவறாகப் புரிந்து கொண்ட உறவினர்கள், தவறை உணர்ந்து உறவு பாராட்டுவார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.ஊழியர்களின் சம்பள உயர்வு பிரச்சனை முடிவுக்கு வரும். படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு , ஊதிய உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிட்டும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். எதிரிகளிடம் இருந்து வந்த போட்டி பொறாமைகள் மறையும்.வீடு மாற்றம், வேலை மாற்றம் போன்ற இடப்பெயர்ச்சிகள் நடைபெறும்.
அரசியல்வாதிகள்
எதிலும் உங்கள் கை ஓங்கும். எல்லாவிதமான நன்மைகளையும் இக்காலத்தில் அடைய முடியும்.சுப நிகழச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். மருத்துவ உதவியால் உடல் நிலை தேறும்.செல்வாக்கு அந்தஸ்து யாவும் உயரும். நினைத்ததை அடைய முடியும். உங்களுக்குள் வேகமும் தைரியமும் கூடும். சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவியை அடைய முடியும். சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். சிலர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், போன்ற பாலிசி எடுப்பார்கள்.
பெண்கள்
பெண்கள் மகிழ்சியாக இல்லறம் நடத்துவார்கள்.பெண்கள் நகைச் சீட்டு, ஏலச்சீட்டு என பணத்தை பெருக்குவார்கள்.திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன யோகம், தொழில் முன்னேற்றம் போன்ற பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அடிப்படை வசதிகள் பெருகும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது.சுப செலவுகளுக்கு சகோதர சகோதரிகளின் உதவிகள் கிடைக்கும்.செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். ஆரோக்கிய குறைபாட்டை முறையான வைத்தியத்தில் சரி செய்ய முடியும். கடன் தொல்லை, வாழ்க்கைத் துணையின் பிரச்சினைகள் குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள்.ஜாமீன் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற அலைச்சல் மிகுந்த பிரயாணத்தால் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். குடும்ப பிரச்சனையில் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு ஏமாறாதீர்கள்.
சூரிய கிரகணம்
மாசி 5 ( 17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. மீன ராசிக்கு 12ம்மிடமான அயன சயன ஸ்தானத்தில் சூரிய கிரகணம் நடக்கப்போகிறது. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்.கெட்டவன் ராகு மறைவு ஸ்தானத்தில் நிற்பதால் சிலருக்கு விபரீத ராஜ யோகம் உண்டாகும். எனினும் முக்கியமான பணிகளை பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்க கூடாது.ராகு கேதுக்களின் பாதையில் பூமி, சூரியன், சந்திரன் நேர்கோட்டில் வரும் அந்த நொடிகள் அமானுஷ்யமான விசயங்களை உண்டாக்கும்.
அந்த நேரத்தில் நாம் இறைவனை சரணடைந்து வழிபட்டால் பல நன்மைகள் உண்டாகும்.கிரகண காலகங்களில் செய்யப்படும் வழிபாடுகள் பல மடங்கு புண்ணியங்களையும் மனோபலத்தையும் தரும். சுய ஜாதகத்தில் உள்ள கிரகண தோஷ வீரிய குறையும்.கிரகணத்தின் போது, ஜபம், தியானம் செய்யலாம் தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சிவ புராணம் சொல்வது, கேட்பது நன்மை தரும்.
சந்திர கிரகணம்
மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். மீன ராசிக்கு 6ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இன்றைய நாளில் கடன் தீர்ப்பதால் நிரந்தரமாக கடன் தொல்லை குறையும். அஜீரண சக்தி குறைந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் நோயாளிகள் கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.விலை உயர்ந்த பொருட்கள்,ஆபரணங்கள் நகைகளை கவனமாக கையால வேண்டும். கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்ப்பையை போட்டு வைக்க வேண்டும்.
பிறகுக்கும் கடன் கொடுப்பது கடன் பெறுதல் நல்லதல்ல.பல வருடங்களாக தீராத தீர்க்க முடியாத நோய்யுள்ளவர்கள் மிருத்யுஞ்ஜெய மந்திரம், ஸ்ரீ ருத்ரம் படிப்பது கேட்பதால் ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பய உணர்வு அகலும்.தாய் மாமா ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு ஆடைதானம் வழங்கி ஆசீர்வாதம் பெறுவது நல்லது.
பரிகாரம்
மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் கஷ்டங்கள் விலகும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில்தான் குல சேகர ஆழ்வார் அவதரித்தார்.
- மாசி மகம் என்பது அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துகிறது.
மாசி மாதம் என்பது இறைவழிபாட்டுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வத்தை வழிபட சிறப்பான மாதம் என்று சொல்வார்கள். ஆனால் மாசி மாதம் அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்றதாகும்.
* மாசி மாதத்தில் சிறுவர்களுக்கு உபநயனம் செய்வதும், மந்திர உபதேசம் செய்வதும் சிறப்பு.
* மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்திரமே 'மாசி மகம்' என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் தீர்த்தங்களுடன் அமைந்த ஆலயங்களில் தெப்ப உற்சவ விழா சிறப்பாக நடைபெறும்.
*12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் நடைபெறும் 'மாசி மகாமகம்' மாசி மாதத்தில்தான் நடைபெறுகிறது.
* மாசி மாதம் வரும் சங்கடகர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் எல்லாவித தோஷங்களும் விலகும் என்கிறார்கள்.
* மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில்தான் குல சேகர ஆழ்வார் அவதரித்தார்.
* மாசி மகம் என்பது அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துகிறது. எனவே மாசி மாதத்தில் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் செய்வது விசேஷம்.
* உயர்கல்வி படிக்க விரும்புபவர்கள், ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசி மகம் அன்று அவற்றை தொடங்கினால் அந்தந்த துறையில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.
* மாசி மக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் வாழ்வில் இன்பமும், வெற்றியும் கிடைக்கும்.
* மாசி மாதம் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டு வந்தால் பெருமாளின் அருளை பெறலாம்.
* பொதுவாக அமாவாசை நாளில்தான் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சொல்வார்கள். ஆனால் மாசி மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பான பலனை தரும் என்கிறார்கள்.
- பொறுப்பான கன்னி ராசியினரே... அனுபவ அறிவால் வெற்றி பெறும் சாதகமான மாதம்.
- துலாம் ராசியின் அதிபதி சுக்ரன் 6ம் இடத்தில் உச்சம் பெற்று சனியுடன் சேர்க்கை பெறுகிறார்.
எதிலும் முதன்மையான சிம்ம ராசியினரே!
பிறக்கப் போகும் மாசி மாதத்தில் ராசி அதிபதி சூரியன் சம சப்தமஸ்தானத்தில் உள்ள ராகுவுடன் இணைந்து கிரகண தோஷம் ஏற்பட போகிறது. இது சற்று சுமாரான மாதம் என்பதால் செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் தேவை. இந்த காலகட்டத்தில் ஏதேனும் போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டால் வெற்றி நிச்சயம். ராகு கேது மற்றும் கிரகண தோஷ தாக்கத்தை இறை வழிபாட்டால் குறைக்க முடியும். பணவரவு சந்தோஷத்தை ஏற்படுத்தும். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உடல் நிலை சீராகும். ஸ்திர சொத்துக்கள் சேரும். சொத்துக்களின் மதிப்பு உயரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புத்திரர்கள் வழியில் மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வம்பு, வழக்குகள் சாதகமாகும். பெயர், புகழ் அந்தஸ்து உயரும். கவுரவப் பதவிகள், குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும்.
அவசரத் தேவைக்கு அருகில் உள்ள நகைக் கடையில் அடமானம் வைக்காமல் வங்கியை பயன்படுத்த வேண்டும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பேச்சுகளில் பொறுமை அவசியம். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகளைத் தவிர்க்கவும். விழிப்புடன் செயல்பட வேண்டும். முன் கோபத்தை குறைத்துக் கொண்டு பொறுமையாக இருக்கவும். முறையான திட்டமிடுதலும், நேர்மையும், இறை நம்பிக்கையும் இருந்தால் எத்தகைய கிரகப் பெயர்ச்சியாலும் உங்களை அசைக்க முடியாது.
எனவே நம்பிக்கை மிக முக்கியம். கோட்ச்சாரம் உங்களுக்கு சாதகமாக இல்லாத காரணத்தால் எந்த விசயத்திற்கும் கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேசன் செல்லாமல் பேசி சமரசமாக பிரச்சனைய முடிப்பது புத்திசாலித்தனம். அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு அரசுக்கு அபராதம் கட்டும் சூழல் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்ட தடைகள் தாமதங்கள் அகலும். புதிய அரசாங்க ஒப்பந்தங்கள் கிடைக்கும். சகோதர உறவுகளால் மன சஞ்சலங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். சுய ஜாதக தசா புக்தி சாதகம் அறிந்து செயல்பட வேண்டும்.
சிலருக்கு காதல் கலப்பு திருமணம் நடக்கலாம். சிற்றின்ப நாட்டம் அதிகரிக்கும். வேற்று மொழி கற்பதில் ஆர்வம் உண்டாகும். ராகு தசா மற்றும் கேது தசா நடப்பவர்கள் கண்டிப்பாக சுய ஜாதகத்தை பரிசீலிக்க வேண்டும். ஒரு சிலருக்கு ஜோதிடம், மாந்தரீகம் கற்க ஆர்வம் மிகும். தியானம் பழகி மனதை கட்டுப்படுத்த முயல்வீர்கள்.
பொருளாதாரம்
தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். குடும்பத் தேவைகள் நிறைவேறும். விலகிச் சென்ற உறவுகள் விரும்பி வருவார்கள். பொருளாதார சிக்கல்கள் குறையும். நடக்குமா? நடக்காதா என கேள்விக்குறியாக இருந்த அனைத்து நிகழ்வுகளும் மனதிற்கு இனிய முறையில் திருப்பு முனையாக மாறும். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும். சேமிப்புகள், முதலீடுகள் அதிகரிக்கும். கையில் பணம் தாராளமாக புழங்கும். வரவுக்கு மீறிய சுப செலவும் இருக்கும். குறுக்கு வழி வருமானத்திற்கு ஆசைப்பட்டு தவறான போன் தகவலை நம்பி அக்கவுண்ட் நம்பரை யாருக்கும் தரக்கூடாது.
உத்தியோகஸ்தர்கள்
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிறிய பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கண் துடைப்பிற்கான பதவி உயர்வே தவிர பிரயோஜனம் எதுவும் இருக்காது. வேலைப் பளு அதிகமாக இருக்கும். வேலை பார்த்த இடத்தில் ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். உங்களை தவறாக வழி நடத்திய கெட்ட நண்பர்கள் விட்டு விலகுவார்கள். ஆரோக்கிய குறைபாடுகள் சீராகும். வேலையின்மையால் பிறரின் வெறுப்பிற்கு ஆளாகியவர்களுக்கு கவுரமான வேலை கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் இருக்காது. இரண்டு நபர்களுக்கான வேலை செய்து ஒரு நபரின் சம்பளத்தை பெற நேரும். பனிச்சுமை காரணமாக விருப்ப ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. சிலர் ஆன்லைனில் வேலை பார்த்துக் கொடுத்த பிறகு உரிய சம்பளம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவார்கள்.
பெண்கள்
பெண்களுக்கு உடல் உபாதைகள் அகலும். பலருக்கு வாழ்வில் எதிர்பாராத நல்ல சம்பவங்களும் திருப்பு முனையும் உண்டாகும். கணவனின் அன்பு, அனுசரனைக் காக ஏங்கிய சிம்ம ராசிப் பெண்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு மாமியார், நாத்தனார் டார்ச்சர் குறையும். பண வரவில் இருந்த தடை தாமதம் விலகும். பொருளாதார முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தரும். ஒரு பெரிய அதிர்ஷ்ட தொகை கிடைக்கும். கஷ்டத்தையும், நஷ்டத்தையும் தந்த உடன் பிறந்த சகோதரரின் நடத்தையில் சிறு மாற்றம் உண்டாகும். விற்க முடியாமல் இழுபறியாக கிடந்த பூர்வீகச் சொத்துக்கள் நல்ல விலைக்கு விற்கும்.
சூரிய கிரகணம்
மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. துக்கங்களும் துயரங்களும் நீங்கும் இதுவரை நிலவிய மன சஞ்சலம், நோய் தாக்கம் குருவின் பார்வையில் கட்டுப்படும். எனக்கு எல்லாம் தெரியும் என்று சிந்திக்காமல் செயல்பட்டவர்கள் சற்று கவனத்துடன் செயல்பட துவங்குவார்கள். வேலைப்பளு குறைந்து வருமானம் அதிகரிக்கும். இளைய மனைவியால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். தவறான போனை நம்பி சேமிப்பில் உள்ள பணத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. சிலர் அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை வைத்து எந்திரம், மந்திரம், தந்திரம் என அலைந்து மிகுதியான பொருள் விரயத்தை விலை கொடுத்து வாங்குவார்கள். சிலர் செயற்கை கருத்தரிப்பு மூலம் புத்திர பாக்கியம் அடைவார்கள்.
சந்திர கிரகணம்
மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். சிம்ம ராசியில் சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. விரயாதிபதி சந்திரன் கேதுவுடன் இணைவதால் கடன் நோய் எதிரி சார்ந்த பாதிப்புகள் வரலாம். தவிர்க்க முடியாத கடுமையான உடல் பாதிப்பு உள்ளவர்கள் அன்று வைத்தியம் செய்யலாம். சுய வைத்தியம். சுயமாக மருந்து எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். கடன் வாங்குவது, கடன் கொடுப்பது, பெரிய பணப் பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் காரியங்கள் முயற்சிகளில் தடை தாமதங்கள் இருக்கும். சுயக் கட்டுப்பாடு மிக அவசியம். திட்டமிட்டு செயல்பட வேண்டும். மனதின் எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்துவது நல்லது. மன வளர்ச்சியற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவது நல்லது.
பரிகாரம்
மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் பொருளாதார தேவைகள் நிறைவு பெறும். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும்.
பொறுப்பான கன்னி ராசியினரே!
அனுபவ அறிவால் வெற்றி பெறும் சாதகமான மாதம். முக்கியமான இடங்களுக்கு குருவின் பார்வை சாதகமாக உள்ளதால் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. பொறுப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் பேச்சிலும், செயலிலும் அறிவு மேம்படும். உங்கள் சொல்வாக்கும், கவுரவமும் உயரும்.கடந்த கால சங்கடங்கள் விலகி முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். இதுவரை சந்தித்த பிரச்சனைகள் பனி போல் விலகும். முடங்கி கிடந்த தடைபட்ட அனைத்து முயற்சிகளும் வெற்றி வாய்ப்பை தரும் இனிய ஆண்டாக மாறும். இழந்த அனைத்து இன்பங்களும் உங்களைத் தேடி வரப்போகிறது.
தொட்டது துளிர் விடும். பட்டது பூக்கும். திட்டமிட்ட காரியங்களை மெல்ல மெல்ல வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகள் உங்கள் சொற்படி கேட்பார்கள். வீடு கலகலப்பாக இருக்கும். குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளிநாட்டு வேலை அல்லது தொழில் மூலம் பணவரத்து கூடும். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். பூர்வீகச் சொத்து, தாய்வழிச் சொத்து போன்றவற்றில் பாகப் பிரிவினை நடக்கும். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். சிற்றின்ப நாட்டம் அதிகரிக்கும். வேற்று மொழி கற்பதில் ஆர்வம் உண்டாகும். தொழில் ஒப்பந்தங்களை நன்றாக படித்த பின்பு கையெழுத்திடவும்.
தாயின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களை மகிழ்விக்கும். சொந்த வீடு,வாகன கனவு நிறைவேறும். ஜாமீன் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். அனைத்து விதமான ஏற்றத் தாழ்வுகளையும் சமாளிக்கும் தைரியம், மனப்பக்குவம் உண்டாகும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை நீங்கும். மன உளைச்சல் மன அழுத்தங்கள் நீங்கும். உயர்கல்வி படிப்பவர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. கண்டக சனி பகவனால் திருமணம் தடைபடாது. பொருத்தமான ஜாதகம் வந்து மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். முதல் திருமணத்தில் தோல்வியை சந்தித்தவர்களுக்கு அடுத்த இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக அமையும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உள்ளது.
பொருளாதாரம்
நீண்ட நாட்களாக வராமல் இருந்த வரா கடன்கள் இனி கொஞ்ச கொஞ்சமாக வசூலாகும். பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். சிலருக்கு பெரிய தொகை கடனாக கிடைக்கும். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வசிக்கும் வீட்டை விரிவு செய்வீர்கள். ஆனால், அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் ஆவணங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயரும்.
உத்தியோகஸ்தர்கள்
தன்னம்பிக்கையால் காரியம் சாதிக்கும் மாதம். உங்களின் புகழ், அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும். விரும்பிய வேலை கிடைக்கும். வெளியூர், வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு இடம் பெயர நேரும். பேச்சுத் திறமையால் சாதகமான பலனை அடைவார்கள். அரசுப் பணியாளர்களின் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிலர் வேலையில் இருந்து கொண்டு ஓய்வு நேரத்தில் சிறு தொழில் மூலம் வருமானம் ஈட்டலாம். வேலைச் சுமை அதிகரிக்கும். அலுவலகத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பெண்கள்
புதிய பெண் தொழில் அதிபர்கள் அதிகம் உருவாகுவார்கள். ஏற்கனவே சுய தொழிலில் இருக்கும் பெண்கள் தொழிலை பிவிருத்தி செய்வார்கள். புதிய தொழில் நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் கடன் வழங்க நிதி நிறுவனங்கள் முன்வரும். பல பெண்கள் உபரி லாபத்தால் நீண்ட கால கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவார்கள். கணவர், புகுந்த, பிறந்த வீட்டினரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். இதுவரை சரியில்லாத வேலை, குறைவான சம்பளத்தில் இருந்தவர்களுக்கு நல்ல கம்பெனியில் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும். தீராத நோயால் அவதிப்பட்டவர்களுக்கு நோய் கட்டுப்படும்.
சூரிய கிரகணம்
மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. கன்னி ராசிக்கு 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் கிரகணம் ஏற்படுவதால் கையில் பணம் புரள்வதால் கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி புதிய தொழிலில் இறங்க வேண்டாம். சற்று ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி மன நிறைவு, நிம்மதி அதிகரிக்கும். பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு வாழ்க்கை வசந்தமாகும். வழக்குகள் சாதகமாகும் அல்லது தள்ளுபடியாகும்.
குரு உபதேசம், ஜோதிடம், மருத்துவம், யோகா, தியானம் போன்ற துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்கு செல்வது நல்லது. வெளிநாட்டு குடியுரிமை, விசா சார்ந்த பிரச்சனைகள் அகலும். ராகு, கேதுக்களின் நிலைப்பாடு சற்று சுமாராக உள்ளது. தன்னம்பிக்கையுடன் உரிய வழிபாட்டு முறைகளை கடைபிடித்தால் தெய்வத்தின் அருட்கடாட்சம் கிடைக்கும்.
சந்திர கிரகணம்
மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். ராசிக்கு 12ம் மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் லாப ஸ்தான அதிபதி சந்திரனுடன் கேது இணைந்து சந்திர கிரகண தோஷம் ஏற்படுகிறது. தூக்கம் சற்று குறைவுபடும். மனசஞ்சலம் பய உணர்வும் இருக்கும். குடும்ப உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக இருப்பீர்கள். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆதாயம் குறைவுபடும். பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி சீட்டு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கை, கால் மூட்டு வலி, பாதம், இடது கண் போன்றவற்றில் பாதிப்பு இருக்கும். கண், மூட்டு அறுவை சிகிச்சைகளை ஒத்தி வைக்கவும். ஆரோக்கியத்தை அதிகரிக்க கூடிய உணவு சாப்பிடுவது நல்லது. கண் அறுவை சிகிச்சை செய்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ வேண்டும். உயிர் காக்க தேவையான நிலையில் அறுவை சிகிச்சை செய்யலாம். மற்றவர்கள் ஒரு நாள் கழித்து அறுவை சிகிச்சை செய்யலாம். அறுவை சிகிச்சை அவசியம் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பவர்கள் குல இஷ்ட தெய்வத்தை வழிபட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்.
பரிகாரம்
மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் கண்டகச் சனியின் தாக்கம் குறையும்.அனைத்து நன்மைகளையும் அடைய முடியும்.
துலாம் ராசி நேயர்களே!
துலாம் ராசியின் அதிபதி சுக்ரன் 6ம் இடத்தில் உச்சம் பெற்று சனியுடன் சேர்க்கை பெறுகிறார். நீண்ட கால திட்டங்களும் லட்சியங்களும் நிறைவேறும். சிறப்பான எதிர்காலத்திற்கான அஸ்திவாரமாக அமையும். கவுரவப் பதவிகள் தேடி வரும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் இனிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உள்நாட்டு பணம், வெளிநாட்டு பணம் உங்கள் கையில் தாராளமாக புழங்கும். லௌகீக உலகில் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்பங்களும் வந்து சேரும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும்.
சிலருக்கு புதிய நான்கு சக்ர வாகனங்கள் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். ஒப்பந்த அடிப்படை பணிக்கு வெளியூர் சென்றவர்கள் பூர்வீகம் திரும்புவார்கள். கருத்து வேறுபாட்டால் முதியோர் இல்லம் சென்ற தாய், தந்தை இல்லம் திரும்புவார்கள். பெண்களுக்கு கணவர் மற்றும் புகுந்த வீட்டினரால் ஏற்பட்ட இன்னல்கள் குறையத் துவங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண முயற்சி பலிதமாகும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். தந்தை வழி சுற்றத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு அகலும். அனைத்து பிரிவினருக்கும் அவரவர் தேவைக்கு ஏற்ற அரசின் ஆதரவு கிடைக்கும்.
சில சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புகழ் அந்தஸ்து கவுரவம் கிடைக்கும். சிறிய முயற்சியில் பெரிய தடைகள் தகறும். பூர்வீகம் சொத்து தொடர்பான மன சஞ்சலம் தீரும் காலம் வந்து விட்டது. கவுரவப் பதவிகள் கிடைக்கும். புத்திர பிராப்தம் சித்திக்கும். அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்புகள் அதிகரிக்கும். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசை வரும். செளக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். முறையான உடல் ஆரோக்கியத்தை காக்க முழு உடல் பரிசோதனை அவசியம். மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள் விலகும். வீடு மாற்றம், ஊர் மாற்றம் போன்ற நல்ல விதமான மாற்றங்கள் ஏற்படும். தலைமைப்பதவி தேடி வரும். உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க ஏற்ற காலம். சுருக்கமாக அனைத்து சங்கடங்களும் விலகி நன்மைகள் அதிகரிக்கும்.
பொருளாதாரம்
குறைந்த வட்டிக்கு நீண்ட காலத் தவணையில் கடன் கிடைக்கும். பிறருக்கு பரிதாபப்பட்டு ஜாமீன் போடக்கூடாது. எதிர்பாராத சில விரயங்கள் ஏற்பட்டாலும் குருவால் காப்பாற்றப்படுவீர்கள். எதிர்பார்த்ததை விட லாபம் பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். பாக்கிய குருவால் அதிர்ஷ்டம் அரவணைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமான யோகங்கள் உண்டாகலாம். பங்குச் சந்தை ஆதாயம் அதிர்ஷ்ட பொருள் வரவு மனதை மகிழ்விக்கும். தாராள தன வரவால் குடும்பத்திற்கு மகிழ்ச்சி நிலவும். திருமணம், குழந்தை பேறு, வீடு, வாகன யோகம், பொன், பொருள் சேர்க்கை என பல்வேறு பாக்கிய பலன்கள் நடக்கும்.பட்ட கடனும், நோயும் தீரும் காலம் வந்துவிட்டது.
உத்தியோகஸ்தர்கள்
முன்னோர்களின் நல்லாசிகள் புண்ணிய பலனாக கவசமாக காத்து நிற்கும் நேரம். மனதில் தெளிவுடன். செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால் எதிர்காலம் வளமாக மாறும். மறைமுக எதிர்ப்புகளையும் சூழ்ச்சிகளையும் போட்டிகளையும் வெற்றி கொள்வீர்கள். சிலருக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும். அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் 'தனி வருமானம் 'மகிழ்ச்சியை தரும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான வேலை வாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். அரசு வேலை, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி தரும்.
பெண்கள்
சாதிக்கும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய பலன்கள் நடக்கும். மன வலிமை அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமணத்திற்கு நாள் குறிக்கலாம். வீடு கிரக பிரவேசத்திற்கு தயாராகுவீர்கள். சுப செலவிற்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். கடனால் கவலை, கணவன் மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும்.சிலருக்கு புதிய மனை வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். பெண்கள், அழகு, ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வார்கள்.
சூரிய கிரகணம்
மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. துலாம் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரிய கிரகணம் நடக்கப்போகிறது. பூர்வீகம் குலதெய்வம் குழந்தை அதிர்ஷ்டம் காதல் சார்ந்த விஷயங்களில் ஆர்வத்தை குறைப்பது நல்லது. ஆன்மீக குருமார்களின் ஆசீர்வாதம் பெறுவது நன்னடத்தையுடன் நடந்து கொள்வது சிந்தித்து செயல்படுவது உங்களை உயர்வான இடத்திற்கு அழைத்துச் செல்லும். சுய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் மற்றும் முக்கிய பேச்சுவார்த்தைகளில் நிதானம் தேவை.
பேராசையின் காரணமாக தவறான செயலில் ஈடுபடாத வரை ராகு கேதுக்களால் பெரிய பாதிப்பு ஏற்படாது. வட்டி தொழில், சீட்டுக் கம்பெனி, ஏலச்சீட்டு, பைனான்ஸ் போன்று பெரிய அளவில் பணம் புரளும் தொழிலில் உள்ளவர்களுக்கு கொடுத்த பணம் வசூலாகுவதில் தடை, முறையற்ற ஆவணங்களால் வம்பு, வழக்கு, பஞ்சாயத்து ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய எதிர்பாலின நட்பால் சில அசவுகரியம் உண்டாகலாம். எளிதில் ஜீரணமாகக் கூடிய சத்தான உணவை சாப்பிட வேண்டும்.
சந்திர கிரகணம்
மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். துலாம் ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கிறது. தொழில் ஸ்தான அதிபதி சந்திரன் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் கிரகணம் அடைகிறார். அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும். குலதெய்வ வழிபாடு கோடி குற்றங்களை நிவர்த்தி செய்யும்.
பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும். குழந்தைகளை உங்களின் சொந்தப் பொறுப்பில் கண்காணிக்க வேண்டும். காதல் விவகாரங்கள் அவமானத்தை ஏற்படுத்தலாம். கால்நடை வளர்ப்பவர்கள், விவசாயிகள், பண்ணையாளர்கள் ஆதாயமான பலன் பெறுவார்கள். எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் நல்லது. அன்று போரிங் போடுதல் கிணறு வெட்டுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தாயையும் தாய்வயதில் உள்ளவர்களை மதிப்பதும் ஆசீர்வாதம் பெறுவதும் இன்னல்களை நீக்கும்.
பரிகாரம்
மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் தளர்வில்லாத வளர்ச்சி உண்டாகும். மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே!மாத ஆரம்பத்தில் ராசிக்கு மூன்றாம் இடத்தில் உச்சகதியில் இருக்கும் செவ்வாய் மாசி11(23.2.2026) முதல் நான்காம் இடமான சுகஸ்தானத்தில் சஞ்சரிப்பார். வாழ்க்கையில் இழந்த இன்பங்கள் மீளும். வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் உங்களின் திறமைக்கு பாராட்டும் நல்ல மதிப்பும் கிடைக்கும். சுய ஜாதக தசா புத்திக்கு ஏற்ப தொழிலில் அகலக் கால் வைப்பது நன்று. உடன் பிறந்தோர் நட்பும், நல்லுறவும் ஏற்படும். தம்பதிகளுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சுபமங்கள விரயச் செலவு உண்டாகும். சுப கடன் வாங்கி பூமி, வீடு, வாகன, வசதியை பெருக்குவீர்கள்.
ஆயுள் ஆரோக்கியம் பற்றிய பயம் அகலும். புதிய சொத்துக்களின் சேர்க்கை ஏற்படும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். வழக்கு விசாரணையில் தீர்ப்பு சாதகமாகும். சுபகாரியங்களால்.குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும். வேலைப்பளுவும் அலைச்சலும் அதிகரிக்கும்.புதிய நட்பு வட்டாரம் உருவாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பெண்களுக்கு பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும். சனி தான் பார்த்த வீட்டின் வேலையை தாமதப்படுத்தி வழங்குவார். என்பதால் திருமண வாய்ப்புகள் இழுபறியாகும். ஜாதகம் சரியாக இருந்தால் வரன் பிடிக்காது. வரன் ஒத்து வந்தால் ஜாதகம் பொருந்தவில்லை போன்ற சங்கடங்கள் நிகழும்.
முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு வாழ்க்கை அமையும். உடல் நலம் மற்றும் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். பூர்வீகம் தொடர்பான விசயங்கள் விரைவில் முடிவிற்கு வரும். தாய் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். சிலர் ஊர் மாற்றம் அல்லது வீடு மாற்றம் செய்யலாம்.
வயது முதிர்ந்த பெண்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள், அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும். பருவ வயதினருக்கு சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.
பொருளாதாரம்
பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான மாதமாக இருக்கும். அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். செல்வ செழிப்பில் மிதப்பீர்கள் பணவசதி சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். இல்லை என்ற நிலை இனி இல்லை. பண வரவுகள் சிறப்பாக இருக்கும். பழைய கடன்களை அடைத்து ஆறுதல் அடைவீர்கள். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி வாழ்க்கைக்கு, ஜீவ னத்திற்கு தேவையான, வருவாய் கிடைக்கத் துவங்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். தாய், தந்தை பொருள் உதவி செய்து வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். மூத்த சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு.
உத்தியோகஸ்தர்கள்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு. உங்கள் அலுவலக வேலை தொடர்பாக வெளிநாடு சென்று வருவீர்கள். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். விரும்பிய மாற்றத்தை தரும் நல்ல மாதம் இதுவாகும். வழக்குகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். ஆயுள் சார்ந்த பயம் விலகும். உடம்பும் மனதும் புத்துணர்ச்சியடையும். சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பீர்கள்.
பெண்கள்
பெண்களுக்கு இது மிக மகிழ்ச்சியும் உற்சாகமும் தரும் மாதமாகும். சுய தொழில் புரியும் பெண்களின் திறமை வெளிநாடு வரை பரவும். குடும்ப பிரச்சனைகள் அகலும். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும். பெண்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு விசுவாசமாகவும், நன்றியுடனும் இருப்பீர்கள். தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் காணும் கனவுகள் பலிதமாகும். கணவர் மற்றும் பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிரம்பும். தங்கம், வெள்ளி, அழகு, ஆடம்பரப் பொருட்கள் அதிகம் சேரும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். மாதவிடாய் கோளாறு சீராகும்.
சூரிய கிரகணம்
மாசி 5 ( 17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. விருச்சிக ராசிக்கு 4ம் இடமான சுகஸ்தானத்தில் சூரிய கிரகணம் சம்பவிக்க போகிறது. தாய் தந்தை, தந்தை வழி உறவுகளுடன் மோதல் கருத்து வேறுபாடு வரலாம். தாயின் ஆரோக்கியத்தில் சிறு குறைபாடுகள் உண்டாகலாம். வீடு மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.தாய் தந்தையரை அனுசரித்துச் செல்வதால் அவர்களின் ஆசீர்வாதத்தை பெற முடியும். கிணறு வெட்டுவது போரிங் போடுவது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
சொத்து வாங்குவது விற்பது ஆகியவற்றில் தவறான விலை நிர்ணயம் ஏற்படலாம். முதல் முறையாக நோய்க்கு வைத்தியம் செய்வது நல்லதல்ல. தாயின் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் வரலாம். விவசாயிகள் கால்நடை வளர்ப்பவர்கள் பண்ணையாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகளை பெறுவதால் சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும்.
சந்திர கிரகணம்
மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். விருச்சிக ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சந்திரன் கேது சேர்க்கை ஏற்படுகிறது. அன்று உங்களின் ஒன்பதாம் அதிபதி சந்திரன் பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். சுப விரயங்கள், சுப நிகழ்வுகள் மிகுதியாகும். புதிய வெளிநாட்டு வேலை, தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தை அதிகரிக்கும் சொத்துகள் சேரும்.
கூட்டுத் தொழில்கள் சிறப்படையும், பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது.குழந்தை இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.
பரிகாரம்
மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் தளர்வில்லாத வளர்ச்சி உண்டாகும். மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- கணவன்-மனைவி இடையேயான உறவைப் பாதிக்கிறது.
- கதவை எப்போதும் மூடியே வைத்திருங்கள்.
ஒரு வீட்டில் ஒரு அறையை வடிவமைக்கும்போது, வாஸ்து முறைகளை மக்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். வாஸ்துவின் படி, உங்கள் படுக்கையறை சரியான முறையில் வடிவமைக்கப்பட்டாலோ அல்லது அமைக்கப்பட்டாலோ, நேர்மறை ஆற்றல் எப்போதும் வீட்டில் இருக்கும். இப்போதெல்லாம், மக்கள் பெரும்பாலும் தங்கள் படுக்கையறைகளில் இணைக்கப்பட்ட குளியலறைகளைக் கட்டுகிறார்கள்.
கழிப்பறைக்கு முன்னால் படுக்கையறை வேண்டாம்
வாஸ்துவின் படி, உங்கள் படுக்கையறையில் கழிப்பறை அல்லது குளியலறை இருந்தால், நீங்கள் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். படுக்கையறையில் கழிப்பறை இருந்தால், படுக்கையை அதன் முன் வைக்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது. இது வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்தும்.
சிரமங்களை எதிர்கொள்வது
வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் படுக்கைக்கு முன்னால் ஒரு கழிப்பறை இருப்பது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். கழிப்பறை அல்லது குளியலறை நீர் உறுப்புடன் தொடர்புடையது என்றும் அது ராகுவின் வசிப்பிடமாகக் கருதப்படுகிறது என்றும் நம்பப்படுகிறது. இதன் விளைவாக, இந்த இடம் எதிர்மறை சக்தியை அதிகரிக்கிறது.
கணவன்-மனைவி உறவில் ஏற்படும் விரிசல்
இது குறிப்பாக கணவன்-மனைவி இடையேயான உறவைப் பாதிக்கிறது. படுக்கையறை ஓய்வெடுக்கும் இடம் என்பதால், குளியலறையின் எதிர்மறை ஆற்றல்கள் தூங்கும் போது நேரடியாக தனிநபரைப் பாதிக்கின்றன. இது நாள்பட்ட நோய்கள், முதுகுவலி மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

கருத்து வேறுபாடு
படுக்கைக்கு எதிரே கழிப்பறை இருப்பது வாஸ்து குறைபாட்டை ஏற்படுத்தும், இது கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாட்டிற்கு வழிவகுக்கும். நிதி நிலைமைகளும் பலவீனமடையலாம், மேலும் செலவுகள் அதிகரிக்கலாம்.
இந்த வாஸ்து குறைபாட்டைத் தவிர்க்க விரும்பினால், எந்த இடிப்பும் இல்லாமல் சில வாஸ்து பரிகாரங்களை முயற்சிக்க வேண்டும். குளியலறை கதவைப் பயன்படுத்திய உடனேயே மூடுங்கள். திறந்திருக்கும் கதவு படுக்கையறையின் அமைதியைக் கெடுக்கும். எனவே, கதவை எப்போதும் மூடியே வைத்திருங்கள்.
குளியலறை கதவில் திரைச்சீலை
படுக்கை மற்றும் குளியலறை கதவு ஒன்றையொன்று நோக்கி இருந்தால், கதவின் மேல் ஒரு திரைச்சீலை தொங்கவிடவும். இது வாஸ்து குறைகளின் விளைவுகளையும் குறைக்கும்.
குளியலறையில் உப்பு
மற்றொரு தீர்வு, ஒரு கண்ணாடி கிண்ணத்தில் கல் உப்பை நிரப்பி குளியலறையின் ஒரு மூலையில் வைப்பது. உப்பு எதிர்மறை சக்தியை உறிஞ்சும் சக்தி கொண்டது. ஒவ்வொரு நாளும் உப்பை மாற்றவும். இது வாஸ்து குறைபாடுகளைக் குறைக்கவும் உதவும்.
- உங்களின் ராசி அதிபதி செவ்வாய் மாசி மாதம் 11ம் (23.2.2026) வரை மகர ராசியில் உச்ச நிலையில் இருப்பார்.
- பிறக்கப் போகும் மாசி மாதத்தில் உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சனியுடன் இணைந்து உச்சம் பெற போகிறார்
ஆளுமை தன்மை நிறைந்த மேஷ ராசியினரே
உங்களின் ராசி அதிபதி செவ்வாய் மாசி மாதம் 11ம் (23.2.2026) வரை மகர ராசியில் உச்ச நிலையில் இருப்பார். அதன் பிறகு கும்ப ராசிக்கு செல்வார். ராசி அதிபதி உச்சம் பெறுவதும் லாப ஸ்தானம் செல்வதும் சிறப்பான பலன்களையே ஏற்படுத்தித் தரும். கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட இன்னல்களில் இருந்து விடுதலை கிடைக்கப் போகிறது. தடைபட்ட அனைத்து முயற்சிகளும் துரிதமாகும். உற்சாகமுடன் செயல்படுவீர்கள். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும். சுகபோக வாழ்க்கை கிடைக்கும். உங்களின் தனித் திறமைகள் வெளிப்படும். லௌகீக நாட்டம் அதிகரிக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம்.நல்ல உள்ளம் படைத்தவர்களின் நட்பால் புதிய நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
எண்ணங்கள் விருப்பங்கள் லட்சியங்கள் கனவுகள் நிறைவேறும். சிலருக்கு அதிர்ஷ்டமாக பொன் பொருள் சொத்துக்கள் சேரும். சிலருக்கு வெளியூர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடி வரும். வேற்று மொழி பேசுபவர்களின் நட்பு, ஆதாயம் கிடைக்கும். தொழிலில் அகலக்கால் வைக்கக் கூடாது. பார்க்கும் வேலையை மாற்றக் கூடாது. எந்த செயலையும் திட்டமிட்டு செய்தால் பெரிய பாதிப்பு இல்லாமல் தப்பிக்க முடியும். ஏழரைச் சனியால் ஏற்பட்ட இழப்பினை ஈடு செய்ய முடியும். ஒரு சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு திருமணத் தடை அகலும். வெகு சிலருக்கு மறுதிருமணம் நடக்கும்.புத்திர பிராப்தம் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும்.
சொத்துக்களை மீட்க தேவையான நிதி உதிவி கிடைக்கும். தவறுதலாக வாங்கிய வில்லங்க சொத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். பாகப் பிரிவினை நடக்கும். பெண்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். சிலர் வெளி மாநிலம் , வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.அரசு வேலைக்கு எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். ஆன்மீகச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்புகள் உள்ளது.
உங்களை உதாசீனம் செய்தவர்களுக்கு உங்கள் தயவு தேவைப்படும். நிம்மதி நீடிக்கும். செயற்கை கருத்தரிப்பு முறையை நாட உகந்த காலம்.வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும்.காணமால் போனவர்கள் வீடு திரும்புவார்கள். செய்யாத குற்றத்திற்கு சிறை தண்டனை அனுபவித்தவர்களுக்கு நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் குறையும்.மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் கூடும். உயர்கல்வி வாய்ப்புகள் சித்திக்கும்.
பொருளாதாரம்
லாபகரமான மாதம். இந்த மாதத்தில் ராசிக்கு 11ம் இடமான லாபஸ்தானத்தில் உள்ள ராகுவுடன் சூரியன் சேருகிறார் இது லாபத்தையும், வெற்றியைும் அதிகரிக்கும் அமைப்பாகும்.புதிய சொத்துக்கள் சேரும். இது வரை விற்க முடியாமல் கிடந்த பழைய பூர்வீகச் சொத்துக்கள் விற்கும்.வீடு, வாகனம், நிலம், தோட்டம், பிள்ளைகளின் திருமணம் என சுப விரயங்கள் அதிகமாகும். வருமானம் இல்லாமல் கொடுக்கல் வாங்கல், வரவு செலவில் நாணயத்தை காப்பாற்ற முடியாமல் சங்கடத்தை அனுபவித்தவர்கள் சரளமான பொருள் வரவால் தொழில், வாழ்க்கை இரண்டிலும் திருப்தியான பலனை அடைய முடியும். நீங்கள் எந்த துறையில் பணி புரிகிறீர்களோ அந்த துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள்.
முதலீட்டாளர்கள்
முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். திட்டங்களும் கனவுகளும் வெற்றி பெறும்.விரயமும், துயரமுமான நிலை மாறும்.கொள்கை, கோட்பாடுடன் செயல்படுவீர்கள். தொழிலில் வெற்றியும், முன்னேற்றமும், லாபமும் உண்டாகும். தொழிலிலில் முன்னேற்றம் இருக்கும்.இதுவரையில் யோசிக்காத வகையில் விவேகமாக சிந்தனை செய்து தொழிலை வளப்படுத்துவீர்கள். தொழில் போட்டியாளர்கள் விலகுவார்கள். தொழில் விருத்தி குடும்பத் தேவை மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு விண்ணப்பித்த கடன் உதவி கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள்
இடமாற்றமும் பதவி உயர்வும் நிச்சயம். அரசு வேலைக்கு முயற்சித்தவரின் கனவு நனவாகும். பொருளாதார நெருக்கடிகள் விலகும் உத்தியோகத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். உத்தியோகத்தில் ஸ்திர தன்மை ஏற்படும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தரமான நிம்மதியான வேலை கிடைக்கும். பணி நிரந்தரம் ஆகாதவர்களுக்கு வேலை நிரந்த மாகும். அரசு உத்தியோக வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். ஆனால் அதிகம் உழைத்து சிறிய பொருளை சம்பாதிக்க நேரும்.
அரசியல்வாதிகள்
பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான நேரம். மக்கள் மனதில் இடம்பிடிக்க அயராது உழைத்து வெற்றியும் காண்மீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பதவி உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சமூக அந்தஸ்து உயரும் . நீங்கள் சார்ந்து இருக்கும் இயக்கத்தால் உங்களுக்கு மதிப்பு , மரியாதை உயரும். மிகுதியான சுபமும் குறைவான அசுபமும் நடக்கும். திடீர் லாபம் கிடைக்கும். ஆனால் சரியான நேரத்திற்கு வீட்டு உணவை உண்ண முடியாமல் காலம் தாழ்த்தி கிடைத்த உணவை உண்டு காலம் கடத்த நேரும்
பெண்கள்
லௌகீக உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கப் போகிறீர்கள். குலதெய்வ அருள் கடாட்சம் கிடைக்கும். கண், காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள் அறுவை சிகிச்சையில் சீராகும்.புதிய சொத்து வாகனம் வாங்குவீர்கள். பொன், பொருள் சேரும். பிற மொழி இனத்தவர் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
தந்தை, தந்தை வழி உறவுகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும். அவரவர் வயதிற்கு ஏற்ப குழந்தை பாக்கியம், பேரன், பேத்தி யோகம் உண்டாகும். குடும்பம் கோவிலாக இருக்கும். உங்களின் பேச்சிற்கு மற்றவர் கட்டுப்படுவார்கள். பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் அனைத்து விதமான ஏற்றத் தாழ்வுகளையும் சமாளித்து விடுவீர்கள்.நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும்.
சூரியகிரகணம்
மாசி 5 ( 17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. ஆனால் ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் இந்த கிரகணம் நடைபெறுகிறது. அதுவே பாதகஸ்தானம் என்பதால் சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். அல்லது தொழில், தொழில் உத்தியோகக்திற்காக பிறந்த ஊரை விட்டு பிரிந்து வெளியூர், வெளிநாடு போகலாம். பிறரை நம்பி குறுக்கு வழியில் செல்லக் கூடாது.
எதிர்பாலின நட்பை தவிர்க்கவும். தேவையற்ற வம்பு வழக்குகளை தவிர்க்கவும். எல்லோரையும் அனுசரித்து செல்ல வேண்டும். குடும்பத்தில் சங்கடங்களை தவிர்க்க பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. உணவுக் கட்டுப்பாடு அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.சிலருக்கு விபத்து கண்டம், சர்ஜரி அவமானம் போன்ற பாதிப்புகள் இருக்கும். கடன் பட்டு சொத்து சுகம் அமைத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தை அதிகரிக்க மாற்று முறை வைத்தியத்தை நாடுவீர்கள். போட்டி தேர்வு, பந்தயங்களில வெற்றி நிச்சயம்.
சந்திர கிரகணம்
மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர கிரகணம் சம்பவிக்கப் போகிறது. ஆழ்மன எண்ணங்களை கட்டுப்படுத்தும் தியானம் யோகா மூச்சுப் பயிற்சி மனநிறைவு மன நிம்மதியை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும். குலதெய்வ வழிபாடு கோடி குற்றங்களை நிவர்த்தி செய்யும்.பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும்.
குழந்தைகளை உங்களின் சொந்தப் பொறுப்பில் கண்காணிக்க வேண்டும்.காதல் விவகாரங்கள் அவமானத்தை ஏற்படுத்தலாம்.ஆன்மீக குருமார்களின் ஆசிர்வாதம் பெறுவது, நன்னடத்தையுடன் நடந்து கொள்வது, சிந்தித்து செயல்படுவது உங்களை உயர்வான இடத்திற்கு அழைத்துச் செல்லும்.மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கிரகணம் முடிந்த பிறகு அருகில் உள்ள சிவன் கோவிலில் உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்வது நல்லது
பரிகாரம்
மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் குடும்ப வாழ்க்கையில் இருந்த இடையூறுகள் நீங்கும். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும்.
மகிழ்ச்சியான ரிஷப ராசியினரே
பிறக்கப் போகும் மாசி மாதத்தில் உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சனியுடன் இணைந்து உச்சம் பெற போகிறார்.
உச்சம் பெற்ற ராசி அதிபதி சுக்கிரனுக்கு வீடு கொடுத்த குரு பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது ரிஷப ராசியினருக்கு இழந்த அனைத்து விதமான இன்பங்களையும் மீட்டு தரக்கூடிய அதிர்ஷ்டமான மாதமாக அமையப் போவதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் மாதம். புகழ், அந்தஸ்து, கவுரவும் உயரும்.
மன நிறைவும், நிம்மதியும் உண்டாகும்.எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். எந்த சூழ்நிலையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கூடும். நீண்ட நாள் ஆசைகள், கனவுகள் நிறைவேறும்.ஒழுக்கமே உயர்த்தும் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். எண்ணங்களும் லட்சியங்களும் செயல் வடிவம் பெறும் நிம்மதியாக சுதந்திரமாக செயல்படுவீர்கள். குடும்ப உறவுகளின் ஆசைகளை, தேவைகளை நிறை வேற்றுவீர்கள். எதிரில் பார்த்தாலும் பார்க்காமல் விலகிச் சென்ற சகோதரர் போனில் நலம் விசாரிப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.
தந்தை மகன் உறவு சிறக்கும். தந்தை வழி உறவினர்–களிடம் இருந்த கருத்து வேறுபாடு குறையும். தம்பதிகள் மிக மகிழ்ச்சியுடன் சந்தோசமாக ஓர் உயிர் ஈருடலாக வாழ்வார்கள். வாழ்க்கைத் துணையின் ஆயுள், ஆரோக்கியம் சிறக்கும். கணவன், மனைவி இருவருமே தீர்க்காயுளுடன் வாழும் பாக்கியம் பெறுவார்கள். வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் உத்தியோகத்திற்காகவோ கருத்து வேறுபாடு காரணமாகவோ பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் மீண்டும் இணைந்து வாழ்வார்கள். சிலர் பெற்றோர்களுடன் கருத்து வேறுபாட்டால் தனிக்குடித்தனம் செல்வார்கள். சம்பந்திகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். அண்டை, அயலாருடன் நல்லிணக்கம் உண்டாகும். திருமணம் கை கூடும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். மாணவர்கள் சிந்தனையை ஒரு நிலைப்–படுத்தினால் வளமான எதிர்காலம் உண்டு. உயர் கல்வி முயற்சிக்கு சாதகமான சூழல் உண்டாகும். ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
பொருளாதாரம்
பொருளாதார ரீதியாக சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். பண வரவு பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் கிடைக்கும். மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும் குடிபுகும். கொடுக்கல், வாங்கல் சீராகும். உயில் சொத்து, பணம், பங்குச் சந்தை ஆதாயம் போன்ற மறைமுக வகையில் பொருளாதாரம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து, எதிர்பாராத தன வரவு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். சொத்துக்களின் மதிப்பு உயரும். பல தலைமுறையாக விற்காமல் கிடந்த குடும்ப சொத்துக்கள் விற்று விடும்.
முதலீட்டாளர்கள்
பல புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். புதிய கூட்டாளிகளை நம்பி அதிக முதலீடு செய்வதை தவிர்க்கவும். தொழில் அதிபர்களுக்கு அரசின் உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக உதவிக்கரம் நீட்டுவார்கள். நம்பிக்கையான விசுவாசமான வேலையாட்கள் கிடைப்பார்கள். கடுமையாக உழைக்க நேரும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. புதிய நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் கிடைக்கும். சிலர் நண்பர்கள் அல்லது களத்திரத்துடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம்.கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழிலில் முதலீட்டை அதிகப்படுத்த உகந்த காலம். வராக்கடன்கள் வசூலாகும்.
உத்தியோகஸ்தர்கள்
எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். நடப்பவையெல்லாம் நல்லதாகவே நடக்கும்.இதுவரை இருந்த பயம் அகலும்.கடந்த காலத்தில் நிலவிய தடைகள் நீங்கும்.புதிய வேலைக்காக எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சொந்த தொழில் பற்றிய எண்ணம் அதிகமாகும். சிலருக்கு உத்தியோக மாற்ற சிந்தனை அதிகரிக்கும்.பெரிய பதவிகளும் கிடைக்க கூடிய சாத்தியக்கூறும் உள்ளது. வேலையில் நல்ல சம்பளத்துடன் கூடிய இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அதே நேரம் வேலையில் கடினமாக உழைக்க நேரும்.
அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த மாதம் திண்டாட்டம் மாறி கொண்டாட்டம் உலாவும். ஆற்றலுக்கும், திறமைக்கும் பெருமை சேர்க்கும் சம்பவங்கள் நடக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். கட்சியில் ஏதாவது செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். பிறரின் விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. சிலருக்கு மிகப் பெரிய கட்சி மாறி இணையும் வாய்ப்பு கிட்டலாம்.
பெண்கள்
பெண்களுக்கு தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மிகப் பெரிய அரசியல் தலைவர்களின் நட்பு கிடைக்கும். தாய் மாமா அல்லது தாய்வழி தாத்தா மூலம் நிதி உதவி கிடைக்கலாம். தொழிலில் சிறிய முயற்சியில் பெரிய லாபம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. தடை பட்ட சொத்து விற்பனை சாதகமாகும். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கு தகுந்த வருமானமும் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். அரசின் நலத்திட்டத்தால் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும்.
சூரிய கிரகணம்
மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இந்தியாவில் கிரகணம் தெரியாது என்றாலும் இந்த காலகட்டத்தில் ராகுவும் செவ்வாயும் நெருக்கமாக பயணிப்பார்கள். ராசிக்கு பத்தாம் இடமான கர்ம ஸ்தானத்தில் கிரகணம் நடக்கப் போகிறது. தேவையற்ற அலைச்சலும் மன உளைச்சலும் வரலாம். சொத்துக்கள் வாங்கும் மற்றும் விற்கும் விஷயத்தில் கவனம் தேவை. பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் அவசரப்படக்கூடாது. குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடக்கும். புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும்
இடப்பெயர்ச்சி வீடு மாற்றம் நாடு மாற்றம் ஊர் மாற்றம் வேலை மாற்றம் வரலாம். பெரிய மனிதர்களின் தொடர்பால் சமுதாய அங்கீகாரம் கூடும்.பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டின் மூலம் காரிய சித்தி கிடைக்கும். சிலருக்கு வெளி நாட்டு குடியுரிமை கிடைக்கும். வேற்றுமொழி கற்கும் ஆர்வம் கூடும். நல்ல திருப்புமுனையான சம்பவங்கள் நடக்கும். வழக்குகள் சாதகமாகும். கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். சிலருக்கு தத்து புத்திர யோகம் உண்டாகும். அதனால் புதிய தொழில் முயற்சியை தவிர்ப்பது நல்லது. அகலக்கால் வைக்க கூடாது. சுய ஜாதக. ரீதியாக ராகு/கேது தசை நடப்பவர்கள் உரிய சாந்தி பரிகாரம் செய்வது நல்லது.
சந்திர கிரகணம்
மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். உங்கள் ராசிக்கு நான்காம் இடமான சுகஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கிறது. தாய் தந்தை, தந்தை வழி உறவுகளுடன் மோதல் கருத்து வேறுபாடு வரலாம். தாய் தந்தையரை அனுசரித்துச் செல்வதால் அவர்களின் ஆசிர்வாதத்தை பெற முடியும். சொத்து வாங்குவது விற்பது ஆகியவற்றில் தவறான விலை நிர்ணயம் ஏற்படலாம். பூமி வாங்கும் விசயத்தில் சிந்தித்து நிதானமாக செயல்படுவது சிறப்பு. புதியதாக வாங்கிய சொத்தின் பத்திரப் பதிவு தள்ளிப்போகும். முதல் முறையாக நோய்க்கு வைத்தியம் செய்வது நல்லதல்ல. தாயின் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் வரலாம்.
இன்கம்டேக்ஸ், சேல்ஸ் டேக்ஸ் கணக்கை முறையாக வைத்துக் கொள்வது அவசியம். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகளை பெறுவதால் சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும்.
பரிகாரம்
மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் ஜாதக ரீதியான தோஷம் நீங்கும். மன துக்கம் விலகும். காரிய வெற்றி கிடைக்கும்.ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பாதிப்புகள் அகலும்.
உயர்வான எண்ணம் கொண்ட மிதுன ராசியினரே
பிறக்கப் போகும் மாசி மாதத்தில் ராசி அதிபதி புதன் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் கும்ப சஞ்சரிப்பார். மாசி14 (26.2.2026) அன்று கும்ப ராசியில் வக்கிரம் அடைவார். கோட் சார கிரகங்கள் மிகச் சாதகமாக உள்ளதால் சுகமான வாழ்க்கையை நோக்கி அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். புகழின் உச்சிக்கு செல்லப் போகிறீர்கள். ஆன்ம பலம் கூடி புதுப் பொலிவு ஏற்படும். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். சிந்தனைகள் பெருகும். எவராலும் சாதிக்க முடியாத செயல்களை செய்து முடிப்பீர்கள். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்ப வாழ்க்கையில் நிலவிய பிரச்சினைகள் தடைகள் விலகும். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும். வீண் அலைச்சல், துக்கம் விலகும்.
குடும்ப விசேஷங்களில் முதல் மரியாதை கவுரவப் பதவிகள் கிடைக்கும். காணாமல் போன பொருள்கள், முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். ஞாபக சக்தி கூடும். காதல் திருமண முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் சீராகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். சிலர் முன்னோர்கள் கடைபிடித்த கொள்கைகளிலிருந்து மாறுபட்டு செயல்பட நேரும். வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறும் காலம். புதிய சொத்து வாங்கும் போது முக்கிய ஆவணங்களை சரிபார்க்கவும். மாணவர்கள் விளையாட்டை தவிர்த்து எதிர்காலத்திற்கு திட்டமிட்டு படிப்பது அவசியம். எதிர்பாராத சில செலவுகள் வரலாம். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும். மூட்டு வலி, வயிறு சார்ந்த உபாதைகள் தீரும். பூர்வீக சொத்து தொடர்பான நல்ல தகவல்கள் கிடைக்கும். தந்தை வழி உறவுகளுடன் ஒற்றுமை மேலோங்கும். பெண்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்த தாய் வழி சீதனம் தேடி வரும்.
பொருளாதாரம்
பணவரவு அதிகரிக்கும். சுய சம்பாத்தியம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை அடைத்த நிலை மாறும். பழைய பாக்கிகள் வசூலாகும். சுய ஜாதக ரீதியாக தன வரவில் நிலவிய தோஷங்கள் விலகும். பொன், பொருள் சேரும். பற்றாக்குறை வருமானத்தில் வாழ்ந்த குடும்பம் நிறைவான வருமானத்துடன் நடக்கும். தடைபட்ட வாடகை வருமானங்கள் வந்து சேரும். மனதிலிருந்த கவலைகள் மாறும். பல வருடங்களாக தீராத பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய சொத்துக்கள் சேரும். ஸ்திர சொத்துக்களின் மதிப்பு உயரும். சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தைகள் நடக்கும். சொத்து, தொழில் மற்றும் சுப செலவிற்காக வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
முதலீட்டாளர்கள்
உற்பத்தி பெருகி, இலாபம் கூடும். நேரம் காலம் பார்க்காமல் அதிகம் உழைக்க நேரும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். வாழ்க்கையில் சுவாரஸ்யம் கூடும். எதிர்கால வளர்ச்சிக்கு புதிய மார்க்கம் தென்படும். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். எதிர்க்கருத்து கூறியவர்கள் மனம் மாறுவர்கள். புதிய வழியில் சம்பாதிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். வெளி வட்டார தொடர்புகளால் புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும். சிலர் நிலையான நிரந்தரமான தொழில், உத்தியோகத்திற்காக வீடு அல்லது ஊர் மாற்றலாம். புதிய தொழிலுக்கு எடுக்கும் முயற்சிகள் நல்ல மாற்றத்தை தரும். முதலாளி, தொழிலாளிகளிடம் கருத்து ஒற்றுமை மேலோங்கும். கமிஷன் தொழில், தரகு, பங்குச் சந்தை, ஜோதிடம் போன்ற தொழில் இருப்பவர்களுக்கு பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள்
திட்டமிட்டு செயல்படுவீர்கள். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். செல்வாக்கு உயரும். உங்களின் ஆளுமைக்கு மதிப்பும், பாராட்டும் கிடைக்கும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வேலையின்மை மற்றும் தொழில் தோல்வியையும் சந்தித்து வந்த உங்கள் மனநிலை மாறும். பேச்சில் பொறுமை மட்டும் தான் உங்களுக்கு கை கொடுக்கும். சிலர் சுய தொழில் துவங்கலாம். தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். இதுவரை எந்த வேலைக்கும் போகாமல் இருந்தவர்கள் கூட கிடைத்த வேலைக்குச் செல்வார்கள். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர உத்தரவு வரும்.
அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் செல்வாக்கு குறைவது போல் மனம் வேதனை அடையும். பணம் சம்பாதிக்க கடுமையாக உழைப்பீர்கள். வீண் அவமானம் மறைமுக எதிர்ப்பு ஏற்படும். நெருக்கமானவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். அரசியல் எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். பதவி மாற்றம், இலாகா மாற்றம் ஏற்படலாம். பொது மக்கள் ஆதரவை பெற வேண்டிய காலம். மேலிடத்தின் அதிகாரத்தால் மன அமைதி குறைவு உண்டாகலாம். உங்கள் பேச்சே உங்களுக்கு எதிரிகளை உருவாக்கலாம். எனவே எதையும் யோசித்து பேசுவது நல்லது. எதிர்பாலினத்திடம் கவனமாக இருக்கவும்.
பெண்கள்
சங்கடங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெறும் மாதம். பெண்களுக்கு விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண முயற்சிகள் சித்திக்கும். கடன் தொல்லைகள் அகலும். உழைப்பிற்கான நல்ல பலன் கிடைக்கும். தாயார் உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சினைகள் சீராகும். வெளிநாடு சென்றவர்கள் சொந்த மண்ணிற்கு திரும்பும் சந்தர்ப்பம் உருவாகும். நீண்ட கால பரம்பரை நோய்க்கு மாற்று மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முயல்வீர்கள். உயில் எழுத ஏற்ற காலம். வேலைபளு மற்றும் அலைச்சல் சற்று அதிகமாக இருக்கும். தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து செயல்படுவதால் மன ஒற்றுமை அதிகரிக்கும். வம்பு, வழக்கிலிருந்து முழுமையாக விடுபடுவார்கள். பிரிந்து வாழ்ந்த குடும்ப உறவுகள் இணைந்து வாழும் யோகமும் ஒற்றுமையும் உண்டாகும்.
சூரிய கிரகணம்
மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. மிதுன ராசிக்கு 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் ராகு சேர்க்கை ஏற்படுகிறது. இழுபறி நிலைமாறி துரிதமாக காரியங்கள் நடைபெறும். நன்மைகள் நடைபெறும். தொட்டது துலங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் இணைவார்கள். மூத்த சகோதரர், தந்தை பக்க பலமாக இருந்து உதவுவார். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் குறைப்பது நல்லது. பங்குச்சந்தை, சூதாட்டம், புதிய முதலீடுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகமாகும். சுய ஜாதக ரீதியாக பித்ரு தோஷம் இருப்பவர்கள் கிரகணத்தன்று பித்ரு சாந்தி பூஜை செய்வதால் பாக்கிய பலம் அதிகரிக்கும். வெளி உணவுகளைத் தவிர்த்து வீட்டில் சமைத்த சூடான உணவை சாப்பிடவும்.
சந்திர கிரகணம்
மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். மிதுன ராசிக்கு மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்க உள்ளது. குடும்ப ஸ்தான அதிபதி சந்திரன் கேதுவுடன் இணைவதால் மனப்போராட்டம் அதிகரிக்கும் ஞாபக சக்தி குறையும்.வீடு மாற்றுவது, வேலை மாற்றுவது தொழில் நிறுவனத்தை மாற்றுவது, உத்தியோக மாற்றம், பத்திரப்பதிவு பாகப்பிரிவினை ஆகியவற்றை தவித்தல் நல்லது.
முக்கிய பணப்பரிவர்த்தனைக்கு உள்ள ஆவணங்களை பத்திரமாக பராமரிக்க வேண்டும். சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்ட, பணம், பொருள், உயில் சொத்து கிடைக்க வாய்ப்பு உள்ளது. உயிர் காக்கும் முக்கிய அறுவை சிகிச்சை இருந்தால் செய்து கொள்ளலாம். முக்கிய ஆபரணம் மற்றும் ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது.அடமான நகைகள் சொத்துக்களை மீட்கும் முயற்சி வெற்றி தரும்.
பரிகாரம்
மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் தேவைகள் நிறைவேறும். உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும்.
மாற்றத்தை விரும்பும் கடக ராசியினரேமட்டற்ற மகிழ்ச்சியோடு நல்ல மாற்றங்களும் ஏற்றங்–களும் உண்டாகும் மாதம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் புதிய நம்பிக்கை பிறக்கும். ஆன்ம பலம் பெருகும். தடைபட்ட பணிகள் துரிதமாக நடைபெறும். எதிர்ப்புகளை சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். கடந்த கால விருப்பங்கள் தற்போது நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கடன் பிரச்சனைகள் குறையும். உடன் பிறந்தவர்களின் சந்திப்பு, அனுசரனை மகிழ்ச்சியை அதிகரிக்கும். புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். தந்தை வழி உறவுகளிடம் முக்கிய பேச்சு வார்த்தையை நடத்துவீர்கள்.
ஊர் மாற்றம் வேலை மாற்றம், வீடு மாற்றம், பள்ளி மாற்றம் என அவரவர் வயதிற்கேற்ற மாற்றம் உண்டாகும். திருமணம், சுப காரிய முயற்சிகள் சாதகமாகும். அசையும், அசையாச் சொத்து தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத் துணைக்கு பூர்வீகச் சொத்து கிடைக்கும். சிலருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். அதற்கு தேவையான கடன் தொகை கிடைக்கும். பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களின் கருத்துக்களை மதித்து நடப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். நோய் எதிர்ப்பு சக்தி கூடி உடல் நலம் சீராகும். உயர் கல்விக்கு விரும்பிய கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு உள்ளது.
சுமாராக படித்த மாணவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள். பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மன நிறைவோடு செய்து முடிப்பீர்கள். முன்னோர்கள் செய்த புண்ணிய பலனால் பங்குச் சந்தை ஆதாயம் திருப்தி தரும். காதல் முயற்சிகள் வெற்றியில் முடியும்.
ஆன்மீக யாத்திரை செல்லும் விருப்பம் நிறைவேறும். சூரிய சந்திர கிரகணம் 2,8ம் இடங்களில் சம்பவிக்க உள்ளது. கிரகங்கள் தன் கடமையைச் செய்யும். யாரையும் விட்டு வைப்பதில்லை. மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு சோதனை இருக்கத்தான் செய்யும். இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் விதைத்தால் இந்த மாதம் இனிய மாதமாக மாறும்.
பொருளாதாரம்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்கலாம். குடும்ப பொது பிரச்சனைகளில் விவேகத்துடன் செயல்படவும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சேமிப்பு உயரும். தாராளமான தன வரவால் ஆடம்பரச் செலவில் ஆர்வம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் அரசாங்க ஊழியர்களின் வாழ்வாதாரம் உயரும். நெருங்கிய உறவினர்களுக்கு அவசரத்திற்கு பணம் கொடுத்தால் திரும்ப வராது. கொடுத்த பணத்தை திரும்ப கேட்டால் மன சங்கடம், பகை அதிகமாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும். அரசு அங்கீகாரம் இல்லாத தனியார் நிதி நிறுவனங்களில் உபரி பணத்தை சேமிப்பதை தவிர்க்கவும்.
முதலீட்டாளர்கள்
தொட்டது துலங்கும் வருடம். மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள், மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். தொழிலுக்கு அரசின் மானியம் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். நல்ல தசாபுத்தி நடைபெறும் பட்சத்தில் புதிய தொழில் துவங்கலாம். பழைய கூட்டாளி விலகலாம். திறமையான தொழில் பங்குதாரர் கிடைக்கலாம். தொழில், வியாபாரத்தில் முன் நின்று போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். அஷ்டம ராகு ஆதிக்கம் உள்ளதால் முதலீட்டாளர்கள் இயன்றவரை பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். மன சஞ்சலத்தை கட்டுப்படுத்த வேண்டிய காலம்.
உத்தியோகஸ்தர்கள்
தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு. அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு பிரச்சனை முடிவுக்கு வரும். படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் கம்பெனி சார்பாக வெளிநாட்டில் சென்று பணிபுரிகின்ற வாய்ப்பு இருக்கும். யாரையும் பகைக்கக் கூடாது. முன்யோசனை இல்லாத அவசரத்தனமான பேச்சு மற்றவர்களுக்கு மன வருத்தத்தை தரும் விதமாக இருக்கும்.
அரசியல்வாதிகள்
அதிகாரப் பதவிகள் தேடி வரும். கட்சி மேலிடம் உங்களுக்கு முக்கியத்துவம், பதவியும் கொடுக்கும். 2ல் கேது இருக்கும் வரை யாரையும் நம்பி ரகசியத்தை பகிரக் கூடாது. கூட்டணி கட்சிகள், நண்பர்கள் உங்களை எப்பொழுது வேண்டுமென்றாலும் கவிழ்த்து விடலாம். எதிர் கட்சியினருக்கு சாதகமான காலம். பதவியை தக்க வைக்க ஊர் ஊராக அலைந்து விரயம் அதிகமாகும். சிலர் விரயம் என்றால் பொருள் விரயம் என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள். கவுரவம் குறைந்தாலும் விரயம் தான்.
பெண்கள்
பெண்கள் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தாய் மற்றும் தாய் வழி உறவுகளின் ஆதரவும் சொத்தும் கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை, பிறந்த வீட்டு சீர் என மகிழ்ச்சியான விசயங்கள் நடந்து மகிழ்விக்கும். பொன் பொருள் சேரும். பூமி யோகம் உண்டு. வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு நம்பிக்கையை அதிகரிக்கும். சிலருக்கு வேலையில் மாற்றம் செய்ய நேரும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். தம்பதிகள் ஒற்றுமை சிறக்கும் ஆரோக்கிய குறைபாடுகள் வைத்தியத்தில் சீராகும். குழந்தைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும். குல, இஷ்ட தெய்வ தெய்வ வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
சூரிய கிரகணம்
மாசி 5 ( 17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. ராசிக்கு 8ம் மிடமான அஷ்டம ஸ்தானத்தில் சூரிய கிரகணம் நிகழ்வதால் எண்ண ஓட்டம் அதிகரிக்கும். உங்களின் கற்பனை குதிரை கட்டுக்கடங்காமல் ஓடும். அடங்காத எண்ண அலைகளால் உங்களுக்கு மனதடுமாற்றம் ஏற்படும். யாரை நம்புவது எந்த காரியத்தை செய்வது எதில் லாபம் வரும் என்ற நிதானமற்ற நிலை நீடிக்கும். சிறிய செயலுக்கு கூட கடுமையாக போராட நேரும். அதனால் மனச் சோர்வு மிகும். திட்டமிட்ட செயல் கூட கடைசி நேரத்தில் காலை வாரும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும். சுய கவுரவத்திற்கு கெட்ட பெயர் வராமல் நடந்து கொள்ளவும். ஏலச்சீட்டு, நகைச் சீட்டு வட்டிக்கு பணம் கொடுப்பது போன்ற பணம் தொடர்பான விஷயங்களில் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. உயிருக்கு ஆபத்தை தரும் நோய்களுக்கு சிகிச்சை செய்பவர்களுக்கு நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும்.
சந்திர கிரகணம்
மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். ராசிக்கு இரண்டாம் இடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் சம்பவிக்கப் போகிறது. பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால், வேற்று மதத்தினர் வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு உணவு ஒவ்வாமை. அலர்ஜி, கண் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். காரசாரமான விவாதங்கள் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். தெளிவான மனக் குழப்பமற்ற பேச்சுகளால் குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும்.
கொடுக்கல் வாங்கல் மற்றும் முக்கிய பேச்சுவார்த்தைகளில் நிதானம் தேவை. யாரையும் சபிக்க கூடாது. யாரிடமும் சாபம் வாங்க கூடாது. அடிப்படை வசதிகள் அற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும். எளிதில் ஜீரணமாகக் கூடிய சத்தான உணவை சாப்பிட வேண்டும்.
பரிகாரம்
மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் விரயம், வைத்திய செலவு, காரியத் தடை முற்றிலும் நீங்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- இரவு 8 மணிக்கு முதற்கால பூஜையும், 11 மணிக்கு 2-ம் கால பூஜையும் நடைபெறுகிறது.
- சிவராத்திரி இரவு முழுவதும் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
மகா சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் பக்தர்கள் விழித்திருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி வருகிற 15-ந்தேதி வருகிறது. இதையொட்டி பழனி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு இரவு முழுவதும் கண்விழித்து விடியவிடிய வழிபாடு நடத்துவார்கள். மேலும் மறுநாள் கோவில்களில் நடக்கும் சிறப்பு பூஜையிலும் பங்கேற்பார்கள்.
பழனி மலைக்கோவிலில் இரவு 8 மணிக்கு முதற்கால பூஜையும், 11 மணிக்கு 2-ம் கால பூஜையும் நடைபெறுகிறது. நள்ளிரவு 1 மணிக்கு 3-ம் கால பூஜையும், அதிகாலை 3 மணிக்கு 4-ம் கால பூஜையுடன் அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகிறது. வழக்கமாக ராக்கால பூஜைக்குப்பின் கோவில் நடை சாத்தப்படும். ஆனால் சிவராத்திரி இரவு முழுவதும் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
இதேபோல் பெரியாவுடையார் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், பட்டத்து விநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில், வேளீஸ்வரர் கோவில், சன்னதி வீதி மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் உள்ள சிவன் சன்னதிகளில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன.
- மார்ச் 6 காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார் சனிபகவான்.
- சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
திருநள்ளாறு கோவிலில் மார்ச் 6-ந்தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
புதுவை மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் சனிப் பெயர்ச்சி விழா மிக விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். மார்ச் 6-ந் தேதி காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.
அதன்படி திருநள்ளாறு கோவிலில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
இதனையொட்டி தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் கொடி மரத்து விநாயகர் மற்றும் பந்தக்கால்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் மங்கலவாத்தியங்கள் முழங்க பந்தக்கால்கள் பிரகார உலாவாக கொண்டு வரப்பட்டு கோவில் உள் பிரகாரத்தில் பைரவர் சன்னதி மற்றும் ராஜ கோபுரம் அருகில் நடப்பட்டது.
இதில் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள், புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ. ராஜ சேகரன், கோவில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் மற்றும் தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றுகிறார்.
- மாசி மாத பூஜையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்.
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் மட்டுமின்றி, மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை திறந்திருக்கும்.
அதன்படி மாசி மாத பூஜை நாளை (13-ந்தேதி) தொடங்கி வருகிற 17-ந்தேதி வரை நடக்கிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றுகிறார்.
அதன் பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இன்றைய தினம் எந்த பூஜைகளும் நடக்காது. இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படும். பின்பு நாளை அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.
நிர்மால்ய தரிசனத்துக்கு பின் தந்திரி மகேஷ் மோகனரு, ஐயப்பன் சிலையில் அபிஷேகம் நடத்தி நெய் அபிஷேகத்தை தொடங்கி வைப்பார். அதைத்தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை, களபாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை நடைபெறும்.
மாதாந்திர பூஜை நடக்கக்கூடிய 5 நாட்களும் உதயாஸ்தமன பூஜையும், இரவு 7 மணிக்கு படி பூஜையும் நடைபெறும். நாளை முதல் வருகிற 17-ந்தேதி வரை நெய் அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடை பெறும்.
மாசி மாத பூஜையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். அதற்கான முன்பதிவு கடந்த வாரம் தொடங்கியது. முன்பதிவு செய்த பக்தர்களே சன்னிதானத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
- ஒவ்வொரு திதிக்கும் சில குறிப்பிட்ட குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு.
- வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர் அவசியம் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் ஒவ்வொரு விதமான சிறப்புகள் உண்டு. அந்த வகையில் மாசி மாதத்தில் சிவராத்திரியும் மாசி மகமும் சிறப்பித்து சொல்லக்கூடிய பண்டிகைகள் ஆகும்.
மகா சிவராத்திரி
மாசி 3 (15.2.2026) ஞாயிறு
ஒவ்வொரு திதிக்கும் சில குறிப்பிட்ட குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. அந்த வகையில் அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு முந்தைய நாள் வரக்கூடியது சதுர்த்தசி திதி. இதில் அமாவாசைக்கு முந்தைய நாள் வரக்கூடிய சதுர்த்தசி திதிக்கு பாவங்களையும் தோஷங்களையும் நீக்கும் வலிமை உண்டு. மனிதர்களின் கர்ம தோஷங்களை நீக்கும் மகா சிவராத்திரி சதுர்த்தசி திதியில் மட்டுமே சம்பவிக்கும்.
ஒரு ஜாதகத்தில் உள்ள கர்மபலன்களை உணர்த்தும் கிரகமான சனி பகவானுக்கு உதவியாக செயல்படுபவர்கள் ராகு/கேதுக்கள். சிவராத்திரி விரதம் இருந்து சிவ வழிபாடு செய்பவர்களுக்கு சனி, ராகு கேதுவால் ஏற்படும் பாதிப்புகள் அகலும்.மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர் அவசியம் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.
மாசி மகம்
மாசி18(2.3.2026) திங்கள்
2.3.2026 அன்று காலை 8.16 முதல் 3.3.2026 அன்று காலை 8.07 வரை மகம் நட்சத்திரம் உள்ளது. இது பெண்களுக்கான விரத நாள் சூரியனின் அதிதேவதை பரமேஸ்வரன். சந்திரனின் அதிதேவதை பார்வதிதேவி.
ஆண் கிரக ராசியில் வரும் பெண் கிரகமான சந்திரன். பெண் கிரக ராசியில் வரும் ஆண் கிரகமான சூரியன்.இது தான் மாசி மக பவுர்ணமி நாளின் சிறப்பு அம்சம்.
எனவே இந்த நாட்களில் சிவனுக்குள் சக்தி ஐக்கியம், சக்திக்குள் சிவன் ஐக்கியம்.சிவ சக்தி ஐக்யஸ்வரூபத்தை வணங்க இருவரின் அருளும் ஒருங்கே கிடைக்கும்.இந்த நாளில் பார்வதி பரமேஸ்வரரை வழிபட திருமணத் தடை நீங்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். தம்பதியின் ஒற்றுமை பெருகும். குடும்பத்தில் இன்பம் பெருகும்.
மாசி மாத கிரக நிலவரம்
(திருக்கணித பஞ்சாங்கப் படி ) சூரியன் 13.2.2026 அன்று அதிகாலை 4.09 க்கு கும்ப ராசிக்கு செல்கிறார்.
விசுவாவசு தமிழ் வருடத்தின் மாசி மாதம் பிறக்கிறது.
செவ்வாய் மாசி 11 ( 23.2.2026 ) திங்கட்கிழமை செவ்வாய் பகவான் கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
புதன் மாசி 14 ( 26.2.2026) வியாழக்கிழமை கும்ப ராசியில் வக்கிரம் அடைகிறார்.
சுக்ரன் மாசி 17 (2.3.2026) ஞாயிற்றுக் கிழமை மீன ராசியில் உச்சம் அடைகிறார்.
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் மாசி 26 (11.3.2026) செவ்வாய்க்கிழமை அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார்.
சனி பகவான் மீன ராசியில் சஞ்சரிக்கிறார்.
ராகு பகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார்.
கேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார்.
'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406
- ஒரு விஷ்ணுபதி புண்ணிய காலத்தை தவறவிட்டால் அடுத்து இதே போன்ற ஒரு புண்ணியகாலம் வருவதற்கு மீண்டும் 60 ஆண்டுகள் ஆகும்.
- 27 முறை பெருமாளை வலம் வரும்போது உங்களுக்குத் தெரிந்த பெருமாள் சுலோகங்களை சொல்லலாம்.
மகத்துவமான மாசி மாதம் நாளை பிறக்கிறது. ஒரு வருடத்தில், வைகாசி 1, ஆவணி 1, கார்த்திகை1 மற்றும் மாசி 1 இந்த 4 நாட்களும் விஷ்ணுபதி புண்ணிய கால நாட்களாக சொல்லப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் மாசி மாத பிறப்பான நாளை (13-ந் தேதி) விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும்.
கும்ப சங்கராந்தி என்று போற்றப்படும் இந்த நாளில் நதிக் கரைகளிலும் சமுத்திரக் கரைகளிலும் சென்று நீராடி வழிபட சகல பாவங்களும் விலகி நன்மைகள் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த காலம் பெருமாளின் நரசிம்ம அவதாரத்தோடு தொடர்புடையது.
இரணியனை சம்காரம் செய்து தனது பக்தனான பிரகலாதனை காப்பாற்றிய நரசிம்மரின் கோபம் தணியாமல் தனது உக்கிரமான வடிவிலேயே இருந்த நேரம், தேவர்களும் முனிவர்களும் பயந்து மகாலட்சுமி தேவியிடம் வேண்டினர். மகாலட்சுமியும் பெருமாளை சாந்தப்படுத்த ஒப்புக்கொண்டு பயபக்தியுடன் நரசிம்மத்திடம் நெருங்கினாள். மகாலட்சுமி நிழல் பட்டவுடன் சாந்தமடைந்து அவள் வேண்டியபடி மடியில் வைத்து கருணை வடிவமான, லட்சுமி நரசிம்மராக மாறினார் மகா விஷ்ணு. இது நடைபெற்ற காலம் விஷ்ணுபதி புண்ணிய காலம் என கருதப்படுகிறது.
தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 ஆகும். ஒவ்வொரு ஆண்டிலும் வரக்கூடிய 4 விஷ்ணுபதி புண்ணிய காலங்களும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடும். எனவே இந்தமுறை நாம் ஒரு விஷ்ணுபதி புண்ணிய காலத்தை தவறவிட்டால் அடுத்து இதே போன்ற ஒரு புண்ணியகாலம் வருவதற்கு மீண்டும் 60 ஆண்டுகள் ஆகும்.
எனவே அரிதான இந்த வாய்ப்பினைத் தவற விடாமல் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் மகிழ்ச்சியான, செல்வ செழிப்பு மிக்க வளமான வாழ்வினையும் பெற முடியும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சிவன் கோவில்களில் பிரதோஷ கால பூஜை நடத்தப்படுவது போல் பெருமாள் கோவில்களிலும் இந்த விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு உள்ளது. இந்த நாளில் அதிகாலை 1.30 மணியில் இருந்து 10 மணிக்குள் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
முழுமையாக 9 மணி நேரம் இந்த புண்ணிய காலம் அமைகிறது. காலை 10 மணி வரை விஷ்ணுபதி புண்ணியகாலம் இருப்பதால் காலையில் சீக்கிரமாகவே கோவிலுக்குச் சென்று 10 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்து முடித்து விடலாம். இந்த வழிபாட்டை செய்ய கையில் 27 பூக்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
எந்த வகையான பூவாக இருந்தாலும் சரி. பெருமாளின் கருவறையை கொடிமரத்தோடு சேர்த்து 27 முறை வலம் வர வேண்டும். அந்த எண்ணிக்கை தவறாமல் இருப்பதற்காகதான் 27 மலர்கள். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் ஒரு பூவை கொடிமரத்தின் பாதத்தில் போட வேண்டும். பிரதட்சணம் முடித்து பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தலாம். அர்ச்சனை செய்யலாம்.
27 முறை பெருமாளை வலம் வரும்போது உங்களுக்குத் தெரிந்த பெருமாள் சுலோகங்களை சொல்லலாம். இல்லாவிட்டால் வெறுமனே "நாராயணா, நாராயணா!" என்று சொல்லிய படியே கூட பிரதட்சணம் செய்யலாம்.
வியாபாரத்திலும், செய்யும் வேலையிலும் சீக்கிரம் முன்னேற்றம் அடைய வேண்டும், காரியத்தடை விலக வேண்டும் என்று நினைப்பவர்கள், "ஓம் அனிருத்ரனே நமக!" என்று சொல்லி பிரதட்சணம் செய்யலாம். வீட்டில் நோய் நொடி பிரச்சனை என்றால், பெருமாளை விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் "ஓம் அச்சுதாய நமக! ஓம் அனந்தாய நமக! ஓம் கேசவாய நமக!" என்று துதித்து வழிபட வேண்டும். இது எதையும் உச்சரிக்க இயலாதவர்கள் "கோவிந்தா! கோவிந்தா!" என்று சொல்லி பிரதட்சணம் செய்து உங்கள் வேண்டுதலை பெருமாளிடம் சொன்னாலும் நிச்சயம் அது பலிக்கும்.
இவ்வாறு வழிபாட்டை நிறைவு செய்து விட்டு வீடு திரும்பும் போது கடையில் இருந்து ஒரு பாக்கெட் கல் உப்பை வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். மறுநாள் இந்த கல் உப்பை சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையில் செய்வதன் மூலம் பெருமாளின் அருளால் செல்வ செழிப்புடன் வாழ முடியும்.
இந்த முறைப்படி பெருமாளை நாளைய தினம் வழிபாடு செய்பவர்களுக்கு கடன் சுமை குறையும் பொன் பொருளை பெரும்பாலும் மகாலட்சுமியும் உங்களுக்கு வழங்குவார்கள். அதேபோல் கொடிமர பூஜைக்கும் மிகுந்த பலன் உண்டு. ஏகாதசி விஷ்ணுவிற்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ அதே போல இந்த விஷ்ணுபதி புண்ணிய காலமும் மிகவும் சிறப்பு பெற்ற புனிதமான நாளாகும்.
வருடத்திற்கு 4 முறை மட்டுமே இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் வருகிறது. இந்த விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு பல ஏகாதசிகளில் வழிபாடு செய்வதற்கு சமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் உங்களின் பிரச்சனைகளை, வேண்டுதல்களை மனம் உருகி மகாவிஷ்ணுவிடம் கூறி வழிபட்டால் வேண்டுதல் எதுவானாலும் அடுத்த 3 விஷ்ணுபதி காலம் முடிவதற்குள் நிறைவேறும். பெருமாளின் அருளையும் கருணையும் பெறுவதற்கு மிகவும் உயர்ந்த நாளாகவும், மிகவும் அரிதான நாளான இந்த நாளில் செய்யும் வழிபாடு குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படும் பிரச்சனை, குடும்பத்தில் பல காலமாக தீராமல் இருக்கும் பிரச்சனைகள் ஆகியவற்றை தீர்க்கும் அரு மருந்தாக உள்ளது.
விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள் கொடுப்பது மிக சிறந்த பலன்களை அளிக்கும். வயதில் முதிர்ந்த தம்பதிகளுக்கு இந்த நாளில் பாதபூஜை செய்து வழிபடுவது மிக சிறப்பானது. ஆலயங்களில் அரிசி மாவு கோலமிட்டு, அகல் விளக்குகள் ஏற்றுவதும் வாழ்வில் மங்களங்களை பெருகச் செய்யும்.
விஷ்ணுபதி புண்ணிய கால விரதம் மன அமைதியையும், மோட்சத்தையும் தரக்கூடிய புண்ணிய விரதமாகும். மகா விஷ்ணு மற்றும் மகா லட்சுமியின் துதிகளை இந்த நாளில் சொல்லி பாராயணம் செய்து, இயன்ற அளவிற்கு பூஜை செய்து இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். எதுவும் முடியாதவர்கள் துளசி இலைகளை மட்டும் சமர்ப்பித்து வழிபடலாம்.
இந்த நாளில் மகாலட்சுமி பூஜை, கோபூஜை ஆகியன செய்வது மிகவும் பலன் தரும். வீடுகளில் விளக்கேற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் மிகுதியான பலன்களைக் கொடுக்கும். திருமண வரம் வேண்டும் இளைஞர்கள் தவறாமல் இந்த நாளில் ஆலயம் சென்று வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. செல்வ செழிப்புடன் வாழ்ந்தவர்கள் ஏதாவது ஒரு சூழ்நிலையில் செல்வத்தை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாலும், எவ்வளவு முயற்சிகள் செய்தும் வறுமை நிலையில் இருந்து எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பவர்களாக இருந்தாலும் அவர்கள் தவறாமல் விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாளை வழிபாடு செய்வதன் மூலம் பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருளால் அனைத்து விதமான செல்வங்களையும் பெற முடியும்.
ஏகாதசியை விட கூடுதல் பலன்
பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது.
ஏகாதசி அன்று ஒருவன் புரியும் பூஜைகளும், அனுஷ்டிக்கும் விரதமுறையும் அனைத்திலும் சிறந்த பலன் தருவதாக கூறுவர். மகாவிஷ்ணுவின் அருளும், கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் துலங்கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது.
ஆண்டுக்கு 3 புண்ணிய காலங்கள்
ஒவ்வொரு வருடமும் 3 புண்ணிய காலங்கள் வருகிறது. முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கு உகந்த காலங்களாக இவை உள்ளன. முப்பெரும் தெய்வங்களுக்கு தலா 4 மாதங்கள் வீதம் வழிபாட்டு மாதங்களாக உள்ளன.
அந்த வகையில், தமிழ் மாதக் கணக்கின் படி வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாதப் பிறப்பு விஷ்ணுபதி புண்ணிய காலம் எனப்படுகிறது. நாளை மாசி மாதம் பிறக்கிறது. இது விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும்.
இதேபோல், சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகிய மாதப் பிறப்பு பிரம்மாவுக்கு உரியவை. இவை விஷு புண்ணிய காலம் எனப்படுகிறது. ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகியவை சிவனுக்குரியவை. இவை ஷடசீதி புண்ணிய காலம் ஆகும். ஷடாங்கன் என்றால் சிவபெருமானை குறிப்பதாகும்.
- திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
- ஸ்ரீஆதிநாதவல்லி கோவிலில் காலையில் அலங்கார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-29 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : தசமி நண்பகல் 1.20 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : கேட்டை பிற்பகல் 2.40 மணி வரை பிறகு மூலம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு திருமஞ்சனம், தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குரு பகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திரு மெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ ஆதிநாதன் பொலிந்து நின்ற திருக்கோலம். ஸ்ரீஆதிநாதவல்லி கோவிலில் காலையில் அலங்கார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தாமதம்
ரிஷபம்-களிப்பு
மிதுனம்-உழைப்பு
கடகம்-மகிழ்ச்சி
சிம்மம்-விவேகம்
கன்னி-நேர்மை
துலாம்- லாபம்
விருச்சிகம்-உற்சாகம்
தனுசு- நற்சொல்
மகரம்-நன்மை
கும்பம்-அமைதி
மீனம்-போட்டி
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
எதையும் யோசித்துச் செய்யவேண்டிய நாள். திட்டமிட்ட காரியம் திசைமாறி செல்லும். வரவைவிட செலவு அதிகரிக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்
இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். எதையும் போராடி முடிக்க வேண்டிய நிலை ஏற்படும். தொழில் பங்குதாரர்களால் தொல்லை உண்டு.
மிதுனம்
தடைகள் அகலும் நாள். தன்னம்பிக்கை கூடும். பக்கத்தில் உள்ளவர்களால் ஏற்பட்ட சிக்கல் அகலும். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.
கடகம்
நிதி நிலை உயரும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். தொழில் வளர்ச்சி உண்டு. பொதுவாழ்வில் புகழ் சேர்ப்பீர்கள்.
சிம்மம்
விரோதிகள் விலகும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்காலம் இனிமையாக அமைய புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
கன்னி
தள்ளிச்சென்ற வாய்ப்புகள் தானாக முடிவடையும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோக முயற்சி கைகூடும்.
துலாம்
எடுத்த முயற்சி எளிதில் வெற்றி தரும் நாள். பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.
விருச்சிகம்
எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு மேலோங்கும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்லும்.
தனுசு
உறவினர் ஒத்துழைப்பால் உள்ளம் மகிழும் நாள். உடன்பிறப்புகளின் இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். வாழ்க்கைத்துணை வழியே நல்ல தகவல் வரும்.
மகரம்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். உறவினர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். பக்கத்து வீட்டாரால் ஏற்பட்ட பகை மாறும்.
கும்பம்
அதிர்ஷ்டமான நாள். அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். சொத்துகளால் லாபம் உண்டு.
மீனம்
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும்.






