என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு பூஜைகள்"

    • தென்கொரியாவில் இருந்து ஜோதிட நிபுணர் பேராசிரியர் ஹவாய் வாஸ்செல் என்பவர் வருகை தந்தார்.
    • அவருக்கு கோயில் அர்ச்சகர் பாலச்சந்தர் சிவாச்சாரியார் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை டவுன், தர்மபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சேந்தங்குடியில் உள்ள ஸ்ரீ ஞானாம்பிகை உடனாகிய வதான்யேஸ்வர சுவாமி என்கின்ற வள்ளலார் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ மேத்தா தக்ஷிணாமூர்த்தி என்ற பெயரில் குரு பகவான் கோயில் உள்ளது.

    இங்கு தென்கொரியாவில் இருந்து ஜோதிட நிபுணர் பேராசிரியர் ஹவாய் வாஸ்செல் என்பவர் வருகை தந்தார்.

    அவர் தமிழ் கலாச்சா ரத்தின் மேல் பற்று கொண்டு இந்து மதத்தில் மாறி தமிழ் பெயரான திருஞானசம்பந்தர் என பெயர் மாற்றிக் கொண்டு அஸ்ட்ராலஜி படித்து ஜோதிடராக பணிபுரிந்து வருகிறார்.

    நந்தி மேல் அமைந்து குருபகவான் காட்சி அளிப்பது இந்தியாவிலேயே வள்ளலார் கோயில் தான் என்பதை புரிந்து கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வழிப்பாடு செய்தனர்.

    அவருக்கு கோயில் அர்ச்சகர் பாலச்சந்தர் சிவாச்சாரியார் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

    இத்தலம் குருபகவானின் பரிகாரத்தலமாக விளங்கி வருவதால் வியாழன் தோறும் குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடைபெற்று வருகிறது பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டு வருகின்றனர்.

    • முக்கியமான நிகழ்ச்சிகளில் தைப்பூச திருவிழா ஒன்றாகும்.
    • முருகன் கோவில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன பக்தர்கள் வழிபட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    முருகன் கோவில்களில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சிகளில் தைப்பூச திருவிழா ஒன்றாகும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி -காட்டிநாயனப்பள்ளி ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு சிற்பபாக நடைபெறுவது வழக்கம். இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

    அந்த வகையில் தைப்பூச திருவிழாவிற்கும் பக்தர்கள் கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தேரில் வள்ளி, தெய்வானை சமேதமாய் காட்சி அளித்த முருக பெருமானை பக்தர்கள் வழிபட்டனர். இதையொட்டி பக்தர்கள் பயபக்தியிடன் முருக பெருமானை வழிபட்டனர். இதையொட்டி பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

    இதே போல மாவட்டம் முழுவதும் முருகன் கோவில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன பக்தர்கள் வழிபட்டனர்.

    • திருக்காட்டுபள்ளியில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலம் அக்னீஸ்வர சுவாமி கோவில்.
    • ஏப்ரல் 4-ந்தேதி கோவிலில் தீபாரதனை காண்பிக்கப்பட்டு வீதி உலா நடைபெறும்.

    பூதலூர்:

    திருக்காட்டுபள்ளியில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலம் அக்னீஸ்வர சுவாமி கோவில்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு பங்குனி உத்திர விழாவிற்கான தொடக்க நிகழ்வான பந்தக்கால் நடும் நிகழ்வு நேற்று காலை நடைபெற்றது.

    பந்தல்கால் முகூர்த்தத்துக்கான உபயோதாரர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தர்ப்பை, மாவிலை கட்டப்பட்டு பூக்களால்

    அலங்கரிக்கப்பட்டு சந்தனம், குங்குமம் வைக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பங்குனி உத்திர விழாகுழுவின் தலைவர் ஜெயக்குமார் மற்றும் உறுப்பினர்கள் முகூர்த்தக்கால் நடும் குழியில் நவதானியங்களை போட்டு, மேளதாளங்கள் முழங்க பந்தல்கால் அனைவரும் இணைந்து நட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில்பங்குனி உத்திர விழா குழு தலைவர் ஜெயக்குமார், பேரூராட்சி தலைவர் மெய்யழகன், கோவில் செயல் அலுவலர் சிவேந்திரராஜா, பேரூராட்சி செயல்அலுவலர் நெடுஞ்செழியன் மற்றும் பங்குனி உத்தரவிழாகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து வரும் 26-ந்தேதி கோவிலின் முன்புறமுள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படும்.

    கொடியேற்றத்தை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சௌந்தரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ அக்னிஸ்வரர் வீதி உலா நடைபெறும்.

    பங்குனி உத்திர நாளான அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந்தேதி காலை கோவிலில் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டு வீதி உலா நடைபெறும்.

    திருக்காட்டுப்பள்ளி நகர வீதிகளின் வழியே பஞ்சமூர்த்திகள் உலா வந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்ற காவிரி ஆற்றில் உள்ள அலங்கார பந்தலில் பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளி அருள் பாலிப்பர்.

    அதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் அமைக்கப்பட்ட அலங்கார பந்தலில் இருந்து இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    • திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
    • ஆஸ்திரியா நாட்டை சேர்ந்தவர்கள் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடை யூரில் உள்ள தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலுக்கு தினந்தோறும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த ஸ்வட்லானாக்ரூசர், இலோனா கலாட்டினோவா ஆகியோர் தமிழ்நாட்டின் ஆன்மீக கலாச்சாரத்தின் மீது பற்றுதல் கொண்டதன் காரணமாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.அவர்களுக்கு கணேச குருக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வைத்தார்.

    பின்னர் நல்லடையில் உள்ள அக்னி ஸ்தலமான பரணீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர.

    இதனை தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள அபயாம்பிகை உடனாகிய ஸ்ரீ மாயூரநாதர் சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    அங்கே சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு முதல் யாகசாலை பூஜை நடைபெற்றது.

    அதில் கலந்து கொண்ட தர்மபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரம்மச்சாரிய சுவாமிகளிடம் ஆசீர் பெற்னர்.

    அவர்களுக்கு தர்மபுரம் ஆதீனம் பிரசாதம் வழங்கி ஆசீர்வாதம் செய்தார். இந்நிகழ்ச்சியில் வெளிநாட்டினருடன் வந்திருந்த கோபிநாத், குரு, சாமி தரிசனம் செய்தனர்.

    • 32 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சுவாமி சிலைக்கு வண்ண வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
    • கிராம மக்கள் ஏராளமானோர் ஆஞ்சநேயர் மற்றும் ராமரை வழிபட்டனர்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள எச்.செட்டிப்பள்ளி ஊராட்சி ஒசபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த சீதா சமேத ராமர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீ ராம நவமி விழா கொண்டாடப்பட்டது.

    முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள 32 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சுவாமி சிலைக்கு வண்ண வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    பக்தர்கள் ஆஞ்சநேயரின் சிலை மீது ரோஜா மலர்களை தூவி அபிஷேகம் செய்தனர். அப்போது கிராம மக்கள் ஏராளமானோர் ஆஞ்சநேயர் மற்றும் ராமரை வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் ஸ்ரீ சீதா ராமர் ஆஞ்சநேயர் சுவாமிகளை போற்றும் விதமாக ஸ்ரீ சீதா கல்யாணம் என்ற ஹரிகதா நிகழ்ச்சி கோலாரை சேர்ந்த மஞ்சுளா பாகவதாரணி யால் தெலுங்கு மொழியில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.

    • ராம நவமியை முன்னிட்டு, உத்தனப்பள்ளி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தன.
    • ஓசூர் நகரத்தில் 15 இடங்களில் நீர்மோர் வழங்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    ராமநவமியை முன்னிட்டு மாவட்டத்தில் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராம நவமி விழாவை முன்னிட்டு ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்ப பூஜைகள் நடந்தன. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை செந்தில்நகர் ஸ்ரீ உடுப்பி கிருஷ்ணா, ஸ்ரீ முக்யப்ராணா ஆஞ்சநேயா, ஸ்ரீ ராகவேந்திரா சாமி கோவிலில் 67&வது ஆண்டு ராம நவமி உற்சவம் நேற்று நடந்தது.

    இதையொட்டி கடந்த 22&ந் தேதி முதல் 29 வரை நிர்மால்ய அபிேஷகம், பஞ்சாமிர்த அபிேஷகம், சத்யநாராயண பூஜை, மகா தீபாராதனை, தீபாராதனை ஆகியவை நடந்தன. ராம நவமியை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு நிர்மால்ய அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 10 மணிக்கு சத்யநாராயணபூஜை, வீர ஆஞ்சநேயர் பஜனா மண்டலி பஜனை, அர்ச்சனை, மகா தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன. இரவு 7 மணிக்கு தீபாராதனை நடந்தன.

    கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம வீர ஆஞ்சநேய சமேத ராகவேந்திர சாமி கோவிலில், ராம நவமி விழா நேற்று முன்தினம் மாலை பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை ஸ்ரீகணேஷ், ஸ்ரீ நவக்கிரஹ ஹோமம், கலச ஸ்தாபனத்துடன் ராமநவமி உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

    இன்று (வெள்ளிக்கிழமை) மாலை லட்சார்ச்சனையும், வருகிற 3-ந் தேதி மாலை 5 மணிக்கு ஸ்ரீ சீதா திருக்கல்யாண வைபமும், மங்களாரத்தியும், 4-ந் தேதி மாலை குத்துவிளக்கு பூஜையும், 5-ந் தேதி காலை ஹோமம், காலை 11.30 மணிக்கு ஸ்ரீராமர் பட்டாபிேஷகம், மங்களாரத்தியும், மாலை சாமி நகர்வலமும் நடைபெற உள்ளன.

    ராம நவமியை முன்னிட்டு, உத்தனப்பள்ளி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தன. தொடர்ந்து நீர் மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டன. மேலும் ஓசூர் நகரத்தில் 15 இடங்களில் நீர்மோர் வழங்கப்பட்டன. மேலும் ராம நவமியை முன்னிட்டு நேற்று மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் மற்றும் ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    • பக்தர்களுக்கு மஹா தீபாராதனைகளுடன், தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டன.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    கிருஷ்ணகிரி,

    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்- ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை, 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    இதையொட்டி விநாயகருக்கு, 508 லிட்டர் பால் அபிஷேகமும், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகமும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு மஹா தீபாராதனைகளுடன், தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டன.

    இதே போல், கிருஷ்ணகிரி காந்தி சாலை வரசித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரியம் வினை தீர்த்த விநாயகர் கோவில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகர் கோவில், டான்சி வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோவில், காந்திநகர் வலம்புரி விநாயகர் கோவில், சேலம் சாலை ஆதி சக்தி விநாயகர் கோவில் என பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    இதே போல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    • கிருஷ்ணகிரியில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
    • தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவர் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபங்களை ஏற்றி வழிப்பட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை, 7 மணிக்கு கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தன.

    வெள்ளிக் கவச அலங்காரத்தில் காலபைரவர் அருள் பாலித்தார். பகல் 12 மணிக்கு, கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன. இதில், ஏராளமான பெண் பக்தர்கள் பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.

    இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் கால பைரவர் கோவில் மற்றும் சூரன் குட்டை தட்சிண கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • ஸ்ரீ ஓம் சக்தி அங்காளம்மன் சித்தர் பீடத்தில் 3-ம் ஆண்டு பால்குட விழா நடைபெற்றது.
    • சக்தி கரகம் ஜோடிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த முன்னூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓம் சக்தி அங்காளம்மன் சித்தர் பீடத்தில் 3-ம் ஆண்டு பால்குட விழா நடைபெற்றது, இதனையொட்டி காலை கோபூஜை, சண்டி ஓமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியில் முன்னூர் கிராம குளக்கரையில் இருந்து சக்தி கரகம் ஜோடிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய விதிகள் வழியாக வந்து அங்காளம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர், இந்த விழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பக்தர்களுக்கு மஹா தீபாராதனைகளுடன், தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டன.
    • பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    கிருஷ்ணகிரி,

    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்&ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி விநாயகருக்கு, 508 லிட்டர் பால் அபிஷேகமும், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகமும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். விபூதி அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு மஹா தீபாராதனைகளுடன், தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டன.

    இதே போல், கிருஷ்ணகிரி காந்திசாலை வரசித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீர்த்த விநாயகர் கோவில், பழையபேட்டை கொத்த பேட்டா ஞான விநாயகர் கோவில், டான்சி விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோவில், காந்தி நகர் வலம்புரி விநாயகர் கோவில், சேலம் சாலை ஆதிசக்தி விநாயகர் கோவில் என பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    • சூரன்குட்டை தக்சண கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன.
    • இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    கிருஷ்ணகிரி,

    தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டன. தங்கக் கவச அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பகல், 12 மணிக்கு, கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன.

    இதில், ஏராளமான பெண்கள் பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் கால பைரவர் கோயில் மற்றும் சூரன்குட்டை தக்சண கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடந்தது
    • பூக்கள், வாசனை திரவியங்களால் அபிஷேகம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நேற்று இரவு உற்சவர் ஆனந்த நடராஜர் ,சிவகாமி அம்பாள் சுவாமிகளுக்கு பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, இளநீர், பல்வேறு வகையான பழசாறுகள், பூக்கள், வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 'சிவாய நம' என்ற கோஷத்தோடு நடராஜரை பக்தியோடு வழிபட்டு சென்றனர். 

    ×