search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி கோவில்களில் சிறப்பு பூஜைகள்
    X

    கிருஷ்ணகிரி கோவில்களில் சிறப்பு பூஜைகள்

    • ராம நவமியை முன்னிட்டு, உத்தனப்பள்ளி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தன.
    • ஓசூர் நகரத்தில் 15 இடங்களில் நீர்மோர் வழங்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    ராமநவமியை முன்னிட்டு மாவட்டத்தில் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராம நவமி விழாவை முன்னிட்டு ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்ப பூஜைகள் நடந்தன. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை செந்தில்நகர் ஸ்ரீ உடுப்பி கிருஷ்ணா, ஸ்ரீ முக்யப்ராணா ஆஞ்சநேயா, ஸ்ரீ ராகவேந்திரா சாமி கோவிலில் 67&வது ஆண்டு ராம நவமி உற்சவம் நேற்று நடந்தது.

    இதையொட்டி கடந்த 22&ந் தேதி முதல் 29 வரை நிர்மால்ய அபிேஷகம், பஞ்சாமிர்த அபிேஷகம், சத்யநாராயண பூஜை, மகா தீபாராதனை, தீபாராதனை ஆகியவை நடந்தன. ராம நவமியை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு நிர்மால்ய அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 10 மணிக்கு சத்யநாராயணபூஜை, வீர ஆஞ்சநேயர் பஜனா மண்டலி பஜனை, அர்ச்சனை, மகா தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன. இரவு 7 மணிக்கு தீபாராதனை நடந்தன.

    கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம வீர ஆஞ்சநேய சமேத ராகவேந்திர சாமி கோவிலில், ராம நவமி விழா நேற்று முன்தினம் மாலை பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை ஸ்ரீகணேஷ், ஸ்ரீ நவக்கிரஹ ஹோமம், கலச ஸ்தாபனத்துடன் ராமநவமி உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

    இன்று (வெள்ளிக்கிழமை) மாலை லட்சார்ச்சனையும், வருகிற 3-ந் தேதி மாலை 5 மணிக்கு ஸ்ரீ சீதா திருக்கல்யாண வைபமும், மங்களாரத்தியும், 4-ந் தேதி மாலை குத்துவிளக்கு பூஜையும், 5-ந் தேதி காலை ஹோமம், காலை 11.30 மணிக்கு ஸ்ரீராமர் பட்டாபிேஷகம், மங்களாரத்தியும், மாலை சாமி நகர்வலமும் நடைபெற உள்ளன.

    ராம நவமியை முன்னிட்டு, உத்தனப்பள்ளி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தன. தொடர்ந்து நீர் மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டன. மேலும் ஓசூர் நகரத்தில் 15 இடங்களில் நீர்மோர் வழங்கப்பட்டன. மேலும் ராம நவமியை முன்னிட்டு நேற்று மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் மற்றும் ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    Next Story
    ×