என் மலர்
வழிபாடு

மாசித்திருவிழா 6-ம் நாள்: திருச்செந்தூர் கோவிலில் கோ ரதத்தில் சுவாமி வீதி உலா
- ஒவ்வொரு நாளும் காலை மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது.
- 7-ம் திருவிழாவான நாளை காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சண்முகப் பெருமான் உருகு சட்ட சேவை நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது.
5-ம் திருவிழாவான நேற்று இரவு குடை வரை வாயில் தீபாராதனையாகி சுவாமி, அம்பாள் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி 8 வீதிகளில் உலா வந்து கோவில் சேர்தல் நடந்தது.
6-ம் திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. காலை 7 மணிக்கு சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி 8 வீதிகளும் உலா வந்து பந்தல் மண்டபம் சேர்தல் நடந்தது.
இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளி தேரிலும், அம்மன் இந்திர விமானத்திலும் எழுந்தருளி 8 வீதிகளும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடக்கிறது
7-ம் திருவிழாவான நாளை காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சண்முகப் பெருமான் உருகு சட்ட சேவை நடக்கிறது. காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் சண்முக விலாசத்தில் இருந்து வெற்றிவேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பிள்ளையின் கட்டளை மண்டபம் சேர்தல் அங்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடக்கிறது.
மாலை 4.30 மணிக்கு மேல் அங்கிருந்து சுவாமி சிவன் அம்சமாக சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது
8-ம் திருவிழாவான நாளை மறுநாள்( 28-ந் தேதி) காலை 6 மணிக்கு பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்த ருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சி யான 10-ம் திருவிழா தேரோட்டம் வருகிற 2-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






