search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் தேரோட்டம்"

    பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் திருத்தேர் மற்றும் பூ மிதி திருவிழா கம்பம் நடுதலுடன் கடந்த 8-ந் தேதி‌ தொடங்கியது. 

    விழாவை தொடர்ந்து 14-ந் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    15-ந் தேதி மறு காப்பு கட்டுதலும்,16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிங்கம்,காமதேனு, அன்னம் மற்றும் காளை வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன் தினம்  வடிசோறு நிகழ்ச்சியும், நேற்று மாலை திருத்தேர்  முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதில் பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் டாக்டர் சோமசேகர், துணைத்தலைவர் முருகவேல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலை சேர்ந்தது.

    இன்று மாலை பூமிதி விழாவும், நாளை புதன்கிழமை பொங்கல், மாவிளக்கு பூஜையும்,நாளை மறுநாள் வியாழக்கிழமை கிடா வெட்டும் நிகழ்ச்சியும், 27-ந் தேதி வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராடலும், 28-ந் தேதி சனிக்கிழமை இரவு அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.
    ×