search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம்
    X

    ஓசூர் ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம்

    • கூட்டுவை நிகழ்ச்சியும் நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டமும் நடந்தது.
    • அம்மனை வைத்து, கூட்டு ரோடில் உள்ள மாரியம்மன் கோவில் வரை பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர்

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மிடுகரப்பள்ளியில், ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

    விழாவையொட்டி கடந்த 10-ந்தேதி, அங்குள்ள பசவேஸ்வரர் கோவிலில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் கூட்டுவை நிகழ்ச்சியும் நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டமும் நடந்தது.

    காலையில் சிறப்பு பூஜைகளும், தொடர்ந்து கிராம மக்கள் அம்மனுக்கு மாவிளக்கு பூஜையும் நடத்தினர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை வைத்து, கூட்டு ரோடில் உள்ள மாரியம்மன் கோவில் வரை பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர்.விழாவில், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல குழு தலைவர் ரவி, மாநகராட்சி வரிவிதிப்பு கமிட்டி தலைவர் சென்னீரப்பா, மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. தெற்கு பகுதி செயலாளருமான பி.ஆர்.வாசுதேவன், மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை தலைவர் சாக்கப்பா மற்றும் முக்கிய பிரமுகர்களும், ஓசூர், மத்திகிரி மற்றும் சுற்றுவட்டாரத்திலிருந்தும், கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் வழிபாடு நடத்தினர்.விழாவையொட்டி, கிராமத்தின் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், பானகம், நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×