என் மலர்
நீங்கள் தேடியது "Electric Cars"
- இந்த காரில் 19.2 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
- இந்த காரில் 19.2 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ளன. எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தொடர்ந்து புது மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், ரூ.10 லட்சத்திற்குள் இந்திய சந்தையில் கிடைக்கக்கூடிய எலெக்ட்ரிக் கார்களை அறிந்து கொள்வோம்.
எம்ஜி கோமெட் EV
நகர்ப்புற பயன்பாட்டிற்காக, இரு கதவுகளுடன் வடிவமைக்கப்பட்ட சிறிய ரக ஹேட்ச்பேக் கார் கோமெட் EV. இந்திய சந்தையில் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.24 லட்சத்தில் தொடங்குகிறது. இதில் 17.3 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி பொருத்தப்படுகிறது. ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் இந்த கார் அதிகபட்சம் 230 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என எம்ஜி கூறுகிறது.
இந்த காரின் உட்புறம் 10.25 இன்ச் தொடுதிரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே என இரட்டைத்திரை அமைப்பு கொண்டுள்ளது. பின் இருக்கைகளுக்கு எளிதாகச் செல்ல முன்பக்க இருக்கைகள் சாய்ந்து நகரும் வசதியைக் கொண்டுள்ளன. நகர்ப்புற பயணிகளுக்கும், பட்ஜெட் விலையில் ஒரு சிறிய காரை விரும்புபவர்களுக்கும் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

டாடா டியாகோ EV
டாடா நிறுவனத்தின் நான்கு கதவுகள் கொண்ட எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் இது. இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்த காரில் 19.2 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 250 கிலோமீட்டர்கள் வரை ரேஞ்ச் வழங்கும். டி.சி. பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால், ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே 10 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
டாடா பன்ச் EV
இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக ஆக்டி.இவி (Acti.ev) பிளாட்பார்மில் கட்டமைக்கப்பட்ட மைக்ரோ எஸ்யூவி கார் ஆகும். இதன் ஸ்மார்ட் வேரியண்ட் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட் வேரியண்ட்டில் 25 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி பொருத்தப்படுகிறது. இது 315 கிலோமீட்டர்கள் வரை 'ரேஞ்ச்' வழங்கும்.
- XEV9e மற்றும் BE6 மின்சார கார்கள் 30,179 புக்கிங்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளன.
- மின்சார கார்கள் விற்பனையில் இது ஒரு மைல்கல் என மஹிந்திரா பெருமிதம் தெரிவித்துள்ளது.
மஹிந்திராவின் புதிய EV மாடல்களான XEV9e மற்றும் BE6, விற்பனைக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்ட முதல் நாளே 30,179 புக்கிங்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளன. இதன் முன்பதிவு மதிப்பு மட்டும் ரூ.8,472 கோடி (Ex-Showroom) என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மின்சார கார்கள் விற்பனையில் இது ஒரு மைல்கல் என மஹிந்திரா பெருமிதம் தெரிவித்துள்ளது.
மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e மின்சார கார்கள் 170kW மோட்டார் 59kWh பேட்டரி மற்றும் 210kW மோட்டார் 79kWh பேட்டரி என்று 2 மாடல்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த மொட்டரின் டார்க்விசை 380Nm ஆகும்.
மஹிந்திரா BE 6 காரின் விலைகள் (எக்ஸ்-ஷோரூம்):
பேக் ஒன்று 59kWh - ரூ. 18.90 லட்சம்
பேக் ஒன்றுக்கு மேல் 59kWh - ரூ. 20.50 லட்சம்
பேக் 2 59kWh - ரூ. 21.90 லட்சம்
பேக் 3 செலக்ட் 59kWh - ரூ. 24.50 லட்சம்
பேக் 3 79kWh - ரூ. 26.90 லட்சம்
மஹிந்திரா XEV 9e காரின் விலைகள் (எக்ஸ்-ஷோரூம்):
பேக் 1 59kWh - ரூ. 21.90 லட்சம்
பேக் 2 59kWh - ரூ. 24.90 லட்சம்
பேக் 3 செலக்ட் 59kWh - ரூ. 27.90 லட்சம்
பேக் 3 79kWh - ரூ. 30.50 லட்சம்
மஹிந்திரா BE 6 மற்றும் மஹிந்திரா XEV 9e மின்சார கார்களின் பேக் 3 மாடல் இந்தாண்டு மார்ச் மாதத்திலும் பேக் 3 செலக்ட் மாடல் ஜூன் மாதத்திலும் பேக் 2 மாடல் ஜூலையிலும் பேக் 1 மற்றும் பேக் ஒன்றுக்கு மேல் மாடல் ஆகஸ்டிலும் டெலிவரி செய்யப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
- 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றார்.
- கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.
இந்தியாவில் நுழைய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறது.
ஆனால் வரி விகிதம் காரணமாக டெஸ்லா பின்வாங்கியது. எனவே சமீபத்தில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.
இதற்கிடையில் 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்குடன் மோடி சந்திப்பு நிகழ்ந்தது.
இந்நிலையில் இந்தியாவில் நுழைவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் 'லிங்க்ட் இன்' தளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மும்பையில் பணியாற்ற வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டு உள்ளது.
இதன்மூலம் டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







