என் மலர்
நீங்கள் தேடியது "கார் விற்பனை"
- ஜூலை மற்றும் நவம்பர் 2025 போன்ற மாதங்களில் மட்டும் தலா 20,000-க்கும் அதிகமான கார்கள் விற்பனை.
- மாருதி டிசையர் கார் Global NCAP விபத்து சோதனையில் 5-ஸ்டார் மதிப்பீடு பெற்றது.
2025-ஆம் ஆண்டில் இந்திய வாகன சந்தையில் ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது மாருதி சுசூகி நிறுவனத்தின் டிசையர் (Dzire) கார்.
எஸ்யூவி (SUV) ரக கார்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள நிலையிலும், ஒரு செடான் ரக கார் 2 லட்சம் விற்பனையைத் தாண்டி சாதனை படைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
2025-ஆம் ஆண்டில் மாருதி டிசையர் சுமார் 2.14 லட்சம் யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அதிகம் விற்பனையான காராக இது உருவெடுத்துள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) போன்ற முன்னணி எஸ்யூவி-களை விடவும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
குறிப்பாக ஜூலை மற்றும் நவம்பர் 2025 போன்ற மாதங்களில் மட்டும் தலா 20,000-க்கும் அதிகமான கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த மிகப்பெரிய விற்பனைக்கு முக்கிய காரணம் 2024 இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட நான்காம் தலைமுறை டிசையர் ஆகும். இதில் உள்ள சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. மாருதி நிறுவன வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த கார் Global NCAP விபத்து சோதனையில் 5-ஸ்டார் மதிப்பீடு பெற்றது. இது பாதுகாப்பை முக்கியமாக கருதும் நடுத்தர குடும்பங்களை ஈர்த்தது.
அனைத்து வேரியண்ட்டுகளிலும் 6 ஏர்பேக்குகள் தரநிலையாக வழங்கப்பட்டது ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட். இந்திய வாடிக்கையாளர்களின் பிரதான எதிர்பார்ப்பான மைலேஜில் டிசையர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
புத்தம் புதிய Z-சீரிஸ் 1.2 லிட்டர் எஞ்சின் எரிபொருள் சிக்கனத்தை இன்னும் அதிகரித்துள்ளது. பழைய மாடல்களை விட இந்த புதிய மாடல் தொழில்நுட்பத்தில் பின்தங்கவில்லை. எலக்ட்ரிக் சன்ரூஃப்,
360-டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என பல வசிகளை கொண்டுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், விலை குறைவு, அதிக மைலேஜ், ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மற்றும் மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க் ஆகிய நான்கும் இணைந்துதான் 2.14 லட்சம் கார்கள் விற்பனையாகக் காரணமாக அமைந்தது.
வருடத்தின் முதல் ஆஃபர் மற்றும் செப்டம்பர் மாத GST இந்த விற்பனையை பெருமளவிற்கு ஊக்குவித்துள்ளது. மேலும், மொத்தமாக விற்பனையான DZIRE கார்களில் TOUR S வகை கார்களும் அடங்கும்.
2025 டிசம்பர் நிலவரப்படி, டிசையர் கார் தனது அறிமுகத்தில் இருந்து மொத்தமாக 30 லட்சம் (3 Million) உற்பத்தி மைல்கல்லையும் கடந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 1983 ஆம் ஆண்டு மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் கார் விற்பனையை தொடங்கியது.
- இந்த மைல்கல்லை அடைய மாருதி சுசுகி நிறுவனத்திற்கு 42 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான கார்களை விற்பனை செய்த முதல் நிறுவனம் என்ற சாதனையை மாருதி சுசுகி படைத்துள்ளது.
1983 ஆம் ஆண்டு இந்தியாவில் கார் விற்பனையை தொடங்கிய மாருதி சுசுகி இந்த மைல்கல்லை அடைய 42 ஆண்டுகள் ஆகியுள்ளது.
விற்பனையான 3 கோடி கார்களில் அதிகபட்சமாக Alto மாடல் 47 லட்சம், Wagon R மாடல் 34 லட்சம், Swift மாடல் 32 லட்சம் விற்றுள்ளதாக மாருதி சுசுகி கூறியுள்ளது.
இதுகுறித்து பேசிய மாருதியின் தலைமை நிர்வாக அதிகாரி, "இந்தியாவில் 1,000 பேருக்கு 33 கார்கள் மட்டுமே உள்ளது. ஆகையால் எங்களுக்கு இன்னும் அதிகமான வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளது" என்று தெரிவித்தார்.
- மாருதி சுசுகி நிறுவனம் பண்டிகை காலத்தில் 4,50,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது.
- டாடா மோட்டர்ஸ் ஒரு லட்சம் வாகனங்களை டெலிவரி செய்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 33 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 22ஆம் தேதி அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் காரணமாக இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் பண்டிகை காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விற்பனையை பதிவு செய்துள்ளனர்.
நவராத்திரி முதல் தீபாவளி வரையிலான பண்டிகை காலத்தில் பயணிகள்-வாகன தயாரிப்பாளர்கள் 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை விற்பனை வளர்ச்சியைக் கண்டுள்ளனர்.
மாருதி சுசுகி நிறுவனம் பண்டிகை காலத்தில் 4,50,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது. மேலும் சில்லறை விற்பனை 3,25,000 யூனிட்களை தொட்டுள்ளது. டாடா மோட்டர்ஸ் ஒரு லட்சம் வாகனங்களை டெலிவரி செய்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 33 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் சில்லறை விற்பனை வருடாந்திர அடிப்படையில் (YoY) 30 சதவீதம் உயர்ந்து, ஒரு நாளைக்கு சராசரியாக 2,500 கார்களை விற்பனை செய்துள்ளது.
செப்டம்பர் 22 ஆம் தேதி அமலான ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்குப் பிறகு விற்பனை அதிகரிக்கத் தொடங்கியதால், கடந்த 50 நாட்களில் இந்த துறை சராசரி விற்பனையைக் கண்டுள்ளதாக ஆட்டோமோடிவ் திறன் மேம்பாட்டு கவுன்சில் தலைவரும், முன்னாள் ஃபாடா தலைவருமான வின்கேஷ் குலாட்டி தெரிவித்தார்.
- மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர் இன்று கூறியதை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது.
- மீதமுள்ள 88 சதவீத குடும்பங்களுக்கு சிறிய கார்கள் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் உயர்மட்ட 12 சதவீத குடும்பங்களால் மட்டுமே கார் வாங்க முடியும் என்றும் இந்த பொருளாதார மந்தநிலைக்கு மூல காரணம் இந்தியாவின் பெரும்பான்மையான மக்களின் வருமான தேக்கநிலை என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
இந்தியாவில் கார்களை வாங்குவது 12 சதவீத குடும்பங்கள் மட்டுமே என்று சமீபத்தில் மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர் ஆர்.சி. பார்கவா பேசியிருந்தார்.
இதை மேற்கோள் காட்டி எக்ஸ் பக்கத்தில் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், "முழு தேசமும் இன்னும் மிகுந்த வேதனையிலும் அதிர்ச்சியிலும் உள்ளது. பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நமது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியள்ளது.
அப்படியிருந்தும், இந்நேரத்தில், மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர் இன்று கூறியதை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது.இது பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் கார்களை வாங்குவது பெரும்பாலும் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே. மீதமுள்ள 88 சதவீத குடும்பங்களுக்கு சிறிய கார்கள் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றின் விற்பனை சுமார் 9 சதவீதம் குறைந்துள்ளது.
2023-2024 மற்றும் 2024-25 க்கு இடையில் ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனை வளர்ச்சி 2 சதவீதம் மட்டுமே என்றும் பார்கவா சுட்டிக்காட்டினார். வரவிருக்கும் ஆண்டிற்கான வளர்ச்சியும் 1-2 சதவீதம் மட்டுமே இருக்கும்.
இந்த மந்தநிலைக்கு மூல காரணம், இந்தியாவின் பெரும்பான்மையினரின் பரவலான உண்மையான வருமான தேக்கநிலைதான்" என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
- முந்தைய மாதத்தை விட 37 சதவீதம் அதிகம் ஆகும்.
- அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலிலும் பிரதிபலித்துள்ளது.
இந்திய பயணிகள் வாகன சந்தைக்கு 2024 ஆண்டின் முதல் மாதம் நல்லவிதமாக அமைந்துள்ளது. 2024 ஜனவரி மாதத்தில் மட்டும் இந்திய சந்தையில் மொத்தம் 3 லட்சத்து 93 ஆயிரத்து 471 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை விட 14 சதவீதமும், அதற்கும் முந்தைய மாதத்தை விட 37 சதவீதமும் அதிகம் ஆகும். வாகனங்கள் விற்பனையானது டாப் 10 அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலிலும் பிரதிபலித்துள்ளது.
அந்த வகையில், ஜனவரி 2024 மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
மாதாந்திர விற்பனை விவரம்:
மாருதி சுசுகி பலேனோ 19 ஆயிரத்து 630 யூனிட்கள்
டாடா பன்ச் 17 ஆயிரத்து 978 யூனிட்கள்
மாருதி சுசுகி வேகன்ஆர் 17 ஆயிரத்து 756 யூனிட்கள்
டாடா நெக்சான் 17 ஆயிரத்து 182 யூனிட்கள்
மாருதி சுசுகி டிசையர் 16 ஆயிரத்து 773 யூனிட்கள்
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 15 ஆயிரத்து 370 யூனிட்கள்
மாருதி சுசுகி பிரெஸ்ஸா 15 ஆயிரத்து 303 யூனிட்கள்
மாருதி சுசுகி எர்டிகா 14 ஆயிரத்து 632 யூனிட்கள்
மஹிந்திரா ஸ்கார்பியோ 14 ஆயிரத்து 293 யூனிட்கள்
மாருதி சுசுகி ஃபிரான்க்ஸ் 13 ஆயிரத்து 643 யூனிட்கள்
- இந்தியாவில் கார் வாங்குபவர்களின் சுமார் 30 சதவீதம் பேர் பெண்கள்
- இந்தியாவில் 83% பேர் பெட்ரோல் கார்களையே வாங்க விரும்புகின்றனர்.
இந்தியாவில் கார் வாங்குபவர்களில் சுமார் 67 சதவீதம் பேர் முதல் முறையாக கார் வாங்குபவர்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சில்லறை விற்பனை தளமான ஸ்பின்னி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவில் முதன்முறையாக கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதை காட்டுகிறது.
அதே போல் இந்தியாவில் கார் வாங்குபவர்களின் சுமார் 30 சதவீதம் பேர் பெண்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் கார் வாங்குபவர்களின் 83% பேர் பெட்ரோல் கார்களையே வாங்க விரும்புகின்றனர். 12% பேர் டீசல் கார்களையும் 5% பேர் சிஎன்ஜி கார்களையும் வாங்க விரும்புகின்றனர் என்றும் சிவப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் நிறம் கொண்ட கார்களையே அதிகமானோர் வாங்க விரும்புகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






