என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சீனாவில் இருந்து வந்த ஜவுளி வியாபாரி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்
- சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி யூனியனுக்கு உட்பட்ட தப்பகுட்டை கருப்ப கவுண்டனூர் பகுதியில் கடந்த 13 வருடங்களாக சீனாவில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
- நேற்று அதிகாலை தப்பக்குட்டை யில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். இதனிடையே நாகராஜுக்கு கொரோனா பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என வந்தது.
மகுடஞ்சாவடி:
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி யூனியனுக்கு உட்பட்ட தப்பகுட்டை கருப்ப கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் வயது( 37 ). இவர் கடந்த 13 வருடங்களாக சீனாவில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று முந்தினம் இவர் சொந்த ஊரான தப்பகுட்டை வருவதற்காக சீனாவில் இருந்து தனது மனைவி நாக மலர்விழி(30) மற்றும் மகன், மகளுடன் புறப்பட்டு வந்தார். கோவை விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் நேற்று அதிகாலை தப்பக்குட்டை யில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். இதனிடையே நாகராஜுக்கு கொரோனா பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என வந்தது. இதை தொடர்ந்து அவருக்கு எந்த வகையான கொரோனா பாதிப்பு என்பதை ஆய்வு செய்வதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்துசாமி தலைமையில் மருத்துவக்குழுவினர் தப்பக்குட்டைக்கு விரைந்தனர். அங்கு நாகராஜ் மற்றும் அவரது வீட்டினரை தனிமையில் இருக்க அறிவுரை வழங்கினர். இதயடுத்து நாகராஜ் தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் அவருடன் அவரது தந்தை கிருஷ்ணராஜ்(65), தாயார் சரோஜா(55) ஆகியோரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்