search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Engineers Day"

    • சிறப்பு விருந்தினராக தெற்கு கள்ளிகுளம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி பொறியாளர் சரஸ்வதி கலந்துகொண்டார்.
    • கல்லூரி முதல்வர் டாக்டர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் மாணவர்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

    வள்ளியூர்:

    சமூகரெங்கபுரத்தில் உள்ள ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக தெற்கு கள்ளிகுளம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி பொறியாளர் சரஸ்வதி கலந்துகொண்டார். கல்லூரி தலைவர் டி.டி.என்.லாரன்ஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தாளாளர் ஹெலன் லாரன்ஸ் பொறியாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்லூரி முதல்வர் டாக்டர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் மாணவர்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்து சிறப்புரையாற்றினார். முன்னதாக பொறியாளர் தின விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட டெக்னிக்கல் பேப்பர் பிரசடேசன் போட்டியில் துறைவாரியாக வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் துறை மாணவர் அருண்குமார் வரவேற்று பேசினார். 2-ம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் மாணவர் தருண் ஆண்டனி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

    ×