என் மலர்
நீங்கள் தேடியது "Dakshina Mara Nadar Sangam College"
- வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
- விழாவில் கழியலாட்டம், தப்பாட்டம், காவடியாட்டம், நாட்டியம் போன்ற பல்–வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் வி.பி.ராமநாதன் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டி.ராஜன் வரவேற்று பேசினார். கல்லூரி வளாகத்தில் பொங்கலிட்டு அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
விழாவில் கல்லூரி குழு மற்றும் ஆட்சி குழு உறுப்பினர்கள் எஸ்.கே.டி.பி.காமராஜ் நாடார், எம்.ஜோசப் பெல்சி, பண்ணை கே.செல்வகுமார், பி.ரகுநாதன், டி.சாரா சவுந்தரராஜன், பி.செல்வராஜ் நாடார், கோபால் நாடார் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி தமிழ்த்துறை, கவின்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரி பிரகாஷ், கிராமிய கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகவேல் ஆகியோர் செய்து இருந்தனர்.
- வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் 46-வது பட்டமளிப்பு விழாபத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நேற்று நடந்தது
- பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 12 மாணவர்கள் உள்பட மொத்தம் 598 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
வள்ளியூர்
வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் 46-வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நேற்று நடந்தது. கல்லூரி செயலாளர் ராமநாதன் நாடார், தலைவர் காளிதாஸ் நாடார், பொருளாளர் செல்வராஜ் நாடார், நெல்லை தட்சணமாற நாடார் சங்க செயலாளர் ராஜகுமார் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்–வர் ராஜன் ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு அரசு உதவிபெறும் மாணவ-மாணவிகளுக்கும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) சாக்ரடீஸ் சுயநிதி பிரிவு மாணவ-மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினர். பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 12 மாணவர்கள் உள்பட மொத்தம் 598 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.
விழாவில் கல்லூரிக்குழு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.
- தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி மற்றும் நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின.
- முகாமை கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.
வள்ளியூர்:
தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி மற்றும் நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. முகாமை கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அணி மற்றும் ஐ.கி.யூ.ஏ.சி. இணைந்து செய்து இருந்தது.