search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vallioor"

    • உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு வள்ளியூர் எம்.எஸ். மஹால் திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
    • முகாமில் சிறப்பு அம்சமாக கண் விழித்திரை பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இருதய பரிசோதனை, கால் நரம்பு பரிசோதனை, நுரையீரல் திறன் பரிசோதனை, உடல் பருமன் குறைக்க உணவு முறை ஆலோசனை, எலும்பு வலிமை பரிசோதனை உள்ளிட்டவை நடைபெற்றன

    வள்ளியூர்:

    உலக சர்க்கரை நோய் விழிப் புணர்வு தினத்தை முன்னிட்டு வள்ளியூர் எம்.எஸ். மஹால் திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், அன்னை அமராவதி மருத்துவமனை, நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து முகாமை நடத்தின. விழாவின் தொடக்கமாக டாக்டர் சங்கரன், வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவரும், மேக்ரோ கல்லூரி நிறுவனத்தின் தலைவருமான பொன் தங்கதுரை ஆகியோர் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றினர்.

    டாக்டர் சங்கரன் சிறப்புரை ஆற்றினார். ரோட்டரி முன்னாள் ஆளுநரும், கிங்ஸ் பள்ளியின் தாளாளருமான ரோட்டரியன் நவமணி மற்றும் வள்ளியூர்சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் தலைவர் பொன் தங்கதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    நிகழ்ச்சியின்போது பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேச்சுப்போட்டிகளும் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பொன் தங்கதுரை, செயலர் சுதிர் கந்தன், முன்னாள் மாவட்ட ஆளுநர் நவமணி, முன்னாள் மாவட்ட செயலாளர் வலங்கை புலி ரமேஷ், முன்னாள் தலைவர் முத்து சுபாஷ், செல்வேந்திரன், ஜெய்கணேஷ், முத்துசாமி, ஹரிஷ், முன்னாள் தலைவர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் சிறப்பு அம்சமாக கண் விழித்திரை பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இருதய பரிசோதனை, கால் நரம்பு பரிசோதனை, நுரையீரல் திறன் பரிசோதனை, உடல் பருமன் குறைக்க உணவு முறை ஆலோசனை, எலும்பு வலிமை பரிசோதனை உள்ளிட்டவை நடைபெற்றன. இதில் டாக்டர்கள் பயனாளி களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினார்கள்.

    ஒவ்வொரு பரிசோதனை கருவிகளும் தனித்தனியே அமைக்கப்பட்டு அத்தனை பயனாளிகளுக்கும் சுதந்திரமாக இலவசமாக பரிசோதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    முகாமில் 142 பயனாளிகள் கலந்து கொண்டனர். அதில் புதிதாக 64 சர்க்கரை நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும், சத்து பலகாரமும், சத்தான பானமும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ராமகிருஷ்ணன், டாக்டர் சங்கரன், டாக்டர் அருண் பிரகாஷ், டாக்டர் அசோக் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள். இந்த முகாமில் முன்னாள் வியாபாரி சங்க தலைவர் சின்னத்துரை, நிர்வாக கமிட்டி உறுப்பினர் சங்கரன், வியாபாரி சங்க பொருளாளர் ஜோவின், மெர்சி பள்ளியின் மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.

    இந்த முகாமின் முழு ஏற்பாடு செய்திருந்த டாக்டர் சங்கரனை வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவரும், மேக்ரோ கல்லூரியின் சேர்மன் பொன் தங்கதுரை மற்றும் செயலர் சுதீர் கந்தன் ஆகியோர் பாராட்டினர்.

    • வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் 46-வது பட்டமளிப்பு விழாபத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நேற்று நடந்தது
    • பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 12 மாணவர்கள் உள்பட மொத்தம் 598 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    வள்ளியூர்

    வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் 46-வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நேற்று நடந்தது. கல்லூரி செயலாளர் ராமநாதன் நாடார், தலைவர் காளிதாஸ் நாடார், பொருளாளர் செல்வராஜ் நாடார், நெல்லை தட்சணமாற நாடார் சங்க செயலாளர் ராஜகுமார் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்–வர் ராஜன் ஆண்டறிக்கை வாசித்தார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு அரசு உதவிபெறும் மாணவ-மாணவிகளுக்கும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) சாக்ரடீஸ் சுயநிதி பிரிவு மாணவ-மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினர். பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 12 மாணவர்கள் உள்பட மொத்தம் 598 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

    விழாவில் கல்லூரிக்குழு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • ஆசையாக வளர்த்த எனது நாயை மீட்டு தரவேண்டும்.
    • கால்நடைத்துறை அதிகாரிகள் அந்த நாயை பிடித்து மதுரைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    நாங்குநேரி:

    வள்ளியூர் வீட்டு வசதி வாரியகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அம்பிகாபதி. இவரது மகள் மனோகரி. இவர் ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.இவர் இன்று வள்ளியூர் போலீசில் அளித்த புகார் மனுவில், நான் வேலைக்கு செல்லும்போது எனது வீட்டுக்கு காவலாக இருந்த எனது நாயை நேற்று மதியம் சிலர் லோடு ஆட்டோவில் கடத்தி கொண்டு சென்று விட்டனர்.

    அந்த நபர்களை கண்டறிந்து நான் தட்டிக்கேட்டபோது எனக்கு கொலைமிரட்டல் விடுக்கின்றனர். எனவே நான் ஆசையாக வளர்த்த எனது நாயை மீட்டு தரவேண்டும். கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதற்கிடையே அந்த புகார் மனுவின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மனோகரி வளர்த்து வந்த நாய் கடந்த சில நாட்களாக அந்த தெருவில் உள்ளவர்களை கடித்துள்ளது. இதனால் அந்த நாயை பிடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

    அதன்அடிப்படையில் கால்நடைத்துறை அதிகாரிகள் அந்த நாயை பிடித்து மதுரைக்கு அனுப்பி வைத்துள்ளனர். யாரும் கடத்தவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணிடம் அறிவுரை கூறி போலீசார் அனுப்பிவைத்தனர்.

    ×