search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free eye camp"

    • தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி மற்றும் நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின.
    • முகாமை கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி மற்றும் நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. முகாமை கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அணி மற்றும் ஐ.கி.யூ.ஏ.சி. இணைந்து செய்து இருந்தது.

    • சங்கரன்கோவில் கண் சிகிச்சை முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    • சாம்பவி தலைமையில் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் செங்குந்தர் நடுநிலைப்பள்ளியில் கிராம உதயம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை சங்கரசுப்பையா தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கிராம உதயம் இலவச மருத்துவத் துறை பொறுப்பாளர் கணேசன் வரவேற்றார்.

    சமூக ஆர்வலரும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான அழகை கண்ணன் முன்னிலை வகித்தார். மகாத்மா காந்தி சேவா தலைவர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மனோகரன், பசியில்லா அறக்கட்டளை நிறுவனர் பசுமை சங்கர், சமூக ஆர்வலர்கள் பரமசிவன் பாட்டத்தூர் பால்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

    சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் சாம்பவி தலைமையில் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதில் 60 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முடிவில் கிராம உதயம் களப்பணியாளர் ஜெயராணி நன்றி கூறினார்.

    • 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கண்நீர் அழுத்த நோய் பரிசோதனை நடத்தப்பட்டது.
    • 300 பயனாளிகளுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்பட்டது

    நெல்லை:

    இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் நெல்லை தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் சங்கர்நகர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது.

    இந்தியா சிமெண்ட்ஸ் இணைத்தலைவர் (உற்பத்தி) பழனியப்பன் தலைமை தாங்கினார். மனிதவள துறை டாக்டர் குருசாமி, மக்கள் தொடர்பு அதிகாரி நாகராஜன், தலைமை ஆசிரியர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் கண்புரை நோயாளிகளை நெல்லை கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உள்விழி லென்ஸ் பொருத்தும் நவீன அறுவை சிகிச்சை, மருந்து, தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண்விழித்திரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து முகாமில் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கண்நீர் அழுத்த நோய் பரிசோதனை நடத்தப்பட்டது.

    மேலும் பிறவி கண்புரை, பிறவி கண்நீர் அழுத்த நோய், மாறுகண், மாலைக்கண் போன்ற பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளவர்களுக்கு கண் மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் சுமார் 300 பயனாளிகளுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

    பரிசோதனையின் போது அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் உடனடியாக நெல்லை கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    ×