சங்கரன்கோவிலில் இலவச கண் மருத்துவ முகாம்

சங்கரன்கோவில் கண் சிகிச்சை முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.சாம்பவி தலைமையில் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.
சாம்பவி தலைமையில் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். 
சாம்பவி தலைமையில் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். 
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் செங்குந்தர் நடுநிலைப்பள்ளியில் கிராம உதயம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சியை சங்கரசுப்பையா தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கிராம உதயம் இலவச மருத்துவத் துறை பொறுப்பாளர் கணேசன் வரவேற்றார்.

சமூக ஆர்வலரும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான அழகை கண்ணன் முன்னிலை வகித்தார். மகாத்மா காந்தி சேவா தலைவர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மனோகரன், பசியில்லா அறக்கட்டளை நிறுவனர் பசுமை சங்கர், சமூக ஆர்வலர்கள் பரமசிவன் பாட்டத்தூர் பால்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் சாம்பவி தலைமையில் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதில் 60 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முடிவில் கிராம உதயம் களப்பணியாளர் ஜெயராணி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com