search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "All Party"

    • மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்.
    • இந்த ஆண்டின் இறுதியில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் வெள்ளி விழா பூங்கா அருகே காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி தொழிற்சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக தேசிய அளவிலும், துறை சார்ந்த வகையிலும் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். ஜூலை மாதம் பரப்புரை இயக்கம் நிறைவடைந்த பின்பு வெள்ளையனே வெளியேறு நாளான ஆகஸ்ட் 9-ந் தேதி மாநில அளவிலான திரள் அமர்வு சென்னையில் நடத்தப்பட உள்ளது.

    துறை சார்ந்த கோரிக்கைகளுக்கான போராட்டங்களை தொடங்கி வேலை நிறுத்தம் வரை கொண்டு செல்ல வேண்டும். அதற்கு அந்தத்துறைக்கு வெளியில் உள்ள மற்ற தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து ஆதரவு வேண்டும்.மாநில அளவிலான பெருந்திரள் அமர்வு போராட்டத்திற்குப் பிறகு, அதன் அனுபவங்களை ஆய்வு செய்து, இந்த ஆண்டின் இறுதியில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 

    • கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து அமைப்புகள் சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் சாலை தடுப்புச் சுவர், போலீஸ் தடுப்புக்களில் கொடிகள் கட்டவோ போஸ்டர்கள் ஒட்டவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து அமைப்புகள் சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி தலைமையில் நடைபெற்றது.

    இதில் கோபிசெட்டிபாளையம் டவுன் பகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் கட்சி கொடிகள், பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டுவது, தொடர்பான அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    குறிப்பாக சாலை தடுப்புச் சுவர், போலீஸ் தடுப்புக்களில் கொடிகள் கட்டவோ போஸ்டர்கள் ஒட்டவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்தகுமார், விஜயன் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேகதாது அணை கட்டுவதை தடுக்க மத்திய அரசு அலுவலகங்களை அனைத்து கட்சியினரும் முற்றுகையிட வேண்டும் என வைகோ கூறினார். #Mekedatudam #Vaiko

    மதுரை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து 2012-ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் ஆயிரம் பேரை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

    மேகதாது அணை கட்டினால் மேட்டூர் உள்ளிட்ட தமிழகத்தின் ஒரு பகுதி வறண்டுவிடும். அணை கட்டுவதை தடுக்க தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக முற்றுகையிட வேண்டும்.

    அப்படி செய்தால்தான் மத்திய அரசு அணை கட்டு வதை தடுக்கும். அணை கட்ட வெளிப்படையாக அனுமதி அளிக்க மாட்டோம் என கூறிய மத்திய அரசு, தற்போது ரகசியமாக ஒப்புதல் கொடுத்துள்ளது.

    மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மூலம் தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

    மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டை அணுகுவதுதான் சரியாக இருக்கும்.

    மத்திய அரசு, மாநில அரசை காலில் போட்டு மிதித்தாலும் கேட்பதற்கு யாரும் இல்லை என நினைத்து செயல்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் இருக்கும் தோழமை கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ராசா கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Mekedatudam #Vaiko

    நாளை தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக இயங்க அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதிவரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் 46 மசோதாக்கள் நிறைவேற வேண்டியுள்ளது. 18 அமர்வுகளாக மொத்தம் 24 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

    கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து பாராளுமன்ற செயல்பாடுகள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முற்றிலுமாக முட்க்கினர். இதனால், பல மசோதாக்களை அறிமுகப்படுத்த முடியாமலும், நிறைவேற்ற இயலாமலும் போனது.

    இந்நிலையில், கடந்தமுறை முடங்கியதுபோல் இல்லாமல் எதிர்வரும்  கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக பாராளுமன்ற வளாகத்தில் இன்று அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.


    இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த் குமார், ‘நாளை தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைய அனைத்து கட்சியினரின் ஒத்துழைப்பு தேவை என பிரதமர் மோடி கேட்டுகொண்டதாக தெரிவித்தார்.

    அனைத்து கட்சியினராலும் முன்வைக்கப்படும் பிரச்சனைகளுக்கு இந்த அரசு முக்கியத்துவம் அளிக்கும். நாட்டின் நலன்கருதி இந்த கூட்டத்தொடரை ஒன்றிணைந்த கருத்தொற்றுமையுடன் நடத்தி முடிக்க அனைவரும் முன்வர வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியதாகவும் அனந்த குமார் குறிப்பிட்டார். #monsoonsession #PMseekscooperation #Parliamentsmoothfunctioning  #Parliamentmonsoonsession
    ×