search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mekedatudam"

    மேகதாது அணை கட்டுவதை தடுக்க மத்திய அரசு அலுவலகங்களை அனைத்து கட்சியினரும் முற்றுகையிட வேண்டும் என வைகோ கூறினார். #Mekedatudam #Vaiko

    மதுரை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து 2012-ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் ஆயிரம் பேரை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

    மேகதாது அணை கட்டினால் மேட்டூர் உள்ளிட்ட தமிழகத்தின் ஒரு பகுதி வறண்டுவிடும். அணை கட்டுவதை தடுக்க தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக முற்றுகையிட வேண்டும்.

    அப்படி செய்தால்தான் மத்திய அரசு அணை கட்டு வதை தடுக்கும். அணை கட்ட வெளிப்படையாக அனுமதி அளிக்க மாட்டோம் என கூறிய மத்திய அரசு, தற்போது ரகசியமாக ஒப்புதல் கொடுத்துள்ளது.

    மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மூலம் தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

    மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டை அணுகுவதுதான் சரியாக இருக்கும்.

    மத்திய அரசு, மாநில அரசை காலில் போட்டு மிதித்தாலும் கேட்பதற்கு யாரும் இல்லை என நினைத்து செயல்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் இருக்கும் தோழமை கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ராசா கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Mekedatudam #Vaiko

    புயல் நிவாரண பணிகளை மூடி மறைக்க மேகதாது அணை பிரச்சினையை கிளப்பி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார் என்று துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #MKStalin #Mekedatudam

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுக்கோட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.6 கோடி மதிப்பிலான அரிசி, போர்வை, பாய், தண்ணீர் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. புயல் பாதிப்பு மீட்பு பணியில் ஈடுபட தமிழக அரசிடம் போதிய வலிமை இருந்ததால் ராணுவத்தின் உதவி தேவைப்படாமல் இருந்து இருக்கலாம் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதா ராமன் கூறியுள்ளார். மேலும் அவர் தானாக முன்வந்து ராணுவ உதவி தேவையென்றால் அனுப்புகிறோம் என கூறியதற்கு நன்றி.

    தற்போது டெல்டா பகுதி மக்கள் புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் வேளையில் எதிர் கட்சியினர் நிவாரணம் கொடுக்கும் பணியில் கவனம் செலுத்தாமல் அண்ணா அறிவாலயத்தில் அரசியல் நடத்துகின்றனர். தமிழக அரசின் புயல் நிவாரண பணிகளை மூடி மறைக்க மேகதாது அணை பிரச்சினையை கிளப்பி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார்.

     


    மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் தான். கூட்டணியில் உள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின், சோனியா மற்றும் ராகுல் காந்தியிடம் பேசி மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும். இல்லையென்றால் ஸ்டாலின் காங்கிரசுடன் உள்ள உறவை முறித்து கொள்வாரா?.

    மேகதாதுவில் அணை கட்ட அ.தி.மு.க. அரசாங்கம் விடாது. இதற்காக தொடர்ந்து அ.தி.மு.க. அரசு போராடும். அ.தி.மு.க.வால் மட்டும்தான் மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த முடியும். எங்களிடம் 50 எம்.பி.க்கள் உள்ளனர். வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #Mekedatudam

    ×