search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thambi Durai"

    • காவிரியை காப்பாற்றக்கூடிய ஒரே தலைவாக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.
    • மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, ஒரு போதும் அ.தி.மு.க.வும், எடப்பாடி பழனிசாமியும் இடம் தர மாட்டார்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்றது.

    பாகலூர் பஸ் நிலையத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு, வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்டக்குழு உறுப்பினருமான ரவிகுமார் தலைமை தாங்கினார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தம்பிதுரை எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல், தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல். தமிழகத்தில், நான்கரை ஆண்டுகாலம் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை தந்தார். தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்ந்தது. சாதாரண தொண்டராகிய எடப்பாடி பழனிசாமியை மக்கள் நம்ப வேண்டும். அவர், உங்களில் ஒருவர். நம்மில் ஒருவர். அவரது கரத்தை வலுப்படுத்தும் வகையில் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு தர வேண்டும்.

    தமிழகத்தில், பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி, கூட்டுறவு சங்கம்... என எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் மட்டும்தான் போட்டியாக இருக்கும். காவிரியை காப்பாற்றக்கூடிய ஒரே தலைவாக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். மேகதாது அணை கட்டுவது பயனற்றது. அங்கு, அணை கட்டாமலேயே பெங்களூரு மாநகரத்திற்கு தேவையான 18 டிஎம்சி தண்ணீரை கே.ஆர்.எஸ். அணையிலிருந்து எடுத்துக் கொள்ளட்டும். அதற்கு, அதிமுக சார்பில் எந்த ஆட்சேபணையும் இல்லை. இதுதான் அதிமுகவின் கருத்து மற்றும் கொள்கையாகும். மேகதாதுவில் அணை கட்டுவது தேவையற்றது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, ஒரு போதும் அ.தி.மு.க.வும், எடப்பாடி பழனிசாமியும் இடம் தர மாட்டார். மக்கள் இதை நம்பலாம். இந்த விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூட்டத்தில் பேசினார்.

    மேலும், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமைக்கழக பேச்சாளர் சாரதா ஆகியோர் கூட்டத்தில் பேசினர். இதில், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில், பாகலூர் ஊராட்சி தலைவர் வி.டி. ஜெயராமன் நன்றி கூறினார்.

    • அடுத்த பிரதமர் வேட்பாளர் மோடி என்பதை அமித்ஷா கூறியுள்ளார்.
    • நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணியில் இருக்கிறோம்.

    கிருஷ்ணகிரி :

    கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி. நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சென்னை, வேலூர் கூட்டங்களில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வரும் காலத்தில் இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பை பா.ஜனதா மட்டுமே ஏற்படுத்தும் என பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. எம்.ஜி.ஆர். அதற்காகத்தான் அ.இ.அ.தி.மு.க., என்ற கட்சியை தொடங்கினார்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் தற்போது எடப்பாடி பழனிசாமியை நாங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளோம். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த அவர் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்தது போல இந்தியாவையும் திறமையுடன் ஆட்சி செய்வார். இந்தியாவில் பிரதமராக பொறுப்பேற்க தகுதி வாய்ந்த ஒரே தலைவர், தமிழர் எடப்பாடி பழனிசாமிதான்.

    அடுத்த பிரதமர் வேட்பாளர் மோடி என்பதை அமித்ஷா கூறியுள்ளார். நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணியில் இருக்கிறோம். அவரது கருத்தை நாங்கள் ஏற்கிறோம். பிரதமர் மோடி உலக தலைவர்கள் போற்றும் அளவுக்கு சிறப்பான ஆட்சி செய்கிறார். தமிழ் மொழி, திருக்குறள், பாரதியார், கலாசாரத்தை எங்கும் பேசி நம்மை தொடர்ந்து பெருமை படுத்துகிறார்.

    பா.ஜனதா அரசு கடந்த, 9 ஆண்டுகளில் என்ன செய்தது எனக்கேட்கும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த காலக்கட்டத்திற்கு முன்பு 18 ஆண்டுகள் மத்திய அரசில் தி.மு.க., அங்கம் வகித்த போது என்ன செய்தது என்று கூறட்டும். நீட் தேர்வை அப்போது எதிர்க்காமல் இப்போது விலக்கு ஏற்படுத்துவோம் என கூறி வருகின்றனர். கடந்த, 2 ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செய்தோம் என தி.மு.க., வினர் கூறுவது வெட்ககேடு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்தித்து பேசினார்.
    • பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கூட்டணி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் போது கூட்டணி குறித்து இப்போது முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது என்றும் கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று தான் அமித்ஷா கூறினாரே தவிர கூட்டணியை உறுதி செய்யவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

    இதனைதொடர்ந்து கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர்கள் முடிவெடுக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

    இந்தநிலையில், டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்தித்து பேசினார்.

    பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கூட்டணி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என தம்பிதுரை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான சில விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாஜகவில் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக எம்.பி.தம்பிதுரை சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தகக்து.

    சில நாட்களுக்கு முன் அமித்ஷாவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசிய நிலையில் தம்பிதுரை சந்தித்து பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூறி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
    • ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைக்குமா? அல்லது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கிடைக்குமா? அல்லது இரட்டை இலை முடக்கப்படுமா? என்ற நிலை உள்ளது.

    சென்னை:

    டெல்லியில் பிரதமர் மோடியை அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை இன்று காலையில் திடீரென சென்று சந்தித்து பேசி உள்ளார்.

    பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் இந்த சந்திப்பு சுமார் 10 நிமிட நேரம் நடந்தது.

    பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி உள்ள நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்க சந்தித்து விட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டாலும் அரசியல் ரீதியாகவே இந்த சந்திப்பு நடந்ததாக தெரிய வந்துள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இரு அணிகளும் போட்டியிடும் நிலையில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைக்குமா? அல்லது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கிடைக்குமா? அல்லது இரட்டை இலை முடக்கப்படுமா? என்ற நிலை உள்ளது.

    இந்த சூழலில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததற்கு தேர்தல் கமிஷன் தனது நிலைப்பாட்டை நாளை தெரிவிக்க உள்ளது.

    இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூறி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    எனவே இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடியை எடப்பாடியின் ஆதரவாளரான தம்பித்துரை எம்.பி. சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • அ.தி.மு.க.வில் பயிற்சி பெற்றவர்களால் தான் தற்போது தி.மு.க. ஆட்சி நடத்தும் சூழ்நிலையில் உள்ளது.
    • தி.மு.க.வில் கோ பேக் மோடி என்றவர்கள் தற்போது கம் பேக் மோடி என்கிறார்கள்.

    மேட்டுப்பாளையம்:

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பித்துரை கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    தி.மு.க.வில் பி டீம் ஒன்று உள்ளது. கட்சி விட்டு கட்சி தாவி கொண்டு இருக்கும் அமைச்சர் என்னுடன் பணியாற்றிவர். அ.தி.மு.க.வில் பயிற்சி பெற்றவர்களால் தான் தற்போது தி.மு.க. ஆட்சி நடத்தும் சூழ்நிலையில் உள்ளது. ஒரு கட்சியில் பயனடைந்துவிட்டு அதே கட்சியை பலி வாங்க துடித்து கொண்டு இருக்கிறார். மின் கட்டணத்தை உயர்த்தி விட்டு பக்கத்து மாநிலத்தை பாரு என்று கூறி கொண்டு இருக்கிறார்.

    கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. அ.தி.மு.க. முதுகு எலும்பு இல்லாத கட்சி என்று தி.மு.க.வினர் பேசினார்கள்.

    தி.மு.க.வில் கோ பேக் மோடி என்றவர்கள் தற்போது கம் பேக் மோடி என்கிறார்கள். தி.மு.க. பேசுவது ஒன்று, செய்வது ஒன்று. நீட் தேர்வு வருவதற்கு காங்கிரஸ், தி.மு.க. தான் காரணம்.

    2010-ல் குலாம் நபி ஆசாத் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருக்கும்போது அவர் தான் மருத்துவ கவுன்சிலில் நீட் தேர்வு கொண்டு வர வேண்டும் என ஒப்புதல் வழங்கினார். அப்போது கருணாநிதி, மு.க.ஸ்டாலின் எல்லாம் என்ன செய்தார்கள். ஆ.ராசா 2009, 2010, 2011-ல் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தார், அவர் என்ன செய்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    பாராளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி? என்று காங்கிரஸ் பெண் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்ட ணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜோதிமணி ‘மாலை மலர்’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:

    கே: முதன் முதலாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

    ப: இந்த வெற்றி சாதாரண மக்களுக்கான வெற்றியாக பார்க்கிறேன். தனிப்பட்ட ஜோதிமணிக்கு கிடைத்த வெற்றி இல்லை. அரசியலில் ஒரு பிம்பம் இருக்கிறது. அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்றால் பணம் இருக்க வேண்டும். அரசியல்வாதிகளின் வாரிசாக இருக்க வேண்டும். குற்றப்பின்னணி உடையவராக இருக்க வேண்டும் என்ற கருத்துகள் இன்றைக்கு வேகமாக பரவி வேரூன்றியுள்ளது.

    ஆனால் தொடர்ச்சியாக நேர்மையாக, அர்ப்பணிப்புடன் மக்களுக்கு பணியாற்றினால் சாதாரண பின்னணி உடையவரும் எந்த உயர் பதவிக்கும் வர முடியும் என்ற செய்தியை என் வெற்றி தந்திருக்கிறது.

    கே: அரசியலில் பெரிய பின்புலம் இல்லாத நீங்கள் எப்படி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டீர்கள்?

    ப: என்னை வேட்பாளராக அறிவிக்கும் முன்பே கட்சிக்குள்ளும், வெளியிலும் பொருளாதார பின்னணி உடையவர்தான் எம்.பி. தேர்தலில் போட்டியிட முடியும் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உறுதியாக இருந்து எனக்கு வாய்ப்பளித்தார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் அதனை ஏற்றுக்கொண்டார்.

    தி.மு.க-காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கடுமையாக உழைத்து வெற்றி பெறச்செய்தனர். தேர்தல் பிரசாரத்தின்போது பொதுமக்கள் என்னை தங்களின் வீட்டின் ஒரு பெண்ணாக பார்த்துக்கொண்டார்கள். மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் காப்பாற்றும் பொறுப்பு இருக்கிறது.

    கே: பாராளுமன்றத்தில் முதன் முதலாக என்ன பேசப்போகிறீர்கள்?


    ப: என்ன பேசுவது என்று முடிவு செய்யவில்லை. ஆனால் கரூர் பாராளுமன்ற தொகுதி மக்களின் உரிமை, வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த தமிழகத்தின் உரிமை, அடையாளம், வளர்ச்சி போன்றவற்றிற்காக என் குரல் ஒலிக்கும். இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் பா.ஜ.க. செயல்பட்டால் மோடிக்கு எதிராக போர்க்குரல் தொடுப்பேன்.

    கே: தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றாலும், தேசிய அளவில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளதே?

    ப: காங்கிரஸ் கட்சியின் தோல்வி வலி நிரம்பியது. இந்த தோல்வியானது கட்சியை பாதிக்கப்போவதில்லை. தனி மொழி, தனி கலாச்சாரம் போன்றவற்றை விரும்பும் மாநில மக்கள் மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். பிரசாரத்தின்போது ராகுல் காந்தி ஒற்றுமையையும், அன்பையும் விதைத்தார். ஆனால் அதற்கு பதிலாக மோடி பிரிவினையையும், வெறுப்பையும் விதைத்தார். இந்த தேசத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், பெண்களின் உரிமைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் பற்றி மோடி வாய் திறக்கவில்லை. 2014-ல் மோடி வெற்றி பெற்றபோது அதை செய்வார், இதை செய்வார் என ஒரு கொண்டாட்டம் இருந்தது. ஆனால் இப்போது அதை காணவில்லை. அதற்கு பதிலாக ஒரு வித இறுக்கமே காணப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு பல மாநிலங்களில் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. அது சீட்டுகளாக மாறவில்லை. பிரதமர் மோடி கடந்த கால தவறுகளை திருத்தி கொள்வார் என எதிர்பார்க் கிறோம்.

    கே: தமிழகத்தில் மட்டும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி எப்படி அமோக வெற்றியை பெற்றது?

    ப: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆரம்பத்திலேயே ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். கடுமையாக உழைத்தார். அதனை மக்களும் ஏற்றுக்கொண்டனர். மோடியின் அடக்குமுறையையும், எடப்பாடி பழனிசாமியின் அடிமை ஆட்சியையும் தமிழக மக்கள் விரும்பவில்லை. அதனால்தான் அமோக வெற்றியை தந்திருக்கிறார்கள். மோடியின் அடக்குமுறை கேரளாவிலும் எடுபடவில்லை.

    கே: 4.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நினைத்தீர்களா?

    ப: நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் தம்பி வி.செந்தில்பாலாஜி (தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்) யும், நானும் அமர்ந்து பேசினோம். குழுக்கள் அமைத்து கிராமங்களுக்கு சென்று அவர்களின் பிரச்சனைகளை அறிந்து தனித்தேர்தல் அறிக்கை தயாரித்தோம். எதிர் வேட்பாளர் மூத்த அரசியல்வாதி பலமுறை கரூர் தொகுதியில் வென்றவர் என்பதை அறிந்து பிரசாரத்தை முன்னெடுத்தோம். அவர்கள் ஆளுங்கட்சி எந்திரத்தை தவறாக பயன்படுத்தினர். ஆனால் நாங்கள் நேர்மையாக, அமைதியாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்தோம்.

    முதற்கட்ட பிரசாரத்தின் போதே 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கணித்தோம். பின்னர் போக, போக மக்களின் தன்னெழுச்சி, உணர்ச்சி வெள்ளத்தை பார்த்தபோது அது இன்னும் அதிகரிக்கும் என்பது தெள்ளதெளிவாக தெரிந்தது. கரூர் பாராளுமன்ற தொகுதி வரலாற்றில் முதல் பெண் எம்.பி. என்ற பெருமையையும் எனக்கு கரூர் தொகுதி மக்கள் அளித்துள்ளார்கள்.

    கே: ராகுல் காந்தியுடன் பேசினீர்களா?

    ப: பேசினேன், வாழ்த்து தெரிவித்தார். விரைவில் அவரை சந்திக்க உள்ளேன். பதவி ஏற்பு தேதி உறுதியாகவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கரூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 4 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரையை வென்றுள்ளார்.
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதி யாரும் எதிர்பாராத வகையில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்தது. இதில் பலர் பெயர் அடிபட்டாலும் ஜோதிமணி பெயர் பலமாக உச்சரிக்கப்பட்டது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் உறுதியாக இருந்து அவருக்கு போட்டியிட வாய்ப்பளித்தார். அவரின் நம்பிக்கை வீணாகாமல் காங்கிரஸ் வெற்றிக் கொடியை நிலைநாட்டியுள்ளது.

    இந்த தொகுதியை பொறுத்தமட்டில் சுதந்திரத்திற்கு பின்னர் தொடர்ச்சியாக பல தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ச்சியாக வென்றது. கடைசியாக 1980-ல் காங்கிரஸ்-அ.தி.மு.க. இடையே நேரடி போட்டி நிலவியது. இதில் காங்கிரசை சேர்ந்த துரை செபாஸ்டியன் வெற்றி பெற்றார். அதன்பின்னர் 38 ஆண்டுகளாக காங்கிரசின் குரல் கரூரில் ஒலிக்கவில்லை. போட்டியிட்டாலும் வெற்றி கிடைக்கவில்லை.

    1980-களுக்கு பின்னர் நடந்த தேர்தல்களில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க-தி.மு.க. கட்சிகளுக்கு இடையே இருமுனைப் போட்டி இருந்தது. இதற்கிடையே 1996-ல் நடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி (மூப்பனார்) சார்பில் நாட்ராயன் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அ.தி.மு.க.வுக்கு 2-ம் இடம் கிடைத்தது.

    பின்னர் 1998-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மு.தம்பிதுரை வெற்றி பெற்றார். இதில் நாட்ராயனுக்கு 2-ம் இடம் கிடைத்தது. 2009-ல் நடந்த தேர்தலில் மு.தம்பிதுரை வென்றார். பின்னர் 2014- தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியதால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி வெறும் 30,459 வாக்குகள் பெற்று 4-ம் இடம் பிடித்தார். இதிலும் மு. தம்பிதுரை கரூர் தொகுதியில் மீண்டும் 2-வது முறையாக வென்றார்.

    இந்த நிலையில் தற்போது 39 ஆண்டுகளுக்கு பின்னர் கரூர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 4 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரையை வென்றுள்ளார்.

    இதன் மூலம் தம்பிதுரையின் ஹாட்ரிக் வெற்றிக்கு ஜோதிமணி முட்டுக்கட்டை போட்டுள்ளார். மேலும் கரூர் பாராளுமன்ற தொகுதி வரலாற்றில் முதல் பெண் எம்.பி. என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
    பயங்கரவாதிகளால் அதிக அளவில் இந்தியாதான் தாக்கப்படுகிறது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை வேதனை தெரிவித்துள்ளார். #ThambiDurai
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    கரடிப்பட்டி பகுதியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும் என்பதில் அனைத்து நாடுகளும் ஒருமித்த கருத்தோடு இருக்கிறது. பயங்கரவாதிகளால் அதிக அளவில் இந்தியாதான் தாக்கப்படுகிறது.



    மோடி அரசு தைரியமாக ராணுவத்திற்கு முழு அதிகாரத்தையும் கொடுத்து, அவர்களின் திறமையை பாராட்டி அவர்களுக்கு கொடுத்த உற்சாகத்தின் காரணமாக பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டிருக்கிறது.

    இது நம் நாட்டின் நலனுக்காக செய்யப்பட்ட ஒன்று. இதில் ராணுவத்தின் வலிமையும் காட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியா ஒரு வலிமையான நாடு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

    சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் எல்லாம் இனி இந்தியாவை எப்போதும் தாக்கலாம் என்ற எண்ணம் இருந்தால், இனிமேல் அதையெல்லாம் நினைத்து பார்க்க முடியாத அளவில் ராணுவம் வலிமை வாய்ந்ததாக இந்தியாவில் இருக்கிறது. அதற்கான முழு பெருமையும் மோடியையே சாரும்.

    இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு எப்போதும் பதற்றமாகவே இருப்பதால் பிரதமர் மோடி பல்வேறு நாடுகளுக்கும் சென்று அவர்களின் ஆதரவை பெற்று ராணுவத்தையும் வலிமைப்படுத்தி எந்த நாடும் தாக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளார்.

    எப்போது போர் மூண்டாலும் இந்தியாவை நோக்கி படையெடுப்பதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது. நம்முடைய ராணுவம் வலிமையாக உள்ளது. யாரும் ஊடுருவ முடியாது. போர் வந்தால் சந்திக்கின்ற தெம்பும் திராணியும் ராணுவத்திற்கு உள்ளது. அதற்காக நாம் பயப்பட வேண்டியதில்லை. ஆகவேதான் மோடி கன்னியாகுமரி உள்ளிட்ட எங்கு வேண்டும் செல்லலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ThambiDurai
    அதிமுக-பாஜக கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி மட்டுமே, பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு நாங்கள் துணை போகமாட்டோம் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். #ThambiDurai #BJP
    கரூர்:

    கரூர் ஏமூரில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    பயங்கரவாதிகளை ஒழித்து கட்டிய இந்திய ராணுவ வீரர்களின் செயல் பாராட்டுக்குரியது. நாட்டின் மரியாதையை காக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதனை நாட்டில் உள்ள அனைவரும் பாராட்டுகின்றனர்.

    தீவிரவாதிகளும், பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிராக போர் செய்ய முனைந்தால் அதனை எதிர்கொள்ளும் வலிமை இந்திய ராணுவத்திற்கு இருக்கிறது. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியை எதிர்கொள்ள பா.ஜ.க. எங்களுக்கு துணை நிற்கிறது. இது தேர்தலுக்கான கூட்டணி. கொள்கைக்கான கூட்டணி அல்ல.



    கூட்டணிக்காக பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு நாங்கள் துணை போகமாட்டோம். மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிட்டால் அதனை கடுமையாக எதிர்ப்போம். அந்த கொள்கையில் பின் வாங்கப்போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #ThambiDurai #BJP
    புல்வாமா தாக்குதல் மற்றும் இந்திய விமான படையின் பதிலடியால் 2 நாடுகளுக்கும் இடையே யுத்தம் ஏற்படும் நிலை உருவாகி விடக்கூடாது என்று வைகோ கவலை தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #Surgicalstrike2 #PulwamaAttack
    திருச்சி:

    திருச்சியில் இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரர்களில் முஸ்லிம் ஒருவரும் ஆவார். உணர்ச்சிகளை தூண்டி எரிமலை போல் ஆக்கக்கூடாது. இந்த சம்பவங்களால் 2 நாடுகளுக்கும் இடையே யுத்தம் ஏற்படும் நிலை உருவாகுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது. ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு தலை வணங்குகிறேன்.

    அதே நேரத்தில் பாசிச மனப்பான்மை உடையவர்கள் அதிகாரத்தை தக்க வைப்பதற்காக எந்த செயலுக்கும் துணிவார்கள். பாசிச கொள்கை அடிப்படையில் தான் ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த நாடு கலாசாரம், மொழி, இனம், மதம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இங்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி விடக்கூடாது. பிரதமர் நரேந்திர மோடி பாசிச மனப்பான்மையுடன் செயல்படுகிறார். இதனால் விபரீத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

    மாயமான சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி சென்னையில் நாளை நடைபெறும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும். அவரை யாராவது சிறைப்பிடித்தால் உடனே விடுவிக்க வேண்டும். காவல் துறையினர் மீது குற்றச்சாட்டுக்கள் கூறிய நிலையில் அவர் மாயமாகி இருப்பதால் காவல் துறையினர் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவருக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அதற்கு தமிழக அரசும், காவல் துறையும் தான் பொறுப்பு.



    பிரதமர் நரேந்திர மோடி 1-ந்தேதி கன்னியாகுமரி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் வருகை தந்தால் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி எனது தலைமையில் போராட்டம் நடைபெறும். கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்க நரேந்திர மோடி வரவில்லை. முல்லை பெரியாறு, மேகதாது அணைக்கு அனுமதி அளித்துள்ளார். தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளார். அவர் மீது எனக்கு தனிப்பட்ட பகை எதுவும் கிடையாது. தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துவதால்தான் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்கள் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கே: பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளதே?

    ப : அது குறித்த முழு தகவல் எனக்கு தெரியவில்லை. தகவல் தெரிந்த பிறகுதான் அது பற்றி கருத்து கூற முடியும். இருப்பினும் எந்த நிலையிலும் யுத்தம் ஏற்படும் நிலை உருவாகி விடக்கூடாது. இதனால் இரு தரப்புக்கும் பெரும் சேதம் ஏற்படும்.

    கே: தி.மு.க-காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி என்று தம்பிதுரை எம்.பி. கூறியுள்ளாரே?

    ப : அரசியல் தலைவர்கள் சொல்லும் கருத்துக்கள்தான் பதில் கருத்துகளாக கூறப்படுகிறது.

    கே: தேர்தல் பிரசாரத்தை எப்போது தொடங்குவீர்கள்?

    ப: நான் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டேன்.

    கே: தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவாகி விட்டதா?

    ப: பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார். #MDMK #Vaiko #Surgicalstrike2 #PulwamaAttack
    அரசியலுக்காக அ.தி.மு.க. மீது அன்புமணி ஊழல் குற்றம் சாட்டியிருப்பார் என்று தம்பிதுரை கூறினார். #ADMK #ThambiDurai #PMK #AnbumaniRamadoss
    கரூர்:

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் தம்பிதுரை எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் வலி மையான கூட்டணி அமைந்து இருக்கிறது. கூட்டணி என்பது பொது திட்டங்களுக்காக அமைக்கப்படுவது. கட்சிகளின் கொள்கைகளை விட்டுக் கொடுப்பதற்காக அல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ் மொழிக்காக, தமிழர்களுக்காக, தமிழகத்தின் உரிமைகளுக்காக இந்த இயக்கத்தை எப்படி பயன்படுத்தி உரிமைகளை பெற்றாரோ? அதனடிப்படையில் எடப்பாடி அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

    திராவிட கட்சிகளின் உயிர் மூச்சான சுயாட்சி கொள்கையில் தெளிவாக கொள்கை பிடிப்பாக இருப்போம். அ.தி.மு.க. போன்று பா.ஜ.க.வுக்கும் தனியாக கொள்கை இருக்கிறது. எங்களை பொறுத்த வரை பொது எதிரி காங்கிரஸ்- தி.மு.க.தான். அவர்களை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும்.

    18 ஆண்டுகள் மத்தியிலும், 11 ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழகத்திலும் ஆட்சி செய்த தி.மு.க. தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இந்த ஆட்சியில்தான் கச்சத்தீவு பிரச்சனை வந்தது. இலங்கையில் ஒன்றரை கோடி அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

    இதற்கு இந்திய ராணுவம் துணை புரிந்ததாக ராஜபக்சே ஒப்புக்கொண்டார். தமிழர்களுக்கு துரோகம் செய்த தி.மு.க.வை மத்திய ஆட்சியில் பங்கேற்பதற்கோ, மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கோ? எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

    மத்தியில் அ.தி.மு.க. எதிர் கட்சியாக இருக்கிறது. மாநிலத்தின் உரிமைகளுக்காக பாராளுமன்றத்தில் நானும் குரல் கொடுத்து இருக்கிறேன். பாராளுமன்றத்தின் அவையை முடக்கியதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. அதே போன்று மேகதாது அணை கட்ட அனுமதிக்ககூடாது என பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து சஸ்பெண்டு செய்யப்பட்டோம்.

    தற்போது மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என உச்சநீதிமன்றம் உத்தரவாதம் அளித்துள்ளது. கஜா புயல் நிவாரணத்துக்கு கேட்ட ரூ. 15 ஆயிரம் கோடியை மீண்டும் கேட்டு இருக்கிறோம். இப்போது கூட்டணி அமைந்துள்ளதால் பலன் கிடைக்கும் என நம்புகிறோம். பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் நம்பிக்கை இருக்கிறது.

    ஸ்பெக்ட்ரம், ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்குகளில் துரிதமாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.



    தமிழக அரசு மீது அன்புமணி ராமதாஸ் மட்டுமல்ல எல்லா கட்சிகளும் குற்றஞ்சாட்டின. அதில் உண்மை இல்லை என்பது எங்களுக்கு தெரியும். அ.தி.மு.க. மீது எந்த குற்றச்சாட்டும் கிடையாது. அரசியலுக்காக கொடுத்திருப்பார்கள். இது தான் எங்கள் கருத்து.

    நீட் தேர்வினை நடத்தி காண்பித்தது காங்கிரசும், தி.மு.வும் தான். ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தார். தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகத்துக்கு துரோகமும், இடர்பாடுகளும் ஏற்பட்டன. இதை தி.மு.க. எங்கள் மீது திருப்பி விடுகிறது. இலங்கை தமிழர்கள் பிரச்சனையை காரணம் காட்டி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி 2011-ல் தி.மு.க. தனித்து போட்டியிட்டது. இப்போது அமைக்கப்பட்டுள்ள தி.மு.க-காங்கிரஸ்தான் சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த கூட்டணியை மக்கள் முழுவதுமாக புறக்கணிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai #PMK #AnbumaniRamadoss
    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காவிட்டால் கட்சிக்காக பாடுபடுவேன் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். #ThambiDurai #Parliamentelection
    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் தமிழக உரிமைகளுக்காக குரல் கொடுத்தோம். மு.க.ஸ்டாலின் எங்கள் கூட்டணியை குறை கூறுகிறார். கிராம சபை கூட்டங்களை நடத்துவதால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. ஜல்லிக்கட்டுக்கு காங்கிரஸ் ஆட்சியில் தடை விதிக்கப்பட்டது. அந்த தடையை அ.தி.மு.க. அரசு தான் நீக்கியது. அதற்கு மத்திய அரசு உதவியது. சில உதவிகளை மத்திய அரசு செய்தது. சில உதவிகளை பெறமுடியாமல் போனது. அ.தி.மு.க. ஒருபோதும் கொள்கையை விட்டு கொடுக்காது.

    பெரியார், அண்ணா வழியில் கொள்கையை இம்மி அளவும் விட்டுக்கொடுக்க மாட்டோம். தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பதே எங்கள் குறிக்கோள். கூட்டணி பற்றி பேச குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழு தான் கூட்டணி குறித்து முடிவு செய்யும். எந்த தொகுதியில் நான் போட்டியிடுவது என்பதை கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும். கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டவன். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன். வாய்ப்பு அளிக்காவிட்டால் கட்சிக்காக தேர்தல் பணியாற்றுவேன்.

    இவ்வாறு தம்பிதுரை கூறினார். #ThambiDurai #Parliamentelection
    ×