search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JothiMani"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசு என்ன தவறு செய்தாலும் அதனை நாங்கள் தட்டி கேட்டு வருகிறோம்.
    • தமிழக எம்.பிக்கள் புகார் மனு அளித்தும் அதனை மத்திய அதிகாரிகள், அமைச்சர்கள் பிரித்து கூட பார்ப்பதில்லை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்.பிக்கள் வேலுச்சாமி, ஜோதிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு பின் ஜோதிமணி எம்.பி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    தமிழகத்திற்காக குரல் கொடுக்கும் எம்.பிக்களே பாராளுமன்றத்திற்கு தேவை. மத்திய அரசு என்ன தவறு செய்தாலும் அதனை நாங்கள் தட்டி கேட்டு வருகிறோம். அ.தி.மு.கவை போல அடிமை சாசனம் எழுதி தரவில்லை. மத்திய அரசின் 100 நாள் வேலைதிட்டத்தில் முறையாக நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால்தான் தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு 12 வாரம்வரை சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை புறக்கணித்ததைதவிர பா.ஜ.க வேறு ஒன்றும் செய்யவில்லை. சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதிஒதுக்கி தமிழை இருட்டடிப்பு செய்தனர். இதுகுறித்து தமிழக எம்.பிக்கள் புகார் அளித்து போராட்டம் நடத்தியும் எந்தவித பலனும் இல்லை.


    40 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஆட்சி செய்தது. அப்போது கூட தமிழகத்தில் கட்சி அலுவலகங்கள் குறைவாகவே இருந்தது. ஆனால் பா.ஜ.க மாவட்டம் தோறும் கட்சி அலுவலகங்களை திறந்து வைத்துள்ளனர். நாட்டு மக்களை பற்றி கவலைப்படாதவர் பிரதமர் மோடி. அவருக்கு அதானியை பற்றி குறைசொன்னால்மட்டுமே கோபம் வரும். ரெயில்வேயில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதுகுறித்து தமிழக எம்.பிக்கள் புகார் மனு அளித்தும் அதனை மத்திய அதிகாரிகள், அமைச்சர்கள் பிரித்து கூட பார்ப்பதில்லை.

    இதற்கு காரணம் ரெயில்வேயை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருவதுதான் காரணம். கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் உள்ள இந்துகோவில்கள் பற்றி பா.ஜ.க மத்திய அமைச்சர்கள் அக்கரையுடன் பேசி வருகின்றனர். இதற்கு காரணம் தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முயற்சி எடுத்து வருகின்றனர்.

    காங்கிரஸ் ஆட்சியில் சிறுகுறு வியாபாரிகளை பாதுகாக்க ஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மத்திய பா.ஜ.க அரசு வியாபாரிகளை அழிப்பதற்காக இதனை பயன்படுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கரூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான கோப்பில் இன்று வரை கவர்னர் கையெழுத்திடாததன் மர்மம் என்ன?
    • சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த பிறகு தற்போது 15.5.2023 அன்று கோப்பு வந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது விசாரணைக்கு அனுமதி கேட்டு தமிழக அரசு கவர்னருக்கு கோப்பு அனுப்பியிருந்தது.

    6 மாதமாக ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்குக்கு கவர்னர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் சி.விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது விசாரணைக்கு ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான கோப்பு பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    கரூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான கோப்பில் இன்று வரை கவர்னர் கையெழுத்திடாததன் மர்மம் என்ன? கவர்னர் மாளிகை 6.7.2023 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான கோப்பு எதுவும் வரவில்லை என்று கூறப்பட்டது.

    ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த பிறகு தற்போது 15.5.2023 அன்று கோப்பு வந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது கவர்னர் பொய் சொல்வது தெரிகிறது.

    இப்படி இருக்கும்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதன் மர்மம் என்ன? இதற்கு பின்னணியில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இருக்கிறாரா? என்ற சந்தேகம் இருக்கிறது.

    இந்த கேள்வியை நான் எழுப்பியதால் பா.ஜனதாவினர் தகராறு செய்தால் பரவாயில்லை. அ.தி.மு.க.வினர் ஏன் தகராறு செய்கிறார்கள்? அவர்களுக்கு ஏன் வலிக்கிறது?

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஜோதிமணி எம்.பி.யிடம் சரமாரி கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • போலீசார் ஜோதிமணியிடம் கேள்வி எழுப்பிய வாக்காளரை அழைத்து சென்றனர்.

    குளித்தலை:

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூக்கணாங்குறிச்சி கந்தசாரப்பட்டி பகுதியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வருகை தந்தார்.

    அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஆண் ஒருவர், ஜோதி மணியை பார்த்து தேர்தல் நேரம் வரும்போது மட்டுமே எங்களை உங்களுக்கு ஞாபகம் வருமா? வாக்கு கேட்க மட்டுமே வந்தீர்கள். அதன் பின்னர் இந்த பகுதியில் உங்களை பார்க்க முடியவில்லை. நன்றி கூற கூட நீங்கள் வரவில்லை என காட்டமாக கூறினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோதிமணி தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளேன். நீங்கள் வேண்டும் என்று என்னிடம் தகராறு செய்கிறீர்கள் என ஆவேசமாக பதிலளித்தார்.

    ஆனால் அந்த நபரோ எதையும் கண்டு கொள்ளாமல் போன் செய்தால் ஒரு முறையாவது எடுத்துப் பேசி உள்ளீர்களா? எம்.பி. என்கிற முறையில் நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. கிராம சபை கூட்டத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் அவரை சூழ்ந்தனர்.

    பின்னர் போலீசார் ஜோதிமணியிடம் கேள்வி எழுப்பிய வாக்காளரை அங்கிருந்து அழைத்து சென்றனர். தற்போது கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஜோதிமணி எம்.பி.யிடம் சரமாரி கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • விலைவாசி உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
    • இதனால் மக்களவை மதியம் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    மக்களவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் விலைவாசி உயர்வைக் கண்டித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், மதியம் 3 மணிக்கு மீண்டும் அவை கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

    இதனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 மக்களவை உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அறிவித்தார். மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் டி.என்.பிரதாபன் ஆகிய 4 பேரை அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடப்பு கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    • டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் மகளிர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
    • டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள், கைமாற்றப்பட்டதில் சட்ட விரோத பணிபரிமாற்றம் நடந்ததாக குற்றம் சட்டப் பட்டது. இது தொடர்பாக காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.

    இதில் விசாரணைக்கு ஆஜராக இருவருக்கும் அமலாக்கத் துறை சமீபத்தில் சம்மன் அனுப்பியது.

    இதையடுத்து நேற்று முன் தினம் ராகுல்காந்தி டெல்லி யில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 10 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று 2-வது நாளாக அவரிடம் 11 மணிநேரம் விசாரணை நடந்தது. இன்றும் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல்காந்தி யிடம் அதிகாரிகள் தெரிவித் தனர்.

    நேற்று விசாரணை முடிந்து இரவு 11.30 மணிக்கு அமலாக்கத்துறை அலுவல கத்தில் இருந்து வெளியே வந்த ராகுல்காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன், கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டுள்ள தாய் சோனியா காந்தியை சந்திக்க சென்றார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி கடந்த 12-ந்தேதி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று 3-வது நாளாக ராகுல்காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசா ரணைக்கு ஆஜரானார்.

    அவர் காலை 11.35 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தார். ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தி உடன் சென்றார். பின்னர் ராகுல்காந்தி மட்டும் அமலாக்கத்துறை அலுவல கத்துக்குள் சென்றார். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

    ராகுல்காந்தியிடம் விசா ரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். முதல்நாள் விசாரணைக்கு ஆஜராக சென்ற ராகுல்காந்தியுடன் மூத்த தலைவர்கள் ஊர்வலம் சென்றனர்.

    அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட் டனர். நேற்றும் அமலாக்கத் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

    3-வது நாளாக ராகுல்காந்தி விசாரணைக்கு ஆஜரான நிலையில் காங்கிரசார் இன்றும் போராட்டம் நடத்தினர்.ராகுல்காந்தியிடம் விசா ரணைக்கு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினர். அவர்களும், தொண்டர்களும் போலீ சாரின் தடுப்புகளை மீறி அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகை யிட சென்றனர்.

    உடனே போலீசார் மகளிரணியினர் காங்கிரஸ் தொண்டர்களை தடுத்தனர். இதனால் அங்கு தள்ளு-முள்ளு ஏற்பட்டது. சிலர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தை சேர்ந்த ஜோதிமணி எம்.பி. போலீசார் தடையை மீறி சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது அவர் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்.

    அதேபோல் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று அப்புறப்படுத்தினர். அவர்களை கைது செய்து பஸ்களில் ஏற்றி அழைத்து சென்றனர்.

    மேலும் அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரசார் போராட்டம் நடத்தினர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    காங்கிரசாரின் தொடர் போராட்டம் காரணமாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றி சி.ஆர். பி.எப். படையினர், கலவர தடுப்பு போலீசார், டெல்லி போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கரூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 4 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரையை வென்றுள்ளார்.
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதி யாரும் எதிர்பாராத வகையில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்தது. இதில் பலர் பெயர் அடிபட்டாலும் ஜோதிமணி பெயர் பலமாக உச்சரிக்கப்பட்டது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் உறுதியாக இருந்து அவருக்கு போட்டியிட வாய்ப்பளித்தார். அவரின் நம்பிக்கை வீணாகாமல் காங்கிரஸ் வெற்றிக் கொடியை நிலைநாட்டியுள்ளது.

    இந்த தொகுதியை பொறுத்தமட்டில் சுதந்திரத்திற்கு பின்னர் தொடர்ச்சியாக பல தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ச்சியாக வென்றது. கடைசியாக 1980-ல் காங்கிரஸ்-அ.தி.மு.க. இடையே நேரடி போட்டி நிலவியது. இதில் காங்கிரசை சேர்ந்த துரை செபாஸ்டியன் வெற்றி பெற்றார். அதன்பின்னர் 38 ஆண்டுகளாக காங்கிரசின் குரல் கரூரில் ஒலிக்கவில்லை. போட்டியிட்டாலும் வெற்றி கிடைக்கவில்லை.

    1980-களுக்கு பின்னர் நடந்த தேர்தல்களில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க-தி.மு.க. கட்சிகளுக்கு இடையே இருமுனைப் போட்டி இருந்தது. இதற்கிடையே 1996-ல் நடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி (மூப்பனார்) சார்பில் நாட்ராயன் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அ.தி.மு.க.வுக்கு 2-ம் இடம் கிடைத்தது.

    பின்னர் 1998-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மு.தம்பிதுரை வெற்றி பெற்றார். இதில் நாட்ராயனுக்கு 2-ம் இடம் கிடைத்தது. 2009-ல் நடந்த தேர்தலில் மு.தம்பிதுரை வென்றார். பின்னர் 2014- தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியதால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி வெறும் 30,459 வாக்குகள் பெற்று 4-ம் இடம் பிடித்தார். இதிலும் மு. தம்பிதுரை கரூர் தொகுதியில் மீண்டும் 2-வது முறையாக வென்றார்.

    இந்த நிலையில் தற்போது 39 ஆண்டுகளுக்கு பின்னர் கரூர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 4 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரையை வென்றுள்ளார்.

    இதன் மூலம் தம்பிதுரையின் ஹாட்ரிக் வெற்றிக்கு ஜோதிமணி முட்டுக்கட்டை போட்டுள்ளார். மேலும் கரூர் பாராளுமன்ற தொகுதி வரலாற்றில் முதல் பெண் எம்.பி. என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
    இறுதி கட்ட பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கரூர் தேர்தல் அலுவலகத்தில் ஜோதிமணி- செந்தில்பாலாஜி ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #senthilbalaji #jothimani

    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் நாளை 16-ந்தேதி நிறைவு பெறுகிறது. அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோதிமணி சார்பில் கரூர் பஸ் நிலையம் மனோகரா கார்னர் பகுதியில் இறுதிக்கட்ட பிர சாரம் செய்ய அனுமதி கேட்டு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது.

    ஆனால் அதிகாரிகள் தரப்பில் அ.தி.மு.க.வினர் முன்னதாகவே விண்ணப்பித்துள்ளதால், அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி, வேட்பாளர் ஜோதிமணி, விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி, நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் உள்பட ஏராளமான தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கரூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்த உதவி தேர்தல் அதிகாரி சரவண மூர்த்தியிடம் இறுதிக்கட்ட பிரசாரத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் அவர்கள் கூறும்போது, தேர்தல் விதிமுறைப்படி இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட நாங்கள் முறையான அனுமதி பெற்றுள்ளோம். ஆனால் அ.தி.மு.க.வுக்கு, நாங்கள் குறிப்பிட்ட மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே பிரசாரத்தை முடித்திட அனுமதி வழங்கியது முறை கேடானது என குற்றஞ்சாட்டினர். இதனால் அதிகாரிகளுக்கும், தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    உடனே அங்கு ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். கலவரத்தை அடக்க பயன்படுத்தப்படும் வஜ்ரா வாகனமும் வரவழைக்கப்பட்டது. அலுவலக வாயிற் கதவுகள் பூட்டப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனிடையே உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தை விட்டு வெளியே வராமல் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி, வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்ட தி.மு.க.வினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் தேர்தல் பொதுப்பார்வையாளர் பிரசாந்த் குமார், செலவின பார்வையாளர் மனோஜ்குமார் ஆகியோர் வந்து, இந்த பிரச்சினை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது அ.தி.மு.க.- காங்கிரஸ் வேட்பாளர்கள் சார்பில் இறுதி கட்ட பிரசாரத்திற்காக அளித்த தகவல் விவரங்கள், பிரசார அனுமதி வழங்கியதற்கான ஒப்புதல் விவரம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு விசாரித்தனர்.

    இதைத்தொடர்ந்து நாளை மாலை 4-6 மணியளவில் மனோகரா கார்னர் அருகே காங்கிரஸ் வேட்பாளருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க.வுக்கு முன்னதாக அதே இடத்தில் மதியம் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து 6 மணி நேரமாக நடந்த உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு, அதிகாரிகளிடம் இருந்து அதற்குரிய ஆணையை பெற்று கொண்டு ஜோதிமணி, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியே வந்தனர்.

    காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தெரிவிக்கையில், 16-ந்தேதிக்கான பிரசார இடங்களுக்கு அனுமதி பெற 11-ந்தேதி தான் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க. சார்பில் 10-ந்தேதியே விண்ணப்பித்திருக்கின்றனர். தேர்தல் பார்வையாளர் வந்து அ.தி.மு.க. சார்பில் நேரம் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததை கண்டு பிடித்தார் எனக்கூறினார்.

    செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறும்போது, நாளை (செவ்வாய்க்கிழமை) இறுதி கட்ட பிரசாரத்திற்காக 15 இடங்களை தேர்வு செய்து கொடுத்திருந்தோம். காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெறப்போகிறார். ஆகவே அவரது பிரசாரத்தை முடக்கும் நோக்கிலேயே இத்தகைய பித்தலாட்டத்தில் ஆளும்கட்சியினர் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு போலீஸ் அதிகாரி உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளும் துணை போயிருக்கின்றனர். இந்த விவகாரத்தை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம். தம்பிதுரையின் தோல்வி உறுதியாகிவிட்டது. அவர் டெபாசிட் இழப்பது உறுதி என்றார். #senthilbalaji #jothimani

    ×