என் மலர்
நீங்கள் தேடியது "jothimani"
- ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.
- அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது.
விஜய் நடிப்பில் நாளை வெளியாக இருந்த படம் 'ஜன நாயகன்'. படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் சான்றிதழ் வழங்குவதற்கு சென்சாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த கோர்ட் வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து ஜனநாயகன் படத்திற்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. ஜனநாயகன் பட விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல். நமது அரசியல் சார்பு, விருப்பு வெறுப்புகளைத் தாண்டி கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் இதைக் கண்டிக்க வேண்டும்
ஒரு திரைப்படம் என்பது பல கோடி ரூபாய் முதலீட்டில் நூற்றுக்கணக்கானவர்களின் கடின உழைப்பில் உருவாகிறது.
அதை இப்படி முடக்க நினைப்பது படைப்புச் சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது. அதுவும் அரசியல் காரணங்களுக்காக முடக்கப்படுவது இன்னும் ஆபத்தானது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது. இதை நாம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது
நான் தணிக்கை குழு உறுப்பினராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அதன் செயல்பாடுகளை நான் நன்கு அறிவேன். என்னளவில் இந்த தொழில்நுட்ப யுகத்தில் தணிக்கை வாரியம் என்பது காலாவதியாகிப் போன ஒரு அமைப்பு. ஒரு திரைப்படத்தை ஏற்பதும், மறுப்பதும் மக்கள் கையில் தான் இருக்கிறது.
ஒரு திரைப்படத்தை நாம் தணிக்கை செய்துகொண்டிருக்கிற அதே நேரத்தில், பல்லாயிரக்கணக்கான தணிக்கை செய்யப்படாத வீடியோக்கள், காட்சிகள் தொலைக்காட்சி, யுடியூப், சமூக வலைத்தளங்கள் மூலம் பரவிக்கொண்டிருக்கிறது. இதை பல கோடிப்பேர் பார்க்கின்றனர். இந்தச் சூழலில் திரைப்படத்தை மட்டும் தணிக்கை செய்வதால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே நிதர்சனம்.
பெண்களை ஆபாசமாகப் பேசுவது, சித்தரிப்பது, இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவது தணிக்கை விதிகளின் படி தவறானது. ஆனால் இவை இல்லாமல் வெளிவருகிற படங்கள் மிகவும் குறைவு. தணிக்கை வாரியம் இம்மாதிரியான விஷயங்களில் பெரும்பாலும் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை. சான்றிதழை மறுப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே தணிக்கை வாரியம் என்பது கலைக்கப்பட வேண்டியது. அதுவரை அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த 100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய அரசு பெயரை மாற்றியதோடு மட்டுமின்றி நிதியையும் குறைத்து விட்டது.
- இந்த திட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏராளமான குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி கிராமத்திற்கு கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வருகை தந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமங்கள் தோறும் பிரசாரம் செய்து வந்தார். கல்வார்பட்டியில் ஜோதிமணி எம்.பி. பேசிக் கொண்டிருந்தபோது எங்கள் கிராமத்திற்கு என்ன செய்தீர்கள் என கேட்டவாறு ஒரு வாலிபர் அவரிடம் வாக்குவாதம் செய்தார்.
இதனால் அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை விரட்டியடிக்க முயன்றனர். இருந்த போதும் அந்த வாலிபர் விடாமல் என்னை அடி.. என அவர்களிடம் தகராறு செய்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அந்த வாலிபரை அங்கிருந்து செல்லுமாறு கூறினர். அதன்பின் அந்த வாலிபர் தெருவில் சென்ற நாயை தூக்கி கொஞ்சினார். அதன் பிறகுதான் அவர் போதையில் இருந்தது தெரியவந்தது.
அதன்பின் பொதுமக்களிடம் பேசிய ஜோதிமணி எம்.பி., காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த 100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய அரசு பெயரை மாற்றியதோடு மட்டுமின்றி நிதியையும் குறைத்து விட்டது. இந்த திட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏராளமான குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர். ஆனால் மகாத்மா காந்தியின் பெயர் வைத்த காரணத்தினாலேயே மத்திய அரசு இத்திட்டத்தை முடக்கி உள்ளது என்றார்.
- எல்லோரையும் அரவணைத்து போவது தான் தலைமை பண்பு.
- எல்லோரையும் அரவணைத்து தான் போய்க் கொண்டிருக்கிறேன் என விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி:
கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகள், விமர்சனங்கள் சர்ச்சைகளாக மாறி வருவது இயல்பான ஒன்று. அந்த வகையில் நேற்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்துக்கள் உட்கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பதிவில், எந்த ஒரு அரசியல் கட்சியும் தனது கட்சியின் மக்களவை உறுப்பினரை தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையத்துக்கு வாக்குச்சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என நினைக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது. தமிழக காங்கிரசில் நடைபெறும் விஷயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.
தமிழக காங்கிரசில் தொடரும் உள்கட்சி பிரச்சனைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. ஒரு சிலரின் சுயநலத்துக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. ராகுல் காந்தியின் தன்னலமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் செல்கிறது என்பன உள்ளிட்ட மேலும் சில கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
இது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கொடுத்த பதிலடியில் ஜோதிமணி குறை சொல்லும் அளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை. எல்லோரையும் அரவணைத்து போவது தான் தலைமை பண்பு. எல்லோரையும் அரவணைத்து தான் போய்க் கொண்டிருக்கிறேன் என விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான திருச்சி வேலுச்சாமியிடம் கேட்டபோது, தமிழக காங்கிரஸ் தலைமை மீது ஜோதி மணி எம்.பி., கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட தலைவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கும் அவர் டெல்லி தலைமையின் விருப்பத்தை தனது வார்த்தைகளால் வெடித்துள்ளார் என்று கருதுகிறேன்.
டெல்லி தலைமைக்கு தெரியாமல் இதை செய்ததாக நான் நினைக்கவில்லை. தமிழக காங்கிரஸ் தலைமை மீது முன் எப்போதும் இது போன்ற விமர்சனங்களை அவர் வைத்ததில்லை என்றார். தமிழக காங்கிரஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள ஜோதிமணியை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது அனைத்து செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
- தமிழ்நாடு காங்கிரசில் எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சனைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.
- ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
எந்த ஒரு அரசியல் கட்சியும், தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினரை, தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச்சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது.
தமிழ்நாடு காங்கிரசில் நடைபெறும் விஷயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் மிகுந்த வேதனை அளிக்கிறது . தினமும் தமிழ்நாடு காங்கிரஸ், மக்கள் பிரச்சனைகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது.
தமிழ்நாடு எந்தக் காலத்திலும் இல்லாத, ஒரு பேராபத்தை, மதவாத, பிரிவினைவாத, வன்முறை சக்திகளிடமிருந்து எதிர்நோக்கி உள்ளது.
எதையாவது செய்து, மக்கள் உணர்வுகளைத் தூண்டி, ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து, பெருந்தலைவர் காமராசர், பெரியார் உள்ளிட்ட மாபெரும் தலைவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியல், வளர்ச்சியை குழிதோண்டிப் புதைக்க ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.
இந்தச் சூழலில், எதிர்நோக்கியுள்ள தேர்தலை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.
ஆனால் காங்கிரஸ் கட்சி அந்த மாபெரும் பொறுப்பை சரியாக உணர்ந்துள்ளதா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் தொடர்ந்து காங்கிரஸ் கொடியை, ஒவ்வொரு ஊரிலும் பெருமையோடு கையில் ஏந்தியிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளையும், மதவாத, பிரிவினைவாத சூழ்ச்சிக்கு அடிபணியாமல் சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமைகளுக்காகப் போராடுவதில் உறுதியோடு இருக்கும் நமது தமிழ்நாட்டு மக்களையும் நாம் கைவிட்டு விடக்கூடாது.
தமிழ்நாடு காங்கிரசில், எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சனைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல், மக்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல், வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு, ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது.
தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்பிற்கும், ஒப்பற்ற தியாகத்திற்கும் நாம் துரோகம் செய்ய முடியாது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம், மரியாதை என்பது பெருந்தலைவர் காமராசர் கட்டிக் காத்த பாரம்பரியத்திற்கும், நேரு காந்தி குடும்பத்தின் தியாகத்திற்குமான தமிழ்நாட்டு மக்களின், அன்பும், மரியாதையும் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கரூர் துயர சம்பவத்தின் போது மற்ற காங்கிரஸ் தலைவர்களை போலவே விஜய்யிடம் ராகுல் காந்தி பேசினார்.
- தற்போது நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் என்பது வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் கிடையாது. குடியுரிமை திருத்தம்.
கரூர்:
கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமூக வலைதளங்கள் காங்கிரஸ்- தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க உள்ளதாக ஆதாரமற்ற தகவல்களை வெளியிடுகின்றன.
ஆனால் காங்கிரசுக்கு விஜய் அறிமுகம் இல்லாதவர் அல்ல. காங்கிரஸில் சேருவது குறித்து விவாதிக்க 2010 ல் அவர் ராகுல் காந்தியை சந்தித்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அது நடக்கவில்லை.
கரூர் துயர சம்பவத்தின் போது மற்ற காங்கிரஸ் தலைவர்களை போலவே விஜய்யிடம் ராகுல் காந்தி பேசினார்.
சமூக ஊடகங்களில் நாம் பார்ப்பதை அடிப்படையாகக் கொண்டு கூட்டணிகளை முடிவுக்கு கொண்டு வர முடியாது. நாங்கள் ஏற்கனவே திமுக கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணி விஷயங்களை பற்றி விவாதிக்க இன்னும் நேரம் இருக்கிறது.
தற்போது நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் என்பது வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் கிடையாது. குடியுரிமை திருத்தம்.
பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யாமல் வாக்காளர் பட்டியல் திருத்தம் மட்டும் செய்கின்றனர். இதற்கு அஸ்ஸாமில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறுகின்றனர்.
இதுபோல எஸ்.ஐ.ஆர் வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பில் இல்லாத தமிழகம், கேரளாவில் எஸ்.ஐ.ஆர் செயல்படுத்துவதன் நோக்கம் என்ன? தேர்தல் ஆணையம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஒரு நிலைப்பாடும் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் வேறு ஒரு நிலைப்பாடும் என இரட்டை நிலைபாடுகளுடன் செயல்படுகிறது. பா.ஜ.க.வின் ஒரு அணி போல தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்றார்.
- பா.ஜ.க.வைப் போல மரண வீட்டிலும், பிணங்களின் மீதும் அரசியல் செய்ய நாங்கள் விரும்பவில்லை.
- அரசியல் செய்வதற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளது.
திண்டுக்கல்:
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் இந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கிய ஜோதி மணி எம்.பி. அதன் பின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எதிர்பாராதவிதமாக கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களை பாராட்டவில்லை என்றாலும் கூட வசை பாடாமல் இருப்பது நல்லது.
தற்போதைய சூழலில் சமூக வலைதளம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தனி ஊடகமாக செயல்பட்டு வருகிறது. எனவே அதனை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்த வேண்டும். நெருக்கடியான நேரத்தில் பணியாற்றியவர்கள் மீது அவதூறு பரப்ப பயன்படுத்த வேண்டாம்.
நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோவில் தனது தவறை உணர மறுத்துள்ளார். புதிய கட்சி என்பதால் அவர்களுக்கு ஒரு கூட்டத்தை நடத்த தெரியவில்லை. எனவே இக்கட்டான சூழ்நிலையில் தார்மீக பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரோடு நான் இருப்பேன் என்று விஜய் சொல்லி இருக்கலாம். ஏனென்றால் இது அரசியல் களம் கிடையாது. மரணம் நிகழ்ந்துள்ள துயர வீடு. அந்த இடத்தில் நான் எதையுமே ஏற்றுக்கொள்ள மாட்டேன் என அரசியல் செய்வது சரியானது அல்ல.
கடந்த ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அப்போது இதே அருணா ஜெகதீசன் தலைமையில்தான் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. பா.ஜ.க.வைப் போல மரண வீட்டிலும், பிணங்களின் மீதும் அரசியல் செய்ய நாங்கள் விரும்பவில்லை.
அரசியல் செய்வதற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளது. இதற்கு கரூர் மண்ணை பயன்படுத்த வேண்டாம். இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி கூறுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. தமிழக அரசு நியமித்துள்ள ஆணையக்குழு சரியாக முடிவை அறிவிக்கும் அதன் பின்பு நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே இந்த விஷயத்தில் சரியான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
மணிப்பூர் மாநிலம் 2 ஆண்டுகளாக பற்றி எரிந்தது. அங்கு பிரதமர் செல்லவில்லை. அந்த மாநிலத்தின் முதல்வர் செல்லவில்லை. ஆனால் ராகுல்காந்தி சென்றார். நாங்கள் நினைத்திருந்தால் அங்கே ஒரு நபர் ஆணைய குழுவை அமைத்திருக்கலாம். எதிர்க்கட்சியாக இருந்தும் நாங்கள் அதனை விரும்பவில்லை. ராகுல் காந்தி அங்கு சென்றது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லத்தான்.
விஜயுடன் ராகுல் காந்தி பேசியதை வைத்து அரசியல் முடிச்சு போட்டு பேசுகிறார்கள். ராகுல் காந்தி தென் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வந்த பிறகுதான் உண்மையிலேயே விஜயுடன் பேசினாரா? என்ற விபரம் வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
- வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தங்களது உரையை நிகழ்த்தி வருகின்றனர்.
வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களை கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந்தேதி தாக்கல் செய்தது. பின் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இன்று பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தங்களது உரையை நிகழ்த்தி வருகின்றனர்.
மக்களவையில் வக்ஃப் மசோதாவை எதிர்த்துப் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி.,"இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்களவையில் வக்ஃப் மசோதாவை கடுமையாக எதிர்த்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி," இஸ்லாமியர்களின் ஒற்றுமையை சிதைக்கும் முயற்சி இது. நீதித்துறையின் மீது நேரடித் தாக்குதல் இது.." என்று கூறினார்.
மக்களவையில் தனது எதிர்ப்பை பதிவு செய்த இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயன்," பாஜக ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இந்த வக்ஃப் மசோதாவை கொண்டு வருகிறது என்பது புரிகிறது. 2 காரணங்களுக்காக இந்த வக்ஃப் மசோதாவை நான் எதிர்க்கிறேன்" என்றார்.
- 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
- தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை எல்லார்க்கும் எல்லாம் என்று பட்ஜெட் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.
சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பட்ஜெட் லோகோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். ரூ என்ற எழுத்துடன் 2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை எல்லார்க்கும் எல்லாம் என்று பட்ஜெட் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறுகையில்," தமிழ்நாட்டிற்கு எதிரான பாஜகவின் ஒவ்வொரு தாக்குதலையும் எதிர்த்து நிற்கும் வலிமை எமக்கும், எமது தாய்மொழியாம் தமிழுக்கும் உண்டு" என்றார்.
- கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஜோதிமணி எம்.பி.யிடம் சரமாரி கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- போலீசார் ஜோதிமணியிடம் கேள்வி எழுப்பிய வாக்காளரை அழைத்து சென்றனர்.
குளித்தலை:
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூக்கணாங்குறிச்சி கந்தசாரப்பட்டி பகுதியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வருகை தந்தார்.
அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஆண் ஒருவர், ஜோதி மணியை பார்த்து தேர்தல் நேரம் வரும்போது மட்டுமே எங்களை உங்களுக்கு ஞாபகம் வருமா? வாக்கு கேட்க மட்டுமே வந்தீர்கள். அதன் பின்னர் இந்த பகுதியில் உங்களை பார்க்க முடியவில்லை. நன்றி கூற கூட நீங்கள் வரவில்லை என காட்டமாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோதிமணி தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளேன். நீங்கள் வேண்டும் என்று என்னிடம் தகராறு செய்கிறீர்கள் என ஆவேசமாக பதிலளித்தார்.
ஆனால் அந்த நபரோ எதையும் கண்டு கொள்ளாமல் போன் செய்தால் ஒரு முறையாவது எடுத்துப் பேசி உள்ளீர்களா? எம்.பி. என்கிற முறையில் நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. கிராம சபை கூட்டத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் அவரை சூழ்ந்தனர்.
பின்னர் போலீசார் ஜோதிமணியிடம் கேள்வி எழுப்பிய வாக்காளரை அங்கிருந்து அழைத்து சென்றனர். தற்போது கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஜோதிமணி எம்.பி.யிடம் சரமாரி கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- கரூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான கோப்பில் இன்று வரை கவர்னர் கையெழுத்திடாததன் மர்மம் என்ன?
- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த பிறகு தற்போது 15.5.2023 அன்று கோப்பு வந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது விசாரணைக்கு அனுமதி கேட்டு தமிழக அரசு கவர்னருக்கு கோப்பு அனுப்பியிருந்தது.
6 மாதமாக ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்குக்கு கவர்னர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் சி.விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது விசாரணைக்கு ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான கோப்பு பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
கரூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான கோப்பில் இன்று வரை கவர்னர் கையெழுத்திடாததன் மர்மம் என்ன? கவர்னர் மாளிகை 6.7.2023 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான கோப்பு எதுவும் வரவில்லை என்று கூறப்பட்டது.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த பிறகு தற்போது 15.5.2023 அன்று கோப்பு வந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது கவர்னர் பொய் சொல்வது தெரிகிறது.
இப்படி இருக்கும்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதன் மர்மம் என்ன? இதற்கு பின்னணியில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இருக்கிறாரா? என்ற சந்தேகம் இருக்கிறது.
இந்த கேள்வியை நான் எழுப்பியதால் பா.ஜனதாவினர் தகராறு செய்தால் பரவாயில்லை. அ.தி.மு.க.வினர் ஏன் தகராறு செய்கிறார்கள்? அவர்களுக்கு ஏன் வலிக்கிறது?
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மத்திய அரசு என்ன தவறு செய்தாலும் அதனை நாங்கள் தட்டி கேட்டு வருகிறோம்.
- தமிழக எம்.பிக்கள் புகார் மனு அளித்தும் அதனை மத்திய அதிகாரிகள், அமைச்சர்கள் பிரித்து கூட பார்ப்பதில்லை.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்.பிக்கள் வேலுச்சாமி, ஜோதிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் ஜோதிமணி எம்.பி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
தமிழகத்திற்காக குரல் கொடுக்கும் எம்.பிக்களே பாராளுமன்றத்திற்கு தேவை. மத்திய அரசு என்ன தவறு செய்தாலும் அதனை நாங்கள் தட்டி கேட்டு வருகிறோம். அ.தி.மு.கவை போல அடிமை சாசனம் எழுதி தரவில்லை. மத்திய அரசின் 100 நாள் வேலைதிட்டத்தில் முறையாக நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால்தான் தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு 12 வாரம்வரை சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை புறக்கணித்ததைதவிர பா.ஜ.க வேறு ஒன்றும் செய்யவில்லை. சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதிஒதுக்கி தமிழை இருட்டடிப்பு செய்தனர். இதுகுறித்து தமிழக எம்.பிக்கள் புகார் அளித்து போராட்டம் நடத்தியும் எந்தவித பலனும் இல்லை.

40 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஆட்சி செய்தது. அப்போது கூட தமிழகத்தில் கட்சி அலுவலகங்கள் குறைவாகவே இருந்தது. ஆனால் பா.ஜ.க மாவட்டம் தோறும் கட்சி அலுவலகங்களை திறந்து வைத்துள்ளனர். நாட்டு மக்களை பற்றி கவலைப்படாதவர் பிரதமர் மோடி. அவருக்கு அதானியை பற்றி குறைசொன்னால்மட்டுமே கோபம் வரும். ரெயில்வேயில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதுகுறித்து தமிழக எம்.பிக்கள் புகார் மனு அளித்தும் அதனை மத்திய அதிகாரிகள், அமைச்சர்கள் பிரித்து கூட பார்ப்பதில்லை.
இதற்கு காரணம் ரெயில்வேயை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருவதுதான் காரணம். கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் உள்ள இந்துகோவில்கள் பற்றி பா.ஜ.க மத்திய அமைச்சர்கள் அக்கரையுடன் பேசி வருகின்றனர். இதற்கு காரணம் தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முயற்சி எடுத்து வருகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சியில் சிறுகுறு வியாபாரிகளை பாதுகாக்க ஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மத்திய பா.ஜ.க அரசு வியாபாரிகளை அழிப்பதற்காக இதனை பயன்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- விலைவாசி உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
- இதனால் மக்களவை மதியம் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:
மக்களவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் விலைவாசி உயர்வைக் கண்டித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மதியம் 3 மணிக்கு மீண்டும் அவை கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 மக்களவை உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அறிவித்தார். மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் டி.என்.பிரதாபன் ஆகிய 4 பேரை அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடப்பு கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.






