search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Congress"

    • திருநாவுக்கரசர் எம்.பி. தனக்கு ஏதாவது ஒரு தொகுதியில் வாய்ப்பு கொடுங்கள் என்று தீவிரமாக போராடி கொண்டிருக்கிறார்.
    • முக்கியமாக ‘சீட்’ கேட்கும் எல்லோருமே டெல்லியிலேயே முகாமிட்டு அவரவர்களுக்கு நெருக்கமான தலைவர்கள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால் 90-க்கும் மேற்பட்ட தலைவர்கள் மோதுவதால் யாருக்கு எந்த தொகுதியை கொடுப்பது என்று முடிவு செய்ய முடியாமல் டெல்லியில் அகில இந்திய தலைவர்களும் தலையை பிய்த்து கொண்டிருக்கிறார்கள்.

    கடந்த 3 நாட்களாக தொடரும் ஆலோசனையில் 4 தொகுதிகளின் வேட்பாளர்களை மட்டும் முடிவு செய்துள்ளார்கள். இதனால் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது.

    திருநெல்வேலி தொகுதியை திருநாவுக்கரசர், ராம சுப்பு, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கேட்டு மல்லுக்கட்டுகிறார்கள். இதற்கிடையில் பக்கத்து தொகுதியான கன்னியாகுமரியில் தற்போது விஜய் வசந்த் எம்.பி.யாக இருக்கிறார். அவர் இந்து நாடார் சமூகத்தை சேர்ந்தவர்.

    ஆனால் இந்த முறை கிறிஸ்தவ நாடாருக்கு வழங்க வேண்டும் என்று கடுமையாக போராடுகிறார்கள். அதை சமாளிக்க விஜய் வசந்தை நெல்லைக்கு போகும்படி கேட்டுள்ளார்கள். அதை அவர் ஏற்கவில்லை.

    எனவே நெல்லையில் கிறிஸ்தவ நாடாரை வேட்பாளராக போடலாமா? என்று ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு ஆகியோரும் அழுத்தம் கொடுக்கிறார்களே என்ன செய்வது என்றும் யோசிக்கிறார்கள்.

    புதிதாக வழங்கப்பட்ட தொகுதி மயிலாடுதுறை. இந்த தொகுதியில் போட்டியிட டெல்லியில் நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி கேட்கிறார். அதேநேரம் ஆரணி தொகுதி பறிபோனதால் மயிலாடுதுறையில் வாய்ப்பு தாருங்கள் என்று விஷ்ணுபிரசாத் மல்லு கட்டுகிறார்.

    கடலூர் தொகுதியை முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநில துணை தலைவர் நாசே ராமச்சந்திரன் ஆகியோர் விடாப்பிடியாக கேட்கிறார்கள்.

    கிருஷ்ணகிரி தொகுதியை முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, தற்போதைய எம்.பி. டாக்டர் செல்லக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கோபிநாத் ஆகியோர் கேட்டு மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்கள்.

    ஒரே ஒரு தனித்தொகுதி திருவள்ளூர். எனவே ஒட்டு மொத்த தலித் தலைவர்களும் அந்த தொகுதியை கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். முன்னாள் எம்.பி.யும், அகில இந்திய செயலாளருமான பி.விசுவநாதன், சசிகாந்த் செந்தில், தற்போதைய எம்.பி. ஜெயக்குமார், எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் ஆகியோர் தீவிரமாக இருக்கிறார்கள்.

    இதற்கிடையில் திருநாவுக்கரசர் எம்.பி. தனக்கு ஏதாவது ஒரு தொகுதியில் வாய்ப்பு கொடுங்கள் என்று தீவிரமாக போராடி கொண்டிருக்கிறார்.

    முக்கியமாக 'சீட்' கேட்கும் எல்லோருமே டெல்லியிலேயே முகாமிட்டு அவரவர்களுக்கு நெருக்கமான தலைவர்கள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். எனவேதான் பட்டியல் உறுதியாவது தாமதமாகி வருகிறது. இன்று மாலைக்குள் வெளியாகிவிடும் என்று நம்பிக்கையுடன் கூறினார்கள்.

    • விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • விஜய்யின் கருத்து இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதையடுத்து, விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கே.எஸ்.அழகிரி மேலும் கூறியிருப்பதாவது:-

    மக்களை பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிராகவும் மக்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சக்திகளுக்கு எதிராகவும் விஜய் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி.

    "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என அவர் வலியுறுத்தியிருப்பது, இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மகளிர் உரிமை மாநாடு பெரியார், அண்ணா காலத்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.
    • பா.ஜ.க.விலிருந்து அ.தி.மு.க. பிரிந்துள்ளதால் சிறுபான்மையினர் வாக்குகள் சிறிது அக்கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

    புதுக்கோட்டை:

    திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் ஏற்பாட்டின் பேரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை திருநாவுக்கரசர் எம்.பி. வழங்கினார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் மற்றும் பெரிய கட்சி தி.மு.க. தான், தி.மு.க.வை வளர்க்க காங்கிரஸ் பாடுபடுகிறது என்று அண்ணாமலை கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு.

    மகளிர் உரிமை மாநாடு பெரியார், அண்ணா காலத்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இன்று நாட்டில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த மாநாடு நடைபெறுகிறது.

    கட்சி தலைவர் பதவிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் மாற்றப்படுவது எல்லா அகில இந்திய கட்சியிலும் உள்ள நடைமுறை. அதே போல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் பதவியும் மாற்றப்படாலாம்.

    அடுத்ததாக யாருக்கு வேண்டுமானாலும் அந்த பதவி வழங்கப்படலாம், அப்படி எனக்கு அந்த பதவியை கொடுத்தாலும் வேண்டாம் என்றா சொல்வேன், அதே வேளையில் இளைஞர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கலாம்.

    நான் மீண்டும் திருச்சி தொகுதி பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட விரும்புகிறேன். அதற்கான முடிவை கட்சியின் தலைமை தான் எடுக்கும். அதற்கான வாய்ப்பை தி.மு.க. வழங்கும் என நம்புகிறேன்.

    நான் இங்கு இருந்து இருந்தால் புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை பறிபோனதை தடுத்து இருப்பேன்.

    பா.ஜ.க.விலிருந்து அ.தி.மு.க. பிரிந்துள்ளதால் சிறுபான்மையினர் வாக்குகள் சிறிது அக்கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

    5 மாநில தேர்தல் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்ட தேர்தல் தான். காங்கிரஸ் அதிக மாநிலங்களில் இந்த தேர்தலில் வெற்றி அடையும் என்று அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முருகேசன், முன்னாள் எம்எல்ஏ சுப்புராம், துரை.திவியநாதன், திருச்சி ரெக்ஸ், வழக்கறிஞர் சந்திரசேகரன், சூர்யா பழனியப்பன், துரைசிங்கம், மதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி கடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றது.
    • கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 9 தொகுதிகளையும் இந்த தேர்தலிலும் தி.மு.க.விடம் கேட்டுப்பெற வேண்டும் என்று வற்புறுத்த திட்டமிட்டு உள்ளார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி டெல்லி காங்கிரஸ் தலைமை அனைத்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறது.

    தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை நாளை (4-ந்தேதி) டெல்லிக்கு அழைத்து இருந்தனர். அதன்படி காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று டெல்லி செல்கிறார்கள்.

    நாளை மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வ பெருந்தகை, 8 எம்.பி.க்கள், முன்னாள் மாநில தலைவர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    கூட்டத்தில் அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்துதல், கூட்டணி விவகாரம், தேர்தலை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்படுகிறது.

    தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி கடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. அதே போல் இந்த தேர்தலில் வெற்றி பெறவும், வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக உழைக்க டெல்லி மேலிடம் அறிவுரைகள் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 9 தொகுதிகளையும் இந்த தேர்தலிலும் தி.மு.க.விடம் கேட்டுப்பெற வேண்டும் என்று வற்புறுத்த திட்டமிட்டு உள்ளார்கள். இதற்கிடையில் ஒன்றிரண்டு முறை எம்.பி.யாக இருப்பவர்களுக்கு பதில் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ராகுல் விரும்புவதாக கூறப்படுகிறது.

    எனவே நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அதுபற்றியும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எல்லா தொகுதிகளிலும் தகுதியான வேட்பாளர்களின் பட்டியலை தயாரிக்கும்படி கேட்டுக்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • மாநில தலைவரை நியமிக்கும் அதிகாரம் மற்றும் அகில இந்திய தலைமையை தேர்வு செய்யும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
    • கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் வாக்களிக்க தகுதியான பொதுக்குழு உறுப்பினர்களை வைத்து ஒவ்வொரு மாநிலத்திலும் வருகிற 20-ந் தேதிக்குள் பொதுக்குழு கூட்டம் நடத்தி தீர்மானத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இதையடுத்து தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் நாளை வேப்பேரியில் உள்ள ஓம்.எம்.இ.ஏ. மண்டபத்தில் காலை 11.30 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.

    தமிழகத்தில் 680 பொதுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஒவ்வொரு பொதுக்குழு உறுப்பினருக்கும் செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்குகிறார்.

    மாநில தலைவரை நியமிக்கும் அதிகாரம் மற்றும் அகில இந்திய தலைமையை தேர்வு செய்யும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

    இந்த கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

    • தமிழக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம்.
    • ஆகஸ்ட் 9 முதல் 14 வரை 75 கி.மீ. தூர பாத யாத்திரையை மேற்கொள்ள முடிவு.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவுகூறுகிற வகையில் ஆகஸ்ட் 9 முதல் 14 ஆம் தேதி வரை 75 கி.மீ. தூர பாத யாத்திரையை மேற்கொள்ளவது என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    அத்தியாவசியப் பொருள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எடுத்து கூறுவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் முயற்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதை கண்டித்து, ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் மாபெரும் மறியல் போராட்டத்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது.

    அதன் அடிப்படையில், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் முற்றுகை போராட்டத்தை தமிழக காங்கிரஸ் சார்பில் நடத்த இந்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களை மீறுகின்ற வகையிலும், தமிழக அரசின் கொள்கைகளுக்கு விரோதமாக கருத்துகளை கூறி, பா.ஜ.க.வின் ஊதுகுழலாக அவர் செயல்பட்டு வருகிறார் என்றும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிற தமிழக ஆளுநரின் இத்தகைய போக்கை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் எம்பி உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு ராகுல் காந்தி முடிவு எடுத்துள்ளார். அவரது முடிவை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது. எனினும் ராகுல்காந்தி தனது முடிவில் பிடிவாதமாக இருக்கிறார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது, தொடர்ந்து அவர் அப்பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை தேனாம்பேட்டை ஏ.ஜி.-டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து காமராஜர் அரங்கம் வரையில் நேற்று பேரணி நடைபெற்றது. பேரணியில் திருநாவுக்கரசர் எம்பி, எச்.வசந்தகுமார் எம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், அனுமதியின்றி பேரணி நடத்தியதாக கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், வசந்தகுமார் உள்ளிட்ட 500 பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மதிக்காதது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. #TNElections2019 #TNCongress #EVMMalfunctions
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஆனால் பல்வேறு பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. சில வாக்குச்சாவடிகளில் மணிக்கணக்கில் தாமதம் ஆனதால், வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் திரும்பிச் சென்றனர். பழுதடைந்த பகுதிகளில் 384 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 692 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் (விவிபேட்) மாற்றப்பட்டுள்ளன. 

    இந்நிலையில், மேலும் பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்திருப்பதாகவும், அந்த இயந்திரங்களை மாற்ற வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இயந்திரங்கள் பழுதான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் தாமோதரன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். #TNElections2019 #TNCongress #EVMMalfunctions
    பாராளுமன்ற தேர்தலையொட்டி பாரதிய ஜனதா தவறுகளை விளக்கி தமிழக காங்கிரஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசார கையேடு நாளை வெளியிடப்படுகிறது. #LSPolls #Congress #BJP
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

    அலங்கோல ஆட்சிகளை அகற்றுவோம் என்ற தலைப்பில் 80 பக்கங்கள் கொண்டதாக இந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    15 தலைப்புகளின் கீழ் பா.ஜனதா, அ.தி.மு.க. அரசின் தவறுகள் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

    குறிப்பாக ரபேல் போர் விமான விவகாரம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் மக்கள் அனுபவித்த கஷ்டங்கள் ஆகியவற்றை விளக்கமாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசின் தலையீடு, மோடியின் தேவையற்ற செலவுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர்.

    அதே போல் மாநில அ.தி.மு.க. அரசில் நடந்துள்ள முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை விளக்கி உள்ளனர்.

    இந்த பிரசார கையேட்டை நாளை (வெள்ளி) தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிடுகிறார். காங்கிரஸ் விளம்பர குழு தலைவர் தங்கபாலு, சஞ்சய்தத், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், கம்யூனிஸ்டு சார்பில் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    அதைத் தொடர்ந்து 40 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், பேச்சாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.

    தேர்தல் பிரசாரத்தில் மத்திய - மாநில அரசுகளை தோலுரிக்க இந்த கையேடு உதவும் என்று காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா தெரிவித்தார். #LSPolls #Congress #BJP
    தமிழக காங்கிரஸ், பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #LSPolls #Congress #BJP
    சென்னை:

    தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் கிடைத்துள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். இதுபோல் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியலும் இன்னும் வெளியிடப்படவில்லை.

    தமிழக காங்கிரஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லி சென்று கட்சி மேலிடத்தில் ஒப்படைத்தார். இதுபோல் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழ்நாட்டில் போட்டியிட வாய்ப்புள்ளவர்கள் பட்டியலை கட்சி மேலிடத்தில் கொடுத்து இருக்கிறார்.

    காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை மத்திய காங்கிரஸ் செயற்குழு நேற்று பரிசீலனை செய்தது. இதில் தமிழ்நாடு உள்பட வேறு சில மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் இறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதி பட்டியல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒப்புதலுக்காக அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் பா.ஜனதா சார்பில் தமிழகத்தில் போட்டியிடுவோரின் இறுதி பட்டியலும் தயாராகிவிட்டது. இது கட்சி மேலிட பரிசீலனையில் உள்ளது.

    தமிழக காங்கிரஸ், பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிறது. மாலைக்குள் இந்த பெயர் விபரங்கள் அறிவிக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தமிழகம்-புதுச்சேரியில் காங்கிரஸ் திருவள்ளூர், ஆரணி, தேனி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, கரூர், திருச்சி, விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் நிற்கிறது. இதற்கு சீட் வாங்க கடும் போட்டி நிலவுகிறது. பா.ஜனதா கன்னியாகுமரி, கோவை, சிவகங்கை, ராம நாதபுரம், தூத்துக்குடி ஆகிய 5 தொகுதிகளில் களம் இறங்குகிறது. இதற்கும் பல வேட்பாளர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. எனவே இரண்டு கட்சிகளிலும் வேட்பாளர்கள் யார் என்பதை அறிய கட்சி தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.



    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில், ‘‘இன்று மதியம் பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘‘காங்கிரஸ் பட்டியலில் பெண் பெயரும் இடம் பெறும்’’ என்று கூறியுள்ளார். எனவே குஷ்பு போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. #LSPolls #Congress #BJP

    தமிழக பாராளுமன்ற தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது பற்றி தொண்டர்களிடம் நேரடியாக கருத்து கேட்க ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். #LSPolls #Congress #RahulGandhi #ShaktiApp
    சென்னை:

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    இந்த தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது பற்றி தொண்டர்களிடம் நேரடியாக கருத்து கேட்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார்.

    இதற்கு அவர் காங்கிரசின் சக்தி திட்டத்தின் மூலம் நவீன முறையில் ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி குரலில் உங்கள் தொகுதியில் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று கேட்பது போன்ற குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த குரல் பதிவு சக்தி திட்டத்தில் இணைந்துள்ள அனைவரது போன்களுக்கும் அனுப்பப்படுகிறது. அதைக் கேட்டு உங்கள் தொகுதியில் இவரை வேட்பாளராக போடுங்கள் என்று தொண்டர்கள் பதிவு செய்யும் வேட்பாளர் பெயர் டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் நேரடியாக பதிவாகிறது.

    அந்த பட்டியலை தமிழக காங்கிரஸ் ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பும் பட்டியலுடன் ஒப்பீடு செய்து பார்க்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் தகுதியான வேட்பாளரை ராகுல் முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது.



    தற்போது சக்தி திட்டத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் இணைந்துள்ள தொண்டர்கள் எண்ணிக்கை வருமாறு:-

    திருவள்ளூர் பத்தாயிரத்து 64, கன்னியாகுமரி 38 ஆயிரத்து 298, ஆரணி 11 ஆயிரத்து 451, சிவகங்கை ஒன்பதாயிரத்து 979, கிருஷ்ணகிரி 5 ஆயிரத்து 564, தேனி 5 ஆயிரத்து 225, கரூர் நாலாயிரத்து 820, விருதுநகர் மூவாயிரத்து 603, திருச்சி 9 ஆயிரத்து தொள்ளாயிரத்து 53.

    இவர்கள் அனைவரிடமும் போன் மூலம் கருத்து கேட்கப்படுகிறது. முதல் முறையாக இந்த புதிய முயற்சியை காங்கிரஸ் மேற்கொண்டிருக்கிறது. #LSPolls #Congress #RahulGandhi #ShaktiApp
    தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு நாளை முதல் 2 நாட்களுக்கு விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ParliamentElection #TamilNaduCongress
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 18-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன.

    திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன.



    இந்நிலையில், காங்கிரஸ் அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் நாளை தொடங்க உள்ளது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர், கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ParliamentElection #TamilNaduCongress
    ×