search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MR Vijayabhaskar"

    • கரூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான கோப்பில் இன்று வரை கவர்னர் கையெழுத்திடாததன் மர்மம் என்ன?
    • சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த பிறகு தற்போது 15.5.2023 அன்று கோப்பு வந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது விசாரணைக்கு அனுமதி கேட்டு தமிழக அரசு கவர்னருக்கு கோப்பு அனுப்பியிருந்தது.

    6 மாதமாக ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்குக்கு கவர்னர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் சி.விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது விசாரணைக்கு ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான கோப்பு பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    கரூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான கோப்பில் இன்று வரை கவர்னர் கையெழுத்திடாததன் மர்மம் என்ன? கவர்னர் மாளிகை 6.7.2023 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான கோப்பு எதுவும் வரவில்லை என்று கூறப்பட்டது.

    ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த பிறகு தற்போது 15.5.2023 அன்று கோப்பு வந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது கவர்னர் பொய் சொல்வது தெரிகிறது.

    இப்படி இருக்கும்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதன் மர்மம் என்ன? இதற்கு பின்னணியில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இருக்கிறாரா? என்ற சந்தேகம் இருக்கிறது.

    இந்த கேள்வியை நான் எழுப்பியதால் பா.ஜனதாவினர் தகராறு செய்தால் பரவாயில்லை. அ.தி.மு.க.வினர் ஏன் தகராறு செய்கிறார்கள்? அவர்களுக்கு ஏன் வலிக்கிறது?

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    கரூர் அருகே பல்நோக்கு மைய கட்டிடத்தில் ரேசன்கடை மற்றும் ஆவின் பால் நிலையத்தை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், பரமத்தி வட்டம், பவித்திரம் ஊராட்சி, பள்ளமருதப்பட்டி பகுதியில் பல்நோக்கு மைய கட்டடத்தில் பகுதிநேர நியாய விலைக்கடை மற்றும் ஆவின் பால் நிலையம் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் த. அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் அதனை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. கரூர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் 583 நியாய விலைக் கடைகள் வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் 20 கிலோ விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. சிறு கனிம வள நிதி திட்டத்தின் கீழ் ரூ.7.80 லட்சம் மதிப்பில் இப்பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதில் பகுதி நேர நியாய விலைக்கடை மற்றும் ஆவின் நிலையம் இன்று பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த பகுதி நேர நியாயவிலைக்கடை தனியார் கட்டடத்தில் இயங்கி வந்தது. இங்கு 341 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, மாவட்ட வழங்கல் அலுவ லர் மல்லிகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சீனிவாசன், தாசில்தார் பிரபு (அரவக்குறிச்சி), வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிக்குமார், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஏ.ஆர். காளியப்பன், மார்க்கண்டேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    டெங்கு,பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க மருத்துவமனைகள், தங்கும் விடுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவுறுத்தினார்.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தனியார் மருத்துவமனைகள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    கரூர் மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. சளி, இருமல், தும்மல், தலைவலி, தொண்டைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூச்சுத்திணறல் போன்றவை பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் உள்நோயாளிகள் அறையை ஒரு நாளைக்கு 2 முதல் 4 முறை சுத்தம் செய்ய வேண்டும். மெத்தை விரிப்புகள், தலையணை உறைகளை லைசால் கொண்டு ½ மணி நேரம் ஊற வைத்து துவைத்து வெயிலில் உலர்த்தி பயன் படுத்த வேண்டும்.

    திருமண மண்டபம், திரையரங்குகள், சமுதாய கூடம்,வணிக வளாகங்கள், தங்கும்விடுதிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் தங்களது நிறுவனங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தனியார் பஸ்களையும் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். கரூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதன்பேரில் அவர்கள் நலம் பெற்று வீடு திரும்பினர்.

    எனவே, பொதுமக்கள் பன்றிக்காய்ச்சல் குறித்து பீதி அடைய வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறிளார்.

    கூட்டத்தில், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, மருத்துவப்பணிகளின் இணை இயக்குனர் விஜயகுமார், சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் நிர்மல்சன், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் நெடுஞ்செழியன், கமலக்கண்ணன், ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×