search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "terror attack"

    • பயங்கரவாதிகள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை போஸ்ட் மீது மோதினர்.
    • நடவடிக்கையின் போது, ஆறு பயங்கரவாதிகளையும் சுட்டு கொன்றனர்.

    ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள வடக்கு வஜிரிஸ்தானின் பழங்குடியினர் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் இன்று 6 பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தியதில் இரண்டு அதிகாரிகள் உட்பட குறைந்தது ஏழு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில், ஒரு லெப்டினன்ட் கர்னல் மற்றும் ஒரு கேப்டன் உள்பட ஐந்து வீரர்களுடன் கொல்லப்பட்டனர். மிர் அலி பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் தாக்குதல் நடத்திய 6 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இதுகுறித்து ஐஎஸ்பிஆர் அறிக்கையின்படி," பயங்கரவாதிகள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை போஸ்ட் மீது மோதியதாகவும், அதைத் தொடர்ந்து பல தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடந்தன.

    அதைத் தொடர்ந்து நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையின்போது ஆறு பயங்கரவாதிகளையும் சுட்டு கொல்லப்பட்டனர்".

    பயங்கரவாத தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல் சையத் காஷிப் அலி மற்றும் கேப்டன் முகமது அகமது பதார் ஆகியோர் கொல்லப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
    • காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கண்டி வனப்பகுதியில் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.

    அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அந்த பகுதியை போலீசார், ராணுவத்தினர் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொண்ட கூட்டுக் குழுவினர் சுற்றி வளைத்தனர். பின்னர் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இதனால் ராணுவ வீரர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு அதிகாரி உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் மூன்று வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    துப்பாக்கி சண்டை நடைபெறும் பகுதிக்கு கூடுதல் படையினர் விரைந்தனர். அப்பகுதியில் பயங்கரவாதிகள் இன்னும் பதுங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, தேடுதல் வேட்டை தொடர்கிறது.

    பயங்கரவாதிகளால் அதிக அளவில் இந்தியாதான் தாக்கப்படுகிறது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை வேதனை தெரிவித்துள்ளார். #ThambiDurai
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    கரடிப்பட்டி பகுதியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும் என்பதில் அனைத்து நாடுகளும் ஒருமித்த கருத்தோடு இருக்கிறது. பயங்கரவாதிகளால் அதிக அளவில் இந்தியாதான் தாக்கப்படுகிறது.



    மோடி அரசு தைரியமாக ராணுவத்திற்கு முழு அதிகாரத்தையும் கொடுத்து, அவர்களின் திறமையை பாராட்டி அவர்களுக்கு கொடுத்த உற்சாகத்தின் காரணமாக பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டிருக்கிறது.

    இது நம் நாட்டின் நலனுக்காக செய்யப்பட்ட ஒன்று. இதில் ராணுவத்தின் வலிமையும் காட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியா ஒரு வலிமையான நாடு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

    சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் எல்லாம் இனி இந்தியாவை எப்போதும் தாக்கலாம் என்ற எண்ணம் இருந்தால், இனிமேல் அதையெல்லாம் நினைத்து பார்க்க முடியாத அளவில் ராணுவம் வலிமை வாய்ந்ததாக இந்தியாவில் இருக்கிறது. அதற்கான முழு பெருமையும் மோடியையே சாரும்.

    இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு எப்போதும் பதற்றமாகவே இருப்பதால் பிரதமர் மோடி பல்வேறு நாடுகளுக்கும் சென்று அவர்களின் ஆதரவை பெற்று ராணுவத்தையும் வலிமைப்படுத்தி எந்த நாடும் தாக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளார்.

    எப்போது போர் மூண்டாலும் இந்தியாவை நோக்கி படையெடுப்பதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது. நம்முடைய ராணுவம் வலிமையாக உள்ளது. யாரும் ஊடுருவ முடியாது. போர் வந்தால் சந்திக்கின்ற தெம்பும் திராணியும் ராணுவத்திற்கு உள்ளது. அதற்காக நாம் பயப்பட வேண்டியதில்லை. ஆகவேதான் மோடி கன்னியாகுமரி உள்ளிட்ட எங்கு வேண்டும் செல்லலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ThambiDurai
    சத்தீஸ்கரைச் சேர்ந்த சாலையோர உணவக உரிமையாளர், பாகிஸ்தான் எதிர்ப்பை மக்களிடம் வித்தியாசமான முறையில் பதிய வைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். #PulwamaAttack #PakistanMurdabad
    ஜக்தல்பூர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். போராட்டம், கடையடைப்பு என தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.




    இந்நிலையில், சத்தீஸ்கர்  மாநிலம் ஜக்தல்பூரில் உள்ள சிறு உணவக உரிமையாளர், பாகிஸ்தான் எதிர்ப்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி உள்ளார். தள்ளுவண்டியில் வைத்து சிக்கன் வறுவல் வியாபாரம் செய்து வரும் அவர், ‘பாகிஸ்தான் ஒழிக’ என கூறும் வாடிக்கையாளர்களுக்கு சிக்கன் லெக் பீசில் 10 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என கூறியுள்ளார்.

    இதுபற்றி அவர் கூறும்போது, “மனிதநேயத்தை பாகிஸ்தான் ஒருபோதும் மதிப்பதில்லை. மதிக்க விரும்புவதும் இல்லை. அதனால்தான், பாகிஸ்தான் ஒழிக என அனைவரும் சொல்ல வேண்டும் என்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளேன்’ என்றார். #PulwamaAttack #PakistanMurdabad
    பலுகிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர்.
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.

    ‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்பதற்கு இணங்க இச்சம்பவம் நடந்த 3 நாட்களுக்கு பிறகு பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.

    சீன-பாகிஸ்தான் பொருளாதார மண்டல பகுதியில் பலுகிஸ்தான் உள்ளது. அங்கு பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ‘பலோச் ராஜி அஜோல் சங்கள்’ என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.

    எனவே அப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் குவிக்கப்பட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த ரோந்து படையின் மீது பலுசிஸ்தான் பயங்கரவாதிகள் திடீரென அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.

    அதில் 4 ராணுவ வீரர்கள் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். பலுகிஸ்தான் பயங்கரவாத இயக்கம் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
    பிரதமர் மோடியை இன்று சந்தித்த அர்ஜென்டினா அதிபர் முன்னிலையில் 10 புதிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. பயங்கரவாதத்துக்கு எதிராக இருநாட்டு தலைவர்களும் கூட்டுப் பிரகடனம் வெளியிட்டனர். #MauricioMacri #Modi #Pulwamaattack #tacklingterror
    புதுடெல்லி:

    அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அர்ஜென்டினா அதிபர் மவுரிகியோ மக்ரி டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு தரப்பு நட்புறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.

    பின்னர், வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே மற்றும் இருநாட்டு உயரதிகாரிகள் மட்டத்திலான முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இருநாடுகளுக்கும் இடையில் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, அணுஎரிசக்தி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

    பின்னர், இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றினர். அப்போது பேசிய மோடி, ‘பயங்கரவாதத்தை தூண்டிவிடும் சக்திகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரம் முடிந்து விட்டது என்பதை சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதல் நமக்கு காட்டியுள்ளது.

    பயங்கரவாதம் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது உலகநாடுகள் ஒன்றிணைந்து திடமான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதை செய்வதில் நாம் காலம் தாழ்த்தினால் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக அது அமைந்துவிடும்’ என்று குறிப்பிட்டார்.

    அவரது கருத்தை வழிமொழிந்த அர்ஜென்டினா அதிபர், பயங்கரவாதத்தை வேரறுக்க ஒருமித்த முடிவுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

    சமீபத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து வகையிலான பயங்கரவாத தாக்குதலையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மனிதத்துக்கு எதிரான இந்த பயங்கரவாத தீமையை எதிர்த்து உங்களுடன் ஒன்றிணைந்து போராடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார். #MauricioMacri #Modi #Pulwamaattack #tacklingterror 
    பாகிஸ்தானில் உள்ள சீன நாட்டு தூதரகத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக 2 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #PakistanTerrorAttack
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கராச்சி நகரில் சீன தூதரகம் செயல்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் அந்த தூதரகத்தில் நுழைந்த தற்கொலைப் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் தங்களிடம் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர்.

    இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அங்கு வந்த பாதுகாப்பு படையினர் 3 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.

    பாகிஸ்தானில் சீன தூதரகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சீனா, இந்தியா ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன. 

    இந்நிலையில், சீன தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நடத்திய தேடுதல் வேட்டையில் 2 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #PakistanTerrorAttack
    பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சீன தூதரகத்தில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 போலீசார் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். #PakistanTerrorAttack
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கராச்சி நகரில் சீன தூதரகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த தூதரகத்தில் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் குழுமியிருந்தனர்.

    இந்நிலையில், சீன தூதரகத்தில் திடீரென 3 தற்கொலைப்படையினர் நுழைந்தனர். அவர்கள் தங்களிடம் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர்.

    இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.  அவர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.



    பாகிஸ்தானில் சீன தூதரகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

    இதேபோல், இந்தியா சார்பில் இந்திய வெளியுறவு துறை வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தானில் சீன தூதரகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது. #PakistanTerrorAttack
    ஆப்கானிஸ்தானில் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 போலீசார் பலியாகினர். #AfghanAttack #AfghanTalibanKilled #AfghanCeasefire
    காந்தகார்:

    ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் பண்டிகையையொட்டி அதிபர் அஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித்து உள்ளார். தலீபான்களும் முதல் முறையாக 3 நாள் போர் நிறுத்தம் அறிவித்து இருக்கிறார்கள். இது ஆப்கானிஸ்தான் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்த நிலையில், அங்கு காந்தகார் மாகாணத்தில், அர்பான்தாப் மாவட்டத்தில் நேஹ்கான் பகுதியில் அமைந்து உள்ள சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர்.

    அதிகாலை நேரத்தில் நடந்த இந்த தாக்குதலை சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சுதாரிப்பதற்கு முன் பயங்கரவாதிகள், குருவிகளை சுடுவது போல அவர்களை சுட்டு வீழ்த்தி விட்டு தப்பினர்.இந்த தாக்குதலில் 13 போலீசார் பலியாகினர்.

    இந்த தாக்குதலை தலீபான் கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவலை காந்தகார் போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர். ஆனால் அது தொடர்பான கூடுதல் விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

    இதேபோன்று கடந்த வெள்ளிக்கிழமை ஹெராட் மாகாணத்தில் ஷின்டான்ட் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 17 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.  #AfghanAttack #AfghanTalibanKilled #AfghanCeasefire
    ×