என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chenab Rail Bridge"

    • செனாப் ரெயில்வே பாலம் காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது.
    • சுமார் 15 ஆண்டாகக் கட்டப்பட்ட இந்தப் பாலம் பிரான்சின் ஈபிள் கோபுரத்தைவிட உயரமானது.

    ஸ்ரீநகர்:

    வரவிருக்கும் அரையாண்டு தேர்வுக்காக லைப்ரரிக்கு சென்று குறிப்புகள் எடுத்து படித்துக் கொண்டிருந்தான் சுந்தர். அப்போது அங்கு வந்த சுமதி டீச்சரைப் பார்த்தான். உடனே, டீச்சர் எப்படி இருக்கீங்க? என்றான் சுந்தர்.

    நான் நல்லா இருக்கேன்டா. நீ எப்படிடா இருக்கே? எங்கே இந்தப் பக்கம்? என பதில் கூறினார் சுமதி டீச்சர்.

    நான் இங்க அடிக்கடி வருவேன் டீச்சர். பேப்பர் மட்டுமின்றி பல புத்தகங்களை எடுத்துப் படிப்பேன். பொது அறிவையும் தெரிஞ்சு வச்சுக்கலாம்னு வந்தேன் என்றான்.

    அப்படியா? அப்ப உன்னோட பொது அறிவை சோதிச்சுர வேண்டியதுதான் என்ற டீச்சர், உலகிலேயே உயரமான

    ரெயில்வே பாலம் எங்க இருக்கு சொல்லு பார்ப்போம்? என கேட்டார். பதில் தெரியாமல் சுந்தர் முழித்தான்.

    இதைக் கண்ட டீச்சர், தெரியலைன்னா பரவாயில்லை. நான் சொல்றேன் கேட்டுத் தெரிஞ்சுக்கோ. உலகிலேயே உயரமான ரெயில்வே பாலம் இந்தியாவில் தான் இருக்கு தெரியுமா? என புதிர் போட்டார்.

    என்ன நம்ம இந்தியாவிலா? எங்க டீச்சர் இருக்கு, அதைப் பத்தி சொல்லுங்களேன் என ஆவலோடு கேட்டான்.

    சுமதி டீச்சர் சொன்ன விஷயங்களின் சுருக்கம் இதுதான்:


    ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது ரெயில்வே பாலம். இந்தப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 6-ம் தேதி திறந்து வைத்தார். அதன்பின், பிரதமர் மோடி அந்தப் பாலத்தின் மீது தேசியக் கொடியைப் பிடித்தபடி நடந்து சென்றார்.

    இது உலகின் மிக உயரமான ரெயில்வே இரும்பு வளைவு பாலம் என்ற சிறப்பைப் பெற்றது.

    இது உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் பாதை திட்டத்தின் முக்கியப் பகுதியாகும்..

    இதன்மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கு நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்படுகிறது.

    சுமார் 15 ஆண்டாகக் கட்டப்பட்ட இந்தப் பாலம் பிரான்சின் ஈபிள் கோபுரத்தைவிட உயரமானது.


    நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டது என கூறி முடித்தார் சுமதி டீச்சர்.

    டீச்சர் சொன்னதைக் கேட்ட சுந்தர், ரொம்ப சந்தோஷம் டீச்சர். இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே. இந்த விஷயத்தை, நமது இந்தியாவின் பெருமையை என் பிரெண்ட்ஸ் கிட்டயும் கண்டிப்பா சொல்லப்போறேன் என்றபடி. அங்கிருந்து வீடு நோக்கி புறப்பட்டான் சுந்தர்.

    • ஐபில் கோபுரத்தை விட 35 மீட்டர்கள் அதிக உயரம் கொண்டதாக உள்ளது.
    • உலகின் மிகப்பெரிய ரெயில் பாலத்தின்மீது முதன்முறையாக ரயில் இயக்கப்பட்ட காட்சிகள் பிரம்மிப்பூட்டுவதாக உள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் சங்கல்தான் - ரியாசியை இணைக்கும் வகையில் உலகின் மிக உயரமான சென்னாப் ரெயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டமாக முதல் ரெயில் நேற்று இயக்கப்பட்டுள்ளது. இந்த சென்னாப் ரெயில்வே பாலம் (359 மீட்டர்கள்) பாரிஸில் உள்ள உயரத்துக்கு பிரசித்தி பெற்ற ஐபில் கோபுரத்தை விட 35 மீட்டர்கள் அதிக உயரம் கொண்டதாக உள்ளது.

    தற்போது நடத்தப்பட்டுள்ள சோதனை ஓட்டம் குறித்து ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவிக்கையில், இந்த பாலத்தின் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்து விட்டதாகவும், சுரங்கப்பாதை எண் ஒன்றில் மட்டும் மிச்சமுள்ள மீதி வேலைகள் முடிந்ததும் இன்னும் நான்கைந்து மாதத்துக்குள் சென்னாப் பாலம் பயன்பாட்டுக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சென்னாப் பாலம், சுமார் 272 கிலோமீட்டருக்கு போடப்படும் உத்தம்பூர் -ஸ்ரீநகர் - பாரமுல்லா (USBRL ) ரெயில்வே தடத்தின் முக்கிய பகுதியாக உள்ளது. உலகின் மிகப்பெரிய ரெயில் பாலத்தின்மீது முதன்முறையாக ரெயில் இயக்கப்பட்ட காட்சிகள் பிரம்மிப்பூட்டுவதாக உள்ளது. இதற்கிடையில் இந்த ரயில் பாலம் இணையும் ரியாசி மாவட்டத்தில் சமீபத்தில் பக்தர்கள் சென்ற பேருந்தின்மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×