search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரஸ் பொதுக்கூட்டம்
    X

    காங்கிரஸ் பொதுக்கூட்டம்

    • சாயல்குடி அருகே காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது.
    • வட்டாரத் தலைவர் (பொறுப்பு) சிக்கல் நூருல் அமீன் நன்றி கூறினார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே சிக்கல் கிராமத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட பொறுப்புக் குழு தலைவருமான மலேசியா பாண்டியன் தலைமை வகித்தார். அமைப்பு சாரா தொழிலாளர் மாநில பொதுச் செயலாளர் தெய்வேந்திரன், மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் பாபு, மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன், கோபால் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரங்கநாதன், மாவட்ட சேவா தள தலைவர் கணேசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செந்தாமரை கண்ணன், சிறுபான்மை மாநில செயலாளர் ஜெய்னுல் ஆலம், வழக்கறிஞர் சரவணா காந்தி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் விக்னேசுவரன் ஆகியோர் பேசினர். வட்டாரச் செயலாளர் கனி வரவேற்றார். அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி சிறப்பு பேச்சாளர் அலிம்அல் புஹாரி சிறப்புரை ஆற்றினர்.

    கடலாடி தெற்கு வட்டாரத் தலைவர் அப்துல் சத்தார், கடலாடி மேற்கு சுரேஷ் காந்தி, நரிப்பையூர் ஞானசேகரன், முன்னாள் வட்டாரத் தலைவர் சேசு மனோகரன், சாயல்குடி நகர தலைவர் காமராஜ், மாவட்ட செயலாளர்கள் போஸ், கலைச்செல்வன், சகாயராஜ், சையது இப்ராஹிம், அமிர்தராஜ், கொக்காடி, கிளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வட்டாரத் தலைவர் (பொறுப்பு) சிக்கல் நூருல் அமீன் நன்றி கூறினார்.

    Next Story
    ×