search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணுவ ஓய்வூதிய விளக்க பொதுக்கூட்டம்
    X

    ராணுவ ஓய்வூதிய விளக்க பொதுக்கூட்டம்

    • நாளை நடக்கிறது
    • குறைகளுக்கான தீர்வுகளை கேட்டறிந்து பயனடையலாம்

    வேலூர்:

    ராணுவ ஓய்வூதிய கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம் ராணுவ ஓய்வூதியம் மற்றும் நிலுவைத் தொகை சம்பந்தமாக ராணுவ ஓய்வூதிய அதிகாரிகள் மூலமாக விளக்க நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலூர் கோட்டை பின்புறம் உள்ள காவலர் நல வாழ்வு மன்றத்தில் நடைபெற உள்ளது.

    இதில் முப்படை ராணுவ ஓய்வூதியம் பெறும் வீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு அனைத்து விதமான சந்தேகங்கள் மற்றும் குறைகளுக்கான தீர்வுகளை கேட்டறிந்து பயனடையலாம்.

    இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் சார்தோர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இத்தகவலை நெல்சன் அந்தோணி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×