search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. அரசை பொதுமக்கள் தூக்கி எறியும் காலம் தொலைவில் இல்லை
    X

    தி.மு.க. அரசை பொதுமக்கள் தூக்கி எறியும் காலம் தொலைவில் இல்லை

    • தி.மு.க. அரசை பொதுமக்கள் தூக்கி எறியும் காலம் தொலைவில் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
    • மதுரை மேற்கு-தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மேற்கு யூனியன் அரியூர் கிராமத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க சோழ வந்தான் சட்டமன்ற தொகுதி சார்பில் ஜெயலலிதா 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

    மதுரை மேற்கு-தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கல்லணை ரவிச்சந்திரன், கொரியர் கணேசன் வாடிப்பட்டி காளிதாஸ், வாடிப்பட்டி ஒன்றிய சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா, டாக்டர் சரவணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி சாமிநாதன் வரவேற்றார்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், மாண வர்களுக்கு மடிக்கணினி போன்ற பொது மக்களுக்கு தேவையான எத்தனையோ திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார்.இவற்றையெல்லாம் முடக்கி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளதுதான் தி.மு.க. அரசின் சாதனையாகும். இதனால் மக்களுக்கு வேதனை மட்டுமே மிஞ்சியுள்ளது.

    தி.மு.க. அரசை பொது மக்கள் தூக்கி எறியும் காலம் தொலைவில் இல்லை. தி.மு.க. அரசின் அராஜக போக்கை கண்டு பிரதமர் ஆட்சியை கலைத்து விடுவார் என்பதை தடுப்பதற்காகவே உதயநிதி ஸ்டாலின் பிரதமரை சந்தித்தார். ரூ.600 கோடியை செலவழித்து ஈரோடு கிழக்கில் பெற்ற வெற்றியானது ஜனநாயகத்தின் படுகொலை யாகும். எதிர்வரும் தேர்தல்களில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி மகத்தான வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதா ராதாகிருஷ்ணன், அம்மு லோகேசுவரன், மாவட்ட பிரதிநிதி சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ராசு, கூட்டுறவு சங்க தலைவர் மலர் கண்ணன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் குருசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டுறவு வங்கி துணைத் தலைவர்-கிளை செயலாளர் ராகுல் நன்றி கூறினார்.

    Next Story
    ×