search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

    • மதுரையில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் நாளை வழங்கப்படுகிறது
    • இந்த நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளை ஏ.ஜி.எஸ். அகாடமி, ஏ.ஜி.எஸ்.ஆர் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து செய்துள்ளது.

    மதுரை

    முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ். ராம்பாபு வின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி மதுரையில் நாளை ஏழை எளியவருக்கு இலவச வேட்டி- சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

    மதுரையின் முன்னாள் நகர் மன்ற தலைவராகவும் மதுரை பாராளுமன்ற உறுப்பினராக 2 முறை திறம்பட மக்கள் பணியாற்றியவர் ஏஜி.சுப்புராமன்.இவரது மகனும், மதுரை மாவட்ட காங்கிரசின் தன்னிகரில்லா தலைவராக விளங்கி மதுரை மக்களின் பேரன்பினால் 3 முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு திறம்பட பணியாற்றியவர் ஏ.ஜி.எஸ். ராம்பாபு.

    அவர் கடந்த ஆண்டு ஜனவரி 11-ந் தேதி இயற்கை எய்தினார். ஏ.ஜி.எஸ். ராம்பாபுவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் மதுரை விளக்குத்தூண் அருகே உள்ள மஹால் வடம்போக்கி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

    இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஏ.ஜி.எஸ். ராம்பாபு மீது பற்று கொண்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், முன்னாள், இந்நாள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சவுராஷ்டிரா சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள், சமுதாய பெருமக்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மன்ற தலைவர்கள், நிர்வாகிகள், தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டு ஏ.ஜி.எஸ். ராம்பாபுவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்துகிறார்கள். இதை தொடர்ந்து நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக நலிவுற்ற, ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி -சேலைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

    இந்த நினைவேந்த லுக்கான ஏற்பாடுகளை ஏ.ஜி.எஸ். அகாடமி, ஏ.ஜி.எஸ்.ஆர் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து செய்துள்ளது.

    Next Story
    ×