search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலை
    X

    வேலூரில் தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலை

    • கணவர் இறந்த துக்கம் தாங்காமல் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த அலமேலு மங்காபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ஷர்மிளா (வயது 30). இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இவர்கள் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.தம்பதிக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த மாதம் கார்த்திக் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஷர்மிளா கணவர் இறந்த தூக்கம் தாளாமல் வேதனையில் இருந்து வந்தார்.

    கணவர் இறந்து விட்டதால் ஷர்மிளா அலமேலு மங்காபுரம் பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது ஷர்மிளா மின்விசிறியில் தூக்கில் தூங்கினார். வெளியே சென்றிருந்த ஷர்மிளாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஷர்மிளா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஷர்மிளாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஷர்மிளா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஷர்மிளாவின் தந்தை சவுந்தரராஜன் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார்.

    சத்துவாச்சாரி போலீசார் ஷர்மிளாவின் பிணைத்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×