என் மலர்tooltip icon

    இந்தியா

    தண்டனை காலம் முடிந்தும் 4 ஆண்டுகள் சிறையில் இருந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு - உச்ச நீதிமன்றம்
    X

    தண்டனை காலம் முடிந்தும் 4 ஆண்டுகள் சிறையில் இருந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு - உச்ச நீதிமன்றம்

    • 2005-ல் பாலியல் குற்றத்திற்காக சோஹன் சிங்கிற்கு ஆயுள் தண்டனை பெற்றார்.
    • மேல் முறையீட்டுக்கு பின் சோஹன் சிங்கிற்கு 2017-ல், 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

    மத்தியபிரதேசத்தில் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோஹன் சிங் என்பவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கடந்த 2005-ல் பாலியல் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்ற சோஹன் சிங்-ன் தண்டனைக்காலம் மேல் முறையீட்டுக்கு பின் 2017-ல், 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. ஆனால் அவர் 8 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூனில்தான் சோஹன் சிங் விடுதலை செய்யப்பட்டார்.

    சோஹன் சிங் 11 ஆண்டுகள் 6 மாதம் 24 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 4 ஆண்டுகள் 7 மாதம் அவர் சிறையில் இருந்துள்ளார்.

    இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தண்டனை காலம் முடிந்தும் சிறையில் இருந்த சோஹன் சிங்கிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

    Next Story
    ×