search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore - Salem"

    • வருகிற 16ந் தேதி வரை கோவையில் இருந்து காலை 9:05 மணிக்கு புறப்படும் (06802) ரெயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
    • கோவை - இருகூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள வழித்தடத்தில் என்ஜினீயரிங் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    திருப்பூர்:

    கோவை என்ஜினீரியங் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை - சேலம் இடையிலான மெமு ெரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ெரயில்வே துறை அறிவித்துள்ளது.

    இது குறித்து தெற்கு ெரயில்வே சேலம் டிவிஷன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    கோவை - இருகூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள வழித்தடத்தில் என்ஜினீயரிங் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் வருகிற 16ந் தேதி வரை கோவையில் இருந்து காலை 9:05 மணிக்கு புறப்படும் (06802) ரெயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், சேலத்தில் இருந்து மதியம் 1:40 மணிக்கு புறப்படும் (06803) ரெயிலும் மே 1முதல் 16ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • கோவையில் காலை 9.05 மணிக்கு புறப்பட்டு சேலம் செல்லும்.
    • சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

     திருப்பூர் :

    கோவை-திருப்பூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோவை-சேலம் பயணிகள் ரெயில் வருகிற 30-ந் தேதி வரை 1 மாதத்துக்கு முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

    கோவையில் காலை 9.05 மணிக்கு புறப்பட்டு சேலம் செல்லும் ரெயிலும், அதுபோல் சேலத்தில் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் ரெயிலும் 1 மாதத்துக்கு முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கோவை - சேலம் பாசஞ்சர் ரெயில் கடந்த ஜூலை 11-ந் தேதி முதல் மீண்டும் இயங்கத் துவங்கியது.
    • கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டத்தை இணைக்கும் ஒரே பாசஞ்சர் ெரயில் இது தான்.

    திருப்பூர் :

    கொரோனா காரணமா 2½ ஆண்டாக நிறுத்தப்பட்டிருந்த, கோவை - சேலம் பாசஞ்சர் ரெயில் கடந்த ஜூலை 11-ந்தேதி முதல் மீண்டும் இயங்கத் துவங்கியது.2 நாள் மட்டுமே இயங்கிய நிலையில் காவேரி - ஆனங்கூர் இடையே பராமரிப்பு பணி நடந்ததால் ஜூலை 13 முதல் 24-ந்தேதி வரை 10 நாட்களுக்கு ரெயில் ரத்து செய்யப்பட்டது. ஆகஸ்டு -செப்டம்பர் மாதம் ெரயில் முழுமையாக இயங்கியது. கோவை - திருப்பூர் இடையே பொறியியல் மேம்பாட்டு பணி காரணமாக அக்டோபர் 13 முதல் 30-ந்தேதி வரை 17 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது.

    பணி முடிந்து அக்டோபர் 31 முதல் மீண்டும் இயங்கத் துவங்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காவேரி - ஈரோடு இடையே பொறியியல் மேம்பாட்டு பணி நடப்பதால் அக்டோபர் 31 முதல் நவம்பர் 29 வரை 30 நாட்களுக்கு முழுமையாக ெரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

    இது குறித்து ெரயில் பயணிகள் கூறுகையில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டத்தை இணைக்கும் ஒரே பாசஞ்சர் ெரயில் இது தான். ஞாயிற்றுக்கிழமை தவிர, வாரத்தின் 6 நாட்கள் இயங்குவதால், ஆயிரக்கணக்கான பயணிகள், பனியன் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் மாதாந்திர சீசன் டிக்கெட் எடுத்து பயணித்து வந்தனர். பகுதி அளவிலாவது பாசஞ்சர் ெரயிலை இயக்க வேண்டும் என்றனர்.

    • கோவையில் தினமும் காலை 9.05 மணிக்கு புறப்படும்.
    • இந்த ரெயில் வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் 29-ந் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

     திருப்பூர்:

    ஈரோடு ரெயில் நிலையம் அருகே பொறியியல் பணி நடைபெறுவதால் கோவை-சேலம் தினசரி ரெயில் (எண்.06802) கோவையில் தினமும் காலை 9.05 மணிக்கு புறப்–படும். இந்த ரெயில் வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் 29-ந் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.இதுபோல் சேலம்-கோவை தினசரி ரெயில் (எண்.06803) சேலத்தில் தினமும் மதியம் 1.40 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் 29-ந் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
    • இத்தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    கோவை-திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கோவை-சேலம் பயணிகள் தினசரி ரெயில் (எண்.06802) கோவையில் இருந்து தினமும் காலை 9.05 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதுபோல் சேலம்-கோவை ரெயில் (எண்.06803) வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×