என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொல்லம்"

    • தாயும், மகள்களும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர்.
    • தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி அருகே உள்ள குலசேகரபுரம் பகுதியை சேர்ந்தவர் கிரிஷ்குமார். இவரது மனைவி தாரா கிருஷ்ணன் (வயது36). இவர்களது மகள்கள் அனாமிகா(6), ஆத்மிகா(1 ).

    கிரிஷ்குமார் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் தனது கணவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, தாரா தனது 2 மகள்களுடன் குலசேகரபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் தனது தந்தையுடன் வசித்துவந்தார். கடந்த ஒன்றரை ஆண்டாக அந்த வீட்டில் தான் வசித்து வந்திருக்கிறார்.

    இந்தநிலையில் நேற்று மாலை தாராவின் தந்தை கோபாலகிருஷ்ணன் டீ குடிப்பதற்காக டீக்கடைக்கு சென்றிருந்தார். தாரா தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது அவர்களது வீட்டின் உள்ளே இருந்து குபுகுபுவென புகை வந்தது.

    இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்து வீட்டினர், கதவை உடைத்து தாராவின் வீட்டுக்குள் சென்றனர். அப்போது அங்கு தாரா மற்றும் அவரது 2 மகள்கள் உடல் கருகிய நிலையில் கிடந்தனர். இதுகுறித்து கருநாகப்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து தீணை அணைத்தனர். பின்பு வீட்டுக்குள் உயிருக்கு போராடியபடி கிடந்த தாரா மற்றும் அவரது மகள்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அதில் தாரா தனது 2 குழந்தைகளின் உடலில் தீவைத்துவிட்டு தானும் தீவைத்துக்கொண்டது தெரியவந்தது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த தாரா மற்றும் அவரது 2 மகள்களும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர்.

    தாரா தனது 2 குழந்தை களை எரித்துக் கொன்று தற்கொலை செய்தது ஏன்? என்று போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி னர். அதில் பல புதிய தகவல்கள் கிடைத்தன. தாராவுக்கும் அவரது கணவரின் குடும்பத்தின ருக்கும் பிரச்சினை ஏற்பட் டுள்ளது. இதனால் தாரா தனது கணவரின் வீட்டில் வசிக்காமல், தனியாக வந்து தனது தந்தை மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார்.

    இந்தநிலையில் துபாயில் வேலை பார்த்து வரும் தாராவின் கணவர் கிரிஷ்குமார் விடுமுறையில் ஊருக்கு வர இருந்தார். அவர் துபாயில் இருந்து நேற்று புறப்பட்டு வர இருந்த நிலையில், சில காரணங்களுக்காக அங்கிருந்து புறப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் சொத்து தொடர்பாக தாரா மற்றும் அவரது மாமியாருக்கு இடையே நேற்று பிரச்சினையும் நடந்துள்ளது. அப்போது தாரா தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார்.

    இந்தநிலையில் தான் தாரா தனது குழந்தைகளை உயிரோடு எரித்துக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்தி ருக்கிறார்.

    கணவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளை உயிரோடு எரித்துக்கொன்றுவிட்டு, இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
    • மங்களூரில் இருந்து இன்று 17 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரலில் இருந்து இன்றும் வருகிற 17-ந்தேதியும் இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06089) மறுநாள் காலை 10 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து நாளை (11-ந்தேதி) மற்றும் 18-ந்தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06090) மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    இதில், படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, நெல்லை, நாகா்கோவில் வழியாக இயக்கப்படும்.

    கொல்லம்

    சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 12, 19 ஆகிய தேதிகளில் இரவு 11.20-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06113) மறுநாள் பிற்பகல் 3.30-க்கு கொல்லம் சென்றடையும். மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து வருகிற 13, 20 ஆகிய தேதிகளில் இரவு 7.10-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06114) மறுநாள் காலை 11.10-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்த

    னூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனூா், மாவேலிக்கரா வழியாக இயக்கப்படும்.

    போத்தனூா்

    சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (11-ந்தேதி) இரவு 11.50-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06027) மறுநாள் காலை 8.30-க்கு கோவையை அடுத்த போத்தனூா் சென்றடையும். மறுமாா்க்கமாக போத்தனூரில் இருந்து 14-ந்தேதி இரவு 11.30-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06027) மறுநாள் காலை 8.20-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    இந்த ரெயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக இயக்கப்படும்.

    தாம்பரத்தில் இருந்து 11, 18, 25, மே 2 ஆகிய தேதிகளில் மாலை 5.05-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06185) மறுநாள் காலை 7.45-க்கு போத்தனூா் சென்றடையும். மறுமாா்க்கமாக போத்தனூரில் இருந்து 13, 20, 27, மே 4 ஆகிய தேதிகளில் இரவு 11.55-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06186) மறுநாள் பகல் 12.15-க்கு தாம்பரம் வந்தடையும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரி

    புலியூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக இயக்கப்படும்.

    மங்களூரு - திருவனந்தபுரம்

    மங்களூரில் இருந்து இன்று (10-ந்தேதி), 17 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06051) மறுநாள் காலை 6.35-க்கு திருவனந்தபுரம் சென்றடையும். மறுமாா்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து நாளை (11-ந்தேதி), 18 ஆகிய தேதிகளில் மாலை 6.40-க்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06052) மறுநாள் காலை 7 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

    இதில் ஒரு ஏசி வகுப்பு பெட்டி, படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    இந்த ரெயில் காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, ஷொரனூா், திருச்சூா், எா்ணாகுளம், ஆலப்புழை, கொல்லம் வழியாக இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொச்சுவேலி ரெயில் நிலையத்தில் திட்டமிடப் பட்டுள்ள கட்டுமானப் பணிகள் காரணமாக ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
    • தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    நாகர்கோவில்:

    தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கொச்சுவேலி ரெயில் நிலையத்தில் திட்டமிடப் பட்டுள்ள கட்டுமானப் பணிகள் காரணமாக ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ரெயில் எண்:06772 கொல்லம் சந்திப்பு-கன்னியாகுமரி மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் நவம்பர் 17, 19, 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்:06773 கன்னியாகுமரி-கொல்லம் சந்திப்பு மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் நவம்பர் 17, 19, 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்:06429 கொச்சுவேளி-நாகர் கோவில் சந்திப்பு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் நவம்பர் 17, 19 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்:06430 நாகர்கோவில் சந்திப்பு-கொச்சுவேளி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் நவம்பர் 17, 19, 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்:16366 நாகர்கோவில் கோட்டயம் முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் நவம்பர் 17, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஒரு மணிநேரம் தாமதமாக ஓடும்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

    • நாகர்கோவில் சந்திப்பு- கோட்டயம் எக்ஸ்பிரஸ் தாமதமாக புறப்படும்.
    • தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திக்குறிப்பில் தகவல்

    நாகர்கோவில்:

    தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவனந்தபுரம் சென்ட்ரல்- நாகர்கோவில் சந்திப்புப் பிரிவில் உள்ள நேமம்- நெய்யாற்றின் கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகளுக்காக, அக்டோபர் 8-ந்தேதி சனிக்கிழமை அன்று ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரெயில் எண்: 06772 கொல்லம் சந்திப்பு- கன்னியாகுமரி மெமு எக்ஸ் பிரஸ் சிறப்பு ரெயில் அக்டோபர் 8-ந்தேதி அன்று முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்: 06773 கன்னியாகுமரி- கொல்லம் சந்திப்பு மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் அக்டோபர் 8-ந்தேதி அன்று முழுமையாக ரத்து செய்யப்படும்.

    ரெயில் எண்: 16366 நாகர்கோவில் சந்திப்பு- கோட்டயம் எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 8-ந்தேதி மதியம் 1 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக அன்று 2.30 மணிக்கு 1 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

    ரெயில் எண்: 06429 கொச்சுவேளி- நாகர்கோவில் சந்திப்பு முன்பதிவில்லா எக்ஸ் பிரஸ் சிறப்பு ரெயில் கொச்சுவேளியில் இருந்து அக்டோபர் 8-ந்தேதி மதியம் 1.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக கொச்சுவேளியில் இருந்து 3.10 மணிக்கு(1 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக) புறப்படும்.

    இவ்வாறு செய்தி கூறியிருப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பதானாபுரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் இருக்கும் கிணற்றில் 55 வயது கன்னியாஸ்திரி சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Kerala #Nun
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பதானாபுரத்தில் மவுண்ட் தாபோர் கான்வென்ட் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வந்த சுஷான் மேத்யூ (55) என்ற கன்னியாஸ்திரி இன்று காலை பள்ளி வளாகத்தில் உள்ள கிணறு ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

    காலை 9 மணிக்கு கிணற்றின் சுற்றுச்சுவறில் ரத்தக்கறை இருந்ததை கண்டெறிந்த பள்ளி ஊழியர்கள், கிணற்றின் உள்ளே பார்க்கும் போது சுஷான் சடலமாக மிதந்துள்ளார். அவரது சடலத்தை மீட்ட போலீசார், பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

    நேற்று, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ஃப்ராங்கோ  மூலக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் நேற்று போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
    ×