search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Copyright"

    • மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு அண்ணாவின் பெயரை சூட்ட மு.க.ஸ்டாலின் மறந்தது ஏன்? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
    • இந்த உரிமைத் தொகை திட்டத்தில் 56.50 லட்சம் மனுக்களை நிராகரித்துவிட்டனர்.

    மதுரை

    பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாடிப்பட்டியில் உள்ள அண்ணாவின் திருஉ ருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    மாநிலங்களில் மாநில கட்சி ஆள முடியும் என்ற வரலாற்றை உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா ஆவார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என தாரக மந்திரத்தை உருவாக்கினார். ஓலை குடிசையில் வசிக்கும் குரல், கோட்டை கொத்த ளத்தில் ஒலிக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். அதிகாரப் பகிர்வு கடைக் கோடியிலும் இருக்க வேண்டும் என ஜனநாய கத்தை உருவாக்கினார் பேர றிஞர் அண்ணா.

    அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்திற்கு கருணா நிதி பெயரை சூட்டியுள்ளார். அண்ணா பெயரை சூட்ட மறந்தது ஏன்? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் கருணாநிதி பெயர் மறந்து விட்டது அதை ஞாபகப்படுத் தும் வகையில் இது போன்ற பெயர் சூட்டும் விழாவை முதலமைச்சர் நடத்துகிறார்.

    தமிழகத்தில் 2 கோடியே 18 லட்சம் குடும்பங்கள் உள்ளது. ஆனால் இந்த உரி மைத் தொகை திட்டத்தில் 56.50 லட்சம் மனுக்களை நிராகரித்துவிட்டனர். இதனால் இந்த திட்டத்தில் நிறைய குளறுபடி ஏற்பட் டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதா பிரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
    • சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு செய்தார்.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் திருமுருகன்பூண்டியில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் என்ற சிறுவர் காப்பகம் செயல்பட்டு வந்தது. இங்கு 15 சிறுவர்கள் தங்கி அரசு பள்ளிகளில் படித்து வந்தனர்.கடந்த 5ந் தேதி இரவு உணவு மற்றும் இனிப்பு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதோடு வாந்தி மயக்கமும் ஏற்பட்டது.இதில் மாதேஷ்(வயது 14), அத்தீஷ் (11), பாபு (10) ஆகிய 3 சிறுவர்கள் பலியாகினர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று திரும்பினர். திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதா பிரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    கலெக்டர் வினீத் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் ஆய்வறிக்கை சென்னையில் உள்ள சமூக பாதுகாப்பு துறை இயக்குனர் வளர்மதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    கலெக்டர் கூறுகையில் ,ஆய்வின் அடிப்படையில் முதல்கட்டமாக ஸ்ரீவிவேகானந்தா சேவாலயம் பூட்டப்பட்டது. சிறுவர் நலனை கருத்தில் கொள்ளாமல் கவனக்குறைவாக சேவாலயம் நடத்தப்பட்டு வந்துள்ளது.சிறுவர்கள் தங்குவதற்கு தகுதியற்ற நிலையில் இருப்பதும் ஆய்வில் தெரியவந்தது. சேவாலய உரிமத்தை ரத்து செய்யுமாறு ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.

    காப்புரிமை மீறல் விவகாரத்தில் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு சுமார் ரூ.3600 கோடிகளை இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கலிஃபோர்னியா:

    தொழில்நுட்ப நிறுவனங்களிடையே காப்புரிமை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவது மிகவும் இயல்பான விவகாரம் தான். எனினும் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களிடையே ஏற்படும் காப்புரிமை பிரச்சனைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காப்புரிமை விவகாரத்தில் சாம்சங் நிறுவனம் சுமார் 6700 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என ஆப்பிள் கோரியிருந்தது.

    இந்நிலையில், இவ்வழக்கு விசாரனை முடிவில் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் சுமார் 3600 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். 

    காப்புரிமை விவகார வழக்கின் தீர்ப்பு குறித்து ஆப்பிள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது பணத்தையும் தான்டிய விவகாரம் ஆகும். வடிவமைப்பின் முக்கியத்துவத்தை அதிம் நம்புகிறோம். வாடிக்கையாளர்களுக்கு வித்தியாச மற்றும் புதுவித சாதனங்களை வழங்குவதற்கென எங்களது குழுவினர் அயராது உழைக்கின்றனர். என தெரிவித்துள்ளது.


    கோப்பு படம்

    ஏழு ஆண்டு கால பிரச்சனையில் ஆப்பிள் நிறுவனம் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 6700 கோடி) தொகையை சாம்சங் நிறுவனத்திடம் காப்புரிமை பிரச்சனைக்கான இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரியது. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் 54.8 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்கியிருக்கும் நிலையில் மீதமிருக்கும் 39.9 கோடி டாலர்களை ஆப்பிள் நிறுவனம் கேட்டிருந்தது.

    இந்த விவகாரத்தில் இரண்டு காப்புரிமை மீறல்கள்: அதாவது அமெரிக்க காப்புரிமை எண் D618,677 மற்றும் அமெரிக்க காப்புரிமை எண் D593,087 சார்ந்தது ஆகும். இதன் முதல் காப்புரிமை ஐபோனின் முன்பக்கம் கருப்பு நிற செவ்வக பகுதியையும், இரண்டாவது காப்புரிமை பெசல்கள் என அழைக்கப்படும் ஸ்கிரீனை சுற்றியிருக்கும் சிறிய பகுதிகளை சார்ந்தது ஆகும். 

    காப்புரிமை சார்ந்த வழக்கு விசாரணையில் ஆப்பிள் நிறுவன வழக்கறிஞர் ஆப்பிள் ஐபோன்களில் வடிவமைப்பும் முக்கியத்துவம் வாயந்த அம்சம் என தெரிவித்திருந்தார். ஆப்பிள் பிரான்டு வடிவமைப்பு புரட்சிகரமானது என்றும் அவர் வாதாடினார். 2011-ம் நடைபெற்ற வழக்கின் போது ஆப்பிள் நிறுவனம் சார்பில் 275 கோடி டாலர்கள் இழப்பீடு கோரப்பட்ட நிலையில் ஆப்பிள் நிறுவனத்துக்கு 105 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.
    காப்புரிமை மீறல் விவகாரத்தில் சாம்சங் நிறுவனம் சுமார் 6700 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
    கலிஃபோர்னியா:

    தொழில்நுட்ப நிறுவனங்களிடையே காப்புரிமை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவது மிகவும் இயல்பான விவகாரம் தான். ஆனாலும் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களிடையே ஏற்படும் காப்புரிமை பிரச்சனைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காப்புரிமை விவகாரத்தில் சாம்சங் நிறுவனம் சுமார் 6700 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என ஆப்பிள் கோரியுள்ளது.

    எட்டு ஆண்டு கால பிரச்சனையில் இம்முறை ஆப்பிள் நிறுவனம் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 6700 கோடி) தொகையை சாம்சங் நிறுவனத்திடம் காப்புரிமை பிரச்சனைக்கான இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரியுள்ளது. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் 54.8 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்கியிருக்கும் நிலையில் மீதமிருக்கும் 39.9 கோடி டாலர்களை ஆப்பிள் நிறுவனம் கேட்டு வருகிறது.

    இந்த விவகாரத்தில் இரண்டு காப்புரிமை மீறல்கள்: அதாவது அமெரிக்க காப்புரிமை எண் D618,677 மற்றும் அமெரிக்க காப்புரிமை எண் D593,087 சார்ந்தது ஆகும். இதன் முதல் காப்புரிமை ஐபோனின் முன்பக்கம் கருப்பு நிற செவ்வக பகுதியையும், இரண்டாவது காப்புரிமை பெசல்கள் என அழைக்கப்படும் ஸ்கிரீனை சுற்றியிருக்கும் சிறிய பகுதிகளை சார்ந்தது ஆகும். 



    காப்புரிமை சார்ந்த வழக்கு விசாரணையில் ஆப்பிள் நிறுவன வழக்கறிஞர் ஆப்பிள் ஐபோன்களில் வடிவமைப்பும் முக்கியத்துவம் வாயந்த அம்சம் என தெரிவித்திருந்தார். ஆப்பிள் பிரான்டு வடிவமைப்பு புரட்சிகரமானது என்றும் அவர் வாதாடினார். 2012-ம் நடைபெற்ற வழக்கின் போது ஆப்பிள் நிறுவனம் சார்பில் 275 கோடி டாலர்கள் இழப்பீடு கோரப்பட்ட நிலையில் ஆப்பிள் நிறுவனத்துக்கு 105 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. 

    பின் பல்வேறு மேல்முறையீடுகளில் சாம்சங் நிறுவனம் 45 கோடி டாலர்களை செலுத்த உத்தரவிடப்பட்டது. மீதம் இருந்த 100 கோடி டாலர்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் ஆப்பிள் நிறுவனம் இறுதியாக 54.8 கோடி டாலர்களை ஆப்பிள் நிறுவனத்துக்கு சாம்சங் வழங்க வேண்டும் உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில், இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் சார்பில் சாம்சங் சுமார் 39.9 கோடி டாலர்களை வழங்க வேண்டும் என வாதாடி வருகிறது. முதல் காப்புரிமை ஒட்டுமொத்த மொபைல் போன் சார்ந்தது என்பதால் 100 கோடி டாலர்களை சாம்சங் வழங்க வேண்டும் என ஆப்பிள் கேட்டுள்ளது. ஆனால் சாம்சங் சார்பில் 2.8 கோடி டாலர்களை மட்டுமே வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
    ×