என் மலர்
நீங்கள் தேடியது "Chennai Metro"
- மெட்ரோ ரெயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக வேண்டி ஆண்டர்சன் சாலை மூடப்பட்டு வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட உள்ளது.
- கொன்னூர் நெடுஞ்சாலையில் இருந்து பில்கிங்டன் சாலை வழியாக பெரம்பூர் நோக்கி செல்ல அனுமதியில்லை.
சென்னை:
சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் மெட்ரோ ரெயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக இன்று காலை முதல் 7 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
மெட்ரோ ரெயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக வேண்டி ஆண்டர்சன் சாலை மூடப்பட்டு வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட உள்ளது.
பில்கிங்டன் சாலையில் கொன்னூர் நெடுஞ்சாலை முதல் கான்ஸ்டபிள் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.
கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர்சன் சாலை வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து வலது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, டேங்க் பண்ட் சாலை, சந்திரயோகி சமாதி தெரு மற்றும் பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
அல்லது கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர் சன் சாலை வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து வலது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, ஒட்டேரி சந்திப்பு, குக்ஸ் சாலை மற்றும் பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
அல்லது கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர்சன் வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, போர்சுகீஸ் சாலை, கான்ஸ் டபிள் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை வழியாக செல்லலாம்.
கான்ஸ்டபிள் சாலையில் பில்கிங்டன் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர்சன் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்ல கூடிய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் பில்கிங்டன் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.
கனரக வாகனங்கள் கான்ஸ்டபிள் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கான்ஸ்டபிள் சாலை, போர் சுகீஸ் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.
கொன்னூர் நெடுஞ்சாலையில் இருந்து பில்கிங்டன் சாலை வழியாக பெரம்பூர் நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் கொன்னூர் நெடுஞ்சாலையில் நேராக சென்று இடது புறம் திரும்பி டேங்க் பண்ட் சாலை வழியாக செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.
கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.
பயணிகள், பொது மக்களிடையே வரவேற்பு ஏற்பட்டதையொட்டி மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.
நெரிசல் நேரங்களில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை கடந்த 2 வாரங்களாக இருமடங்கு அதிகரித்து உள்ளது.
மேலும் புதிய 6 சுரங்க ரெயில் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதையொட்டி பயணிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தற்போது 26 ரெயில் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
விமான நிலையத்துக்கு மெட்ரோ ரெயிலில் செல்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. மெட்ரோ ரெயிலில் அனைத்து வழித்தடங்களிலும் சராசரியாக 80 சதவீதம் பயணிகள் கூடுதலாக பயணம் செய்து வருகிறார்கள்.
மெட்ரோ ரெயிலில் தினமும் 55 ஆயிரம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். நெரிசல் நேரங்களான காலை 8 மணி முதல் 10 மணி வரைக்கும் மாலை 5 மணி முதல் 8.30 மணி வரைக்கும் விமான நிலையம், திருமங்கலம், வடபழனி, கோயம்பேடு, சென்ட்ரல், ஆலந்தூர் ரெயில் நிலையங்களில் சராசரியாக பயணிகள் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளது. நெரிசல் நேரங்களில் கூடுதலாக 5 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

விமான நிலையத்துக்கு எளிதில் செல்ல விமான பயணிகள் பெரும்பாலானோர் மாலை நேரங்களில் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வதை விரும்புகிறார்கள்.
மாலை நேரங்களில் உள் நாடு, வெளிநாடுகளுக்கு அதிகப்படியான விமானங்கள் சென்று வருகின்றன. விமான பயணிகளுக்கு விமானங்களை பிடிக்க மெட்ரோ ரெயில் பயணம் எளிதாக அமைகின்றது.
விமான நிலையத்துக்கு நேரடியாக விமான பயணிகள் செல்ல மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ‘வால்கலேட்டர்’ (நடைபாதை) பெரிதும் பயன்படுகிறது.
மெட்ரோ ரெயில் சேவையை கல்லூரி, அலுவலகம் செல்வோருக்கு நெரிசல் நேரங்களில் பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain #ChennaiMetro
சென்னை:
சென்னையில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நேரு பூங்காவில் இருந்து விமான நிலையம் வரை தற்போது மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது.
தொடக்கத்தில் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணித்து வந்த நிலையில் இப்போது அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்ட்ரல், அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் நடந்து வரும் பணிகள் நிறைவடைந்து சேவை தொடங்கினால்தான் முழு அளவில் பயன்பாட்டிற்கு வரும்.
தற்போது விமான நிலையம்- நேரு பூங்கா, விமான நிலையம்- சின்னமலை, ஆலந்தூர்-பரங்கிமலை இடையே இரு வழியில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஷெனாய்நகர்- நேரு பூங்கா இடையே ஒரு வழியில்தான் சேவை உள்ளது. மற்றொரு பாதை அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.
அதேபோல நேரு பூங்கா- சென்ட்ரல் இடையே நடந்த ஒரு வழி சுரங்கப்பாதை பணிகள் முடிந்துள்ளன. இந்த 2 வழித்தடங்களிலும் அனைத்து பணிகளும் நிறை வடைந்ததை தொடர்ந்து மெட்ரோ ரெயில் பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி பெங்களூரில் இருந்து பாதுகாப்பு கமி ஷனர் கே.ஆர்.மனோகரன் தலைமையிலான குழுவினர் இன்று பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு பணியினை மேற்கொண்டனர்.
ஷெனாய்நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஆய்வு பணி தொடங்கியது.
முன்னதாக பாதுகாப்பு கமிஷனர் கே.ஆர்.மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஷெனாய்நகர்- நேரு பூங்கா இடையே மற்றொரு வழித்தடம் தயாராகி உள்ளது. 4.3 கிலோ மீட்டர் தூரமுள்ள அந்த பாதையிலும், நேரு பூங்கா- சென்ட்ரல் இடையே ஒரு பாதையிலும் ஆய்வு பணி இன்றும், நாளையும் மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் உள்ள 7 கிலோ மீட்டர் சுரங்கப் பாதையில் 2 கட்டமாக ஆய்வு நடைபெறு கிறது.
இதையடுத்து வருகிற 18 மற்றும் 19-ந்தேதியில் சின்னமலை- டி.எம்.எஸ். ஏ.ஜி. ஆபீஸ் இடையேயான 4.5 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப் பணிகளும் நிறைவு அடைந்துள்ளதையொட்டி அங்கு ஆய்வு பணி தொடங்கப்பட உள்ளது.
இந்த ஆய்வின்போது பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா என்பது ஆராயப்படும். விபத்து காலத்தில் பயணிகள் வெளியே செல்ல வசதி, பயணிகளின் பாதுகாப்பு வசதியில் எதுவும் குறை உள்ளதா? என ஆய்வு செய்து அறிக்கை தரப்படும். நாளை மாலைக்குள் இந்த ஆய்வு முடிந்து விடும்.
போக்குவரத்து உள்ள நேரத்தில் டிராலி மூலமாகவும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ரெயிலை இயக்கியும் சோதனை நடத்தப்படும். பாதுகாப்பு சோதனை முடிந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை கொடுத்து விடுவோம். இந்த ஆய்வின்போது குறைகள் இருந்தால் அவற்றை உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
நேரு பூங்கா- சென்ட்ரல் இடையே சேவை தொடங்குவது குறித்து மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ் குமார் பன்சல், சுரங்கப் பாதை பணிக்கான பொது மேலாளர் வி.கே.சிங், அதிகாரி நரசிம்மபிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.