search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guindy"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கிண்டியில் கவர்னர் மாளிகைக்குள் ஏறிக்குதித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு உயர் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே செல்ல முடியாது.

    இந்த நிலையில் நேற்று மாலை வாலிபர் ஒருவர் கவர்னர் மாளிகை காம்பவுண்டு சுவரை ஏறிக் குதித்து புகுந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    அவர் வந்தவாசியை சேர்ந்த செல்வராஜ் என்பது தெரிந்தது. மேலும் அவர் மது போதையில் இருந்தார்.

    செல்வராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குடியரசு தினத்தை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை அளித்த தேநீர் விருந்தில் சபாநாயகர், முதல்வர் உள்பட பலர் பங்கேற்றனர். #rajbavan #teaparty #banwarilalprohit #EdappadiPalanisamy
    சென்னை:

    குடியரசு தினத்தை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை தேநீர் விருந்து அளித்தார்.

    இந்த விருந்தில் சபாநாயகர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ,பன்னீர்செல்வம், தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள், நீதிபதிகள், அரசு செயலாளர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். #rajbavan #teaparty #banwarilalprohit #EdappadiPalanisamy
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னை கிண்டியில் இருந்து பரங்கிமலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பேராசிரியை மற்றும் டிரைவர் உயிர் தப்பினர்.
    சென்னை:

    போரூர் ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் சித்ரா, பல் டாக்டரான இவர் தாழம்பூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இன்று காலை கல்லூரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் கிருபா ஓட்டிச் சென்றார். கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து இறங்கி பரங்கிமலை பட்ரோட்டில் கார் சென்று கொண்டிருந்தது.

    அப்போது காரில் இருந்து புகை வருவதை பார்த்த டிரைவர் கிருபா அதிர்ச்சி அடைந்து காரை சாலை யோரமாக நிறுத்தினார்.

    உடனே பேராசிரியை சித்ரா, டிரைவர் கிருபா காரில் இருந்து கீழே இறங்கினார்கள். சிறிது நேரத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென்று கார் முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.

    கிண்டியில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து காரில் பிடித்த தீயை அணைத்தனர். ஆனாலும் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    காரில் புகை வந்ததும் உடனே கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக பேராசிரியை சித்ரா, கார் டிரைவர் கிருபா ஆகியோர் உயிர் தப்பினார்கள். #Tamilnews
    ×