என் மலர்
நீங்கள் தேடியது "car fire accident"
- அதிர்ச்சி அடைந்த அருண் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கினார்.
- தீப்பற்றிய உடன் அருண் கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
போரூர்:
வடபழனி ஈஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது48) தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று இரவு வெளியே செல்வதற்காக வீட்டு முன்பு நிறுத்தி இருந்த காரை இயக்கினார். அப்போது திடீரென காரில் இருந்து கரும்புகை கிளம்பியது.
சிறிது நேரத்தில் தீப்பிடித்து மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அருண் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் தீ மளமளவென கார் முழுவதும் பற்றி எரிந்தது.
அருகில் இருந்தவர்கள் காரில் பற்றிய தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். எனினும் கார் முழுவதும் சேதம் அடைந்தது. காரில் தீப்பற்றிய உடன் அருண் கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
- செல்வராஜ் பேரையூரில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட் செல்வதற்காக ஆம்னி காரில் வந்தார்.
- பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது திடீரென கார் தீ பற்றியது.
திருப்பரங்குன்றம்:
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள பேரையூர் பகுதியைச் சேர்ந்தவர் போஸ். இவரது மகன் செல்வராஜ், மீன் வியாபாரி. வியாபாரம் செய்வதற்காக செல்வராஜ் பேரையூரில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட் செல்வதற்காக இன்று அதிகாலை ஆம்னி காரில் வந்தார்.
திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள பசுமலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் ஆம்னி காருக்கு கியாஸ் நிரப்பியுள்ளார். ஆனால் காரை இயக்க முடியவில்லை. இதனால் காரில் பெட்ரோல் இல்லாததால் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு காரை தள்ளி சென்றார். பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது திடீரென கார் தீ பற்றியது.
இதனால் அதிர்ச்சிடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இருப்பினும் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை முக்கிய சாலையில் திருப்பரங்குன்றம் பெட்ரோல் பங்க் அருகிலேயே ஆம்னி கார் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலை வேளை என்பதால் அதிக போக்குவரத்து இல்லாமல் இருந்தது. இதனால் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.
- ஜான்சன் (வயது 56). இவர், காரில் 4 பேருடன் தண்டாரம்பட்டு பகுதியில் இருந்து சேலம் வழியாக கன்னியாகுமரிக்கு ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்.
- கார் சேலம் அம்மாபேட்டை பெருமாள் கோவில் மேடு அருகே இரவு வந்தபோது காரில் இருந்து புகை வந்தது. உடனே காரை ஓரமாக நிறுத்தி 4 பேரும் கீழே இறங்கினர்.
சேலம்:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு வி.எம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 56). இவர், காரில் 4 பேருடன் தண்டாரம்பட்டு பகுதியில் இருந்து சேலம் வழியாக கன்னியாகுமரிக்கு ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது கார் சேலம் அம்மாபேட்டை பெருமாள் கோவில் மேடு அருகே இரவு வந்தபோது காரில் இருந்து புகை வந்தது. உடனே காரை ஓரமாக நிறுத்தி 4 பேரும் கீழே இறங்கினர். அதற்குள் கார் மளமள தீப்பிடித்து எரிந்தது. சுதாரித்துக்கொண்டு உடனடியாக 4 பேரும் கீழே இறங்கியதால் உயிர் தப்பினர்.
இது குறித்து அம்மா பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாய் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் இடது புறமாக காரை வளைத்துள்ளனர்.
- கார் நிலைத்தடுமாறி அருகே இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில் கார் உடனே தீப்பற்றி எரிந்துள்ளது.
நீலாம்பூர்:
கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் எதிரில் சூலூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அந்த காரை முத்து கவுண்டம்புதூரைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது ஓட்டுநர் காரை ஓட்டி வந்துள்ளனர்.
அப்போது மண்டபம் அருகே வரும் பொழுது நாய் குறுக்கே சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நாய் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் இடது புறமாக காரை வளைத்துள்ளனர்.
கார் நிலைத்தடுமாறி அருகே இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில் கார் உடனே தீப்பற்றி எரிந்துள்ளது.
உடனடியாக காரில் இருந்து இறங்கிய ரமேஷ் மற்றும் அவரது ஓட்டுநர் சூலூர் போலீஸ் நிலையத்துக்கு புகார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீயை அணைப்பதற்கு முயற்சித்தும் முடியவில்லை. பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இதில் அதிர்ஷ்டவசமாக கார் டிரைவரும், கார் உரிமையாளர் ரமேசும் உயிர் தப்பினர். இது தொடர்பாக சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாய் குறுக்கே சென்றதால் கார் புளியமரத்தின் மீது மோதிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தீ விபத்தில் காரின் முன்பக்க கதவுகள் இரண்டும் திறக்க முடியாமல் போனது.
- தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் அருகே பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரை அங்குள்ள தலைமை மருத்துவமனைக்கு காரில் அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
காரின் முன்பகுதியில் கர்ப்பிணி பெண் அமர்ந்திருந்தார். காரை பெண்ணின் கணவர் ஓட்டிச் சென்றார். காரின் பின்பகுதியில் அவர்களின் உறவினர்கள் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில், கார் ஓடிக்கொண்டிருந்தபோதே திடீரென காருக்குள் புகை எழும்பி தீ பற்றியது. தீ பரவுவதை கண்டு அதிர்ச்சியடைந்து அவர்கள் காரை உடனடியாக நிறுத்தினர். ஆனால், தீ அதற்குள் மளமளவென பரவியது. இதில் காரின் முன்பக்க கதவுகள் இரண்டும் திறக்க முடியாமல் போனது. இதில், கர்ப்பிணி பெண்ணும், அவரது கணவரும் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர்.
பின்பக்க காரில் இருந்த உறவினர்கள் கதவை திறந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காமநாயக்கன்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
- கணவன்-மனைவி இருவரும் அலறி அடித்து காரை விட்டு இறங்கியதால் தீ விபத்தில் இருந்து இருவரும் உயிர் தப்பினர்.
பல்லடம்:
திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் ( வயது 70 ). இவர் தனது மனைவியுடன் திருப்பூரிலிருந்து பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் அருகே காரை நிறுத்தி இயற்கை உபாதை கழித்துவிட்டு மீண்டும் காரை ஸ்டார்ட் செய்த போது திடீரென முன்பக்க என்ஜினில் இருந்து புகையுடன் தீப்பிடித்தது. இதனை கண்டு கணவன்-மனைவி இருவரும் அலறி அடித்து காரை விட்டு இறங்கியதால் தீ விபத்தில் இருந்து இருவரும் உயிர் தப்பினர்.இந்த நிலையில் அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் தீயணைப்புதுறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் காரின் முன்பகுதி தீயில் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் கருப்புசாமி(வயது 35). மெக்கானிக். இவர் நேற்று காலை தனது மனைவி ராமலதா (32) மற்றும் மகள்கள் தாரிகா (14), சுருதிகா (13) ஆகியோருடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டுகளிப்பதற்காக தனது காரில் கோத்தகிரிக்கு வந்துள்ளார். காரை அவரே ஓட்டி வந்துள்ளார்.
கார் நேற்று காலை 11.30 மணியளவில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி நோக்கி வந்துக் கொண்டிருக்கும் போது கீழ்த்தட்டப்பள்ளம் அருகே காரில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கருப்பு சாமி காரை சாலையோரம் நிறுத்தி விட்டு இறங்கினார்.பின்னர் பெட்ரோல் கசிவு ஏற்பட்டுள்ள இடத்தை அவர் பார்வையிட்டார்.
அப்போது திடீரென்று காரின் முன்பக்கம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்புசாமி காரில் இருந்த தனது மனைவி, மகள்களை உடனடியாக வெளியே அழைத்து வந்ததால் 4 பேரும் உயிர் தப்பினர். தீ மள,மள வென்று எரிய தொடங்கியதால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவல் அறிந்த கோத்தகிரி தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரம் கழித்து தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து எலும்பு கூடு போல் காட்சி அளித்தது. இந்த தீ விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர் ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் சித்ரா, பல் டாக்டரான இவர் தாழம்பூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இன்று காலை கல்லூரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் கிருபா ஓட்டிச் சென்றார். கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து இறங்கி பரங்கிமலை பட்ரோட்டில் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது காரில் இருந்து புகை வருவதை பார்த்த டிரைவர் கிருபா அதிர்ச்சி அடைந்து காரை சாலை யோரமாக நிறுத்தினார்.
உடனே பேராசிரியை சித்ரா, டிரைவர் கிருபா காரில் இருந்து கீழே இறங்கினார்கள். சிறிது நேரத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென்று கார் முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.
கிண்டியில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து காரில் பிடித்த தீயை அணைத்தனர். ஆனாலும் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
காரில் புகை வந்ததும் உடனே கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக பேராசிரியை சித்ரா, கார் டிரைவர் கிருபா ஆகியோர் உயிர் தப்பினார்கள். #Tamilnews