என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை சென்ட்ரல் மெட்ரோ - விமான நிலையம் இடையே ரெயில் சேவை சீரானது
- தொழில் நுட்ப கோளாறு காரணமாக நேற்று காலை 6 மணியில் இருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
- தொழில் நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர்.
சென்னை:
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை ஒருவழித் தடத்தில் நேற்று முடங்கியது. சென்ட்ரல்-கோயம்பேடு விமான நிலையம் நேரடி சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
தொழில் நுட்ப கோளாறு காரணமாக நேற்று காலை 6 மணியில் இருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதனை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர். சரி செய்யும் பணி இரவு வரை நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலையில் இருந்து அந்த வழித்தடத்தில் சேவை தொடங்கியது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவிலிருந்து விமான நிலையம் (இன்டர்-காரிடார்) வரையிலான நேரடி ரெயில் சேவை மீண்டும் இயல்பான செயல்பாட்டை தொடங்கி உள்ளது.
ப்ளூ லைனில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் டிப்போ வரையிலான மெட்ரோ ரெயில் சேவையும், கிரீன் லைனில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான மெட்ரோ ரெயில் சேவையும் வார நாள் அட்டவணையின்படி இயங்குகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






