என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெட்ரோ ரெயில் நிர்வாகம்"

    • மெட்ரோ ரெயில் இருக்கை விவகார் தொடர்பாக பொதுநல வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
    • அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவு.

    சென்னை மெட்ரோ ரெயில்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகள் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய, மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் சில அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

    வழக்கறிஞர் வி.பி.ஆர். மேனன் தாக்கல் செய்த பொது நல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில்களில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு எனத் தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் இளைஞர்களும் மற்ற பயணிகளும் அந்த இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொள்வதாகப் புகார்கள் எழுந்தன.

    இது தொடர்பாகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மெட்ரோ ரயில்களில் அதிகாரிகள் அவ்வப்போது 'திடீர் சோதனை' நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

    முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பயணிகளுக்கான இருக்கைகளில் மற்றவர்கள் அமர்ந்திருக்கிறார்களா என்பதை அவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும், தகுதியற்ற நபர்கள் அந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டு, முதியோர்களுக்கோ அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கோ இடம் தர மறுத்தால், அவர்கள் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், முன்னுரிமை இருக்கைகள் யாருக்கானவை என்பது குறித்த அறிவிப்புகளை ரெயில்களுக்குள்ளும், நிலையங்களிலும் தெளிவாகத் தெரியும்படி வைக்க வேண்டும். ஒலிபெருக்கி மூலமாகவும் பயணிகளுக்குத் தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரெயிலில் இருக்கும் பாதுகாப்பு ஊழியர்கள், ஒவ்வொரு நிறுத்தத்திலும் முதியோர்கள் ஏறும் போது அவர்களுக்கு இருக்கைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், உடல் ரீதியான சவால்களைக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது ஒரு நாகரீகமான சமூகத்தின் கடமை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

    மேலும், மெட்ரோ நிர்வாகம் இதனைச் சரியாகக் கண்காணிக்கத் தவறினால், சட்டப்படியான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

    • மின்னஞ்சல் மூலம் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • உடனடி உதவிக்கு, அருகிலுள்ள நிலையக் கட்டுப்பாட்டாளர்களைத் தொடர்பு கொள்ளவும்.

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ உதவி எண்கள் செயல்படவில்லை என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை மெட்ரோ உதவி எண்கள் தற்காலிகமாக வேலை செய்யவில்லை. மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதுவரை customercare@cmrl.in என்ற மின்னஞ்சல் மூலம் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உடனடி உதவிக்கு, அருகிலுள்ள நிலையக் கட்டுப்பாட்டாளர்களைத் தொடர்பு கொள்ளவும். ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


    சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த 2015 ஜூன் 29-ம் முதல் நேற்று 14-ந்தேதி வரை மொத்தம் 3 கோடியே 81 லட்சத்து 3 ஆயிரத்து 799 பேர் பயணம் செய்துள்ளார்கள்.
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி தொடங்கப்பட்டது. பாதுகாப்பான பயணம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து இணைப்பு போக்குவரத்து வசதி வாகனம் நிறுத்துமிட வசதி செய்யப்பட்டு இருப்பது பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது.

    தற்போது சில மெட்ரோ நிலையங்களில் இயங்கிக் கொண்டு இருக்கும் ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் டாக்சி சேவைகள் விரைவில் அனைத்து 32 மெட்ரோ நிலையங்களிலும் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பயணிகளின் பெரும் ஆதரவால் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து நாளுக்கு நாள் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மெட்ரோ ரெயிலில் கடந்த 2015 ஜூன் 29-ம் முதல் நேற்று 14-ந்தேதி வரை மொத்தம் 3 கோடியே 81 லட்சத்து 3 ஆயிரத்து 799 பேர் பயணம் செய்துள்ளார்கள்.

    ஜூன் 2015 முதல் டிசம்பர் 2015 வரை 26,33,890 பேர், ஜனவரி 2016 முதல் டிசம்பர் 2016வரை 36,30,216 பேர், ஜனவரி 2017 முதல் டிசம்பர் 2017வரை 73,99,282 பேர், ஜனவரி 2018 முதல் டிசம்பர் 2018 வரை 1,43,88,969 பேர், 2019 ஜனவரி முதல் மே 14-ம் தேதிவரை 1,00,51,442 பேர் பயணம் செய்து இருக்கிறார்கள்.

    இந்த தகவலை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
    ×