என் மலர்
நீங்கள் தேடியது "Rajendran mla"
- ராஜேந்திரன், இடுக்கியில் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியது உள்பட பல்வேறு புகார்களுக்கு உள்ளானார்.
- பா.ஜ.க. மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகரை திருவனந்தபுரத்தில் ராஜேந்திரன் சந்தித்தார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ராஜேந்திரன். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த இவர், இடுக்கியில் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியது உள்பட பல்வேறு புகார்களுக்கு உள்ளானார். இதனை தொடர்ந்து அவர் மீது விசாரணை நடத்திய கம்யூனிஸ்டு, கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்தது.
இந்த சூழலில் முன்னாள் எம்.எல்.ஏ.ராஜேந்திரன், பாரதிய ஜனதாவில் இணைய போவதாக கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 10-ந் தேதி பா.ஜ.க. மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகரை திருவனந்தபுரத்தில் ராஜேந்திரன் சந்தித்தார்.
பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், பாரதிய ஜனதாவில் இணைவது தொடர்பாக விவாதித்தேன். அந்தக் கட்சியின் முடிவுக்கு காத்திருக்கிறேன் என்றார். மேலும் பா.ஜ.க.வில் சேர்வதற்கு எந்த தனிப்பட்ட கோரிக்கையோ, சிறப்பு நிபந்தனையையோ முன்வைக்கவில்லை என்றும், மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்துள்ளேன் என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் அவர் இன்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமையகத்திற்கு வந்து பாரதிய ஜனதாவில் இணைந்தார். அவருக்கு மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர், கட்சி உறுப்பினர் பதவியை முறையாக வழங்கினார்.
3 முறை கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வான அவர், கடந்த 4 ஆண்டுகளாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து பிரிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- எனது வளர்ச்சியை பொறுக்க முடியாத சிலர் இவ்வாறான உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி விட்டுள்ளனர்.
- எனது மக்கள் பணி, கழக செயல்பாடுகள் இன்னும் வேகமாக இருக்கும்.
சென்னை:
தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவிய வதந்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சமயத்தில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து விருந்து வைத்த எம்.எல்.ஏ. என்று மற்றொரு தகவலும் பரவியது. ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்று சேலம் இரா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
அமைச்சர் பதவியை எதிர்பார்த்து விருந்து வைத்த எம்.எல்.ஏ. என்று என்னை குறிப்பிட்டு ஒரு செய்தி வெளி வந்துள்ளதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். நான் எந்த விருந்தும் வைக்கவில்லை.
எனது வளர்ச்சியை பொறுக்க முடியாத சிலர் இவ்வாறான உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி விட்டுள்ளனர். அதில் எந்த உண்மையும் இல்லை.
கழக வளர்ச்சி ஒன்றே குறிக்கோள் என்ற வகையில் நான் செயல்பட்டு வருகிறேன். எனது பெயருக்கு யாரும் களங்கம் கற்பிக்க விட மாட்டேன். எனது மக்கள் பணி, கழக செயல் பாடுகள் இன்னும் வேகமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






