search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "s.p.velumani"

    • அ.தி.மு.க பொதுச்செயலாளர் பிறந்த நாளையொட்டி தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பிறந்த நாளையொட்டி திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஏற்பாட்டின் பேரில் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கினார். அவைத் தலைவர் பழனிச்சாமி .முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., என்.எஸ்.என்.நடராஜன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, இணைச் செயலாளர் சங்கீதா சந்திரசேகர், பகுதி செயலாளர் கே. பி.ஜி.மகேஷ்ராம், அம்மா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், திருப்பூர் மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என். பழனிச்சாமி, இணைச் செயலாளர் விவேகானந்தன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், இணைச் செயலாளர் ஆண்டவர் பழனிசாமி உள்படநிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளது.
    • பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நான்கு ஆண்டுகள் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்தார்.

    உடுமலை :

    திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டஅ.தி.மு.க. செயலாளர் மகேந்திரன் தலைமையில் உடுமலை சட்டமன்ற தொகுதி கண்ணமநாயக்கனூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. சட்டமன்ற கொறடாவுமான எஸ். பி., வேலுமணி கலந்து கொண்டு பேசியதாவது:- அ.தி.மு.க. உருவாகி 50 ஆண்டுகள் ஆன நிலையில் இன்றும் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளது .குறிப்பாக எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டங்களால்ஏழை எளிய மக்கள் அதிகம் பேர் பயன்பெற்றுள்ளனர். 17 லட்சம் உறுப்பினர்கள் மூலம் அ.தி.மு.க. தொடங்கப்பட்ட நிலையில் ஜெயலலிதாவின் மூலம் ஒன்றரை கோடி அதிமுக., தொண்டர்களுடன் கட்சி வீர நடை போட்டது. பின்னர் அம்மாவின் ஆசி பெற்ற தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நான்கு ஆண்டுகள் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்தார்.

    திமுக. ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்படாத பல நல்ல திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றினார். தற்சமயம் திமுக. அரசு இரண்டு ஆண்டு சாதனை என பொதுக்கூட்டங்கள் நடைபெறும் நிலையில் பொதுமக்கள் இடையே கடும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக. ஆட்சி காலத்தில் எடப்பாடியார் கொண்டு வந்த திட்டங்களை முதல்வர் மு. க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகின்றார். மொத்தத்தில் எதுவும் தெரியாத முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் உள்ளார்.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொரோனாவை முழுவதும் கட்டுப்படுத்தியது. அதிமுக. ஆட்சிக் காலத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் ,ஆனைமலை நல்லாறு திட்டம் போன்ற முக்கியமான திட்டங்களை நிறைவேற்றியது. குறிப்பாக ஏழை எளிய மக்கள் மருத்துவரின் கனவு நிறைவேறாமல் இருந்த நிலையில் இட ஒதுக்கீடு அறிவித்த நிலையில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களும் தற்போது மருத்துவராகியுள்ளனர். சட்டமன்ற தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தலிலும் பல்வேறு தில்லுமுல்லு செய்து தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது .

    சட்ட மன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக. ஆட்சி அமைக்கப்படுவது உறுதி. பல்வேறு கட்ட சட்ட போராட்டத்தில் ஈடுபட்டு எடப்பாடியார் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அதிமுக.வில் இணைய பலரும் முன் வந்து உள்ளனர். திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேலாக உறுப்பினர்கள் சேர்க்கப்படும் என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளதால் உறுப்பினர் சேர்க்கைையை தீவிர படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சார்பில் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ,பேரூர் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • சொத்து வரியை தொடர்ந்து குடிநீர் வரியையும் அதிகப்படுத்தி உள்ளனர்.

    கோவை

    தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம வேலுச்சாமி, எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், ஏ.கே செல்வராஜ், செ.தாமோதரன், கே. ஆர் ஜெயராம், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்பட அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

    அ.தி.மு.க ஆட்சியில் எந்த வரியையும் ஏற்றவில்லை. ஆனால் மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாக உள்ள இந்த தி.மு.க. அரசு வரிகளை ஏற்றி வருகிறது. சொத்து வரியை தொடர்ந்து குடிநீர் வரியையும் அதிகப்படுத்தி உள்ளனர். அப்போது இருந்த அ.தி.மு.க. ஆட்சியை பலரும் வீழ்த்த நினைத்தனர். தி.மு.க. குறுக்கு வழியில் ஆட்சியில் அமர நினைத்தது. ஆனால் நானும், தங்கமணி, சண்முகம் இன்னும் சிலரும் சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றினோம். அதனால் என் மீது ஸ்டாலினுக்கு கோபம். அப்போதே அவர் எஸ்.பி.வேலுமணியை விடமாட்டோம் என கூறினார்.அதன் தொடர்ச்சியாகவே என்னுடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி சோதனை நடத்தி உள்ளனர். 3 முறை சோதனை நடத்தி உள்ளீர்களே? இதுவரை எனது வீட்டில் இருந்து எந்த பொருட்களை எடுத்து சென்றீர்கள்? ஒன்றும் இல்லை. வெறுங்கையுடன் தான் சென்றுள்ளீர்கள்.நீங்கள் எத்தனை வழக்குகள் போட்டாலும் நாங்கள் கவலை படமாட்டோம். எங்களுக்கு துணையாக எப்போதும் தொண்டர்கள் உள்ளனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எந்த காரியம் முடிக்க வேண்டும் என்றாலும் லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டிய நிலையே இந்த ஆட்சியில் உள்ளது. ஆட்சி அமைத்து சில வருடங்களிலேயே 50 ஆயிரம் கோடிக்கும் மேல் தி.மு.க அரசு லஞ்சம் வாங்கியுள்ளது. இப்படி மக்களை சுரண்டும் ஆட்சியாகவே உள்ளது.

    எங்கள் ஆட்சியின்போது நாங்கள் எந்த கடையிலும் வசூல் செய்யவில்லை. கட்டப்பஞ்சாயத்து நடத்தவில்லை. காவல்துறை யினர் சுதந்திரமாக செயல்பட்டனர். ஆனால் இன்று நிலை அப்படியில்லை. மாறாக கட்டப்பஞ்சாயத்து தலைவிரித்தாடுகிறது. அனைத்து கடைகளிலும் தி.மு.க.வினர் வரி வசூலிக்கி ன்றனர். காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை.

    கோவை மாவட்டத்திற்கு நாங்கள் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கொடுத்தோம். ஆனால் ஆட்சி அமைத்து ஒரு வருடங்களுக்கு மேல் ஆகியும் தி.மு.க. கோவை மாவட்டத்திற்கு எதுவும் செய்யவில்லை. இந்த மாவட்டத்தில் உள்ள கலெக்டர் ஒரு பொம்மை போலவே இருக்கிறார்.எனது வீட்டில் சோதனை நடந்தபோது எம்.எல்.ஏ.க்களையும், தொண்ட ர்களையும் கையை பிடித்து இழுத்து வலுக்க ட்டாயமாக கைது செ ய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

    மு.க.ஸ்டாலின் அரசியல் பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறார். இதுபோன்ற மோசமான ஒரு தலைவரை இதுவரை பார்த்ததே இல்லை.

    உதயசந்திரன் ஐ. ஏ.எஸ். தி.மு.க.வினரை விட மோசமாக உள்ளார். நேர்மை போல காட்டி கொண்டு கொள்ளை அடிப்பதற்கு துணை போகிறார். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றனர். அதன்பின்னர் அவர்களை ஆளையே காணவில்லை. அனைவர் மீதும் பொய் வழக்கு போட்டு வரும் இந்த தி.மு.க ஆட்சி விரைவில் மண்ணை கவ்வும். மின் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்த போது டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என போராடினர். தற்போது முதல்-அமைச்சராக அவரது ஆட்சி நடைபெறும் வேளையில் திருப்பூரில் லேடீசுக்கு என்று தனி பாரே தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அவர் என்ன பதில் சொல்ல போகிறார்.

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெறும். அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டு முன்பு குவிந்தனர்.

    திருப்பூர் :

    கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ். பி .,வேலுமணி வீடு உள்பட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். இது குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்டம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் அவரது வீட்டு முன்பு குவிந்தனர்.அப்போது போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. ,வேலுமணியின் வீட்டில் நடைபெறும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. சு.குணசேகரன் தலைமையில் மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், கவுன்சிலர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், பகுதி செயலாளர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கோவை சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து கோவையில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர்.இந்த தகவல் கிடைத்ததும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ,திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகளை கைது செய்து அடைத்து வைக்கப்பட்டு இருந்த மண்டபத்திற்கு நேரடியாக சென்று நிர்வாகிகளை சந்தித்தார். 

    • முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்
    • தென்னைமநல்லூர் ஊராட்சியில் ரூ.3.27 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்தது.

    கோவை 

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்னைமநல்லூர் ஊராட்சி பகுதியில்15 வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.3.27 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியைஅ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார், பேரவை மாவட்ட இணை செயலாளர் ஜி.கே.விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் டி.பி.வேலுச்சாமி, ராஜா என்ற ராமமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் சித்ரா சிங்காரவேலன், கார்த்திகா பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் தென்னமநல்லூர் டிவி. ஆறுசாமி உள்பட பலர் உள்ளனர். 

    • தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
    • திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய ஒரே தலைவர் எடப்பாடியார் தான்.

    பொள்ளாச்சி

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., தாங்கினார். இதில் திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய செய லாளருமான எஸ்.பி.வேலுமணி பேசி யதாவது:-

    விவசாய குடும்பத்தில் பிறந்து கடந்த 4½ ஆண்டுகள் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தியுள்ளார். கடந்த 4½ ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியினை கொடுத்துள்ளார். குறிப்பாக பொள்ளாச்சிக்கு மட்டும் 1500 கோடி ரூபாய் அளவுக்கு பல நல்ல திட்டங்களை அ.தி.மு.க. நிறைவேற்றி கொடுத்துள்ளது.

    ஆனால் இந்த தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. எதுவுமே செய்யாத ஆட்சி தான் இந்த தி.மு.க. ஆட்சி. இந்த ஆட்சியானது விளம்பர படத்தில் மட்டும் தான் இயங்கி வருகிறது.

    கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க ஒரு நாள் கூட சொத்து வரியை உயர்த்தியது இல்லை. ஆனால் இன்றைக்கு தி.மு.க ஆட்சியில் 25, 50, 100 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. மக்களுக்கு தி.மு.க அரசு வழங்கிய போனஸ் தான் இந்த வீட்டு வரி மற்றும் மின் கட்டண உயர்வு. இதுகுறித்து அவர்களிடம் கேட்டால் இதற்கு மத்திய அரசு தான் காரணம் என்கிறார்கள்.

    நாங்கள் கொண்டு வந்த திட்டத்தில் ஒரு சிறு துரும்பாவது இவர்கள் கொண்டு வந்துள்ளார்களா? மாறாக நமது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் அம்மா உணவகம், அம்மா கிளினிக், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி ஆகிய திட்டங்களை முடக்கியது தான் இந்த தி.மு.க. அரசு.

    நம்முடைய கட்சி அலுவலகம் எனும் கோவில் சேதம் அடைந்ததற்கு திமுக தான் காரணம். கள்ளக்குறிச்சி கலவரத்திற்கும் தி.மு.க.வே காரணம். இதுவரை 500-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதாக சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    மேலும் காவல்து றையானது யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்று நீதிபதியே வினவும் அளவிற்கு உள்ளது இந்த தி.மு.க. அரசு. இப்படி சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் குலைந்ததற்கு தி.மு.க ஆட்சி தான் காரணம்.

    எங்கள் கட்சியினர் மீது போடப்படும் வழக்குகளுக்கு நாங்கள் பயப்படமாட்டோம். காவல்துறையினர் தி.மு.கவுக்கு அடிபணிந்து கிடக்கின்றனர். அ.தி.மு.க. தொண்டர்கள் மீது பொய் வழக்கு பதிந்தால் தக்க சமயத்தில் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாகும்.

    தற்போது அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை. எந்த வேலையை எடுத்தா லும் லஞ்சம் தான் கேட்கப்படுகிறது.

    திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய ஒரே தலைவர் எடப்பாடியார் தான். டெல்லியில் நடந்த ஜனாதிபதி பதவியேற்பு விழாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து பா.ஜ.க.வின் அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் மட்டும் தான் அழைப்பு வந்தது. மற்ற யாருக்கும் வரவில்லை.

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40-40 என்ற கணக்கில் கூட்டணி கட்சிகளின் உதவியோடு அனைத்து தொகுதிகளையும் வெல்வோம்.தற்போது அரசு கொண்டு வந்துள்ள மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் இல்லையேல் போராட்டம் இன்னும் கடுமையாக முன்னெடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போராட்டத்தில் தேர்தல் பிரிவு செயலாளரும், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி வி. ஜெயராமன், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ தாமோதரன், வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி, சூலூர் எம்.எல்.ஏ. வி பி கந்தசாமி, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் அ.தி.மு.க பொள்ளாச்சி நகர செயலாளருமான கிருஷ்ணகுமார், மாவட்ட அவை தலைவர் வெங்கடாசலம், அ.தி.மு.க நிர்வாகிகள் ஆர்.எ.சக்திவேல், ஜேம்ஸ் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவை மாவட்டத்தில் நாங்கள் 9 எம்.எல்.ஏ.க்கள் உள்ளோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருக்கிறோம்.
    • அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று மக்கள் மட்டுமல்ல. அ.தி.மு.க. தலைவர்கள் என அத்தனை பேரும் எதிர்பார்த்த நிகழ்வு தற்போது நடந்து உள்ளது.

    கோவை

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செய லாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப் பட்டு உள்ளார்.

    இந்தநிலையில் அவர் சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் கோவை வந்தார். அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் அ.தி.மு.க அலுவலக மான இதயதெய்வம் மாளி கைக்கு புறப்பட்டார்.

    வரும் வழியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை- அவினாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதன் பிறகு அங்கிருந்து கட்சி அலுவலகத்துக்கு நடந்து சென்றார். அப்போது கட்சி நிர்வாகிகள் எஸ்.பி. வேலுமணிக்கு பொன்னாடை அணி வித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். கட்சி அலுவலகத் தில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளது மிகப்பெரிய எழுச்சி மட்டுமல்லாமல், தொண்டர்கள் எல்லோரும் கொண்டாடக்கூடிய நிகழ்வாக அமைந்து உள்ளது.

    கடந்த ஒரு ஆண்டாக கோவை மாவட்டத்தில் எந்த பணிகளும் நடக்கவில்லை. எனவே மீண்டும் அத்தனை திட்டங்களும் மக்களுக்கு வர வேண்டும் என்றால் எடப் பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வேண்டும் என்று தமிழக மக்கள் அனைவரும் முடிவு செய்து விட்டனர்.

    அதற்கு அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று மக்கள் மட்டுமல்ல. அ.தி.மு.க. தலைவர்கள் என அத்தனை பேரும் எதிர்பார்த்த நிகழ்வு தற்போது நடந்து உள்ளது.

    தலைமை நிலைய செயலாளராக என்னை நியமித்து உள்ளனர். இதற்காக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எனது நன்றியை தெரி வித்துக்கொள்கிறேன். கோவை மாவட்டத்தில் நாங்கள் 9 எம்.எல்.ஏ.க்கள் உள்ளோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருக்கிறோம். எனவே விரைவில் வர உள்ள பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் சட்டமன்ற தேர்தலிலும் நாங்கள் 100-க்கு 100 வெற்றி பெறுவோம். மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செ.தாமோதரன், அம்மன் அர்ச்சுனன், கே.ஆர். ெஜயராம், வி.பி.கந்தசாமி, அமுல்கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் மற்றும் புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் என்ஜினீயர் சந்திரசேகர், பகுதி செயலாளர்கள் செல்வக்குமார், காலனி ராஜ்குமார், மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கொரோனா பெருந்தொற்றின் 4-வது அலை பல்வேறு நாடுகளிலும், இந்தியாவில் தற்போது தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பரவி வருகிறது.
    • 4-வது அலையை எதிர் கொள்ள, தமிழக அரசு அனைத்து முன் எச்சரிக்கை நடவடி க்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

    கோவை:

    தமிழக சட்டமன்ற அ.தி.மு.க கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா பெருந்தொற்றின் 4-வது அலை பல்வேறு நாடுகளிலும், இந்தியாவில் தற்போது தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பரவி வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை உள்ளிட்ட பல நகரங்களில் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

    கொரோனா 3-வது அலை முடிவடைந்து ஓரளவு இழப்புகளில் இருந்து மீண்டு, பொருளாதார ரீதியாக மேம்பட்டு வருகிற சூழ்நிலையில், இப்போது கொரோனா 4-வது அலை பரவி பொதுமக்களை பீதிக்கு உள்ளாக்குகிறது.

    இந்த பெருந்தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். தற்போது பரவிவரும் கொரோனா பெருந்தொற்றின் 4-வது அலையை எதிர் கொள்ள, தமிழக அரசு அனைத்து முன் எச்சரிக்கை நடவடி க்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

    கோவை மாவட்டத்தின் எல்லையான அண்டை மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளில், சோதனைச்சாவடிகள் மற்றும் விமான நிலையம், ெரயில் நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, பாதிக்கப் பட்டோரை தனிமைப்படுத்த வேண்டும். துரிதமாக செயல்பட்டு, மக்களை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×