search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்னமநல்லூர் பகுதியில்  சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி
    X

    தென்னமநல்லூர் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி

    • முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்
    • தென்னைமநல்லூர் ஊராட்சியில் ரூ.3.27 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்தது.

    கோவை

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்னைமநல்லூர் ஊராட்சி பகுதியில்15 வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.3.27 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியைஅ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார், பேரவை மாவட்ட இணை செயலாளர் ஜி.கே.விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் டி.பி.வேலுச்சாமி, ராஜா என்ற ராமமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் சித்ரா சிங்காரவேலன், கார்த்திகா பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் தென்னமநல்லூர் டிவி. ஆறுசாமி உள்பட பலர் உள்ளனர்.

    Next Story
    ×